Thursday, 18 June 2020

தசா புத்தி பலன்கள்

                           

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

      தசை என்பது நம் மனித வாழ்வினை ஆட்கொள்ளும் அல்லது ஆட்டிப்படைக்கும் நவ கோள்களின் காலம் ஆகும்.

    மனித வாழ்வில் நடக்கும் நேர் மற்றும் எதிர் மறையான செயல்கள் அனைத்தும் நவ கோள்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

 நமது முன்னோர்கள் மனித வாழ்வினை ஒளி அளவின் அடிப்படையில் ஒன்பது சமமற்ற தசையாக பிரித்தனர்.ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 ஆண்டுகளாக கணக்கில் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.

  இன்றைய காலகட்டத்தில் மனிதன் 120 வயது வரை வாழ இயலவில்லை என்றாலும் , ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 ஆக கொண்டே தசைகளுக்கு ஆண்டுகள் கொடுக்கப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது.

  சூரிய திசை- 6 ஆண்டுகள் ,
சந்திர தசை -10 ஆண்டுகள்,
 செவ்வாய் திசை- 7 ஆண்டுகள்,
 ராகு திசை- 18 ஆண்டுகள் ,
குருதசை- 16 ஆண்டுகள், சனி தசை -19 ஆண்டுகள் புதன் திசை -17 ஆண்டுகள்,
கேது திசை- 7 ஆண்டுகள், மற்றும் 
சுக்கிர திசை 20 ஆண்டுகள் ஆக மொத்தம் 120 ஆண்டுகளாகும்.

  ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தனது குடும்ப சாதகத்தினை எடுத்துக் கொண்டு பின்வரும் மூன்று காரணத்திற்காக சோதிடரிடம் சாதக பலன் பெற செல்வார்.

1) சாதகர் புதிய முயற்சியில் ஈடுபடும் போது (திருமணம்,வீடு கட்டுதல் ,புதிய தொழில் தொடங்குதல்...)

2) ஒரு மனிதன் பல முறை முயன்றும் அவன் தோல்வியை தழுவும் காலங்களில்...

3) நெருங்கிய உறவுகளின் பிணி பீடை காலங்களில்..

   இவ்வாறு மேற்கண்ட மூன்று காரணத்திற்காக மட்டுமே ஒரு ஜாதகர் சோதிடரை நாடிச் செல்கிறார். அவ்வாறு நாடி வரும் ஜாதகருக்கு துல்லியமான பலனைத் தர ஜோதிடருக்கு மிகவும் உறுதுணையாக நிற்பது தசா ,புத்தி, அந்தாரம் மற்றும் சித்திரம்  பலன்கள் ஆகும்.

  தசா புத்தி அடிப்படையில் பலன் கூறும் முறையினை போகரது சீடரான புலிப்பாணி தனது புலிப்பாணி 300 ஜோதிடத்தில் பின்வருமாறு விளக்குகிறார்.

"ஆமென்ற நவகிரகத் திசை புத்தி பலனை 
அணுஅணுவாய் சொல்லிவிட்டோம்
நாமென்ற நவகிரகத் திசை புத்தி அந்தாரம்
நன்றான் பலனதிலே நவின்றுவிட்டோம்
தாமென்ற கிரகமது ஆட்சியுச்சம்
தப்பா நட்பு நிலை சத்துரு நீசம்
போயென்ற பகைசாரம் பார்த்து நீயும்
பொருளுதுபோல் பயனறிந்து புகலுவாயே"

    பாடல் விளக்கம்
      தசாபுத்தி பலன்கள் சொல்லும்போது தசை நடத்தும் கிரகமானது உச்சம்,மூலதிரிகோணம், ஆட்சி ,நட்பு மற்றும் பகை போன்ற கிரக நிலைகளையும் ஆராய்ச்சி செய்து பலனுரைக்க வேண்டும் என்கிறார்.

 இவை மட்டுமல்லாமல் அந்த கிரகம் பெற்றுள்ள 🌟 நட்சத்திரம் சாரம் மற்றும் சார நாதன் தசா நடத்தும் கிரகத்திற்கும் மற்றும் லக்கனாதிபதிக்கும் நட்பாக இருக்கும் நிலையா அல்லது பகை நிலையா ? என்றும் ஷட்பலம் போன்றவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    ஒருவருக்கு நடைபெறும் திசையானது யோக திசையா ? அல்லது கெட்ட திசையா ? என் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

 பொதுவாக ஒருவருக்கு நடக்கும் திசையானது யோக தசையாக அமைய கீழ்க்கண்ட வகையில் இருக்க வேண்டும்.

         1) எந்த வகையிலும் பங்கப் படாமல் இருக்கும் கோணதிபதிகள்  திசைகள் சாதகருக்கு யோக திசையாக அமைகிறது.

     2) கேந்திராதிபதிகளின் திசை காலங்களில் யோக பலனை தருகிறது.
(சுபர்கள் கோணங்களிலும் அல்லது மறைவிடங்களிலும் மற்றும் பாவர்கள் கேந்திரங்களிலும் அமர்ந்திருக்க வேண்டும் .)

     3)  மறைவிட ஸ்தான அதிபதிகள்(3,6,8,12) தங்களுக்குள் பரிமாறிக் நின்று அதன் திசை நடைபெறும் காலங்களில் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில் "விபரீத ராஜ யோகத்தை" தருகிறது.

    4) ஒரு ஜாதகத்தில் பாவக்கிரகங்கள் உபஜெய ஸ்தானங்களான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்து நட்பு நிலையில் அமரும் போது இயற்கை சுப கிரகங்கள் பார்க்கப்பட அந்த தசா காலங்களில் யோக பலன்களை வழங்குகிறது.

5) 
அருள் அணி: குரு சந்திரன் செவ்வாய் சூரியன் மற்றும் கேது பகவான்.

பொருளணி ;சுக்கிரன், சனி ,செவ்வாய் ,ராகு

 அருள் அணி திசை காலங்களில் தசா கிரகம் பொருள் அணி வீடுகளிலும் மற்றும் பொருள் அணியுடனான கிரகங்கள் உடன் தொடர்பு பெறாத நிலையில் யோக பலன்களை தருகிறது.

  பொருளணி திசை காலங்களில் தசை நடத்தும் கிரகம் அருள் அணி வீடுகளிலோ அல்லது அருள் அணி கிரகங்கள் உடன் தொடர்பு பெறாத நிலையில் யோக பலன்களை அளிக்கிறது. தெரிகிறது.

    ஒவ்வொரு ராசிக்கும் கீழ்கண்ட கிரக திசைகள் கெட்ட திசையாக  அமைந்து திசை நடத்தி இன்னல்களைச் சாதகருக்கு தருகிறது.

  மேஷ ராசிக்கு- புதன் திசை ,

ரிசபராசிக்கு- சுக்கிரதசை

 மிதுன ராசிக்கு- செவ்வாய் திசை 

கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு - சனி தசை 

 கன்னி ராசிக்கு- செவ்வாய் திசை 

துலா ராசிக்கு -குரு தசை

 விருச்சக ராசிக்கு- புதன் தசை 

தனுசு ராசிக்கு- சுக்கிரதசை ,

மகரம் ராசிக்கு சூரியன் திசை

 கும்ப ராசிக்கு சந்திரன் தசை 

மீனராசிக்கு- சுக்கிர தசை.

   ஒருவருக்கு நடைபெறும் தசையை கண்டறிய அவருடைய ஜென்ம நட்சத்திரத்தை வைத்து ஜெனன கால திசை கண்டறியப்படுகிறது.

   ஜெனிக்கும் போது  நட்சத்திர பாத அடிப்படையில் கர்ப்ப செல் நீக்கி ஜெனன கால திசை இருப்பு கணிக்கப்படுகிறது.

     ஒருவருக்கு சூரிய திசை முதல் திசையாக அமைய கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

  சந்திர திசை முதல் திசையாக அமைய ரோகினி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவார்.

  செவ்வாய் திசை முதல் திசையாக அமைய மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவார்.

 ராகு திசை முதல் திசையாக அமைய திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவார்.

 குரு திசை முதல் திசையாக அமைய புனர்பூசம் ,விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவார்.

சனி திசை முதல் திசையாக அமைய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவார்.

  புதன் திசை முதல் திசையாக அமைய ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவார்.

 கேது திசை முதல் திசையாக அமைய அசுபதி ,மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவார்.

 சுக்கிர திசை முதல் திசையாக அமைய பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவார்.

   எல்லோருக்கும் சூரிய திசை முதல் திசையாக அமைவதில்லை .
அவர்கள் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறார்களோ அந்த நட்சத்திர நாதன் திசை முதல் திசையாக அமையும்.

  உதாரணமாக ஒருவர் திருவாதிரை நட்சத்திரத்தில்  பிறந்திருந்தால் அவருடைய ஜெனன கால திசை ராகு திசை ஆகும். ராகு திசையை  தொடர்ந்து குரு தசை, சனி தசை, புதன் திசை, கேது தசை , சுக்கிர தசை , சூரிய தசை ,சந்திர தசை மற்றும் செவ்வாய் திசை என வரிசைகிரகமாக அமைகிறது.

   ஒருவர் எந்த திசையில் பிறக்கிறாரோ அந்த தசா நாதனே முதல் புத்தியாக வருவார்.அதனை சுய புத்தி என அழைக்கப்படும். ஒருவர் சூரிய திசையில் பிறந்தால் அவரது முதல் புத்தி சுயபுத்தியான  சூரிய புத்தி இதனைத் தொடர்ந்து சந்திர புத்தி, செவ்வாய் புக்தி, ராகு புத்தி, குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி, கேது புத்தி மற்றும் சுக்கிர புத்தி என  தொடர்ந்து வருகிறது.

   ஒருவரது ஜாதகத்தில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் சுபத்துவம் பெற்ற கிரகங்கள் இருந்தாலும் அதன் திசை நடப்பில் வரவில்லையென்றால் "ஒதிய மரம் பெருத்து  உத்திரத்திற்கு ஆகாது"என்பது போல ஆகும்.

  அதாவது ஒருவரது ஜாதகத்தில் ஏனைய கிரகங்கள் பலம் இழந்த சூழலில் சுக்கிரன்  மட்டுமே சுபத்துவ நிலையில் பலம் பெற்று காணப்படும் ஒருவர் சூரிய தசையில் பிறந்திருப்பார் என்றால் அவருக்கு சுக்கிரன் பலம் பெற்று இருந்தும் பயனில்லாமல் போய்விடும் .ஏனெனில் அவருக்கு சுக்கிரதிசை வரவேண்டும் எனில்  நூறு ஆண்டுகள் கடந்துதான் வரும் .நூறாண்டு வரை அவர் வாழப் போவது இல்லை .எனவே இது போன்ற அமைப்பு இருந்தும் பயனில்லாமல் போய் விடுகிறது.

  துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறக்கிறார் எனில் அவருக்கு ஜெனன கால திசை ராகு திசையாக வரும்போது அவரது ஜாதகத்தில் ராகு விருச்சிகத்தில் அமர்ந்து சனி ,செவ்வாயுடன் தொடர்புபட்ட சூழலில் அந்த தசா காலம் முழுவதும் இன்னல்களை அனுபவித்து, அடுத்து வரக்கூடிய குரு திசையிலாவது  சற்று நிம்மதி அடையலாம் என நினைத்தால்,  துலா ராசிக்கு 3,6 க்குடைய குரு பகவான், ராசிக்கு 6-ல் ஆட்சி பெற்ற குரு திசை காலத்தில் திசையை நடத்தும் போது ருண, ரோக பிணி மற்றும் பீடைகளை சாதகருக்கு  தந்து வாழ்வில் சொல்லொன்னா வேதனைகளை அனுபவிக்க கூடிய சூழல் உருவாகிறது.

  இப்பொழுது இந்த இளைஞர் "கொடிது கொடிது இளமையில் வறுமை" என்ற வகையில் வாழ வேண்டிய இளவயதில் இன்னல்கள் பலவற்றை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவானது.

  ஒரு சிலர் ராகுவின் நட்சத்திரமான சதயம் நான்காம் பாதத்தில் பிறந்து குறைந்த அளவே ஜனனகால ராகுதசை அமைந்து அதுக்கு அடுத்து வரக்கூடிய குரு, சனி  மற்றும் புதன் கிரகங்கள் ஜாதகத்தில் நல்ல முறையில் அமைந்து அந்த தசை நடத்தி செல்லும்போது வாழ்வில் 60 ஆண்டுகள் வரை யோக பலன்களை அனுபவிக்க கூடிய வாய்ப்பு அமைந்தது கண்டு மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு வாழக்கூடிய  அதிர்ஷ்டத்தை பெறுவர்.

   ஒருவருக்கு நடக்கக்கூடிய தசா புத்தி நல்ல முறையில் அமையும் போது அவருக்கு கோச்சார அடிப்படையிலான ராகு-கேது பெயர்ச்சி சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி ஆகியவை சரியாக அமையாத பட்சத்தில் யோக பலன்களை சிறப்பாக அனுபவிக்கக்கூடிய யோகம் அமைந்து விடுவதுண்டு.

     ஆனால் நடக்கும்  தசாபுத்தி சரியாக அமையாத பட்சத்தில் அவருக்கு கோச்சார பலன்களான ராகு, கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி குருபெயர்ச்சி ஆகிய பெயர்ச்சிகள்  சரியாக அமையாத பட்சத்தில் மிகுந்த இன்னல்களை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகிறது.

   ஒருவருக்கு நடக்கக்கூடிய தசா புத்திகள் சரியாக இல்லாத பட்சத்தில் அதற்குரிய கடவுளை வழிபட அந்த தசா புத்தி தரக்கூடிய கஷ்டங்களிலிருந்து விடுபடலாம்.

சூரிய திசை எனில் சிவனையும்,
 சந்திர தசையில் எனில் அம்பாளையும்,
 செவ்வாய் திசை எனில் முருகப் பெருமானையும், புதன் திசையில் விஷ்ணுவையும், சுக்கிரதசை எனில் அம்மனையும்,
குருவின் திசை எனில் தட்சிணாமூர்த்தியையும், ராகு திசை எனில் ஆஞ்சநேயரையும் அல்லது துர்கையையும் ,
கேது தசையில்  விநாயகரையும் வழிபடவேண்டும்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
  9715189647
     செல்
    9715189647
     7402570899

Email: masterastroravi@gmail.com

My blog

www.astroravichandran.blogspot.com

www.astroravichandransevvai.blogspot.com

                          

  அன்புடன்
சோதிடர் 
சோ. ப. ரவிச்சந்திரன் 
    M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: