Saturday, 12 March 2022

திருமண பொருத்தம் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மைகள்.

 திருமண பொருத்தம் பார்க்கும்போது உள்ள உண்மைகள்!

                       


 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  இன்றைக்கு தனது பிள்ளைகளுக்கு வரன் தேடக்கூடிய பெற்றோர்கள் மற்றும் ஏனைய உறவினர்கள் பெரும்பாலனோர் தங்களது சுய விருப்பு மற்றும் வெறுப்புகளுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் தனக்கு சாதகமாக இருக்கும் இடத்தில் தான் பெண் பார்க்கும் படலத்தினை பார்க்க தொடங்குவார்கள்.


 ஒரு பிள்ளைக்கு வரன் தேடக்கூடிய உறவுகள் தனது பிள்ளைக்கு ஏற்ற தகுதியான வாழ்க்கை துணையை தேடுவதற்கு பதிலாக தனக்கு சாதகமாக மற்றும் தனது பேச்சுக்கு மதிப்பு தரக்கூடிய சம்பத்தத்தை தேடுவதில் மும்முரம் காட்டுவார்கள்.


 இது போன்ற உறவுகள் மத்தியில் பொருத்தம் பார்க்கும்போது தான் சில சிக்கல்களைக் கொண்டு வந்து விடுகிறது.இது போன்ற நபர்கள் தனது சுய விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாக வெளிப்படுத்தினால் தான் கெட்டவர்களாக  தெரிய நேரிடும் என்பதால் ஜோதிடர்களை கொண்டு தனது காயை நகர்த்துவார்கள்.


 தனக்கு ஒத்துழைக்கக்கூடிய உறவு நிலை சம்பந்தம் எனில் ஜோதிடர் பொருத்தம் இல்லை என கூறினாலும்

 இன்னும் தொடர்ந்து பல  ஜோதிடர்களை பார்த்து யாராவது ஒரு ஜோதிடர் பொருத்தம் உண்டு என கூறினாலே போதும் உடனே அதை சாட்சியாக கொண்டு சம்பந்தத்தை சரி செய்து விடுவார்கள்.


  தனது ஈகோவுக்கு ஒத்து வராத சம்பந்தாமாக இருந்தால் ஜோதிடர்  பொருத்தம் சிறப்பாக இருக்கிறது என்று கூறினாலும் அந்த ஜாதகத்தில் உள்ள ஏதாவது ஒரு சிறு குறை இருந்தாலும் அதை பெரிதாக்கி தனது ஈகோவுக்கு தீனி போட்டு திருமண சம்பந்தத்தை தடுத்துவிட துடிப்பார்கள்.இதில் சம்பந்தபட்டவர் உண்மை முகம் கண்டு பிடிக்க முடியாதபடி பாசமாக கூடுதல் நடிப்பை வெளிப்படுத்தி விடுவார்கள்.


     சில நேரங்களில் ஜோதிடர்களிடம் உள்ள ஈகோ தன்மை அல்லது ஜோதிட விதிகளை காலத்திற்கு ஏற்றார் போல் பல்வேறு ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்து ஜோதிட விதிகள், விதிவிலக்குகள் ,சுபத்துவ விதிகள் மற்றும் சூட்சும உண்மைகள் போன்றவற்றை பலவாறு ஆய்வு செய்து பார்க்க இயலாத தன்மை கொண்ட முற்றிலும் பழமையான விதிகளை மட்டுமே நம்பி பலன் சொல்லும் ஜோதிடர்களை நாடி செல்லும் போது அவர்கள் ஆழ்ந்த பழமைத்துவம் நிறைந்த ஜோதிட விதிகளாகிய நட்சத்திர பொருத்தம் மற்றும் செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் போன்ற உப்பு சப்பில்லாத விஷய ஞானத்தை கொண்டு தீர்ப்பு வழங்கிவிடுவார்கள்.


 சில நேரங்களில் ஜாதகம் எழுதப்பட்ட முறைகளாலும் மற்றும் பலன் சொல்லும் முறைகளாலும் பொருத்தம் பார்க்கப்படும் தவறான அணுகுமுறைகளும் திருமண ஜோடிகளுக்கு தவறான முடிவுகளாக அமைந்து விடுவதும் உண்டு.


 ஜாதகம் பொருத்தம் பார்க்கும் புதுமண தம்பதிகளுக்கு நல்ல நேரம் இருந்தால் நல்ல திறம்பட்ட ஜோதிடர்களை நாடி நல்ல முடிவை பெற வைக்கிறது.ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு இடையே கர்ம வினைகளுக்கு ஏற்ப மேற்கண்ட தவறுகள் நடந்துவிட அனுமதிக்கிறது.


 ஜாதகம் பொருத்தம் பார்ப்பதில் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்பு, தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்கள் பொருத்தம் பார்ப்பதை விட நட்சத்திர பொருத்தத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க கூடிய ஜோதிடர்களும் திருமண பொருத்தம் பார்ப்பதில் தவறுகள் நடந்துவிட வாய்ப்பு உண்டு.


 சில திறமையான ஜோதிடர்கள்  மட்டுமே ஜோதிட அடியாழமான விதிகள், விதிவிலக்குகள் மற்றும் சூட்சும உண்மைகள் போன்றவற்றில் திறம்பட்ட ஞானம் உடையவர்களாக இருப்பார்கள்.ஒரு சிலர் நட்சத்திர பொருத்தம், செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் போன்ற  விஷயங்களை கையில் பிடித்து கொண்டு ஜாதகம் பார்ப்பவர்களாக இருப்பார்கள்.இவர்களது பேச்சு தோணி, குரல் ஏற்ற இறக்கங்கள் நல்ல

 ஜோதிடர்களை தூக்கி அடித்து விடும்.


  நட்சத்திர பொருத்தம் பார்க்கும்போது மூலம் நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது.

ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது.

கேட்டை நட்சத்திரம் மூத்த மைத்துனருக்கு ஆகாது.விசாகம் நட்சத்திரம் 🔯 இளைய மைத்துனருக்கு ஆகாது.


 மேற்கண்ட விதிகள் பொதுவான விதிகள் ஆகும்.இதில் சில விதிவிலக்குகள் உண்டு.விதிவிலக்குகள் கண்டுணர்ந்து ஆராயும் திறனற்றோர் மேற்கண்ட ஜோதிட விதிகளை அப்படியே கையில் எடுத்து கொண்டு பலனளிக்க முற்படும் போது தான் பொருத்தம் பார்ப்பதில் தவறுகள் நிகழ்ந்து விட வாய்ப்புண்டு.


 ஒருவருக்கு களத்திர மற்றும் மாங்கல்ய ஸ்தானங்களில் செவ்வாய் இருக்கும் போது தோஷம் என்றாலும் அந்த செவ்வாய் பகவான் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ அல்லது அந்த செவ்வாய் தசை நடப்பில் வரவே வாய்ப்பு இல்லை எனும்போது பயப்பட தேவையில்லை.


ஒரு பெண்ணின் நட்சத்திரம் 🔯 மூலம் எனில் மாமனுக்கு ஆகாது என்பது பொது விதியாக இருப்பினும் பையனது ஜாதகத்தில் தந்தைக்கு பாதிப்பு தர்க்கூடிய தசா புக்தி இல்லை எனும்பொழுதோ அல்லது அந்த பெண் மாமனார் ஜாதகத்தில் ஆயுள் பங்கம் இல்லை எனும்போது தாரளமாக அந்த பையனுக்கு விவாகம் செய்யலாம்.பயப்பட தேவையில்லை.


 நட்சத்திர 🔯 பொருத்தத்தில் ரஜ்ஜூ பொருத்தம் அல்லது கயிறு பொருத்தத்தில் ஜோடிகள் இருவருக்கு ஒரே ரஜ்ஜூ வந்தால் ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்பது பொதுவான விதியாக இருந்தாலும் ஆரோகணம் மற்றும் அவரோக கணமாக மாறி வந்தால் பொருத்தம் உண்டு என்பது விதிவிலக்குகள் ஆகும். சில நேரங்களில் தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூ வந்தாலும் அவருடைய ஜாதக கட்டத்தில் ஆயுள்பலம் தீர்க்காயுள் ஆக இருந்தால் பொருத்தம் போடலாம்.


ஜாதக கட்டத்தில் ஒரு ஸ்தான பலத்தை கண்டறிய அந்த இடம் , அதன் அதிபதி மற்றும் அந்த பாவக காரகன் ஆகிய மூன்று வழிகளிலும் ஆய்வு செய்தே முடிவு செய்யப்பட வேண்டும்.பொதுவாக லக்கன மற்றும் களத்திர ஸ்தானத்தில் நிழல் 👥 கிரகங்களான ராகு மற்றும் கேது இடம் பெற்றிருந்தாலும் இடம் பெற்றுள்ள அந்த பாவகத்தை இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு கொண்டிருந்தாலோ அல்லது அந்த ஸ்தானாதிபதியோ மற்றும் அந்த காரகன் வலு பெற்றிருந்தால் நாகதோஷம் என்று பயப்பட தேவையில்லை.


 பொதுவாக இலக்கணத்தை குரு பார்த்த ஜாதகத்தை பெற்றவர்களை இலக்கணத்தை சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்த்த அமைப்புள்ள ஜாதகம் இணைக்கக்கூடாது.


 திருமண பொருத்தம் பார்க்கும்போது தம்பதிகள் இருவருக்கும் நீடித்த தாம்பத்திய சுகத்தை அளிக்கக் கூடிய தசாபுத்திகள் வந்துவிட்டதா? என்றும் அல்லது புத்திர பாக்கியத்தை தரக்கூடிய அமைப்புகள் வந்துவிட்டதா ? என்றும் இது போன்ற விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


 திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது உரிய தசை அமைப்புகள் வந்துவிட்டதா? என்றும், திருமணத்திற்கு அடுத்துவரும் தசைகள் அல்லது நடப்பில் இருக்கும் தசைகளும் ஆறு மற்றும் எட்டுக்கு உரிய தசைகளாகஇருக்கக் கூடாது. அல்லது அவயோக தசைகளாக  இருக்கக் கூடாது. இவற்றை எல்லாம் நன்கு கவனிக்கப்பட வேண்டும்.


 திருமண பொருத்தம் பார்க்கும்போது திருமண ஸ்தானங்களான லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் போன்ற இடங்களை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை பற்றி அறிய ஏழாம் இடம், களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகிய மூன்று வழிகளில் ஆய்வுகள் செய்து பார்க்க வேண்டும்.

இவை லக்கனம் மற்றும் ராசி என் இரு வழிகளில் ஆய்வுகள் செய்து பார்க்க வேண்டும்.


 பொதுவாக மேற்கண்ட இடங்களில் நிழல் 👥 கிரகங்களான ராகு மற்றும் கேது இடம் பெறுவது 

மேற்கண்ட ஸ்தானங்களையோ மற்றும் அதன் அதிபதிகளுடன் நிழல் கிரகங்கள் மற்றும் பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் தொடர்பு பெறுவது கால தாமத திருமணத்தை கொடுக்கும்.பாவ கிரகத்தின் பாவத்துவ வலிமை மற்றும் தசா புத்திக்கு ஏற்ப வாழ்க்கை துணை நிலை அறிய இயலும்.


 நீடித்த தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் பகவான் தனது தசாபுத்தி அல்லது சுக்கிரன் வீடுகள் உடன் தொடர்பு உடைய தசா புத்திகள் திருமணத்தை கொடுக்கும்.


சில நேரங்களில் திருமணம் நடத்தும் புத்திர பாக்கியம் காலம் தள்ளி கொண்டு செல்வதற்கான காரணத்தை ஆய்வுசெய்து பார்க்க லக்கனம் மற்றும் ராசி இரண்டிற்கும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம், புத்திர ஸ்தானதிபதி மற்றும் புத்திர காரகன் குரு போன்றவற்றை ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும்.இந்த ஸ்தனங்கள் மற்றும் காரகன் உடன் கரும்பாம்பு என அழைக்கப்படும் ராகு பகவான் எட்டு பாகைக்குள்ளாக தொடர்பு கொண்டு வேறு ஏதேனும் வகையில் சுபத்துவ நிலை அடையவில்லை எனில் புத்திர பாக்கியம் கால தாமதமாகி கொண்டே செல்கிறது.


 


நன்றி.


வாட்ஸ் அப்

  9715189647

   செல்

  9715189647

   7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                           



அன்புடன்

ஜோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: