Wednesday, 2 December 2020

ஜாதகத்தில் சுபத்துவநிலை காட்டும் சுப பலன்கள்.

 ஜாதகத்தில் சுபத்துவ நிலை காட்டும் சுப பலன்கள்?


                              



  ஒரு கிரகம் நன்மையான பலன்களை தர வேண்டுமாயின், 

"அந்த கிரகம் எந்த விதத்திலும் பாவத்துவம் அடையாத சூழ்நிலையை பெற்றிருக்க வேண்டும்".


 "பாவத்துவம் அடைதல் என்றால் என்ன?" என உங்களுக்கு வினா  மனதினில் எழுப்ப தோன்றும். இதற்கான விடையை நானே சொல்கிறேன்.

 " ஒரு கிரகம் இயற்கைப் பாபக் கிரகமான சனி ,செவ்வாய், ராகு மற்றும் கேதுவுடன் இணைந்த அல்லது பார்வை பெற்ற அல்லது பாவர் சாரம் பெற்ற அமைப்பு பெற்ற ஒரு கிரகம் பாவத்துவம் அடைந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது."


  பாவத்துவம் அடைந்த கிரகம் கோணம் மற்றும் கேந்திராதிபதிகளாக இருந்தாலும் அதன் தசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை  தந்து விடுவதில்லை.


  ஒரு கிரகம் மறைவிட ஸ்தானாதிபதிகளாக இருந்தாலும் அல்லது லக்கின பகை கிரகமாகவே இருந்தாலும்

சுபத்துவம் அடைந்த நிலையில் அதன் தசை காலங்களில் அதன் ஆதிபத்தியம் வழியான யோக பலனை தந்து விடுகிறது.


    உடனே"சுபத்துவம்  நிலை அடைதல் என்றால் என்ன?" என்ற மற்றொரு சந்தேக வினா உங்கள் மனதில் எழுவது எனக்குப் புரிகிறது.


  "சுபத்துவம் நிலையை பற்றி விளக்குவதற்கு ஜாதக கட்டத்தில் எண்கள் முக்கியமில்லை. லக்கினம் முதலாக எண்ணி வரத் தேவையும் இல்லை.


  ஒரு கிரகம் பாவ கிரகமாகவே இருந்தாலும் அல்லது ஒரு கிரகம் பாவ கிரகங்களுடன் இணைந்து இருந்தாலும் அல்லது ஒரு கிரகம் பவர் சாரம் பெற்றிருந்தாலும் அல்லது ஒரு கிரகம் லக்னத்திற்கு பகை கிரகமாகவே இருந்தாலும் வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு பெற்ற கிரகம் சுபத்துவ நிலையினை அடைந்து தனது ஆதிபத்திய வழியாக சுப பலனைத் தருகிறது.


 இந்த சுபத்துவம் நிலையை விளக்க கீழ்க்கண்ட ஒரு உதாரண ஜாதகத்தை கையில் எடுத்துக்கொண்டு விளக்குகிறேன்.



.


 இவரது

 பிறந்த தேதி: 08.09.1979

பிறந்த நேரம்: 9.37 pm

பிறந்த இடம்: சென்னை

நட்சத்திரம் :ரேவதி


   இவரது ஜாதகத்தினை மேம்போக்கான நிலையில் ஆய்வு செய்து பார்த்தால் பெரும்பாலான கிரகங்கள் பாவத்துவமான‌ நிலையில் நிற்பது போல் தோன்றுகிறது.ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல.


   இவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் அதாவது ராசிக்கு மறைவிட ஸ்தானமான ஆறாம் இடத்தினில் ,

ஆறு கிரகங்களான குரு ,சனி, ராகு, சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்துள்ளது.கேது பகவானும் 180 பாகை வித்தியாசத்தில் அமர்ந்து அந்த ஸ்தானத்துடன் தொடர்பு கொள்கிறது.


 இயற்கை சுப கிரகமான குரு ,புதன்  மற்றும் சுக்கிரனுடன் இயற்கை பாவ கிரகமான சனி,ராகு மற்றும் அரை பாவரான சூரியன் உடன் இணைந்து பாவத்தன்மையினை குரு புதன் மற்றும் சுக்கிரன் அடைந்துள்ளது.


 இங்கு கிரகங்கள் ஜாதக கட்டத்தில் அமைந்துள்ள பாகை (degree) அளவு

இலக்கனம்-22°.12'

சூரியன் பகவான் ‌21°-17'

சந்திரன் பகவான் 23°.00

செவ்வாய்பகவான் 26°.30'

புதன் பகவான் 17°.36'

குரு பகவான்-2°.10'

சுக்கிரன் பகவான் 24°.52'

சனி பகவான் 23°.26'

ராகு 14°.23' 

கேது பகவான் 14°.23' 


  இங்கு சூரியனுக்கு பகை கிரகமான சனி பகவான் இரண்டு பாகை(டிகிரி) வித்தியாசத்தில் நெருங்கி இணைந்து பாவத்துவம் அடைந்துள்ளது.


      இதேபோல  அரை பாவரான சூரியன் உடன் ராகு பகவான் ஏழு  பாகை வித்தியாசத்தில் இணைந்து சூரிய பகவானை மேலும் பாவத்துவம் அடைய வைத்துள்ளது.


 இதேபோல இயற்கை சுப கிரகமான சுக்கிரன் பகவானை ஒன்று பாகை வித்தியாசத்தில் நெருங்கி சனி பகவானும் , 

பத்து பாகை வித்தியாசத்தில் ராகு பாகவானும் இணைந்து பாவத்துவமடைய செய்துள்ளது.


 மற்றொரு இயற்கை சுப கிரகமான குரு பகவானை 12 பாகை வித்தியாசத்தில் பாவத்துவம் அடைய செய்து உள்ளது. குரு பகவானும், சனி பகவானும் ஒரே ராசியில் இருந்தாலும் 21 பாகைக்கு மேல் இருப்பதால் சனிபகவானால் குருவை பாவத்துவம் அடைய செய்ய இயலாது.


    புதன் பகவானை மூன்று பாகை வித்தியாசத்தில் ராகு பகவானும்,ஆறு பாகை வித்தியாசத்தில் சனி பகவானும் இணைந்து பாவத்துவம் அடையச் செய்துள்ளது.


  இவருக்கு ஜெனன புதன் தசை இருப்பு 08.11.03


  இவர் ஜாதகத்தில் ராசிக்கு மறைவு ஸ்தானத்தில் பாவத்துவம் பெற்ற நிலையில் குரு,புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இருப்பதால் இவருக்கு பிறந்ததிலிருந்து வந்த புதன், கேது, சுக்கிரன் மற்றும் தற்பொழுது சூரியதசை நடந்து வந்துள்ளது. 


   மேற்கண்ட தசைகள் மறைவிட தானத்தில் பாவத்துவம் அடைந்த நிலையில் உள்ள கிரகம் அதன் தசை காலங்களில் இவரை அதிக இன்னல்களுக்கு உள்ளாக்கி இருக்கும் என்று நீங்கள் நினைத்து இருப்பீர்கள் என்றால் உங்களது உங்களது கணிப்பு தவறாகி விடும்.


   இவற்றில் கேது தசை தவிர ஏனைய  தசைகள் அனைத்தும் சிறப்பாக இருந்துள்ளது. பல லட்சக் கணக்கான பணத்தை சம்பாதித்து உள்ளார். இவர் ஜெராக்ஸ் மெஷின் தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்து வருகிறார்.


  இந்த இடத்தில்தான் நாம்  சுபத்தன்மை என்ற ஒரு அமைப்பை கவனிக்க வேண்டியுள்ளது.


  ஜாதகத்தில் பௌர்ணமியை விட்டு சற்று விலகிய சந்திரபகவானுக்கு 

6 ,7 மற்றும் 8 ல் உள்ள கிரகங்கள் "சந்திராதி யோகம்" பெரும் என்ற வகையில் வளர்பிறைச் சந்திரன்  பார்வை பெற்ற அனைத்து கிரகங்களும் சுபத்தன்மை அடைந்து உள்ளது. ஆதலால்  புதன், சுக்கிரன் மற்றும் சூரியன்  தசை  காலம் முழுவதும் மிகுந்த யோக பலனை சாதகருக்கு தந்துள்ளது.


 கிரகங்கள் சிம்ம ராசிக்குள் ஒன்றுக்கொன்று பாவத்துவம் பெற்ற நிலையில் இருந்தாலும் வளர்பிறைக்கு அருகில் உள்ள சுப சந்திரனின் பார்வை  பெற்றதும் அனைத்து கிரகங்களும் சுபத்தன்மை அடைந்து அதன் தசை காலங்களில் யோக பலனை தரக்கூடிய கிரகங்கள் ஆக மாறியுள்ளது.


இதுவே சுபத்துவ தன்மையின் விளக்கமாகும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

& டெலிகிராம்

   9715189647


    செல்

    9715189647

    7402570899


                           



    அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


My website

  www.astroravichandransevvai.in


.......   .......  ....... ....... .....  .....

No comments: