Wednesday, 19 September 2018

ராகு தரும் ராஜயோகம்

ராகு தரும் ராஜ யோகம்


                               

        கிரகங்கள் படுத்தும் பாடு

செவ்வாய்பட்டி ஶ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

"ஒருவரது சாதகத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில்  ராகு பகவானை கொண்டிருப்பவர்கள் 
பைனான்ஸ்,அடகுபிடித்தல்,கமிஷன் ஏஜெண்ட, , ரியல் எஸ்டெட்,அரசு விரோத தொழில்கள் ,லாட்டரி ,கணிப்பொறி
,அந்திய நாடு செல்லுதல்,ஷேர் மார்க்கெட் ,அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல் போன்ற துறைகளில் புகழ் பெற வைக்கும்."

  ராகு பகவான் குப்பையில் இருப்பவரை கோபுரத்தில் ஏற்றி அழகு பார்க்கும்.கோபுரத்தில் இருப்பவரையும் குப்பையை நோக்கியும் செல்ல வைக்கும்.

    ராகுபகவான் ஒருவரது சாதகத்தில் உகந்த இடங்களில் இருந்து அதன் தசை நடப்பில் இருப்பின் பல லட்சங்களை அள்ளி கொடுத்து கோடீஸ்வரனாக்கி அழகுபார்க்கும்.அதே ராகு இகந்த இடங்களில் இல்லாதபோது ஒருவனை ஓட்டாண்டியாக்கி அடுத்தவரிடம் கையேந்தி நிற்க வைக்கும்.

ஒருவரது சாதகத்தில் லக்கனம் ,இரண்டாம் இடம் ,எட்டாம் இடம் போன்ற இடங்களில் ராகு பகவான் இருந்து அந்த திசை நடைபெறும் காலங்களில் சாதகருக்கு மிகுந்த கஷ்டங்களை தந்து வாழ்வில் பக்குவப்படுத்துகிறார்.

அதேநேரத்தில் மூன்று,ஆறு,பதினோன்றாம் இடங்களில் ராகு இருந்து அந்த இடங்களும் மேஷம்,ரிஷபம் ,கடகம்,கன்னி  மற்றும் மகரம் வீடுகளில் ஒன்றாக இருந்து ராகு பகவான் சுய சாரம் பெற்று அதன் திசை நடைபெறும் காலங்களில் சாதகரை உயர்ந்த நிலைக்கு கோபுர கலசமாக ஜொலிக்க வைக்கும்.

பணிரெண்டாம் இட ராகு விரயத்தினை தந்தாலும் சாதகரை கடல் கடந்து அந்நிய தோஷம் செல்ல வைத்து வாழ்வில் பொருளாதர நிலையினை உயரத்தில் இட்டு செல்லும்.

 ராகு பகவான் திசையில் மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து நிற்கும் ராகு அதன் திசை காலங்களில் மிகுந்த யோகத்தினை வாரி வழங்கும்.

 ஆறாம் இடத்தில்   ராகு உடையவர்  எதிரியை வெல்லக்கூடியவராக திகழ்வார்.

ஶ்ரீ ராகு பகவான் கெடுப்பதைப்போல கெடுத்து நிறைவாக போக வாழ்வினை அள்ளி தருவதில் வல்லவர் .ஆதலால்தான் "ராகுவினைப்போல கொடுப்பவர் இல்லை,
 கேதுவினைப்போல கெடுப்பவர் இல்லை " என்ற சொல்லோடை மக்கள் மத்தியில் சோதிட பழமொழியாக பரவி வருகிறது.

ஶ்ரீராகு பகவான் தரக்கூடிய யோகங்களாவன;-


  1) அஸ்தகிரி யோகம்
   2) கிளர் யோகம்
   3) புதையல் ( லாட்டரி ) யோகம்

அஸ்தகிரி யோகம்


 "கேளே நீ சேல் கன்னி யெருது மேடம்
கெதியுள்ள மகரமடா கடகந்தன்னில்
கூளே நீ கரும்பாம்பு அதனில் தோன்ற
கொற்றவனே யோகங்களை புகழ்ந்திடாதே
சீளே நீ கிரகங்கள் நான்கு திக்கில்
சிவ சிவ சென்மனு கமைந்திருந்தால் 
ஆளே நீ யோகங்கள் கூறு அல்லால்
அப்பனே அஸ்தகிரி யோகஞ்சாற்றே "

 என்று புலிப்பாணி மகா முனிவர் அருளியுள்ளார்.

பாடல் விளக்கம்;

மேஷம்,ரிஷபம்,கடகம்,கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் கரும்பாம்பு எனப்படும் ஶ்ரீ ராகு பகவான் அமர்ந்து தசை நடத்தும் காலங்களில் யோகங்களை புகழ்ந்திடாதே லக்கனத்திற்கு நான்கு திக்கான 1,4,7,10 ஆகிய இடங்களில் கிரகங்கள் இருந்தால் இந்த யோகத்தை கூறு என கூறுகிறார்.ராசிக்கு நான்கு திக்கிலும் (1,4,7,10) கிரகம் அமைந்திருந்தாலும் இப்பலனை கூறலாம் .

           கிளர் யோகம்


"கேளப்பாயின்னமொரு புதுமை கேளு 
கனமான கரும்பாம்பு கேந்திர கோணம்
அத்தலத்தோன் சுபரை கூட அப்பனை சேர்ந்தாலும் கண்ணுற்றாலும் 
சீரப்பா ஜென்மனுக்கு யோகம்
மெத்த சிவ சிவா கிளர்யோகம் திடமாய் செப்பு
கூறப்பா குடிணாதன் சேர்ந்து நிற்க குமரனுக்கு அனுதினமும் பலனே கூறே "

பாடல் விளக்கம்
ஶ்ரீ  ராகு பகவான் 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானத்திலோ அல்லது 1,5,9 என்ற திரிகோண ஸ்தானத்திலே அமர்ந்து ஶ்ரீ ராகு பகவான் வீற்றிருந்த ராசிஅதிபரின் சுபகிரகங்களோடு சேர்ந்திருந்தாலும் அல்லது .😈 ஶ்ரீராகு பகவான் பார்த்திருந்தாலும் கிளர்யோகத்தினை அழகாய் கூறுவாய் என்றும் ,லக்கன அதிபதி சேர்ந்து நின்றால் அனுதினமும் யோகம் என்று புகழ்ந்துரைப்பாய் என மகா முனிவர் கூறுகிறார்.

புதையல் (லாட்டரி ) யோகம்


 "ஆரப்பா கரும்பாம்பு ஆறிலேற
அப்பனே செம்பாம்பு யீராரேற
சீரப்பா சிறந்த குரு கெந்திரமேற
சிவ சிவா அஷ்டலட்சுமியாள் யோகம்
கூறப்பா கெஙங்களுக்கு பெலி கொசுத்து
கெணத்திலுள்ள திரவியம் வெளியேடுத்து 
பாரப்பா பாக்கியங்கள் கண்ணால் பார்ப்பான் 
பண்பாக புலிப்பாணி பகர்ந்தேன் பாரே "

பாடல் விளக்கம்

"கரும்பாம்பு என்று சொல்லக்கூடிய ஶ்ரீராகு பகவான் லக்கனத்திற்கு ஆறாம் இடத்தில் இருக்க ,செம்பாம்பு என்று சொல்லக்கூடிய கேதுபகவான் பன்னிரெண்டாம் இடத்தில் இருக்க ஶ்ரீகுரு பகவான் கேந்திர ஸ்தானமான 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க அந்த ஜாதகருக்கு அஷ்ட லெட்சுமியாள் யோகம் ஆகும்.பூத கணங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கிணற்றில் உள்ள நீரை வெளியேடுத்து அங்கே உள்ள புதையலை பெறுவார்கள்.

புதையல் யோகம் என்பது அந்த கால கட்டங்களில் வங்கி இல்லாத சூழலில் தங்கம்,பொற்காசுகள் மற்றும் வெள்ளி நகைகள் ஆகியவற்றை திருடனுக்கு பயந்து புதைத்து வைப்பார்கள் .இவ்வாறு புதைத்து வைக்க ஐஸ்வர்யங்களை எடுக்க முடியாத சூழலில் பிறகு அதனை புதையலாக பெறுவதனை புதையல் யோகம் என்கிறோம்.

இன்றைய சூழலில் லாட்டரி,சூதாட்டம்,குதிரை ரேஸ்,சிட்பண்டுகள் இப்படி பணக்குவியல் மூலம் பெறும் யோகம் ஆகும்.

 நன்றி

வாட்ஸ் அப்
   97 151 89 647

  செல்
   740 257 08 99
     97 141 89 647

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)



அன்புடன்
   சோதிடர்ரவிச்சந்திரன்
          M.Sc,MA,BEd,
     ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My blog
AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai .blogspot. com
......................
.

No comments: