எதிர்காலம் அறிதல்
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை
எதிர்காலம் அறிதல் என்பது ஒருவகை கலை. இதற்கு சோதிடவியல் மிக முக்கியமாக பயன்படுகிறது.
"எவர் ஒருவருக்கும் தனது எதிர்காலம் பற்றிய கனவு அடிக்கடி எழுவதுண்டு ". "எதிர்காலத்தில் தாம் எவ்வாறு இருப்போம்?" என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் இயற்கையாகவே மனிதர்களுக்கு உண்டு.
கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களும் கூட எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் உடையவர்களகவே இருப்பார்கள்.
ஜெனன காலத்தில்
வான வீதியில் உலாவரும் கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு நடக்கும் தசா புத்தி மற்றும் கோச்சார பலன்களுக்கு ஏற்ப எதிர்காலம் கணித்து சோதிடர்களால் தரப்படுகிறது.
பொதுவாக ஒருவருக்கு நடக்க இருக்கும் தசைகள் யோக தசையாக அமைய லக்கின யோகருமான திரிகோணாதிபதிகள் (1,5,9) தசைகள் யோகத்தை தரும் என்றபோதிலும், சரியான முறையில் ஆய்வு செய்து பார்த்தால் அதிலும் குறிப்பாக சுபத்துவ தன்மையின் அடிப்படையில் ஜாதகரது ஜாதக கட்டத்தினை ஆய்வு செய்து பார்க்கப்படும் போது " இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகியோருடைய தொடர்பு பெற்ற அமைப்புடைய தசாபுத்திகள் வாழ்வில் வரும்பொழுது அவரது வாழ்க்கை வண்ண பூங்கொத்தாக மகிழ்ச்சியாக அமைகிறது.
தசாபுத்திகள் நல்ல பலனைத் தர வேண்டுமாயினும் , அவ்வாறு தரும் பலன்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டுமானால், அவரது ஜாதகத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய கேப்டன் எனப்படும் "லக்னாதிபதியும்" பலம் பெற்றிருக்க வேண்டும்.
ஒருவர் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமாயின் அவர் மேற்கொள்ளும் முயற்சியும் மற்றும் தொழிலும் மேன்மை அடைய வேண்டும்.
ஒருவருடைய வாழ்வில் லட்சியம், அவர் மேற்கொள்ள இருக்கும் தொழிலும் மற்றும்அதன் மூலம் பெறக்கூடிய வருமானமும் அவரது 25 வயதுக்குள் முடிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒருவர் எந்த தொழிலில் மேற்கொண்டு அதன் மூலம் பொருள் ஈட்ட வேண்டும் என்பதை அவருடைய கிரக கர்மபலன் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை கண்டறிவதே சோதிடரின் முக்கியமான கடமையாகும்.
ஒருவர் அவரது ஜாதகத்தில் உள்ள அதிக சுபத்துவம் பெற்ற கிரகங்களின் தொழிலையே வாழ்வில் மேற்கொள்வார்.அந்தக் கிரகம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் ஆர்வம் அவரது மனதில் இயற்கையாகவே அமைந்திருப்பதையும் காணலாம். எனவே அந்த தொழில் தொடர்பான முயற்சியில் அவரது மனம் ஈடுபடும்.
ஒரு சிலர் தாம் படித்ததற்கும் , அவர்கள் மேற்கொள்ளும் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதையும் காணலாம். இதற்கான காரணங்களை ஆய்வு செய்தால் அவரது ஜாதகத்தில் அந்த படிப்பு சார்ந்த கிரகம் அதிக சுபத்துவம் இருப்பதால் படித்திருப்பார் .ஆனால் படித்து முடித்தவுடன் உகந்த தசாபுத்திகள் சரியாக அமையாத பட்சத்தில் அவர் கற்ற படிப்பு சார்ந்த தொழிலில் ஈடுபடாமல் செயல்பட வைக்கும்.
உதாரணமாக மிதுனம் அல்லது கன்னி ராசியில் பிறந்தவர்கள் அவரது ஜாதகத்தில் ஜாதகத்தில் செவ்வாய் அதிக சுபத்துவமாக இருப்பதால் மருத்துவர் படிப்பு படித்திருப்பார் எனினும் அவர் மருத்துவ படிப்பு முடித்தவுடன் அவருக்கு நடப்பில் இருக்கும் செவ்வாய் தசை காலங்களில் அவரால் அவரது மருத்துவப் பணியில் ஈடுபட முடியாமல் வேறு வேலைக்குப் சென்று இருப்பார் . மருத்துவ படிப்புக்கு காரணமான கிரகமான செவ்வாய் ஜாதகரை மருத்துவராக ஆக்கி இருந்தாலும் அவரது தசாபுக்தி காலங்களில் அந்த செவ்வாய்க்குரிய காரக பலனைத் தராமல் ஆதிபத்திய பலனையே தரும் என்கின்ற வகையில் மிதுனம் , கன்னி லக்கினத்திற்கு ஒவ்வாத செவ்வாய் திசை நடப்பில் வரும் காலங்களில் அவர் மருத்துவத் தொழிலை விட்டு வேறு தொழில் ஈடுபடுவார்.
எனவே ஒருவர் செய்யும் தொழிலுக்கு அவரது ஜாதகத்தில் அதிக சுபத்தன்மை பெற்ற கிரகம் காரணம் எனினும் அதனை முடிவு செய்வது அவருக்கு நடக்க இருக்கும் தசா புத்திகளே ஆகும்.உகந்த தசாபுத்திகள் நடக்காத காலங்களில் அவர் அந்த தொழிலை மேற்கொள்ளும் போது அதனால் அவர் பல இன்னல்களுக்கு உள்ளாவதை காணலாம்.
ஒருவரது ஜாதகத்தில் எதிர்காலம் பற்றி அறிந்து கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பது தசா புத்திகள் மற்றும் கோச்சார பலன்களே ஆகும்.
ஒருவருக்கு என்ன தான் யோகமான அமைப்புகள் சாதகத்தில் இருந்தாலும், அதன் அதன் தசா காலங்களில் மட்டுமே அந்த யோகத்தை அனுபவிக்க முடியும். அவ்வாறு அனுபவிப்பதற்கும் அவரது ஜாதகத்தில் உள்ள லக்னாதிபதி வலுவோடு இருக்க வேண்டும்.
ஒரு சிலரது சாதகத்தில் பார்க்கும்போது யோகமான அமைப்புகள் அதிகமாக இல்லை என்றாலும், அவருக்கு நடப்பிலிருக்கும் தசை நல்ல சுபத்துவம் பெற்ற தசையாக இருக்கக்கூடிய பட்சத்தில் உரிய வயதிலும் வரும் பொழுது அதனை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேறி விடுவது உண்டு.
உச்சம், ஆட்சி போன்ற நிலைகளிலும், சுபத்துவம் பெற்ற நிலையிலும் கேந்திர மற்றும் கோணாதிபதி இருப்பினும் அதற்குரிய தசை அமைப்புகள் வாழ்வில் உரிய காலத்தில் வராததால் கஷ்டப்படுவோரும் உண்டு.
கீழ்க்கண்ட ராசிகளுக்கு கீழ்க்கண்ட தசைகள் உரிய காலத்தில் பங்கப்படாமல் சுபத்துவம் பெற்ற நிலையில் நிற்கும் பொழுது சாதகருக்கு மிகுந்த யோக பலன்களை தருகிறது.
மேஷ ராசிக்கு உரிய காலத்தில் சூரிய மற்றும் குரு தசை மற்றும் லக்னாதிபதி என்ற வகையில் செவ்வாய் தசை,
ரிஷப ராசிக்கு சனி மற்றும் புதன் திசை, மற்றும் லக்கனாதிபதி என்றவகையில் சுக்கிரதசை,
மிதுன ராசிக்கு சுக்கிரன் ,சனி மற்றும் லக்கனாதிபதி என்ற வகையில் புதன் தசை
கடக ராசிக்கு சந்திரன் செவ்வாய் மற்றும் குரு தசை,
சிம்ம ராசிக்கு சூரியன், குரு மற்றும் செவ்வாய் தசை,
கன்னி ராசிக்கு சனி சுக்கிரன் மற்றும் லக்னாதிபதி என்றவகையில் புதன் தசை,
துலா ராசிக்கு சனி, புதன் மற்றும் லக்கனாதிபதி என்றவகையில் சுக்கிரதசை,
விருச்சக ராசிக்கு குரு, சந்திரன் மற்றும் லக்னாதிபதி என்ற வகையில் செவ்வாய் தசை,
தனுசு ராசிக்கு செவ்வாய், சூரிய தசை, லக்னாதிபதி என்ற வகையில் குருதசை
மகர ராசிக்கு சுக்கிரன், புதன் மற்றும் லக்னாதிபதி என்றவகையில் சனிதசை,
கும்ப ராசிக்கு புதன், சுக்கிரன் மற்றும் லக்னாதிபதி என்றவகையில் சனிதசை,
மீன ராசிக்கு சந்திரன், செவ்வாய் தசை மற்றும் லக்கனாதிபதி என்றவகையில் குருதசை.
இவை அல்லாது மற்ற கிரகங்கள் தசை நடப்பில் வரும்பொழுது அது யோகத்தை தர வேண்டுமாயின் அக்கிரகங்கள் 3, ,6 ,10, 11 ஆகிய இடங்களில் நட்பு நிலையில் அமர வேண்டும் அல்லது இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு பெற்று அதன் தசை நடத்தப்பட வேண்டும்.
நன்றி!
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & டெலிகிராம்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா.
No comments:
Post a Comment