Thursday, 31 March 2022

          


வாழ்வில் உயர்வடைய தேவையான ஜாதக அமைப்புகள்


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவே விருப்பப்படுகிறோம்.

மனிதன் அவன் வாழும் இடம் , உடல் வலிமை மற்றும் சூழலுக்கு ஏற்பவே இந்த முயற்சியின் தன்மை மற்றும் வகை அமைகிறது என பொதுவாக கூறப்பட்டாலும் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகளும் நடப்பிலும் அதனை தொடர்ந்து வரும் தசா அமைப்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை விளக்கவே இந்த பதிவில் முயல்கிறேன்.


"முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்"


 என் வள்ளுவப் பெருந்தகையால் விளம்பப் பட்டாலும் எல்லா முயற்சிகளும் வெற்றியை நோக்கி இழுத்துச் சென்று விடுவதில்லை.


  சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யப்படும் கடின முயற்சியானது வெற்றி கனியை ஈட்டி தரும் என்றாலும் ஜாதகருக்கு லக்கனாதிபதி வலுப்பெற்று, சரியான உகந்த தசா அமைப்புகள் இருந்தால் மட்டுமே செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பாதையில் இட்டுச் செல்லும் என்பது ஜோதிட வியல் கருத்தாகும்.


  "விதியை மதியால் வெல்லலாம்" என்று கூறினாலும் அந்த விதியை மதியால் வெல்லும் யோக அமைப்பு சாதகமாக இருக்க வேண்டும்.


  பிரபஞ்ச வீதியில் உள்ள கிரகங்களின் அதிர்வலைகள் பிரபஞ்சத்தில் உள்ள மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளையும் பாதிக்கிறது.


 கடினமான அவயோக அமைப்புகளையும் மற்றும் பாவ கிரகங்களையும் சுபத்துவமாக மாற்றக்கூடிய தன்மை இயற்கை சுப கிரகங்களான குரு பகவான், வளர்பிறை சந்திரன்,, தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்றவற்றின் தொடர்பினை அடைகிறது.


  ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து படிப்படியாக முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்ல அவனது வாழ்வில் தொடர்ந்து நடக்கக்கூடிய தசா அமைப்புகள் உகந்த யோக தசை அமைப்புகளாக பிறந்ததில் இருந்து வரவேண்டும்.


   ஜாதகத்தில் லக்கின பாவங்களும் அதன் அதிபதியும் எந்த வகையிலும் பாதிப்பு அடையாமல் பலமடைந்து இருப்பின் அதன் வலிமைக்கு ஏற்ப ஜாதகரின் முயற்சி அமைந்து தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் அந்த மனிதனை இட்டுச் செல்கிறது.


 ஒருவனது முயற்சி முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்றால் அவனது முயற்சியானது "விடாமுயற்சி வெற்றிக்கு அறிகுறி"

 என்ற வகையில் சிறப்பாக செயல்பட அவனது சாதகத்தில் "முயற்சி ஸ்தானம்" என்று சொல்லக்கூடிய மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் வலிமையடைந்து சுபஸ்தானம் ஏறி சுபத்துவம் பெற்றிருக்க வேண்டும்.


 ஒருவருக்கு யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசைகளாக திரிகோணாதிபதிகள் என்று அழைக்க கூடிய லக்கனாதிபதி, பஞ்சமாதிபதி மற்றும் பாக்கியாதிபதி ஆகிய மூன்று தூண்களும் பாவம் அற்று வலிமையடைந்து அதற்குரிய தசா அமைப்புகள் அவரது வாழ்வில் வாழும் இளமைக்காலத்தில் வாகை சூட வைக்க தூண்டுகோலாக அமைந்திருக்க வேண்டும்.


லக்னாதிபதி வலுப்பெற்று குருபகவான் பார்த்த தசா அமைப்புகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் தனது முயற்சியால் வெற்றி அடைந்து வாழ்வின் உச்சியை அடைவார்கள்.


ஒருவர் ஜாதகத்தில் பௌர்ணமி யோகத்தில் பிறந்த சந்திரனுக்கு ஆறு, ஏழு ,ஏட்டில் இயற்கை சுப கிரகங்களான குரு, புதன், சுக்கிரன் அமர்ந்து அந்த தசா அமைப்பினர் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் வாழ்வில் நினைத்ததைச் சாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள். இவர்கள் சந்திராதி யோகம் பெற்றவர்களாக கருதலாம்.


   பங்கப்படாத தர்மகர்மாதிபதி யோகம் பெற்ற தசைகள் வரும் காலங்களிலும் சாதகனது முயற்சி வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்.


  குரு அணி (குரு சந்திரன் ,சூரியன் செவ்வாய், கேது,) மற்றும் சுக்கிரன் அணி (சுக்கிரன்,சனி ,புதன்,ராகு) ஆகிய இரு அணிகளில் பிறந்தவர்கள் தங்களது அணி சார்ந்த தசா அமைப்புகள் தொடர்ந்து வரும் அமைப்பு பெற்றவர்களும் வாழ்வில் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாகை சூடி தொழில் வானில் கொடி கட்டி பறப்பார்.சில நேரங்களில் மாற்று அணியின் தசா அமைப்பினர் ஜாதகருக்கு வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களுக்கு அக்கிரமங்கள் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 போன்ற இடங்களில் நட்பு நிலையில் நின்று சுபத்துவம் பெற்றிருக்க வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

 9715189647


  செல்

  9715189647



                          


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,MA,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர்) 

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: