வீட்டை விட்டு ஓடி சென்ற அவ யோகம் நிறைந்த ஜாதகம்-உதாரண ஜாதக விளக்கம்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு சிலர் பிறந்ததிலிருந்து கஷ்டப்படும் அமைப்பை பெற்று இருப்பதற்கான காரணமான ஜாதக அமைப்பு என்ன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பீர்கள். அதனை விளக்கும் வகையில் இந்த பதிவு உங்களுக்கு அமையும்.
ஒருவருடைய ஜாதகத்தில் உயிர்நாடி என்று அழைக்கப்படக்கூடிய லக்னமும் மற்றும் லக்னாதிபதியும் எவ்விதத்திலும் வலிமை இழப்பது அல்லது பாவத்துவம் அடைவது கூடாது ஆகும்.
லக்னாதிபதியே ஒரு ஜாதகரை வழிநடத்தி செல்லும் கேப்டன் ஆவார்.மானிட தேர் நன்முறையில் நகர லக்கனாதிபதி என்னும் அச்சாணி அவசியமான ஒன்றாகும்.
"அச்சாணி இல்லாத தேர் ஊர் போய் சேராது"என்பார்கள்.
லக்கனாதிபதி ஆனவர் இயற்கை சுப கிரகங்களாக இருந்து உச்சம், மூல திரிகோணம், ஆட்சி மற்றும் நட்பு போன்ற நிலைகளில் கேந்திர கோணங்களில் நின்றால் ஒருவர் என்னதான் இன்னல்கள் வந்தாலும் தாங்கும் மன தைரியம் பெற்று போராடி எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.
அதேபோல் ஒருவருக்கு யோகமான தசை நடந்தாலும் அதை அனுபவிக்கும் யோகத்தை ஒருவர் பெற அவரது லக்கனாதிபதி வலிமை பெற்ற கிரகமாக இருக்க வேண்டும்.
லக்கனாதிபதியானவர் மறைவிடங்களில் நின்றாலும் அல்லது லக்கனாதிபதி ஆனவர் பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது ஆகியவற்றுடன் சேர்ந்து இருந்தாலும் அல்லது பகை, நீசம், அஸ்தமனம் மற்றும் வக்கிரம் பெற்று நின்றாலும் லக்கனாதிபதி வலிமை இழந்த கிரகமாக கருதப்படுகிறது.
அதேநேரத்தில் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்றவற்றின் தொடர்பை பெற லக்கனாதிபதியானவர் இழந்த வலிமையினை சுபத்துவ நிலையில் மீண்டும் பெறுபவராக மாற்றம் அடைகிறார்.
ஒருவருடைய அவயோக அல்லது தரித்திர ஜாதகத்தில் யோகத்தை தரக்கூடிய கிரகங்கள் பாவர்கள் தொடர்பில் அல்லது வேறு ஏதேனும் வகையில் தொடர்பினை பெற்ற நிலையில் இருக்கும்.அல்லது யோகத்தை தரக்கூடிய தசைகள் வாழ்வில் வர இயலாத நிலையில் இருக்கும்.
சில நேரங்களில் குரு அணியை சேர்ந்த தனுசு, மீனம், மேஷம், விருச்சகம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய லக்னங்களுக்கு சுக்கிரன் அணியினை சேர்ந்த சுக்கிரன், சனி ,புதன், ராகு போன்ற தசைகள் நடப்பில் பெறக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் மற்றும் சுக்கிரன் அணியைச் சேர்ந்த ரிசபம், துலாம், மிதுனம் ,கன்னி , மகரம் மற்றும் கும்பம் ஆகிய லக்னங்களுக்கு குரு, சந்திரன், செவ்வாய் மற்றும் ராகு தசை நடப்பில் இருக்கக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் தரித்திர யோகத்தை உடைய ஜாதகம் ஆகும். வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெற்றிருப்பின் பலாபலன் மாறுபடும். அதாவது குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியை சேர்ந்த தசாபுத்திகள் நடக்கும் பொழுது (சுக்கிரன், புதன்,சனி, ராகு) அக்கிரகங்கள் உபஜெய ஸ்தானம் ஆனா 3, 6, 10, 11ல் நட்பு நிலைநிற்க யோக பலனை தரக்கூடிய அமைப்பாக மாறும்.
மேற்கண்ட ஜோதிட விதிகளையும் மற்றும் விதிகளுக்குள் உள்ள விதி விலக்குகளையும் விளக்குவதற்கு வாழ்வின் அடிப்படையான தேவைகளுக்கே போராடி எதிர்நீச்சல் போட்டு கொண்டிருக்கக்கூடிய ஒரு உதாரண ஜாதகத்தை எடுத்துக்கொண்டு விளக்குவோம்
.
பிறந்த தேதி: 18.11.1979
பிறந்த நேரம்: 03.30 am
ஜென்ம நட்சத்திரம்: சுவாதி-1-ம் பாதம்
இவரது ஜாதகத்தில் இருள் கிரகமான சனிபகவான் லக்கனத்தில் நின்று வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாமல் லக்னாதிபதியான புதன் பகவான் (6°.42') லக்னத்திற்கு மூன்றில் சூரியனை ( 1°.23') விட்டு பின்புறமாக நகர்ந்து சுமாராக ஐந்து பாகை அளவில் அஸ்தமனம் அடைந்து விட்டது.மேலும் லக்கனாதிபதி தனக்கு ஜென்ம விரோதி என கருதப்படும் செவ்வாய் வீடு ஏறி உள்ளார்.
லக்னத்தில் உள்ள இருள் கிரகமான சனி பகவான் மூன்றாம் பார்வையாகவும் மற்றும் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் ராகுவோடு நெருக்கமாக இணைந்து
(ராகு 10 °.39 ' மற்றும் செவ்வாய் 5°.31')') பாவத்துவம் பெற்ற லக்கனாதிபதிக்கு ஜென்ம விரோதியாக கருதப்படும் செவ்வாய் பகவானும் நான்காம் பார்வையாக பார்த்து மிகுந்த பாபத் தன்மை அடைய வைத்து பலவீனம் அடைய செய்து விட்டது.
இலக்கனத்திற்கு காரகனான சூரிய பகவானும் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவருடைய பார்வையால் வலிமை இழந்து விட்டது.
லக்கனம், லக்கனாதிபதி மற்றும் லக்கனத்திற்கு கார்கள் என்ற மூன்று வழிகளிலும் லக்கனம் பாவகம் பலம் இழந்து விட்டது.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தை உயிர் என்றும், ராசியை உடல் என்றும் அழைக்கப்படுகிறது.
"விதி கெட்டால் மதி, மதி கெட்டால் கதி" என்றும் அழைப்பார்கள். இங்கு விதி என்பது இலக்கினம் ஆகும்.
மதி என்பது ராசி ஆகும்.கதி என்பது சூரியனை அடிப்படையாக வைத்துப் பார்ப்பது. பெரும்பாலும் மேலை நாடுகளில் சூரியனை இருக்கும் இடத்தை லக்கனமாக வைத்துக் கொண்டே பலன் கணிக்கப்பட்டு வருகிறது.
இவரது ஜாதகத்தில் மதி என்று அழைக்கப்படும் சந்திரன் இருக்கும் வீடு துலாம் வீடாகும் . சுக்கிரனுக்கு சந்திரன் பகை கிரகமாகும். மேலும் சந்திரன் அமாவாசை நோக்கிய சந்திரன் என்பதால் இவை தேய்பிறை சந்திரன் ஆகும் தேய்பிறைச் சந்திரன் இயற்கை பாவ சந்திரன் ஆகும். சந்திர பகவானும் ராகு பகவானின் நட்சத்திரமான சுவாதி சாரம் கொண்டுள்ளது.
ராசிக்கு அதிபதியான சுக்கிரன் பகவான் லக்னத்திற்கு மூன்றில் மறைந்து சனி, செவ்வாய் ஆகிய இரு பாவ கிரகங்களின் பார்வையைப் பெற்று வலிமை இழந்து பாவத்துவம் அடைந்து விட்டது.
விதி மற்றும் மதி ஆகிய இரண்டும் கெட்டால் கததியை பார்க்க வேண்டும் என்ற வகையில் சூரியன் இருக்குமிடத்தை பார்த்தாலும் அவையும் லக்னத்திற்கு மூன்றில் மறைந்து சனி, செவ்வாய் ஆகிய இருவரது பார்வையினை பெற்று விட்டது.
இயற்கை பாவ கிரகமான சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரும் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ ஒரு ஸ்தானத்தையையோ அல்லது கிரகத்தையையோ பார்வை செய்தால் அவற்றைக் கெடுக்கும் என்பது ஜோதிட விதியாகும்.
இவரது ஜாதகத்தில் இவரை நல்வழிப்படுத்த வளர்க்க கூடிய இரண்டு முக்கிய உறவுகளான தாய் மற்றும் தந்தை ஸ்தானங்களும் கெட்டு விட்டது.
மாதுர் ஸ்தானமான நான்காம் இடம் அதிபதியான குரு பகவான் லக்னத்திற்கு 12ல் மறைந்து ராகு மற்றும் செவ்வாய் ஆகிய இரு பாவ கிரக பிடியில் அகப்பட்டு பலம் இழந்து விட்டது .
மாதுர் காரகரான சந்திர பகவான் தேய்பிறை சந்திரனாகி இயற்கை பாவராக ஆகிவிட்டார்.
தந்தை ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஒன்பதாம் இட அதிபதியான சுக்கிரன் மற்றும் தந்தைக்கு காரகனான சூரிய பகவானும் லக்கனத்திற்கு மூன்றில் மறைந்து சனி ,செவ்வாய் ஆகிய இரு பாவ கிரக பார்வை பெற்றதால் பாவத்தும் நிலையை அடைந்துள்ளது.
மேற்கூறிய இரு காரணங்களால் இந்த சாதகர் தாய் தந்தையை விட்டு பிரிந்து வாழும் சூழல் உருவாகும் என நான் கூறியவுடன் அந்த பெற்றதாய் விட்ட கண்ணீரை என்னால் உங்களுக்கு எழுத்தால் எழுதி விளக்க இயலாது. என்னிடம் அந்த ஜாதகனது தாய் ஜாதகம் பார்க்க வரும் போது அவருக்கு 43 வயது நடந்து கொண்டிருந்தது.இவர் வீட்டை விட்டு பதிமூன்று வயதில் சொல்லிக்கொள்ளாமல் ஓடி சென்ற விட்டார்.
இதற்கு காரணமான தசை அமைப்புகளை பார்க்கும் பொழுது இவர் ஜெனிக்கும்போது ராகு தசையில் பிறந்தார்.ராகு தசை ஜெனன இருப்பு 13 வருடம் 9 மாதம் மூன்று நாள் ஆகும்.
14ஆவது வயதில் துலா ராசிக்கு 3 6-க்குடைய மற்றும் லக்கனாதிபதிக்கு பகை கிரகமான , மேலும் லக்கனத்திற்கு பாதக ,மாரக அதிபதியான குரு பகவான் தசையில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். குரு பகவானும் லக்கினத்திற்கு 12-ல் மறைந்து ராகு மற்றும் செவ்வாய் ஆகிய இரு பாவிகளால் நெருக்கமாக எட்டு பாகைக்குள் இணைந்து பாவத்துவ நிலையை அடைந்து விட்டது.
(இங்கு குரு-14 °.22'
செவ்வாய்-5°.31'
ராகு-10°.39')
இவரது ஜாதகப்படி சகோதரர்களையும் விட்டுப் பிரியும் நிலை இருப்பதையும் பார்க்கலாம்.. லக்கனத்திற்கு 3-ஆம் இடம் சகோதர ஸ்தானமாகும் சகோதர ஸ்தானத்தில் சனி, செவ்வாயை இரு பாவர்கள் பார்ப்பதாலும் செவ்வாய் பகவான் ராகுவோடு நெருக்கமாக இணைந்து இருப்பதாலும் சகோதரர்களை விட்டுப் பிரியும் நிலையும் உண்டானது.
ஜாதகப்படி இவரது திருமண வாழ்வு சிறப்பாக இருக்காது திருமணம் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறலாம். வேறு ஏதேனும் வகையில் தவறான உறவு நிலைகள் இருக்கக்கூடும்.
ஏனெனில் திருமண ஸ்தானமான லக்கனம், லக்னத்திற்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானமான 7ம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான 8ஆம் இடம் ,களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் புத்திர காரகனான குருபகவான் ஆகிய அனைத்தும் பலவீனம் அடைந்து விட்டது.
லக்கனத்தில் சனி பகவான், லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் சனி பார்வை , களத்திர ஸ்தானாதிபதியான குரு பகவான் லக்னத்திற்கு 12ல் மறைந்து ராகு ,செவ்வாய் ஆகிய இரு பாவ கிரக சேர்க்கை, மற்றும் மாங்கல்ய ஸ்தான அதிபதியான செவ்வாய் லக்கனத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் மறைந்து பாவரான ராகுவுடன் சேர்க்கை களத்திரகாரகன் சுக்கிரனுக்கு சனி, செவ்வாய் ஆகிய இரு பாவ கிரக பார்வை.
ராசிக்கு 2, 7 க்கு உரிய செவ்வாய் லக்கனத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் மறைந்து ராகுவுடன் சேர்க்கை.ராசிக்கு எட்டுக்குரிய சுக்கிரன் பகவான் சனி செவ்வாய் பார்வை.
புத்திர காரகன் குரு ராகுவுடன் சேர்க்கை.
மேற்கண்ட காரணங்களால் சாதகருக்கு முறைப்படி திருமணம் நடக்க வாய்ப்பில்லை.
செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை, சுக்கிரனை சனி ,செவ்வாய் பார்வை செய்வது போன்றஜோதிட விதிகள் தவறான வழியில் காமத்தைத் அனுபவிக்கும் எண்ணம் உருவாகும்.
இவ்வாறு மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்து கொண்டே போகலாம்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல்
9715189647
செல்
9715189647
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரலிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி.
No comments:
Post a Comment