Thursday, 9 May 2019

சாதகம் காட்டும் காலக் கண்ணாடி

                               

சாதகம் காட்டும் காலக் கண்ணாடி


செவ்வாய்ப்பட்டி பத்திரகாளி அம்மன் துணை

     ஒரு ஜாதகத்தில் லக்னத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து பார்க்கும்பொழுது  அந்த லக்கனாதிபதி ஆனது ஜாதகத்தில் எந்த கட்டத்தில் அமைந்துள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

  லக்கினாதிபதி ஆனது ஸ்தான அடிப்படையில் கேந்திர ஸ்தானமா ? அல்லது திரிகோணம் அல்லது மறைவு ஸ்தானமா ? என்று ஆய்வு  செய்து பார்க்கப்பட  வேண்டும்.

 மேலும் லக்னாதிபதி எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளது ? சாரநாதன் லக்கனாதிபதிக்கு  நட்பா ? அல்லது பகையா? என ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். 

    லக்னத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் , லக்னத்தை பார்க்கும் கிரகங்கள் , மற்றும் லக்கனத்தில் சேர்ந்துள்ள கிரகங்கள் முதலியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

லக்கனத்தில் பாவ கிரகங்களை விட சுபக் கிரகங்கள் இடம் பெறுவது நல்லது. இலக்கனத்தில் எந்த கிரகங்களும் இல்லாமல் இருத்தல் நலம் பயக்கும்.

      இரண்டாம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்பம், ஆரம்ப நிலை கல்வி மற்றும் நேத்திரம் ஆகியவற்றை குறிக்கும்.

   இரண்டாம் இடத்தில் தன ஸ்தானத்தை  பற்றி ஆய்வு செய்யும் போது தனக்க்காரகன் குரு‌பகவானையும்  இணைத்து ஆய்வு  செய்து பார்க்க வேண்டும்.

  இரண்டாம் இடத்தில் குடும்பத்தைப் பற்றி ஆய்வு செய்து பார்க்கும்போது, சுக்கிரனையும்  இணைத்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

    இரண்டாம் இடத்தில் கொடுத்த வாக்கு  பற்றி ஆய்வு செய்து பார்க்கும் பொழுது இரண்டாம் இடத்தில் இடம்பெறும் சுபக்கிரகங்கள் மற்றும் பாவ கிரகங்கள் பொறுத்து வாக்கு ஸ்தானம் அமையும்.

  இரண்டாம் இடம் என்பது ஒருவரது ஆரம்ப நிலைக் கல்வியை குறிப்பதால் இவ்விடத்தில் ஆரம்ப கல்வி நிலை பற்றி ஆராய இரண்டாம் இடத்துடன் கல்விகாரகன் குரு பகவான் மற்றும் புதன் பகவானையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

     இரண்டாம் இடத்தில் பார்வையைப்  (நேத்திரம்) பற்றி ஆய்வு செய்து பார்க்கும் பொழுது சூரிய பகவானையும் இணைத்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

      முக்கியமாக இரண்டாம் இடம் என்பது சாதகருக்கு குடும்ப ஸ்தானம் என்பதால் இவ்விடத்தில் பாவக்கிரகங்களும் அல்லது உச்சம் பெற்ற கிரகங்களும் இடம் பெறாமல் இருத்தல் நல்லது .
எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டாமிடம் சுத்தமாக இருப்பது நல்லது.

    மூன்றாம் இடம் என்பது சகோதரம், கீர்த்தி, புகழ், அந்தஸ்து, கற்பனை உணர்வு மற்றும் வீரியத் தன்மை முதல் வெற்றிக்கு முக்கிய ஸ்தானம் ஆகும்.

   மூன்றாம் இடத்தில் சகோதரனைப் பற்றி ஆய்வு செய்ய மூன்றாமிடத்தையும் சகோதர காரகன் செவ்வாய் பகவானையும் இணைத்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

  மூன்றாம் இடத்தில் கீர்த்தி ,புகழ் ,அந்தஸ்து பற்றி ஆய்வு செய்யும் பொழுது மூன்றாம் இடத்தோடு ஆன்மீக செம்மல்  குரு , மக்கள் காரகன் சனி  முதலியவற்றை சேர்த்து ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

 மூன்றாம் இடத்தில் கற்பனை உணர்வு, எழுத்தாற்றல் முயற்சி முதலியவற்றை ஆய்வு செய்து  பார்க்க மூன்றாம் இடத்துடன், வித்தைக்காரகன் புதன் பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

    ஒருவரின் வீரியத் தன்மையை மூன்றாம் இடத்தில் ஆய்வு செய்து பார்க்க மூன்றாம் இடத்துடன், காம காரகன் செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

  நான்காம் இடம் என்பது முக்கியமாக தன் சுகம், தாய் சுகம்,  கல்வியால் சுகம், வண்டி வாகனத்தால் சுகம் ,வீடு முதலியவற்றை அறிய உதவும் ஸ்தானம் ஆகும்.

  நான்காம் இடத்தை கொண்டு தாயின் நிலை பற்றி அறிய நான்காம் இடத்தையும், மாதுர்காரகன் சந்திரனையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

  வண்டி வாகனம் மற்றும் வீடு பற்றி அறிய நான்காம் இடத்துடன், சுக்கிரன் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

   உயர்நிலைக் கல்வி பற்றி அறிய நான்காம் இடத்தையும் குரு பகவான் மற்றும் புதன் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

    ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் மற்றும் புத்தியைக் கொண்டு பிழைக்கும்‌ ஸ்தானம் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் அடையும் புகழ் பற்றி அறிய உதவும் ஸ்தானம் ஆகும்.

  பூர்வீக இடம் பற்றி அறிய ஐந்தாமிடத்துடன், பூமிகாரகன் செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

 ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய புத்திரர் பற்றி அறிய இந்த ஸ்தானம் பயன்படுவதால் புத்திரகாரகன் குரு பகவானையும் சேர்த்து ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   ஒரு ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது கடன், பிணி எதிர்ப்பு மற்றும் வெற்றி முதலியவற்றை பற்றி அறிய உதவும் சாதனமாகும். ஆறாம் இடத்தைப் பற்றி ஆய்வு செய்து பார்க்கும் பொழுது ஆறாமிடத்து உடன் லக்னாதிபதியையும் மற்றும் யுத்த காரகர் செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

     7-ஆம் இடம் என்பது தனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை பற்றியும் அவர்களது கற்பு நிலை பற்றியும் மற்றும் நட்பு நிலை பற்றியும் அறிய உதவும் சாதனமாகும் .

  ஏழாம் இடத்தை கொண்டு களத்திர ஸ்தானத்தை ஆராய்ச்சி செய்து பார்க்கும்பொழுது களத்திரகாரகன் சுக்கிரன் பாகவானையும் ஆராய்ந்து  பார்க்கப்பட வேண்டும்.

   ஏழாம் இடம் என்பது களத்திர ஸ்தானம் என்பதால் இவ்விடத்தில் பாவக் கிரகங்கள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது. அதிலும் குறிப்பாக எந்த கிரகங்களும் இடம் பெறாமல் இருத்தல் மேலான நன்மை தரும். "ஏழாமிடம் சுத்தமாக இருந்தால் எல்லோருக்கும் நல்லவன்(ள்)  ஆகும்.

  எட்டாம் இடம் என்பது ஒருவருக்கு வரக்கூடிய விபத்து ,வம்பு ,சண்டை வழக்கு மற்றும் ஆயுள் நிலை பற்றியும் அறிய உதவும் ஸ்தானம் ஆகும். இவை மட்டுமல்லாமல் மறைபொருள் உண்மைகளை அறிய இவ்விடம் பலம் பெற்றிருப்பது நன்மை தரும்.

  ஒருவரது ஆயுள் நிலை பற்றி ஆய்வு செய்யும் பொழுது எட்டாமிடத்தில் எட்டாம் இடத்துடன் தான் ஆயுள்காரகன் சனி பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

  எட்டாம் இடம் ஒரு மாங்கல்ய ஸ்தானமாக அமைவதால் இவ்விடத்திலும் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது .இதேபோல உச்சம் பெற்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம். எட்டாம் இடத்தில் சுத்தமாக இருப்பது நலம் பயக்கும்.

   ஒன்பதாம் இடத்தை கொண்டு ஒருவரது தான தர்ம நிலை ,பாக்கிய நிலை மற்றும் தந்தையின் நிலை மேலும் ஐந்துக்கு ஐந்தாம் இடமாக இந்த ஒன்பதாம் இடம் அமைவதால் புத்திர ஸ்தானத்தையும் ஆய்வுசெய்த பார்க்க உதவும் சாதனமாகும்.

    ஒருவரது ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தை கொண்டு ஒருவரது பாக்கிய நிலையை அதாவது வருமான நிலையை அறிய ஒன்பதாம் இடத்து உடன் தனகாரகன் குரு பகவானையும் இணைத்து ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.

   ஒன்பதாம் இடத்தை கொண்டு தந்தையின் நிலையை பற்றி ஆய்வு செய்து பார்க்கும் பொழுது ஒன்பதாம் இடத்துடன் தந்தைகாரகன் சூரிய பகவானையும் சரிபார்க்கப்பட வேண்டும்.

    ஒன்பதாம் இடத்தில் சுபகிரகங்கள் அமையும்போது தான தர்ம நிலை மேலங்கி இருப்பதையும் ,பாவ கிரகங்கள் இடம் பெறும் பொழுது கஞ்சத்தனம் மேலோங்கி நிற்பதை காணலாம்.

    பத்தாம் இடத்தை கொண்டு ஒருவரது தொழில் நிலையை மற்றும் கர்மஸ்தானத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டிய ஸ்தானம் ஆகும்.

  ஒருவர் கர்ம நிலை பற்றி அறிய 10-ஆம் இடத்தையும் கர்மகாரகன் சனி பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

    ஒருவரது தொழில் நிலை பற்றி அறிய 10-ஆம் இடத்தையும், பத்துக்கு பத்தாமிடமான  7ஆம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   பத்தாம் அதிபதி அம்சத்தில் இடம்பெறும் நிலையைப் பொறுத்து ஒருவரது  தொழில் எப்படி அமையும் என்பதனையும்  முடிவு செய்யப்பட முடியும்.

   பத்தாம் அதிபதி மற்றும் பத்தாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் கிரகநிலை பொருத்தும் ஒருவரின் தொழில் நிலை அறிந்து கொள்ளப்படுகிறது.

  11-ஆம் இடம் என்பது ஒருவரது லாபஸ்தானம் ஆகும். இவ்விடத்தை கொண்டு மூத்த சகோதரர்களின் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

   ஒருவரது லாப நிலையைப் பற்றி ஆய்வு செய்ய பதினொன்றாம் இடத்துடன் தனகாரகன் குரு பகவானையும் இணைத்து ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

  ஒருவரது மூத்த சகோதரன் பற்றி ஆய்வு செய்து பார்க்க பதினொன்றாம் இடத்தில்,
பதினொன்றாம்
 இடத்துடன் சகோதரகாரகன் செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   பன்னிரண்டாம் இடம் என்பது ஒருவரது விரய ஸ்தானம் ஆகும். மேலும் ஒருவரது அயன, சயன மற்றும் படுக்கை சுகங்களை அறிந்துகொள்ள உதவும் ஸதானமாகும். மேலும் முக்தி நிலை பற்றி அறிய உதவும் ஸ்தானம் ஆகும்.

  ஒருவரது அயன, சயன படுக்கை சுகம் பற்றி ஆய்வு செய்து பார்க்கும் பொழுது பன்னிரண்டாம் இடத்துடன் களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் காம காரகன் செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

    ஒருவர் தனக்கு கிடைக்கக்கூடிய விரய நிலையை பற்றி ஆராய பன்னிரண்டாம் இடத்துடன், தனகாரகன் குரு பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

  ஒருவர் தனக்கு கிடைக்கக்கூடிய முக்தி நிலை பற்றி அறிய பன்னிரண்டாம் இடத்தில்  அமர்ந்துள்ள கேது பகவானையும் மற்றும் ஒன்பதாமிட அதிபதியையும் ஆய்வு செய்து பார்த்து முடிவு செய்யப்பட வேண்டும்.

நான்!

(தங்களது ஜாதகப் பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி , பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்த வழிமுறையை பெறலாம்)

வாட்ஸ் அப்
   9715189647

  செல்
  9715189647
   7402570899

  அன்புடன்
சோதிடர் 
சோ.ப ரவிச்சந்திரன்
  M.Sc,MA,BEd
 (ஆசிரியர்& ஜோதிட ஆராய்சியாளர்)
 ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.
 கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: