Thursday, 31 March 2022

பன்னிரெண்டு ராசிகள் காட்டும் மகத்தான வாழ்வியல் நிலைகள்.

 

 பன்னிரண்டு ராசிகள் காட்டும் மகத்தான வாழ்வியல் நிலைகள்.


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதக கட்டத்தில் பன்னிரெண்டு ராசிகள் உள்ளன .ஒவ்வொரு கட்டத்தையும் ஒரு கிரகம் ஆளுமை செய்கிறது. இவ்வாறு ஆளுமை செய்யும் கிரகத்தை" காரகர்" என்று அழைக்கிறோம்.

ஒரு கிரகம் தனது காரகன் பலன்களை வாழ்நாள் முழுவதும் தருகிறது.அந்த கிரகம் ஒரு குறிப்பிட்ட ஆதிபத்தியங்களை கொண்டுள்ளது. இந்த கிரகம் கொண்ட ஆதிபத்தியம் தரக்கூடிய பலன்கள் அந்த திசை காலங்களில் மட்டும் நடக்கிறது.


 தசை நடத்தும் கிரகம் நல்ல ஆதிபத்தியங்களை கொண்டிருந்தால் நல்ல பலன்களையும் ,தீய ஆதிபத்தியங்களையும் கொண்டிருந்தால் தீய பலன்களையும் நல்ல, கெட்ட ஆகிய இரு ஆதிபத்தியங்களையும் கொண்டிருந்தால் நல்லது, கெட்டதும் கலந்த இரண்டு ஆதிபத்திய பலன்களை தசை முழுவதும் தரக்கூடிய அமைப்பைப் பெற்றிருக்கும்.


 ஜாதகத்தில் லக்கனத்திற்கு காரகராக சூரிய பகவான் வருவார்.சூரியனின் பொதுவான காரக பலன்கள் தலைமையேற்று வழி நடத்தி செல்லும் கிரகம் ஆகும். பிரச்சனை என்று வரும் இடங்களில் ஓடி ஒளிந்து கொள்ளாமல் முன் நின்று தட்டிக்கேட்கும் தலைமைத்துவம் தரக்கூடிய குணம் லக்னத்திற்கு 

 காரகனான சூரிய பகவானுக்கு உண்டு.


 ஒருவரது ஜாதகத்தில் லக்னம், அதன் அதிபதி மற்றும் காரகர் சூரிய பகவான் ஆகிய மூன்றும் வலுப்பெற்ற நிலையில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் கொடி கட்டி பறக்க கூடிய யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.


 ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி மற்றும் லக்னத்திற்கு காரகரான சூரிய பகவான் இரண்டும் வலுப்பெற்று நின்றால் தான் எவ்வளவு யோகமான தசை அமைந்தாலும் அந்த யோகத்தை அனுபவிக்க இயலும்.அதே போல் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மனவலிமை ஜாதகருக்கு அமையும்.


  லக்னத்தில் சூரிய பகவான் அமர்ந்து ஏழாம் இடத்தில் சந்திரன் வரும் பொளர்ணமி யோகத்தில் பிறந்தவர் நல்ல தேஜஸ் உடையவராக காணப்படுவார்கள்.


  ஜாதகம் கட்டத்தில் இரண்டாம் பாவகம் ஒருவரது தனம், வாக்கு, குடும்பம் மற்றும் நேத்திரம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்தானமாகும்.இரண்டாம் பாவகத்திற்கு பொதுவான காரகராக செயல்படுபவர் குரு பகவான். இரண்டாம் இடத்தை ஜாதகருக்கு தன ஸ்தானம் என்று இருக்கிறது.


 இரண்டாம் ஆம் இடம் தன ஸ்தானம் ஆகும். அதன் அதிபதி தனாதிபதி மற்றும் தனகாரகன் குரு ஆகிய மூன்றும் வலுப்பெற்ற போதுமான நிலையில், தேவையான பொருளாதார வசதியை சாதகருக்கு தரக்கூடிய யோகமாகும். 

குரு பகவானே தனம், பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய மூன்றுக்கும் காரகர்களாக திகழ்வார்,


 ஒருவருக்கு தன யோகத்தை தரக்கூடிய தனம் ,பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய மூன்று ஸ்தான அதிபதிகளும்(2,9,11) வலுப்பெற்று தங்களுக்குள் பரிமாறி நின்று குருபகவான் பார்வையை பெற்றுள்ள நிலையை பெற்றவர்கள் மகாதனவானாக திகழ்வார்கள்.


இரண்டாம் இடமும் குருபகவானும் வலுப்பெற்ற நிலையில் கல்வி கேள்விகளில் வல்லவராகவும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் யோகம் உடையவராகவும் திகழ்வார்கள்.


 இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்களான சனி ,செவ்வாய் மற்றும் சாய கிரகங்களான ராகு, கேது போன்ற கிரகங்கள் இருப்பது நல்லது .அவ்வாறு இருப்பின் குடும்பத்தை விட்டு தள்ளி இருக்க கூடிய சூழலும் திருமண வாழ்வில் கால தாமதத்தையும் தரக்கூடும்.


ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடத்திற்கு காரராக செவ்வாய் பகவான் திகழ்வார். மூன்றாம் இடத்தை சகோதர ஸ்தானமாகவும் மற்றும் செவ்வாய் பகவானை சகோதர காரகராகவும் அறியலாம். இவை தவிர்த்து மூன்றாமிடம் கீர்த்தி, புகழ் ,அந்தஸ்து தரக்கூடிய இடமாகவும். ஒருவருடைய செக்ஸ் வீரியத்தை அறிந்து கொள்ளக்கூடிய காம ஸ்தானம் ஆகும் .


 ஒருவர் ஜாதகத்தில் 3ஆம் இடம் வலுப்பெற்று நின்றால் அவர் சமூகத்தில் பேர் சொல்லி குறிப்பிடும் அளவிற்கு புகழ் பெற்ற விஐபி ஆக திகழ்வார்.


     நான்காமிடம் ஒருவருக்கு தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் ,வண்டி வாகன சுகம் ஆகிய அனைத்து சுகங்களையும் அறிய உதவும் ஸ்தானமாகும். நான்காம் இடத்திற்கு கல்விகாரகன் புதன் பகவானும் ,தாய்க்கு காரகர் சந்திரன் பகவான் வாகனத்திற்கும் மற்றும் வீட்டிற்கும் காரக கிரகங்களாக சுக்கிரன் திகழ்வார்.


 ஒரு ஜாதகத்தில் நான்காம் இடம் அதன் அதிபதி வலுப்பெற்ற நிலையில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கக் கூடிய யோகத்தை தருவார்.


  நான்காம் இடம் அந்த அதிபதி மாதுர் காரகன் சந்திரன் ஆகிய மூன்றும் வலுப்பெற்ற நிலையில் தாயார் சுகத்தையும், நான்காமிடம் அந்த அதிபதி மற்றும் சுக்கிரன் வலுப்பெற்ற நிலையில் வீடு வாகன யோகத்தையும் ஒருவர் பெறுவார்.


 நான்காம் இடத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் எட்டு பாகையில் நின்று நான்காம் அதிபதியும் சுக்கிரனும் கெட்ட நிலையில் கடைசி வரை சொந்த வீட்டில் வசிக்காமல் வாடகை வீட்டில் வசிக்க கூடிய நிலையை அடைவார்.


ஒருவர் ஜாதகத்தில் நான்காம் இடம் அதன் அதிபதி மற்றும் காரகன் புதன் பகவான் ஆகிய மூன்றும் வலுப்பெற்ற நிலையில் கற்ற கல்வியாலும் பெற்ற வித்தையாகும் யோகத்தை தருவார்.


 நான்காம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகியவை திக் பலம் பெறுவார்கள். செவ்வாய் பகவான் நிஷ் பலம் பெறுவார். நான்காம் இடத்தில் பாவக் கிரகங்கள் இருப்பது கேந்திரா திபேத்திய தோஷத்தை தராது எனினும் வேறு எந்த வகையிலும் சுபத்துவம் பெற வேண்டும்.


 ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் , புத்திர ஸ்தானம் மற்றும் புத்தி ஸ்தானம் ஆகும். ஐந்தாம் இடத்திற்கு காரக கிரகமாக குருபகவான் திகழ்வார். எனவே குரு பகவான் புத்திரகாரகன் என்றும்.


ஐந்தாமிடத்தில் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் இடம் பெற்று வேறு எந்த வகையிலும் சுபத்துவம் பெறாத நிலையில் ஐந்தாம் அதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பலனை அடைய வேண்டும்.ஒவ்வொன்றிற்கும் 40 மதிப்பெண் விகிதத்தில் மூன்று கெட்டுப்போனால் புத்திரதோஷம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வசிக்க இயலாத தன்மை மற்றும் பூர்வபுண்ணிய சொத்துக்கள் பெறாத நிலையை அடைந்து விடுவார்கள்.


 ஜாதகத்தில் ஐந்தாமிடம் அதிபதி லக்கின யோகராக செயல் படுவார்கள். அதனால் 5ஆம் இட அதிபதி தசை எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் அந்த தசை நடத்தினால் மிகுந்த யோகத்தை சாதகர்கள் அந்த காலங்களில் பெறுவார்கள்.


  ஒருவருடைய ஜாதகத்தில் வலுப் பெற கூடாத ஸ்தானம் எது என ஆராய்ந்து பார்த்தால் அதாவது கெட்டுப் போக வேண்டிய ஸ்தானம் ஆறாம் இடம் ஆகும்.இதனால் ஆறாம் இடத்தை சத்ரு ஸ்தானம் என்று அறியலாம்.


ஆறாம் இடத்தை ஒருவரது கடன் ,பிணி, நோய், எதிர்ப்பு மற்றும் ஆள் அடிமை போன்றவற்றை ஆராய்ந்து அறிய உதவும் ஸ்தானமாகும்.


  பொதுவாக 6-ஆம் இட அதிபதி வலுப்பெற்று நிற்பதோ அல்லது 6-ஆம் இடத்தையும் அதன் அதிபதியும் இயற்கைச் சுபக்கிரகங்கள் பார்த்து வலுப்பெறக் கூடாது .மாறாக பாவ கிரகங்கள் பார்த்து அந்த ஸ்தானத்தையும் அதிபதியையும் வலிமை குன்றச் செய்வது நல்லது.


  ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாமிடம் வலிமை குன்றி ஆறாம் இடம் வலிமை பெற்று நிற்பின் பிறரிடம் வேலை செய்யும் நிலையை தருமே ஒழிய சொந்த தொழில் செய்ய முடியாது. மாறாக 6-ஆம் இடம் வலிமை இழந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் வலுப்பெற்று நிற்பின் சுயதொழில் செய்யலாம்.


 ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்து ஆறாம் வீட்டு அதிபதி பலம் பெற்று நிற்பின் அடுத்தவரிடம் கையேந்தி நிற்கும் நிலையைத் தரும்.


ஆறாம் இடத்திற்கு காரகராக செயல்படுவது மிகுந்த பாப கிரகமான செவ்வாய் பகவானும் சனி பகவானும் ஆவார். செவ்வாய், சனி ஆகிய இரண்டும் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ ஒரு இடத்தைப் பார்த்தால் அந்த இடம் சர்வநாசம் ஆகிவிடும்.


ஒருவரது ஜாதகத்தில் ஏழாம் இடம் என்பது தனக்கு வரும் வாழ்க்கைத்துணை பற்றி அறிய உதவும் மிக முக்கியமான ஸ்தானம் ஆகும். இந்த களத்திர ஸ்தானத்திற்கு காரகராக நவகிரகங்களில் சுக்கிர பகவான் திகழ்வார்.. அதனால்தான் இலக்கணம் ஆகிய சாதகருக்கு சம சப்தமாக ஏழாம் இடத்தை பிடித்துள்ளார்.


   ஏழாம் இடம் கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான உறவு நிலைகளை பற்றி அறிந்து கொள்ளவும். தனக்கு வரும் நட்பு நிலை பற்றி அறிந்து கொள்ளவும் உதவுகிறது.


   தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் அனைத்து தகுதிகளையும் அறிந்துகொள்ள ஏழாம் இடம், அதன் அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகிய மூன்றையும் ஆய்வுசெய்து பார்க்கப்பட வேண்டும்.


 பொதுவாக ஏழாமிடத்தில் அல்லது அதிபதியுடன் களத்திரகாரகன் சுக்கிரனுடன் சனி ,செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்வதோ அல்லது பார்ப்பதோ அதற்கு உகந்தது அல்ல. அவ்வாறு சேர்ந்து இருப்பின் வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெற்று இருக்க வேண்டும்.


 ஒருவரது ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் என்று அறியப்படுகிறது. சனி பகவான் ஆயுளுக்கு காரகராக திகழ்வார். ஒருவரது ஜாதகத்தில் அஷ்டமாதிபதி என்றழைக்கப்படும் எட்டாம் இடத்தின் தசையானது நடப்பில் உள்ள காலங்களில் வம்பு ,சண்டை, வழக்கு,அசிங்கம், கேவலம் ,ஆயுள் பங்கம் மற்றும் சிறை செல்லல் போன்ற துர் விஷயங்களை தரக்கூடிய நிலையில் அமையும்.


 எட்டாமிடம் சுபத்துவம் நிலையை அடைந்தால் வெளிநாடு செல்ல உகந்த யோகத்தையும் மறைபொருள் உண்மைகளையும் அறிந்து கொள்ளவும் உதவும்.


ஒருவரது ஆயுளை அறிந்துகொள்ள உதவும் ஸ்தானம் எட்டாம் இடம், அதன் அதிபதி மற்றும் ஆயுள்காரகன் சனி பகவான் ஆவார். பாதகாதிபதி மாரகாதிபதி மற்றும் சத்ரு ஸ்தானாதிபதி ஆகியவற்றை எல்லாம் ஆய்வுசெய்து முடிவு செய்ய வேண்டும். லக்கனாதிபதியின் வலிமையையும் மற்றும் நடக்கக்கூடிய தசையையும் பொறுத்து ஒருவரது ஆயுளை நிர்ணயம் செய்ய இயலும்.


 ஒருவரது ஜாதகத்தில் தந்தையை பற்றியும் ,தான தர்ம குணங்களையும் மற்றும் மேல்நிலை கல்வி போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் ஸ்தானமாக விளங்குவது ஒன்பதாம் இடம் ஆகும்.


 பெருங் கோணம் என்று அழைக்கப்படும் ஒன்பதாம் இடம் லக்கன யோகராகக் கருதப்படுகிறது.ஒன்பதாம் இடமான தந்தைக்குக் காரகராக சூரிய பகவான் திகழ்கிறார்.ஒன்பதாம் இடம் அந்த அதி மற்றும் சூரிய பகவான் வலிமை பெற்ற நிலையில் தந்தையாலும் தந்தை வழி உறவுகளாலும் பெருத்த யோகத்தை அடைகிறார்.


ஒன்பதாம் இடத்தில் பாவ கிரகமான ராகு அல்லது சனி நின்று சூரியனும்,சனி பகவானும் சம சப்தமாக பார்த்து கொள்ளும் அமைப்பானது தந்தை மகன் உறவின் நிலையை பாதிக்கும்.


ஒன்பதாம் இடம் என்பது பாக்கிய ஸ்தானமாக கருதப்படுகிறது.பாக்கியத்திற்கு காரகராக குருபகவான் விளங்குகிறார்.ஒன்பதாம் இடம் மற்றும் குரு பகவான் இரண்டும் வலுப்பெற்று ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று விளங்கும் நிலையில் மிகுந்த வருமானத்தை ஒன்பதாம் இட அதிபதி தசையில் அடைவார்.


ஒருவர் செய்யும் தொழிலை அறிந்து கொள்ள உதவுகிறது.


பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு காரகராக சூரியன், புதன், குரு சனி ஆகிய கிரகங்கள் விளங்குகின்றன.


 ஒருவரது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக நின்று ராசி மற்றும் லக்கனத்திற்கு தனம் மற்றும் ஜீவன ஸ்தானமான இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொண்டு சுபத்துவமான தசை நடப்பில் உள்ள காலங்களில் அந்த கிரகம் தொடர்பு கொண்டு தொழில் செய்து மிகுந்த ஜீவனத்தை ஜாதகர் ஈட்டுவார்.


  ஒருவர் தனக்கு வரும் லாபத்தை அறிந்து கொள்ள உதவும் ஸ்தானம் என்பதால் பதினொன்றாம் இடத்தினை லாப ஸ்தானம் என்றும் குறிப்பிடுகிறது.


 தனக்கு வரக்கூடிய லாபம், இளைய தாரம் மற்றும் மூத்த சகோதரன் ஆகியவை ஆய்வு செய்து கண்டறிய உதவும் ஸ்தானமாக விளங்குவது.


பதினொன்றாம் இடத்தில் உள்ள நட்சத்திர சாரம் பெரும்பாலும் லக்கன யோகரின் நட்சத்திரமாக இருப்பதால் லக்கன அவ யோகராக இருந்தாலும் பாவராக இருந்தாலும் உபஜெய ஸ்தானம் என்பதால் நட்பு நிலையில் இருக்கும் போது மிகுந்த யோக பலன்களை ஜாதகருக்கு கொடுப்பவராக திகழ்வார்.


 லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திற்கு காரகராக குரு பகவான் திகழ்கிறார். ஒருவரது ஜாதகத்தில் 11ஆம் அதிபதியும், குரு பகவானும் வலுப்பெற்று இருந்தால் அல்லது 11-ஆம் இடத்தின் அதிபதி குரு பார்த்தாலும் அந்த தசை காலங்களில் தான் மேற்கொண்ட தொழில் மூலமாக மிகுந்த லாபத்தை ஜாதகர் அடைவார்.


   பதினொன்றாம் இட அதிபதி எந்த ஸ்தானத்துடன் தொடர்பு கொள்கிறார்களோ அவை சார்ந்த லாபத்தை ஜாதகரது வாழ்வில் கொடுக்கும்.


 ஒருவர் ஜாதகத்தில் நிறைவான ஸ்தானமான 12-ஆம் இடத்தை ஒரு வாழ்வின் அல்லது ஒரு நாளின் இறுதி நிலையாக கருத வேண்டும். ஒரு நாளின் இறுதி நிலை என்பது நித்திரையை தழுவும் இடம் என்பதாலும் ,ஒரு நாளின் இறுதியில் உலகியல் ஓசை அடங்கி உடலின் ஆசை தொடங்குகின்ற நேரம் என்பதாலும் அயன ,சயன , நித்திரை, படுக்கை மற்றும் முக்தி சுகத்தை தரும் ஸ்தானம் ஆகும்.ஆறு தாண்டும் இடமாகவும் கருதப்படுகிறது.


   ஒருவர் வாழ்வில் அடையும் விரயத்தை குறிக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. பணம் விரயமாக இருக்கலாம் அல்லது கால விரயமாக இருக்கலாம் அல்லது வாழ்வியலில் எடுத்த முயற்சி விரயமாக இருக்கலாம்.


 பன்னிரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து அந்த தசைகள் நடக்கக்கூடிய காலங்களில் கடல் கடந்து வெளிநாடு செல்ல யோகத்தையும் சுபத்துவமான நிலையில் தரும்.


 பனிரெண்டாம் இடம் பலமான அமைப்பைப் பெற்றவர்கள் படுக்கை சுகம் மற்றும் நித்திரை செல்வத்தைப் பெற்றவர்கள் அவர்கள்.


 12ஆம் இட அதிபதி எந்த ஸ்தானத்துடன் தொடர்பு கொள்கிறார்களோ அவை சார்ந்த விரயத்தை அவர்களுக்குக் கொடுப்பார்.


 பனிரெண்டாம் இடம் காமம் தழுவி இன்பரசம் அடையும் இடம் என்பதால் இந்த இடத்துடன் சுக்கிரன் சுபத்துவம் பெற்ற நிலையில் நல்ல தரமான பெண்களுடன் தொடர்பு கொள்வார்கள். இந்த இடத்தில் சுக்கிரன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவகிரகங்கள் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் பலருடன் அல்லது பரத்தையருடன் கூடி பாலியல் நோய் அடைவார்.


 பன்னிரண்டாம் பாவகத்திற்கு காரகராக சனி பகவான் திகழ்வார்.


  ஒருவரது ஜாதகத்தில் 8 முதல் 12ஆம் தேதி வரை சுபத்துவம் பெற்ற நிலையில் கடல் கடந்து வெளிநாடு செல்வார்

 அவ்வாறு சென்று அங்கு நீண்ட பொருளை ஈட்டும் யோகம் உண்டாகும்.12-ஆம் இடம் வெளிநாடு செல்லும் யோகத்தையும் எட்டாமிடம் அங்கு தங்கி இருந்து பொருளீட்ட கூடிய யோகத்தை தரக்கூடிய அமைப்பாகும் .


 ஒருவரின் ஜாதகத்தில் 12-ஆம் இடம் சுபத்துவம் பெற்ற நிலையில் எட்டாம் இடம் பாவத்துவமான அமைப்பில் இருந்தால் அடிக்கடி வெளிநாடு சென்று வரக்கூடிய யோகத்தை மட்டும் தரும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜாதகம் எழுதி கோரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறைகளைப் பெறலாம்.)


வாட்ஸ் அப்

  9715189647


   செல்

 9715189647

  7402570899


மின்னஞ்சல் ஐடி ;masterastroravi@gmail.com.


   



அன்புடன்

ஆஸ்ட்ரோ ரவிச்சந்திரன் M.Sc,MA,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிடர்)

ஓம்சக்தி ஆஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,

கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: