Wednesday, 2 December 2020

நீடித்த தாம்பத்திய சுகம் பெற?

                                     


  

                   நீடித்த தாம்பத்திய சுகம் பெற...?

                                           


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  " ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும்"

      -  திருக்குறள்


 இங்கு வள்ளுவர் குறிப்பிடும்

" ஊடல்" என்பது 

கணவன்- மனைவிக்கு இடையே உருவாகும் கருத்து வேறுபாடு அல்லது பிணக்கு ஆகும். இந்த  பிணக்கில் யார் விட்டுக் கொடுக்கிறார்களோ ? அவர்களே வெற்றி பெற்றவர்" என்கிறார் வான்புகழ் கொண்ட தெய்வப்புலவர்.


   அது எப்படி வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ள முடியும் என்று  உங்கள் மனதில் எழும் கேள்வி புரிகிறது. கணவன்- மனைவிக்கு இடையே எழும் கருத்து வேறுபாட்டில் ஒருவர் விட்டுக் கொடுக்கும் பொழுது அவர் தோற்றது போன்று தெரிந்தாலும் விட்டுக்கொடுத்தல் விளைவாக மற்றவருடைய மனம் இறங்கி வருத்தப்பட்டு,தனது மனதுக்கு எதிராளி தோன்றாதபட்சத்தில் அன்றிரவு நடக்கும் கூடலில் அதிக இன்பத்தை அகம் மலர அல்லி பருக செய்வார். இப்பொழுது நீங்கள் கூறுங்கள் இங்கு வெற்றி பெற்றவர் யார் விட்டுக் கொடுத்தவர் தானே.


இதனையே மற்றொரு குறளில் 


"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்"


  என்கிறார்.


கணவன் மனைவிக்கு இடையே சிறு கருத்து வேறுபாடு அல்லது சிறு சிணுங்கல் உருவாகி பிறகு அன்றிரவு கூடும்போது உருவாகும் காதல் இன்பம் மிகப்பெரிய இன்பமாகும்.


 சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியின் மீது கொண்ட காதல் உணர்வால் இவ்வாறு கவி பாடுகிறார்.


" மாசறு பெண்ணே! வலம்புரி முத்தே!

 காசறு விரையே!

 கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே ! பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ! யாழிடைப் பிறவா இசையே என்கோ !

தாழிருங் கூந்தல் தையாள்!  நின்னை.."


  என்று தன் கூடல் பொழுதில் தனது மனைவியை வர்ணிக்கின்றார்.


  கணவன் மனைவியின் மீதும், மனைவி கணவன் மீதும் காதல் உணர்வோடு காம ரசம் ததும்பி மகிழ அவர்களது ஜாதகத்தில் களத்திரகாரகன் என்று  என்று அழைக்கப்படும் சுக்கிரபகவான் உடைய நிலையை ஆராய்ந்து அறிய வேண்டும்.


  ஒருவருக்கு காதல் உணர்வு ,கவிதை உணர்வு தன் இணை அழகை ரசிக்கும் கற்பனை சக்தி, தனக்கு வரும் இணையை தாம்பத்தியத்தில் நீடித்த சுகத்தை தரும் சக்தி அனைத்திற்குமே காரகராக விளங்கக்கூடியது நவ கிரகங்களில்

 "சுக்கிர பகவானே" முதன்மை கிரகமாக திகழ்கிறது. அதனை அடுத்து மங்கள காரகன் அல்லது காம கிரகம் என்று அழைக்க கூடிய "செவ்வாய் பகவான்" துணைநிலை கிரகமாகும்.


  ஒருவரது ஜாதகத்தில் "களத்திரஸ்தானம்"  என்று அழைக்கக்கூடிய ஏழாம் இடமே கணவன் -மனைவி கட்டித்தழுவும் நிலை, இல்லற சுகத்தில் இன்பம் பெறும் நிலை மற்றும் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் நிலை போன்றவற்றை அறிய பயன்படும் ஸ்தானமாகும். ஏழாம் இடமே தனக்கு வரும் வாழ்க்கைத் துணையைப் பற்றி விரிவாக அறிய உதவும் பாவகம் ஆகும்.


  ஒருவரது ஜாதகத்தில் ஏழாமிட அதிபதி உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று, இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு சுபத்துவம் பெற்ற நிலையில், களத்திரகாரகன் என்று அழைக்கப்படும்  சுக்கிர பகவானும் எவ்விதத்திலும் பாவத்துவம் பெறாமல் சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் சுக்கிர தசை அல்லது சுக்கிர புத்தி அல்லது சுக்கிரன் தொடர்புடைய தசா புத்தியில்  நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய யோகம் ஒருவருக்கு உண்டாகும்.


 யார் ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடமும் மற்றும் அதன் அதிபதி , களத்திர காரகன் சுக்கிரன் ஆகியவை பாதிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய உகந்த தசா புக்தி நடைபெறாத காலங்களில் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கக்கூடிய யோகம் அற்றவராக திகழ்வார்.


    ஒருவர் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க நட்சத்திர பொருத்தத்தில் 

"யோனி பொருத்தம்" மிக அவசியமான ஒன்றாகும். ஒன்றுக்கொன்று நட்பு யோனிகள் ஒருவருக்கு வரும்பொழுது அவர்களுக்கிடையே நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கக்கூடிய யோகம் பெறும்.


  உதாரணமாக

 மானுக்கு- பசு நட்பு ஆட்டிற்கு -குதிரை நட்பு நாய்க்கு- மனிதன் நட்பு


     இதுபோன்று தம்பதிகள் இருவருக்கும் இடையே நட்பு யோனிகள் வரும்பொழுது அவர்களுக்கு இடையே பொருத்தம் ஏற்பட்டு நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கக் கூடிய யோகம் உண்டு .


  மாறாக தம்பதிகள் இருவருக்கும் இடையே பகை யோனிகள் வரும்பொழுது அவர்களுக்கு இடையே நீடித்த தாம்பத்திய சுகத்தை அளிக்கக் கூடிய யோகம் வராது.


உதாரணமாக 


யானைக்கு- சிங்கம்,மனிதர் பகை


 குதிரைக்கு- பசு, எருமை


 புலிக்கு- பசு, எருமைக்கடா, மான், நாய்


 குரங்குக்கு- ஆடு பகை


எலிக்கு- பூனை பாம்பு பகை

 பாம்புக்கு- கீரி, ஆடு


 பூனைக்கு- நாய் புலி


  நமது சங்க கால இலக்கியத்தில் முறையான காமத்திற்கு ஐந்து திணைகளை வகுத்தார்கள்.

 அவையாவன

 "குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை" ஆகும். இதேபோல முறையற்ற காமத்திற்கு இரண்டு திணைகளை வகுத்துள்ளனர்.

 ஒன்று" பெருந்திணை", மற்றொன்று" கைக்கிளை" ஆகும்.


 பெருந்திணை என்பது "பொருந்தாக் காமம்" ஆகும்.

 கைக்கிளை என்பது

" ஒரு தலை காதல்" ஆகும்.


  முறையான காமத்தினை குறிக்கும் ஐந்திணையில் தலைவனும்- தலைவியும் புணர்தல், பிரிதல், காத்திருத்தல், ஊடல் மற்றும் வருந்துதல் போன்ற நிலைகள் இருந்தன.


 ஒருவர் ஜாதகத்தில் பொருந்தாக் காமம் மற்றும் ஒருதலை காதலை தரக்கூடிய கிரக நிலைகள் பின்வருமாறு;


    ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் அதன் அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகிய இவர்களுடன் இயற்கை பாவ கிரகமான சனி ,செவ்வாய் மற்றும் ராகு போன்ற கிரகங்கள் பார்வை, சேர்க்கை மற்றும் நட்சத்திர சார தொடர்பு மற்றும் ஆறு மற்றும் எட்டாமிட தொடர்பு கொள்ள மேற்கண்ட வகையிலான பொருந்தாக் காமம் அல்லது ஒருதலைக் காதலும் உருவாகி சமூகத்திற்கும் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் இன்னல்களைத் தருகிறது.


"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்"


காமம் மலரை விட  மென்மை உடையதாகும். அதன் உண்மையை அறிந்து நல்ல பயனை அடையக் கூடியவர் வெகுசிலரே ஆவார்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப் & டெலிகிராம்

  9715189647


   செல்

   9715189647

      7402570899


   My website

   www.astroravichandransevvai.in


                            


என்றும் அன்புடன்


 சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் ,தமிழ்நாடு, இந்தியா.

No comments: