Wednesday, 2 December 2020

நீங்கள் எப்படிப்பட்டவர் ?

                                  


நீங்கள் எப்படிப்பட்டவர் ?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    எல்லாத்துறைகளிலும் நல்லவர்களும் உண்டு,

கெட்டிக்காரர்களும் உண்டு. அதே நேரத்தில் அந்தத்துறையினையே கெடுக்க கூடிய கெட்டவர்களும் உண்டு.


   ஒரு துறையில் மிகுந்த துல்லியமான அறிவு படைத்தவர்கள் தன்னை அலட்டிக் கொள்வதும் இல்லை, பெரிதாக வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

இதனையே ஆங்கிலத்தில் "Empty vessle no make noice" அதாவது

 "நிறை குடம் தழும்பாது,

குறைகுடம் கூத்தாடும்"என்பார்கள்.


   "Sometime Duplicate things show is the most attractive than real one." "ஒரு சில நேரங்களில் துறை சார்ந்த மிகுந்த ஞானம் மற்றும் உண்மையான திறமை படைத்த மனிதர்களை விட அரை வேக்காட்டு மனிதர்கள் தான் திறமையான மனிதர்களாக வெளிப்படுத்தி கொள்ள சில நுட்பங்களை பயன்படுத்தி அவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு அந்த இடத்தினை தக்க வைத்துக் கொள்வார்கள்."


 இது போன்ற குணநலன் கொண்ட மனிதர்கள் தங்களது முழுநேரத்தையும் பயன்படுத்தி அறிவு படைத்த மற்றவர்களை வீழ்த்தி தன்னை முதன்மை படுத்திக்கொள்ள எதற்கும் துணிந்தவர்களாக இருப்பார்கள்.


   தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அரைகுறை அறிவாளிகள் தங்களது பணியினை திறம்பட செய்யும் திராணியற்றவர்கள் நிர்வாகத்தினை காக்காபிடித்து கொண்டு மற்றவர்களை போட்டுகொடுத்து  அதில் தன்னை முதன்மை படுத்திக்கொள்ள முயல்வார்கள்.


   இது போன்ற தருணங்களில் நேர்மையான மனம் படைத்த மனிதர்கள் மனதால் பாதிக்கப்படுவதும் உண்டு. ஆனால் அவர்களை எதிர்க்கும் திராணியற்றவர்கள் என்று கூறிவிடமுடியாது. "துஷ்டரைக் கண்டால் தூர விலகு" என்ற உன்னத கொள்கையை உடையவர்களாக விலகி இருப்பார்கள்.


   இந்த கருத்தை விளக்க ஒரு எளிய கதை ஒன்றை தருகிறேன்.

" ஒரு யானை நன்றாக  குளித்துவிட்டு கோயில் பூஜையை தரிசிக்க தன்னை அலங்கரித்துக் கொண்டு ஒரு ஒற்றையடி பாதையில் சென்று கொண்டிருக்கும் வேளையிலே ,  எதிரே சாக்கடையில் புரண்டு விளையாடிய ஒரு பன்றி கூட்டம் ஒன்று அந்தப் பாதை வழியாக வந்தது .


    சாக்கடைடையில் உருண்டு பிரண்டு  உடல் முழுவதும் சாக்கடை சேற்றை அப்பிக் கொண்டு வந்த பன்றியை பார்த்த யானை பின்னோக்கி சென்று வழிவிட்டது.பன்றி கூட்டத்தில் தலைமை தாங்கி வந்த ஒரு பன்றி சக தோழர்களிடம் பேசி கொண்டு சென்றதாம்    "யானை நம்மள பார்த்து  பயந்து வழிவிடுகிறது பார்த்தாயா ! " என்று பெருமை பீற்றிக் கொண்டு சென்றதாம்.


    இதுபோன்ற திறமையற்ற துர்குணம் படைத்தவர்கள்  நற்குணம் மிகுந்த நல்ல உழைப்பாளிகளை இன்னல்களுக்கு உட்படுத்தி அதாவது அவர்களை வேதனைக்கு உட்படுத்தி வேடிக்கை பார்த்து தனக்கு தெரியாதது போல் நடித்து ஆதரவாகப் பேசி மனதுக்குள் மகிழ்ச்சி பெறுவோரும் உண்டு. 


    இது போன்ற குணாதிசயம் கொண்ட மனிதர்கள் எவ்வாறு ஜோதிடத்தின் உதவி கொண்டு கண்டறிவது என்பதே இப்பதிவின் நோக்கமாகும்.


    ஒருவரது ஜாதகத்தில் இலக்கனம் , ராசி மற்றும் அதன் அதிபதிகள்

 சனி மற்றும் ராகு அல்லது சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இணைந்து நின்றாலும்,

இலக்கனத்தில் நிழல் கிரகங்களான ராகு பகவான் அமர்ந்து  இயற்கை பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு அன்றி தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து பார்க்கும் அமைப்பு பெற்றவர்கள் இது போன்ற குணாதிசயம் உடையவர்களாக இருப்பார்கள்.


  லக்னத்தையும், ராசியையும் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், புதன், சுக்கிரன் பார்வை அல்லது  வேறு எந்த வகையிலும் தொடர்பு பெறாத அமைப்பு. ஆனால் அதே நேரத்தில் லக்னத்தை சனி, செவ்வாய் ,ராகு ,கேது போன்ற பாவ கிரகங்கள் சுபத்துவம் பெறாத நிலையில் தொடர்பு பெற்ற அமைப்பை பெற்றிருக்கும் பொழுது 


   ஜாதக கட்டத்தில் இலக்கன அவயோகிகள் பலம்பெற்று ,

இலக்கன யோகர்கள் பலவீனப்பட்ட நிலையிலும்,


  ஜாதகத்தில் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது இயற்கை சுப கிரகங்களான குரு , தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் உடன் தொடர்பை  பெரும் அமைப்பு உடையவர்கள்.


  ஜாதகத்தில்  மறைவிட ஸ்தான அதிபதிகளான ஆறு மற்றும் எட்டுக்கு உரியவர்கள் இலக்கனம் மற்றும் ராசிகளிலோ அல்லது அதிபதிகளுடன் தொடர்பு பெறும் அமைப்பை பெற்றிருக்கும் போதும் 


     ஒருவர்  துர்குணம் படைத்த மனிதர்களா என்பதை கண்டறிய மூன்று கோணங்களில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  1) லக்கனம் மற்றும் ராசியில் உள்ள கிரகங்கள்,


  2) லக்கனம் மற்றும் ராசி அதிபதியின் நிலை


 3) லக்கனத்தை பார்க்கும் கிரகங்கள்


   மேற்கண்ட மூன்று வகையிலும் சனி, ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரக தொடர்பினை பெற்று சுபத்துவம் பெறாத நிலையில்  மட்டுமே மேற்கண்ட தன்மை படைத்தவர்கள் காணப்படுவார்கள்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப் & டெலிகிராம்

     9715189647


    செல்

    9715189647

      7402570899


My website

  www.astroravichandransevvai.in

.

                          


   அன்புடன் 

சோதிடர் 

சோ.ப ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி ,

புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: