காலதாமத திருமணத்திற்கும் மற்றும் மறுமணத்திற்கு காரணம் என்ன ? ஜோதிட ரீதியான உதாரண ஜாதகத்துடன் விளக்கம்?
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !
" தனது மகனுக்ககோ அல்லது மகளுக்கோ உரிய வயதில் நல்ல இடத்தில் திருமணம் செய்ய நினைக்கும் பெற்றோர்கள் அவ்வாறு செய்ய இயலாமல் காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதற்க்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்கான பதிவு ."
ஒருவருக்கு திருமணம் சம்பந்தமாக ஆராய்ச்சியில் ஈடுபடும் போது அவரது ஜாதகத்தில் லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் ,களத்திர ஸ்தானமான 7ம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு இடங்களை இலக்கனம் மற்றும் ராசியிலிருந்து கவனிக்கப்பட வேண்டும் .
லக்கனம்
ஒரு சாதகரை வழிநடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் இலக்கனம் மற்றும் அதன் அதிபதி ஆகும். இங்கு லக்கனம் என்பது சாதகரை குறிக்கும். எனவே இலக்கனத்தில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது. அவ்வாறு இடம் பெற்று இருப்பின் அவை தனக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தை பார்வை செய்யும் என்பதால் திருமணத்தை தடை செய்கிறது.
லக்கனத்தில் ராகு அல்லது கேது இருப்பது களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் கேது அல்லது ராகு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது .இது களத்திர தோஷத்தினை சாதகருக்கு தர வாய்ப்புயிருக்கிறது. இதனால் திருமணம் தடைபடுவதற்கு மனதுக்கு பிடித்த மனைவி அல்லது கணவன் அமைவதற்கும் தடையாக இருக்கிறது.
இவை மட்டுமல்லாமல் லக்கனத்தில் மறைவிட ஸ்தானாதிபதியான 6 மற்றும் 8ஆம் இட அதிபதிகள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது .
இவையும் திருமணத்தை தடை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
லக்னாதிபதியானவர் கேந்திர திரிகோணங்களில் இடம்பெற்று உச்சம் ,ஆட்சி, நட்பு போன்ற வகையில் பலம் பெற்று இருப்பின் நல்லது. ஏனெனில் ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி பலம் பெற்றிருந்தால் அவரது வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறக்கூடிய தகுதி சாதகரிடம் இருக்கும் .
ஆனால் லக்கனாதிபதி ஆனது மறைவிட ஸ்தானமான
6, 8 போன்ற இடங்களில் மறையாமல் இருந்தால் நல்லது .லக்னாதிபதி பலம் இழப்பின் ஜாதகர் தனது வாழ்வில் சில அடிப்படையான தேவைகளுக்கே போராடி வாழக்கூடிய சூழலில் அவரால் இல்ல துணையை எவ்வாறு பாதுகாக்க முடியும் என கேள்விக்குறி எழுகிறது.
இரண்டாம் இடம் ( குடும்ப ஸ்தானம்)
ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது குடும்ப ஸ்தானம் ஆகும். எனவே குடும்பஸ்தானத்தில் ராகு, கேது, சனி மற்றும் செவ்வாய் போன்ற நவக்கிரகங்கள் இடம்பெறாமல் இருப்பது நல்லது .
அவ்வாறு இடம்பெறும் போது அதற்கு ஏழாம் பார்வை உண்டு என்ற வகையில் மாங்கல்ய ஸ்தானத்தை பார்வை செய்வதால் குடும்ப ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய இரண்டு இடங்களும் பாதிக்கப்படுகிறது .இந்த வகையில் கால தாமதமாக திருமணத்தை தர வழி இருக்கிறது.
இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பின் அதுவே எட்டாம் இடத்தில் கேது அல்லது ராகு இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. இது மாங்கல்ய தோஷத்தை தரும் என்பதால் காலதாமதம் திருமணத்தையும் , மனதிற்குப் பிடித்த அன்யோன்யமான வாழ்க்கைத் துணை அமைவதில் சிக்கல்கள் எழுகிறது.
குடும்ப ஸ்தானாதிபதி பகை ,நீசம் ,அஸ்தமனம் மற்றும் மறைவு போன்ற இடங்களில் இடம் பெறாமல் உச்சம் ஆட்சி மற்றும் கேந்திர கோணங்களில் இடம் பெற்றிருப்பின் நல்லது.
குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள் இடம்பெறாமல் இருப்பது நல்லது.
ஏழாம் இடம்
ஒருவரது சாதகத்தில் ஏழாம் இடம் என்பது தனது வாழ்க்கைத் துணையை குறிக்கும் இடமாகும். எனவே ஏழாம் அதிபதி ஆட்சி, உச்சம் கேந்திர, கோணம் மற்றும் நட்பு நிலையில் இருக்கும்போது மனைவியால் வாழ்க்கை தரம் உயர வாய்ப்பு உண்டு .
மாறாக ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் இருப்பது நல்லது. அதேபோல ஏழாமிடத்தில் மறைவு ஸ்தான அதிபதிகள் இடம் பெறாமல் இருத்தலும்
நல்லது ஆகும்.
ஏழாம் அதிபதி ,ஆறு எட்டு போன்ற மறைவிட வீடுகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும். மறைவிட ஸ்தான அதிபதிகள் ஏழாமிடத்தில் அமராமல் இருத்தல் நன்று ஆகும்.
அதேபோல ஏழாம் இடத்து அதிபதிகள் மறைவிட ஸ்தானாதிபதியுடன் சேராமல் இருக்க வேண்டும்.
ஏழாமிடத்தில் எந்த கிரகங்களும் இடம்பெறாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லவராக இருப்பர்.
ஏழாமிடத்தில் சனி, ராகு கேது மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இடம் பெற்றிருப்பின் திருமணம் காலதாமதமாகிக் கொண்டே செல்லும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஏழாம் பார்வையால் அவை இலக்கனத்தையும் பாதிப்படைய செய்துவிடுகிறது.
ஏழாமிடத்தில் சனி, ராகு செவ்வாய் ,சுக்கிரன் போன்ற கிரகங்கள் இடம் பெற்று இருப்பின் எத்தனை தாரம் வந்தாலும் நிலைக்காது.
எட்டாம் இடம்
ஒரு ஜாதகரின் எட்டாம் இடத்தினை மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இடம் பெற்றிருப்பின் அவை ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்வதால் கால தாமத திருமணத்திற்கு வழிவகுக்கிறது.
சுக்கிரன்
மகிழ்ச்சியான மண வாழ்விற்கு களத்திரகாரகன் சுக்கிரனின் பங்கு அளப்பரியது . ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம், மறைவு, நீசம், பகை , சனி செவ்வாய் ராகு கேது போன்ற பாவிகளுடன் சேர்க்கை கூடாது.
உதாரண ஜாதகம் 1
( மிதுன லக்னம் துலாம் ராசி ,சுவாதி நட்சத்திரம். லக்கனத்தில் ராகு, ஐந்தாமிடத்தில் சனி சந்திரன், ஆறாம் இடத்தில் குரு, ஏழாம் இடத்தில் கேது, பத்தில் சூரியன் புதன், 11-ல் செவ்வாய் சுக்கிரன் ,12ல் மாந்தி)
மேற்கண்ட உதாரணமாக ஜாதகத்தில் கால தாமத திருமணம் தந்ததோடு, திருமணம் நிகழ்ந்து ஒரு சில மாதங்களில் விவாகரத்தும் ஆகிவிட்டது. காரணம் என்னவாக இருக்கும் என்று ஜோதிட அடிப்படையில் விளக்கமாக ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
மேற்கண்ட ஜாதகத்தில யான் அடிக்கடி குறிப்பிட்டதுபோல இலக்கனம், 2-ம் இடம், 7-ம் இடம் மற்றும் எட்டாம் இடம் ஆகியவை இலக்கணம் மற்றும் ராசிப்படி பார்க்கும் பொழுது பலவீனமடைந்து இருப்பதைக் காணலாம்.
மிதுனம் லக்கனத்தில் ராகு, ஏழாமிடத்தில் கேது அமர்ந்து களத்திர தோஷத்தை தருகிறார்.இவை மட்டுமில்லாமல் ஏழாம் அதிபதி குரு லக்னத்திற்கு மறைவிட ஸ்தானமான ஆறாமிடத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் மறைந்துள்ள குருவை பாபக் கிரகமான செவ்வாய் எட்டாம் பார்வையாக பார்வை செய்து ஏழாம் இடத்தை பலம் இழக்க செய்துள்ளது.
அடுத்து குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரன் ஐந்தாம் இடத்தில் இருந்தாலும் அவருடன் உச்சம் பெற்ற பாவ கிரகமான சனி இணைந்து உள்ளது.
இவை மட்டுமல்லாமல் பதினோராம் இடத்தில் உள்ள பாவ கிரகமான செவ்வாய் ஏழாம் பார்வையாக இந்த சனி மற்றும் சந்திரனை பார்வை செய்கிறது. இதனால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடமும் கெட்டு விட்டது.
மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் அதிபதி சனியே பாவகரமான செவ்வாய் ஏழாம் பார்வையாக பார்த்து விடுகிறது.
ராசிப்படி பார்க்கும்போது துலாம் ராசியில் உச்சம் பெற்ற சனி அமர்ந்து குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான ஆட்சி பெற்ற செவ்வாயை சனி தனது உச்ச பார்வையால் பார்ப்பதோடு செவ்வாய் , சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை தனக்கு வரக்கூடிய மனைவிக்கு காம மிகுதியால் தடம் மாறும் வாய்ப்பும் வாய்ப்பு இருப்பதால் இவர்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்கியது.
இவரது ஜாதகத்தில் தார தோஷம் உள்ளது அதாவது ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி பலம் இழந்து, பதினோராம் அதிபதி பலம் பெற்று இருப்பின் அவருக்கு தாரம் தோஷம் உண்டு.
தாரதோஷம் உண்டு என்ற வகையில் மிதுன லக்கினத்திற்கு ஏழாம் அதிபதியான குரு ஆறில் மறைந்து பலமிழந்து, பதினோராம் அதிபதியான செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் இவருக்கு மறுமணம் உண்டு என்ற வகையில் முதல் தாரம் விவாகரத்தில் முடிந்தது.
உதாரண ஜாதகம் 2
(ரிஷப லக்னம் , துலாம் ராசி ,சித்திரை நட்சத்திரம்
லக்கினத்தில் கேது மூன்றாம் இடத்தில் செவ்வாய் மாந்தி, ஐந்தாம் இடத்தில் குரு ,ஆறாம் இடத்தில் சந்திரன் ,ஏழில் ராகு ,பத்தில் சனி, 11ல் சுக்கிரன் மற்றும் பனிரெண்டில் சூரியன் புதன்)
இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்த ஜாதகத்தில் லக்னத்தில் கேது, 7_ஆம் இடத்தில் ராகு அமர்ந்து களஸ்திர தடையை உண்டுபண்ணுகிறது.
மேலும் களத்திர ஸ்தானமான ஏழாமிடம் அதிபதியான செவ்வாய் மூன்றாம் இடத்தில் நீசம் அடைந்து உள்ளது .
குடும்ப ஸ்தானாதிபதியான புதன் லக்னத்திற்கு 12ல் மறைந்து உள்ளது.
ராசிப்படி பார்க்கும் பொழுது ராசிக்கு 2ல் குடும்பஸ்தானத்தில் ராகு, எட்டாம் இடத்தில் கேது, ராசிக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் நீசம் அடைந்து உள்ளது.
ராசிக்கு எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆறாமிடத்தில் மறைவு .
மேற்கண்ட பல காரணங்களால் இந்தப் பெண்ணிற்கு திருமணம் காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது.
உதாரண ஜாதகம் 3
இது ஒரு பெண்ணின் ஜாதகம்
(மகர லக்கனம் ,
மீனம் ராசி ,ரேவதி நட்சத்திரம் .
இரண்டில் குரு மூன்றில் சந்திரன் நான்கில் சூரியன் புதன் ராகு ஐந்தில் சுக்கிரன் பத்தில் கேது 11-ல் சனி மற்றும் 12 செவ்வாய்)
லக்னத்திற்கு ஏழாம் அதிபதி சந்திரன் மூன்றில் மறைவு ,குடும்ப அதிபதியான சனிபகவான் ஜென்ம விரோதியான செவ்வாயின் வீட்டில் அமர்ந்து உள்ளது.
பாவியான செவ்வாய் லக்னத்திற்கு 12ல் அமர்ந்து லக்கனத்திற்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தை தனது எட்டாம் பார்வையாலும், களத்திர ஸ்தானாதிபதியான சந்திரனை தனது நான்காம் பார்வையாலும் பார்வை செய்து ஏழாம் இடத்தைப் பலம் இழக்கச் செய்கிறது.
மாங்கல்ய ஸ்தானாதிபதியான சூரியன் உச்சம் பெற்று இருந்தாலும் ராகு கேது பிடியில் அகப்பட்டுள்ளது.
ராசிப்படி பார்க்கும்பொழுது மீனராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் ராகு,
மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது அமர்ந்து மாங்கல்ய தோஷத்தை தருகிறது.
இவை மட்டுமல்லாமல் களத்திர ஸ்தானாதிபதியான புதன் ராகு, கேது பிடியில் அகப்பட்டு உள்ளது. எனவே களத்திர தோஷத்தையும் இவை உருவாக்கியுள்ளது.
களத்திர காரகன் சுக்கிரனை சனி பகவான் சம சப்தமாக பார்வை செய்கிறது. இது போன்ற அமைப்பு இருப்பதால் இந்த பெண்ணிற்கு கால தாமத திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு சில ஆண்டுகளிலே விவாகரத்து ஆகிவிட்டது.
மேற்கண்டவாறு ஜாதக அமைப்பு உள்ளவர்களை திருமண பந்தத்தில் ஈடுபடுத்தும் போது சோதிடர்களாகிய நாம் வெறும் நட்சத்திர அடிப்படையிலான பொருத்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது அவர்களுக்கு மேற்கண்ட வகையில் பாதிப்பு உண்டாகிறது.
எனவே இது போன்ற அமைப்புகளை உடையவர்களை ஜாதகப் பொருத்தம் பார்க்க வரும் பொழுது கட்ட அடிப்படையிலும் நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு இடையே நடைபெறும் திசையும் உகந்த திசையாக உள்ளதா? என்பதையும் கோசார பலன்களையும் ஆராய்ந்து திருமணப் பொருத்தம் செய்ய வேண்டும்.
நன்றி!
(தங்களது ஜாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி , பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ .ப.ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !
" தனது மகனுக்ககோ அல்லது மகளுக்கோ உரிய வயதில் நல்ல இடத்தில் திருமணம் செய்ய நினைக்கும் பெற்றோர்கள் அவ்வாறு செய்ய இயலாமல் காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதற்க்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்கான பதிவு ."
ஒருவருக்கு திருமணம் சம்பந்தமாக ஆராய்ச்சியில் ஈடுபடும் போது அவரது ஜாதகத்தில் லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் ,களத்திர ஸ்தானமான 7ம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு இடங்களை இலக்கனம் மற்றும் ராசியிலிருந்து கவனிக்கப்பட வேண்டும் .
லக்கனம்
ஒரு சாதகரை வழிநடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் இலக்கனம் மற்றும் அதன் அதிபதி ஆகும். இங்கு லக்கனம் என்பது சாதகரை குறிக்கும். எனவே இலக்கனத்தில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது. அவ்வாறு இடம் பெற்று இருப்பின் அவை தனக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தை பார்வை செய்யும் என்பதால் திருமணத்தை தடை செய்கிறது.
லக்கனத்தில் ராகு அல்லது கேது இருப்பது களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் கேது அல்லது ராகு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது .இது களத்திர தோஷத்தினை சாதகருக்கு தர வாய்ப்புயிருக்கிறது. இதனால் திருமணம் தடைபடுவதற்கு மனதுக்கு பிடித்த மனைவி அல்லது கணவன் அமைவதற்கும் தடையாக இருக்கிறது.
இவை மட்டுமல்லாமல் லக்கனத்தில் மறைவிட ஸ்தானாதிபதியான 6 மற்றும் 8ஆம் இட அதிபதிகள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது .
இவையும் திருமணத்தை தடை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
லக்னாதிபதியானவர் கேந்திர திரிகோணங்களில் இடம்பெற்று உச்சம் ,ஆட்சி, நட்பு போன்ற வகையில் பலம் பெற்று இருப்பின் நல்லது. ஏனெனில் ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி பலம் பெற்றிருந்தால் அவரது வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறக்கூடிய தகுதி சாதகரிடம் இருக்கும் .
ஆனால் லக்கனாதிபதி ஆனது மறைவிட ஸ்தானமான
6, 8 போன்ற இடங்களில் மறையாமல் இருந்தால் நல்லது .லக்னாதிபதி பலம் இழப்பின் ஜாதகர் தனது வாழ்வில் சில அடிப்படையான தேவைகளுக்கே போராடி வாழக்கூடிய சூழலில் அவரால் இல்ல துணையை எவ்வாறு பாதுகாக்க முடியும் என கேள்விக்குறி எழுகிறது.
இரண்டாம் இடம் ( குடும்ப ஸ்தானம்)
ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது குடும்ப ஸ்தானம் ஆகும். எனவே குடும்பஸ்தானத்தில் ராகு, கேது, சனி மற்றும் செவ்வாய் போன்ற நவக்கிரகங்கள் இடம்பெறாமல் இருப்பது நல்லது .
அவ்வாறு இடம்பெறும் போது அதற்கு ஏழாம் பார்வை உண்டு என்ற வகையில் மாங்கல்ய ஸ்தானத்தை பார்வை செய்வதால் குடும்ப ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய இரண்டு இடங்களும் பாதிக்கப்படுகிறது .இந்த வகையில் கால தாமதமாக திருமணத்தை தர வழி இருக்கிறது.
இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பின் அதுவே எட்டாம் இடத்தில் கேது அல்லது ராகு இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. இது மாங்கல்ய தோஷத்தை தரும் என்பதால் காலதாமதம் திருமணத்தையும் , மனதிற்குப் பிடித்த அன்யோன்யமான வாழ்க்கைத் துணை அமைவதில் சிக்கல்கள் எழுகிறது.
குடும்ப ஸ்தானாதிபதி பகை ,நீசம் ,அஸ்தமனம் மற்றும் மறைவு போன்ற இடங்களில் இடம் பெறாமல் உச்சம் ஆட்சி மற்றும் கேந்திர கோணங்களில் இடம் பெற்றிருப்பின் நல்லது.
குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள் இடம்பெறாமல் இருப்பது நல்லது.
ஏழாம் இடம்
ஒருவரது சாதகத்தில் ஏழாம் இடம் என்பது தனது வாழ்க்கைத் துணையை குறிக்கும் இடமாகும். எனவே ஏழாம் அதிபதி ஆட்சி, உச்சம் கேந்திர, கோணம் மற்றும் நட்பு நிலையில் இருக்கும்போது மனைவியால் வாழ்க்கை தரம் உயர வாய்ப்பு உண்டு .
மாறாக ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் இருப்பது நல்லது. அதேபோல ஏழாமிடத்தில் மறைவு ஸ்தான அதிபதிகள் இடம் பெறாமல் இருத்தலும்
நல்லது ஆகும்.
ஏழாம் அதிபதி ,ஆறு எட்டு போன்ற மறைவிட வீடுகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும். மறைவிட ஸ்தான அதிபதிகள் ஏழாமிடத்தில் அமராமல் இருத்தல் நன்று ஆகும்.
அதேபோல ஏழாம் இடத்து அதிபதிகள் மறைவிட ஸ்தானாதிபதியுடன் சேராமல் இருக்க வேண்டும்.
ஏழாமிடத்தில் எந்த கிரகங்களும் இடம்பெறாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லவராக இருப்பர்.
ஏழாமிடத்தில் சனி, ராகு கேது மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இடம் பெற்றிருப்பின் திருமணம் காலதாமதமாகிக் கொண்டே செல்லும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஏழாம் பார்வையால் அவை இலக்கனத்தையும் பாதிப்படைய செய்துவிடுகிறது.
ஏழாமிடத்தில் சனி, ராகு செவ்வாய் ,சுக்கிரன் போன்ற கிரகங்கள் இடம் பெற்று இருப்பின் எத்தனை தாரம் வந்தாலும் நிலைக்காது.
எட்டாம் இடம்
ஒரு ஜாதகரின் எட்டாம் இடத்தினை மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இடம் பெற்றிருப்பின் அவை ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்வதால் கால தாமத திருமணத்திற்கு வழிவகுக்கிறது.
சுக்கிரன்
மகிழ்ச்சியான மண வாழ்விற்கு களத்திரகாரகன் சுக்கிரனின் பங்கு அளப்பரியது . ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம், மறைவு, நீசம், பகை , சனி செவ்வாய் ராகு கேது போன்ற பாவிகளுடன் சேர்க்கை கூடாது.
உதாரண ஜாதகம் 1
( மிதுன லக்னம் துலாம் ராசி ,சுவாதி நட்சத்திரம். லக்கனத்தில் ராகு, ஐந்தாமிடத்தில் சனி சந்திரன், ஆறாம் இடத்தில் குரு, ஏழாம் இடத்தில் கேது, பத்தில் சூரியன் புதன், 11-ல் செவ்வாய் சுக்கிரன் ,12ல் மாந்தி)
மேற்கண்ட உதாரணமாக ஜாதகத்தில் கால தாமத திருமணம் தந்ததோடு, திருமணம் நிகழ்ந்து ஒரு சில மாதங்களில் விவாகரத்தும் ஆகிவிட்டது. காரணம் என்னவாக இருக்கும் என்று ஜோதிட அடிப்படையில் விளக்கமாக ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
மேற்கண்ட ஜாதகத்தில யான் அடிக்கடி குறிப்பிட்டதுபோல இலக்கனம், 2-ம் இடம், 7-ம் இடம் மற்றும் எட்டாம் இடம் ஆகியவை இலக்கணம் மற்றும் ராசிப்படி பார்க்கும் பொழுது பலவீனமடைந்து இருப்பதைக் காணலாம்.
மிதுனம் லக்கனத்தில் ராகு, ஏழாமிடத்தில் கேது அமர்ந்து களத்திர தோஷத்தை தருகிறார்.இவை மட்டுமில்லாமல் ஏழாம் அதிபதி குரு லக்னத்திற்கு மறைவிட ஸ்தானமான ஆறாமிடத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் மறைந்துள்ள குருவை பாபக் கிரகமான செவ்வாய் எட்டாம் பார்வையாக பார்வை செய்து ஏழாம் இடத்தை பலம் இழக்க செய்துள்ளது.
அடுத்து குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரன் ஐந்தாம் இடத்தில் இருந்தாலும் அவருடன் உச்சம் பெற்ற பாவ கிரகமான சனி இணைந்து உள்ளது.
இவை மட்டுமல்லாமல் பதினோராம் இடத்தில் உள்ள பாவ கிரகமான செவ்வாய் ஏழாம் பார்வையாக இந்த சனி மற்றும் சந்திரனை பார்வை செய்கிறது. இதனால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடமும் கெட்டு விட்டது.
மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் அதிபதி சனியே பாவகரமான செவ்வாய் ஏழாம் பார்வையாக பார்த்து விடுகிறது.
ராசிப்படி பார்க்கும்போது துலாம் ராசியில் உச்சம் பெற்ற சனி அமர்ந்து குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான ஆட்சி பெற்ற செவ்வாயை சனி தனது உச்ச பார்வையால் பார்ப்பதோடு செவ்வாய் , சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை தனக்கு வரக்கூடிய மனைவிக்கு காம மிகுதியால் தடம் மாறும் வாய்ப்பும் வாய்ப்பு இருப்பதால் இவர்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்கியது.
இவரது ஜாதகத்தில் தார தோஷம் உள்ளது அதாவது ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி பலம் இழந்து, பதினோராம் அதிபதி பலம் பெற்று இருப்பின் அவருக்கு தாரம் தோஷம் உண்டு.
தாரதோஷம் உண்டு என்ற வகையில் மிதுன லக்கினத்திற்கு ஏழாம் அதிபதியான குரு ஆறில் மறைந்து பலமிழந்து, பதினோராம் அதிபதியான செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் இவருக்கு மறுமணம் உண்டு என்ற வகையில் முதல் தாரம் விவாகரத்தில் முடிந்தது.
உதாரண ஜாதகம் 2
(ரிஷப லக்னம் , துலாம் ராசி ,சித்திரை நட்சத்திரம்
லக்கினத்தில் கேது மூன்றாம் இடத்தில் செவ்வாய் மாந்தி, ஐந்தாம் இடத்தில் குரு ,ஆறாம் இடத்தில் சந்திரன் ,ஏழில் ராகு ,பத்தில் சனி, 11ல் சுக்கிரன் மற்றும் பனிரெண்டில் சூரியன் புதன்)
இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்த ஜாதகத்தில் லக்னத்தில் கேது, 7_ஆம் இடத்தில் ராகு அமர்ந்து களஸ்திர தடையை உண்டுபண்ணுகிறது.
மேலும் களத்திர ஸ்தானமான ஏழாமிடம் அதிபதியான செவ்வாய் மூன்றாம் இடத்தில் நீசம் அடைந்து உள்ளது .
குடும்ப ஸ்தானாதிபதியான புதன் லக்னத்திற்கு 12ல் மறைந்து உள்ளது.
ராசிப்படி பார்க்கும் பொழுது ராசிக்கு 2ல் குடும்பஸ்தானத்தில் ராகு, எட்டாம் இடத்தில் கேது, ராசிக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் நீசம் அடைந்து உள்ளது.
ராசிக்கு எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆறாமிடத்தில் மறைவு .
மேற்கண்ட பல காரணங்களால் இந்தப் பெண்ணிற்கு திருமணம் காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது.
உதாரண ஜாதகம் 3
இது ஒரு பெண்ணின் ஜாதகம்
(மகர லக்கனம் ,
மீனம் ராசி ,ரேவதி நட்சத்திரம் .
இரண்டில் குரு மூன்றில் சந்திரன் நான்கில் சூரியன் புதன் ராகு ஐந்தில் சுக்கிரன் பத்தில் கேது 11-ல் சனி மற்றும் 12 செவ்வாய்)
லக்னத்திற்கு ஏழாம் அதிபதி சந்திரன் மூன்றில் மறைவு ,குடும்ப அதிபதியான சனிபகவான் ஜென்ம விரோதியான செவ்வாயின் வீட்டில் அமர்ந்து உள்ளது.
பாவியான செவ்வாய் லக்னத்திற்கு 12ல் அமர்ந்து லக்கனத்திற்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தை தனது எட்டாம் பார்வையாலும், களத்திர ஸ்தானாதிபதியான சந்திரனை தனது நான்காம் பார்வையாலும் பார்வை செய்து ஏழாம் இடத்தைப் பலம் இழக்கச் செய்கிறது.
மாங்கல்ய ஸ்தானாதிபதியான சூரியன் உச்சம் பெற்று இருந்தாலும் ராகு கேது பிடியில் அகப்பட்டுள்ளது.
ராசிப்படி பார்க்கும்பொழுது மீனராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் ராகு,
மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது அமர்ந்து மாங்கல்ய தோஷத்தை தருகிறது.
இவை மட்டுமல்லாமல் களத்திர ஸ்தானாதிபதியான புதன் ராகு, கேது பிடியில் அகப்பட்டு உள்ளது. எனவே களத்திர தோஷத்தையும் இவை உருவாக்கியுள்ளது.
களத்திர காரகன் சுக்கிரனை சனி பகவான் சம சப்தமாக பார்வை செய்கிறது. இது போன்ற அமைப்பு இருப்பதால் இந்த பெண்ணிற்கு கால தாமத திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு சில ஆண்டுகளிலே விவாகரத்து ஆகிவிட்டது.
மேற்கண்டவாறு ஜாதக அமைப்பு உள்ளவர்களை திருமண பந்தத்தில் ஈடுபடுத்தும் போது சோதிடர்களாகிய நாம் வெறும் நட்சத்திர அடிப்படையிலான பொருத்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது அவர்களுக்கு மேற்கண்ட வகையில் பாதிப்பு உண்டாகிறது.
எனவே இது போன்ற அமைப்புகளை உடையவர்களை ஜாதகப் பொருத்தம் பார்க்க வரும் பொழுது கட்ட அடிப்படையிலும் நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு இடையே நடைபெறும் திசையும் உகந்த திசையாக உள்ளதா? என்பதையும் கோசார பலன்களையும் ஆராய்ந்து திருமணப் பொருத்தம் செய்ய வேண்டும்.
நன்றி!
(தங்களது ஜாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி , பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ .ப.ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment