Saturday, 25 April 2020

ஆறு மற்றும் எட்டாம் பாவகம்

ஆறு மற்றும் எட்டாம் பாவகம்


                            

செவ்வாய்ப்பட்டி 
ஸ்ரீ பத்ர காளியம்மன் துணை!

         ஒரு ஜாதகத்தில் மறைவிட ஸ்தானங்களில் மிகவும் இன்னல்களை தரக்கூடிய ஸ்தானமாக ஜோதிடர்களால் பெரும்பாலும் அடிக்கடி கூறப்படும் ஸ்தனங்களாக ஆறாமிடம்  மற்றும் எட்டாமிடம் அமைகிறது.

    ஆனால் அதே நேரத்தில் ஆறாமிடம் என்பது சாதகருக்கு வெற்றியை தரக்கூடிய  ஸ்தானம் ஆகும். 

  ஒருவர் தொழில் ஸ்தானத்தை பற்றி ஆராயும் போது அவருடைய இலக்கனம் , தொழில் ஸ்தானமான பத்தாமிடம் இவற்றினை ஆராய்ந்து பார்க்கப்படும்போது சாதகருடைய ஆறாம் இடம் மற்றும் அதன் அதிபதியின் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    ஒரு ஜாதகத்தை தொழில் ஸ்தானமான பத்தாம் அதிபதியோடு ஆறாம் அதிபதியும் பலம் பெற்றிருக்கும் போது அவர்கள் கொண்ட தொழிலில் வெற்றி பெற்று புகழ் அடையும் யோகத்தை தருகிறது.

     சிலநேரங்களில் பாவ கிரகங்கள் உச்சம் , ஆட்சி போன்ற நிலைகளில் நேர்வலு பெறக்கூடாது  என்ற  சோதிட விதிப்படி பாவ கிரகங்கள் அந்த ஸ்தானத்துக்கு மறைவிட ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இடங்களில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் நின்று வலுப்பெறும் பொழுது மட்டுமே யோக பலன்களை அதிகமாக தருகிறது.

 எட்டாமிடம் ஒரு ஜாதகத்தில் வம்பு ,சண்டை வழக்கு, வீண் விவாதம், தேவையில்லாத சண்டை சச்சரவுகள், காவல்நிலையம் வரை சென்று நீதிமன்றத்தை நாடுதல் போன்றவற்றை குறிக்கும் பாவகம் ஆகும்.

 மேற்கண்டவற்றை விவரிக்கும் கெட்ட ஸ்தானமாக கருதப்பட்டாலும்  அதே நேரத்தில் ஒருவருக்கு மறைமுக உண்மைகளை வெளிப்படுத்தக்கூடிய ஸ்தானம் ஆகும். இதுபோன்ற தசை நடக்கும் பொழுது ஆராய்ச்சிப் படிப்பு ஈடுபடுவர்கள் ஏதாவது ஒரு புதிய உண்மைகளை அல்லது கருவிகளை கண்டறிந்து சமூகத்துக்கு வழங்கக்கூடிய யோகத்தையும் அஷ்டமாதிபதி தசாபுத்திகள் தருகிறது

  எட்டாம் இடம்  பாவகமானது வலுப்பெற்று அந்த திசை நடப்பில் இருக்கும் போது வெளிநாடு செல்லும் யோகத்தினை  தந்து ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டம் தரும் பலனை சாதகருக்கு தருகிறது.

    ஆறாமிடம் மற்றும் எட்டாமிடம் அதிபதிகள்‌ தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு  அதன் தசாபுத்திகள் நடப்பில் உள்ள காலங்களில் யாரும் சற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை சாதகருக்கு தந்து வாழ்வில் எதிர்பார்க்க முடியாத உயரத்திற்கு ஒருவரைக் கொண்டு செல்கிறது.

   எந்த வகையில் தரக்கூடிய வாய்ப்பு என ஆராய்ந்து பார்த்தால் அவர் ஏதோ ஒரு காலகட்டத்தில் மிகக் குறைந்த விலைக்கு ஒரு சில ஏக்கர் நிலத்தை வாங்கி போட்டிருப்பார் அது இந்த குறிப்பிட்ட தசா காலத்தில் எதிர்பாராத அளவிற்கு விலை உயர்ந்து அதன் வழியாக பல லட்சங்களை  லாபமாக பெறக்கூடியவர்களாக மாறிவிடுவார்கள். 

    ஒரு சிலர்  தாம் மேற்கொண்ட தொழில் மூலமாக அதிக முயற்சி இல்லாமல் எதிர்பாராத அதிக லாபத்தை பெற்று விடுவார்.  ஒரு சிலருக்கு எதிர்பாராமல் லாட்டரி, ரேஸ் மற்றும் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு அதன் மூலம் பெரும் பணம் ஈட்டக்கூடிய  யோகத்தை தசா புத்திகள் தருகிறது.

  ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்த சூழலில் ஆறாம் அதிபதி பலம் பெற்ற நிலையில் சாதகருக்கு பிணி,பீடை,ருண மற்றும் ரோகம் முதலியவற்றை ஆறாம் இட திசை புத்திகளில் தருகிறது.

   ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி மற்றும் ஆறாம் இட அதிபதியும் பலம் பெற்ற சூழலில் இன்னல்கள் எவ்வளவு  வந்தாலும் எதிர்கொள்ளும் மனநிலையினை  பெற்று திகழ்வார்.

 ஒருவரது ஜாதகத்தில் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்து அதிபதி பலம் பெற்று, ஆயுள்காரகனான  சனி பகவானும் பலம் பெற்ற சூழலில் ஒருவருக்கு தீர்க்க ஆயுள்.

  ஆயுளை நிர்ணயிப்பது எட்டுக்கு எட்டாம் இடமான மூன்றாம் இடத்தையும், ஆயுள் காரகனான சனி பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

 எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானம்  ஆயுள் நிலை பற்றியும், இதன் தசா புத்திகளில் சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகங்களையும் மற்றும் ஒரு சில மறைமுக உண்மைகள் வெளிப்படக்கூடிய‌  தசா புத்தியாகவும் அமையக்கூடிய யோகமும் உண்டு.

   உங்கள் ஜாதகத்தில் இந்த மறைவு ஸ்தானமான 
6 ,8,12 ஆம் இடங்களில் ஸ்ரீ ராகு பகவான்  அமர்ந்து அதன் தசா புத்திகள் நடைபெறும் காலங்களில் ‌சாதகருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகங்களை சாதகருக்கு தருகிறது.

 ஒரு ஜாதகத்தில் கேந்திர அதிபதிகள் இயற்கை சுபராக வரும் பட்சத்தில் 6 மற்றும் எட்டாமிடங்களில் அமரும் பொழுது யோக பலன்களை சாதகருக்கு வழங்குகிறது.

 ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடம் ஒருவருக்கு ஆயிலின் நினைப்பது முக்கிய பங்கு வகிக்கிறது  என்றாலும் , அந்த ஜாதகருக்கு மரணத்தை நிர்ணயிப்பதில் பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி களும் முக்கிய பங்கு வகிக்கிறது.

  சர ராசிகள் என்று சொல்லக்கூடிய (மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம்)  ராசிகளுக்கு மாரகாதிபதிகளாக இரண்டு மற்றும் ஏழாம் இட அதிபதிகளும் மற்றும் பாதகாதிபதிகள் என்று சொல்லப்படக்கூடிய பதினொன்றாம்  இட அதிபதிகளும் வருவார்கள்.

 ஸ்திர ராசிகள் (ரிஷபம் சிம்மம்  விருச்சகம் மற்றும் கும்பம்) என்று அழைக்கப்படக்கூடிய ராசிகளுக்கு மூன்று மற்றும் எட்டாம் இட அதிபதிகள் மாரகாதிபதி களாகவும் , ஒன்பதாம் வீட்டு அதிபதி பாதகாதிபதியாகவும் செயல்படுவார்கள்.

 உபய ராசிகள் என்று  (மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம்) அழைக்கப்படக்கூடிய ராசிகளுக்கு பாதகாதிபதியாக ஏழாம் இட அதிபதியும் மற்றும்  இதே ஏழாம் இட அதிபதியும் மற்றும் பதினொன்றாம் இட அதிபதியும் செயல்படுவார்கள்.

  பொதுவாக சில நேரங்களில் எல்லா ராசிகளுக்கும் இரண்டு மற்றும் ஏழாம் இட அதிபதிகளே மாரகாதிபதிகளாக செயல்படுவார்கள்.

     ஒரு ஜாதகருக்கு அஷ்டமாதிபதி தசையில் மாரகாதிபதி அல்லது பாதகாதிபதி புத்தி நடப்பில் இருப்பினும்

  அல்லது

பாதகாதிபதி திசையில் மாரகாதிபதி அல்லது அஷ்டமாதிபதி புத்தி நடப்பில் இருப்பினும்

அல்லது

மாரகாதிபதி தசையில் அஷ்டமாதிபதி அல்லது பாதகாதிபதி நடப்பில் இருப்பினும்

    சாதகருக்கு மரணத்துக்கு நிகரான இன்னல்களை தருவார்.

      சில நேரங்களில்  அஷ்டமாதிபதி, பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி இதன் தசா புத்தி காலங்களில் ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் இட அதிபதியோ அல்லது புத்தியோ நடப்பில் இருக்கும் பொழுது அவருக்கு நிறைய மருத்துவ செலவுகளை தரக்கூடிய தருணம் ஆகும் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேண்டும்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

   வாட்ஸ் அப்
    9715189647
       செல்
  9715189647
    7402570899

                        

   அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர்மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My blog
AstroRavichandransevvai.blogspot.com

AstroRavichandran.blogspot.com
......

No comments: