ஜோதிட சூத்திரங்கள்-(1)
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
மனித வாழ்வை வழிநடத்துவதில் பன்னிரெண்டு பாவகங்களுக்கும் மற்றும் ஒன்பது கிரகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
ஒன்பது கிரகங்கள் பன்னிரெண்டு பாவகங்களில் அமரும் போது அவை தரக்கூடிய பலாபலன்கள் கீழ் கண்ட வகையில் ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டியதாக உள்ளது.
1)ஸ்தான வலிமை
ஸ்தான வலிமை என்பதும் அவசியமான ஒன்றாகும் ஒரு கிரகம் உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு, சமம் ,பகை மற்றும் நீசம் போன்ற வகையில் எந்த நிலையில் உள்ளது என்பதை அதனுடைய பாகைகளை( degree) அடிப்படையில் கண்டறியப்பட வேண்டும்.
இங்கு உச்சத்திற்கு 100 மதிப்பெண் எனில் ,மூலத்திரிகோனத்திற்கு 75 மதிப்பெண் , ஆட்சி பெற்ற கிரகத்திற்கு 50 மதிப்பெண், சம தன்மையுள்ள கிரகத்திற்கு இருபத்தி ஐந்து மதிப்பெண், பகை பெற்ற கிரகத்திற்கு 10 மதிப்பெண் மற்றும் நீசம் பெற்ற கிரகத்திற்கு பூஜ்யம் மதிப்பெண் என்றாலும் அதே நேரத்தில் நீச்சம் பெற்ற கிரகம் நீசபங்க பெரும்பொழுது 120 மதிப்பெண் பெறுகிறது. அதாவது உச்சத்தை விட கூடுதலான மதிப்பெண்ணை பெறுகிறது.
ஸ்தான வலிமையைப் பொறுத்த வரை பாவ கிரகங்களான சனி செவ்வாய், ராகு மற்றும் கேது, உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் நேர் வலு பெற கூடாது என்பதும் ,கேந்திரத்திற்கு அதிபதியான ஒரு கிரகம் கேந்திரங்களில் நின்று உச்சம், ஆட்சி பெற்று இருப்பதும் கேந்திராதிபத்திய தோஷம் தரும் என்பதையும் கவனித்து விதிகளுக்குள் விதிவிலக்குகளை அவசியம் கவனிக் கப்பட வேண்டும்.
2)கிரக பார்வை ,
எல்லா கிரகங்களுக்கும் ஏழாவது பார்வை உண்டு. இங்கு ஏழாவது பார்வைக்குக்கு 100 மதிப்பெண் தரப்படுகிறது. குரு ,சனி , செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களுக்கும் விசேஷ சிறப்பு பார்வை உண்டு.
குரு பகவானுக்கு ஐந்து மற்றும் ஒன்பது என்ற சிறப்பு பார்வை உண்டு "குரு பார்த்தால் கோடி நன்மை தரும்" அதேநேரத்தில் சுப வீட்டிலிருந்து பார்க்கக்கூடிய குருவின் பார்வைக்கும் தனது பகை வீட்டில் இருந்து பார்க்கக்கூடிய குருவின் பார்வைக்கும் சில மாறுபட்ட பலன்கள் உண்டு.நீசம் குருவின் பார்வை படம் சற்று குறைவாகத்தான் இருக்கும்.
குருபகவான் உடைய ஏழாம் பார்வைக்கு 100% பலன் தரும் என்றால் அது ஐந்தாம் பார்வைக்கு 50 சதவீத பலனும்,
ஏழாம் பார்வைக்கு 75 சதவீதம் பலனும் தரும்.
சனி பகவான் பார்வை சர்வ நாசம் செய்துவிடும். சனிபகவானுடைய ஏழாவது பார்வைக்கு 100% எனில் அதனுடைய மூன்றாம் பார்வைக்கு நம் 50 சதவீதமும் பத்தாம் பார்வைக்கு 25 சதவீதம் பாதிப்பு இருக்கும்..
குரு பகவான் பார்க்கப்பட்ட சனி பகவானுடைய பார்வை நல்ல பலனைத் தருவதில்லை. அதே நேரத்தில் தீய பாதிப்பையும் உண்டாக்குவதில்லை.
செவ்வாய் பகவானுடைய ஏழாம் பார்வைக்கு 100% என்றால் அதனுடைய நாலாம் பார்வைக்கு 50 சதவீதமும் எட்டாம் பார்வைக்கு 75% பாதிப்பு பலன் உண்டு.
செவ்வாய் பகவான் பார்வை சுப வீடுகளிலிருந்து பார்க்கப்படும் பொழுது அதன் பாதிப்பு தன்மை குறையும். செவ்வாய் பகவான் தனக்கு நட்பு கிரகமான சந்திரனும் ,குரு பகவானையும் பார்க்கும் போது அதிக அளவு பாதிப்பதில்லை.
வளர்பிறை சந்திரனின் பார்வையானது தனது ஏழாம் வீட்டில் உள்ள கிரகங்களை மட்டுமல்லாமல் அதற்கு முன் பின் ராசிகளான ஆறு மற்றும் எட்டாம் இடங்களையும் அதன் ஒளி சென்றடையும் என்ற வகையில் சந்திரனுக்கு ஆறு ,ஏழு ,எட்டு உள்ள இயற்கைச் சுபக்கிரகங்கள் (சுக்கிரன், புதன் மற்றும் குரு) இருந்தால் சந்திர அதியோகம் பெறும் என்பதும் இந்த சூட்சும உண்மைகளை அடிப்படையாக கொண்டதாகும். தேய்பிறைச் சந்திரன் ஆன அமாவாசை சந்திரனுடைய பார்வை கெடு பலனை தரும். பாவர் உடன் சேராத புதன் பார்வை சுப தன்மை அடைய வைக்கும்.
சில நேரங்களில் குருபகவான் தனது 5ம் பார்வையாக ஐந்தாம் வீட்டை பார்ப்பதற்கு பதிலாக 6-ம் வீட்டையும், 7ஆம் வீட்டை பார்ப்பதற்கு பதிலாக 8-ஆம் இடத்தையும் மற்றும் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதற்கு பதிலாக பத்தாம் வீட்டையும் அதிகம் பார்க்க நேரிடும்.
இது எவ்வாறெனில் ஒரு ராசியில் குருபகவான் 29 பாகையில் இருப்பதாக வைத்துக்கொண்டால் இது போன்ற நிகழ்வு உண்டாகும்.உதாரணமாக மீன வீட்டில் இருபத்தி எட்டு பாகை 59 கலையில் இருக்கும் குருபகவான் கடக வீட்டில் தொடக்க பாகையில் இருக்கும் சனி பகவானைப் பார்த்து சுபத்துவ படுத்த வாய்ப்பு இல்லை.
3) கிரக சேர்க்கைகள்,
கிரக சேர்க்கைகள் பற்றி பார்க்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அவற்றின் உறவு நிலைகளை கவனிக்கப்பட வேண்டும் .உதாரணமாக சூரியனுக்கு சனி பகை ,புதனுக்கு செவ்வாய் பகை ,குருவுக்கு சந்திரன் செவ்வாய் சூரியன் நட்பு இதுபோல் கவனிக்கப்பட வேண்டும்.
இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன் , பாவி உடன் சேராத தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை சேரும்பொழுது தன்னுடன் இணைந்த கிரகத்தின் வலிமையை அதிகரிக்க செய்கிறது .மாறாக பாவக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு ,கேது போன்றவை உடன் இணையும் போது தன்னுடன் இணைந்த கிரகத்தை கெடுத்து தான் சுபத் தன்மை அடைகிறது.
பாகை ,கலை அடிப்படையில் கிரக சேர்க்கைகள் கவனிக்கப்பட வேண்டும்.இரண்டு கிரகங்கள் ஒரு ராசியில் இருந்தாலும் அவை ஒன்றாக இருந்ததாக கருத இயலாது. சில நேரங்களில் இரண்டு கிரகங்கள் அடுத்தடுத்த வீடுகளில் இருந்தாலும் அவை ஒன்றை ஒன்று சேர்ந்து உள்ளதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் இவை அனைத்தும் அடிப்படையில் ஆராயும் போதே இந்த சூட்சும உண்மை புலப்படும்.
சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்களுடன் கேதுபகவான் தனித்தனியாக இணையும் பொழுது தனது தசையில் சூட்சும வலுவை தருகிறது .மாறாக சனி, செவ்வாய் இருவரும் சேர்ந்து உள்ள நிலையில் கேது சேரும்போது சூட்சும உண்மை வேலை செய்வது இல்லை.
ஒரு கிரகம் தன்னுடன் இணைந்த கிரகத்தை. உதாரணமாக குரு பகவான் உடன் சனி பகவான் எட்டு பாகைக்குள் அமரும் போது அதிக பாதிப்பை தருகிறது. பதிமூன்று பாகைக்குள் அமரும்போது 50 சதவீத பாதிப்பு தருகிறது.
இருபத்தி இரண்டு பாகை தாண்டி ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்தாலும் ஒன்றை ஒன்று பாதிப்பதில்லை.இங்கு குரு பகவானும் சனி பகவானும் ஒரு ராசியில் இருந்தாலும் ஒன்றாக இல்லை எனலாம்.சனி குரு பகவானை பாவத்துவம் அடைய செய்வதில்லை.
அதே நேரத்தில் மேஷ வீட்டில்
இருபத்தி ஒன்பது பாகையிலுள்ள சனி பகவான் ரிஷப வீட்டில் முதல் இரண்டு பாகையில் உள்ள குருபகவானை பாவத்துவம் அடையச் செய்கிறது. இங்கு பார்ப்பதற்கு குருவும், சனியும் வேறு வேறு வீடுகளில் இருந்தாலும் சனி பகவான் குருவை பாவத்துவம் அடைய வைத்து விடுகிறார் குரு பகவான் சனி பகவானை சுபத்துவ தன்மையை அடைய வைக்கிறார்.
வீடு கொடுத்தவன் வலு
கிரகம் இருக்கக்கூடிய வீட்டின் அதிபதியின் வலுவிற்கு ஏற்றபடியும் ஒரு கிரகம் தரும் பலாபலன்கள் அமைகிறது. கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் அந்த கிரகம் தனது தசை காலங்களில் அதிக நன்மையை தருகிறது .அந்தவகையில் பாவ கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் அந்த பாவ கிரகம் தனது தசையில் மிகுந்த யோக பலனை சாதகருக்கு தருகிறது.
சார் நாதன் வலிமை
ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் எத்தனையாவது பாத சாரத்தில் அமர்ந்து உள்ளது என்பதையும்,சார நாதன் யார் என்பதையும் மற்றும் சார நாதன் ஜாதக கட்டத்தில் பெற்ற ஸ்தான வலிமையினை பொருத்தும் , சாரம் கொடுத்த கிரகத்திற்கும் லக்கனாதிபதிக்கும் உள்ள உறவுகளை பொருத்தம் சாரநாதன் உடைய வலுவானது அமைகிறது.
சார நாதன் வலுப்பெற்ற நிலையில் அந்த கிரக தசையில் சாரநாதன் பெற்றுள்ள ஆதிபத்திய வழியாக அந்த ஜாதகருக்கு நன்மையைத் தருகிறது.
தொடரும்...
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்& செல்
9715189647
செல்
9715189647
7402570899
My email
masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment