நிழற்கிரகங்களும் அதனால் மனிதவாழ்வில் உண்டாகும் மாற்றங்களும்.
கிரகங்கள்படுத்தும்பாடு -(113 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
நவகோள்களில் ஸ்ரீராகு பகவானையும் மற்றும் ஸ்ரீகேதுபகவானையும் #நிழல்கிரகங்கள் அல்லது #சாயகிரகங்கள் என அழைக்கப்படுகிது. இவ்வாறு அழைக்கப்படும் இக்கிரகங்கள் அவை சேரும் இடத்தை பொறுத்து அவனது வாழ்வில் இருள் நிறைந்ததாக அல்லது திறமை மங்கியதாக உருவாக்கிவிடுகிறது.
ஒருவனது லக்கனத்தில் ராகுபகவான் அமரும்போது அவனது திறமைகளை இருள்படிந்ததாகவே மாற்றிவிடுகிறது.மேலும் லக்கனம் மற்றும் களத்திரஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளும்போது அவனது திருமணவாழ்வில் ஒருவிதமான பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.
அதாவது
1)கால தாமத திருமணம்
2)திருமண தடை
3)மனதிற்கு பிடித்த அன்யோன்மான மனைவி அமைவதில் தடை
இப்படியாக ஏதாவது ஒரு தடையை உருவாக்கி அதன் விளைவாக அவனது மன ரீதியான ஒருவித மன அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறது.இது ஒருவிதமான #களத்திரதோஷத்தை தந்துவிடுகிறது.என்னதான் அறிவு,அழகு மற்றும் அந்தஸ்து இருப்பினும் அவனது அந்தஸ்து ஏற்ற மனைவி அமைவதில் தடையை உண்டாக்கிவிடுகிறது.
இதேபோல வாக்குஸ்தானமான இரண்டாமிடம் மற்றும் மாங்கல்யஸ்தானமான எட்டாமிடத்தில் இந்த நிழல்கிரகங்களின் தொடர்பானது கல்வியில் தடையை உருவாக்குவதோடு மற்றும் தனம் சேர்ப்பதில் கஷ்டங்களை ஏற்படுத்துகிறது.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாதவனாகவும் மற்றும் ஒருவனை சூழ்ச்சி தன்மை உடையவனாகவும் மாற்றுகிறது.
" திருமண வாழ்விலும் #மாங்கல்யதோஷத்தை உண்டாக்கிவிடுகிறது.இந்த மாங்கல்யதோஷம் என்பது ஆடவராக இருப்பின் தனது மனைவியின் ஆயுளுக்கும்,பெண்டீராக இருப்பின் தனது கணவனின் ஆயுளுக்கும் பங்கத்தை உண்டாக்கும் என்பதால் திருமணத்திற்கு முன்பே இத்தோஷ பரிகாரமாக ஆண்களுக்கு வாழை மரத்திற்கு தாலிகட்டி அதனை வெட்டிவிடச்செய்வதும்,பெண்களுக்கு தானோ அல்லது சுமங்கலி பெண்களாலோ அம்பாள் சன்னிதானத்தில் திருமண வைபவங்கள் செய்து பிறகு அம்மாங்கல்யத்தை அம்பாளுக்கு தானம் செய்துவிடும்போது தனது இணையின் ஆயுளுக்கு உருவாகப்போகும் பங்கத்தை அம்பாளின் அருளால் தடுத்துக்கொள்ளலாம்.
விதிவிலக்குகள் :-
லக்கனம் ,இரண்டாமாதிபதி ,ஏழாமிட அதிபதி மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரன் இவைகள் பலப்படுவதைப்பொறுத்தும் மற்றும் சுபர்பார்வைபட பலனில் மாறுதல்கள் உண்டு.
இதேபோல மூன்றாமிடமான சகோதரஸ்தானத்தில் நிழற்கிரகங்கள் அமரும்போது #சகோதரதோஷத்தை உண்டாக்கிவிடுகிறது.
1)உடன் பிறந்த சகோதரர்கள் இல்லாமல் செய்வது.
2)சகோதரர்கள் இருந்தாலும் அவர்களால் எவ்வித பலனுமின்றி இருப்பது.
3)ஒரே இடத்தில் சகோதரர்கள் ஒற்றுமையுடன் இருக்க வாய்ப்பில்லை.
4)சகோதரர்களால் ஏமாற்றப்படல்
5)சகோதரர்கள் வளர்ச்சி அடையாமல் இருத்தல்.
மேற்கண்ட வகையில் ஏதாவது ஒருவித பாதிப்பை உண்டாக்கி மனித வாழ்வில் மாற்றங்களை உருவாக்கிவிடுகிறது.இங்கும் மூன்றாமிட அதிபதி மற்றும் சகோதரகாரகன் செவ்வாயை பொறுத்து பாதிப்பில் மாற்றமுண்டு.
அடுத்தபடியாக பஞ்சமஸ்தானமான ஐந்தாமிடத்தில் நிழற்கிரகங்கள் அமர புத்திரதோஷத்தை உருவாக்கிவிடுகிறது.இவை கீழ்கண்ட வகையில் பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.
1)புத்திரம் உண்டாவதில் காலதாமதம்
2)பெண் குழந்தைகள் மட்டுமே பிறத்தல்
3)புத்திரர்கள் இருந்தும் அவர்களால் பெற்றோர்களுக்கு எவ்வித பலனின்றி அமைதல்.
5) பிள்ளைகளால் அவமானப்படல்
இதுபோன்ற பஞ்சமஸ்தான ராகு புத்திரதோஷத்தை உருவாக்கிவிடுகிறது.
விதிவிலக்குகள் :-
ஐந்தாமாதிபதியும் மற்றும் புத்திரகாரகன் குருபகவானும் பலப்பட மற்றும் சுபர் பார்வைபெற பலனில் பாதிப்பில்லை.
பஞ்சமஸ்தான ஐந்தாம் இடத்தில் நிழல் கிரகங்களால் உண்டாகும் தோஷம் போக்க;-
தம்பதிகள் இருவரும் இளங்காலைப்பொழுது அரசமரம் சுற்றிவந்து சுமங்கலி பெண்கள் குறைந்தபட்சம் ஐந்து பேருக்கு பூ,பொட்டு,மஞ்சள்,வஸ்திரம் மற்றும் தாலிகயிறு தானம் செய்து அவர்களிடம் ஆசி பெறல்.
ராகு மற்றும் கேது ஸ்தலங்கள் சென்று பாலாபிஷேகம் செய்தல்.அந்த ஸ்தலங்கள் வெள்ளியில் பாம்புபடம் அடித்து வைத்தல்.(திருநாகேஸ்வரம்,திருப்பாள்புரம் ,பேரையூர் மற்றும் காளஸ்தி )
மேலும் ஐந்தாமிட ராகு மற்றும் கேது பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாமலும் மற்றும் அவ்விடத்தில் சாதகரை வசிக்க முடியாமலும் செய்துவிடுகிறதுஂசிலர் பூர்வீக சொத்து பிறரால் அபகரிக்கப்பட்டு வழக்காடுமன்றங்களில் வழக்கு முடிவிற்காக பணத்தை செலவழித்து அலுத்து போவதற்கும் ,பூர்வீக சொத்துக்கள் இவன் பிறந்தபிறகு அழிந்துபோவதற்கும் மற்றும் பிறந்த ஊரைவிட்டே வேறு இடத்தில் வசிப்பதற்கும் ஐந்தாமிட ராகுபகவானும் ஒருவித காரணமாகும்.
இதேபோல நான்காமிட ராகுபகவான் மற்றும் கேதுபகவான் தன் சுகம்,தாய்சுகம்,கல்வியால் உண்டாகும் சுகம்,வாகன சுகம் மற்றும் நிம்மதியாக படுத்துறங்கும் வீடுசுகம் போன்றவற்றில் பாதிப்பை உண்டாக்குகிறார்.
ஒன்பதாமிட ராகு தான தர்ம குணமில்லாத கஞ்சனாகவும் ,சம்பாரிப்பதில் தடையையும் மற்றும் தந்தையால் உருவாகும் லாபத்தையும் தடையை உருவாக்குகிறார்..ஒன்பதாமிட கேதுபகவான் ஆன்மீக ஞானம் மிக்கவராக ஒருவரை மாற்றவல்லது.
பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்ற வகையில் பத்தாமிட ராகு கனிப்பொறி,தகவல் தொழில் நுட்ப அறிவு ,அரசு விரோத தொழில்கள்,பைனான்ஸ்,வட்டிக்கு விடுதல்,ஷேர் மார்க்கெட்,அறுவை சிகிச்சை நிபுணர் ,மாந்திரீகம்,அரசியல்,அந்நிய மொழி,அந்நிய நாடு செல்லுதல் ...போன்ற தொழில்கள் அமைய வாய்ப்புகள் உண்டு.
பத்தாமிட கேது ஒருவரை ஆன்மீகம் சார்ந்த தொழில்களில் ஒருவரை ஈடுபட வைக்கும்.கோவில் பூசாரிகள்,அருள்வாக்கு சோதிடர்,கோவில் வளாகங்களில் கடை நடத்துதல் போன்றவை ஆகும்.
பதினொறாமிட ராகு,கேது சாதகருக்கு நற்பலன்களை தருகிறது.
பன்னிரெண்டாம் இட ராகு வெளிநாட்டு வாசம்,அரசியலில் ஈடுபாடு உண்டாகும்.பன்னிரண்டாமிட கேது ஒருவரை முக்தியடைய வழிவகுக்கிறது.
இதேபோல கீழ்கண்ட கிரகங்களோடு சேரும்போது ராகு தரும் பலன்கள்;-
1)சூரியன் + ராகு அல்லது கேது
அரசு வேலை கிடைப்பதில் தடை,தந்தையால் பாதிப்பு
2)சந்திரன்+ராகு
தாயால் பாதிப்பு ,மனநிலை பாதிப்பு மற்றும் திருமண தடை
3) சந்+கேது-ஆன்மீக சிந்தனை
சந்திரன்+கேது
ஞானம் பெறுதல்
4)குரு+ராகு
புத்திரதோஷம்,,கல்வி மற்றும் பொருள் ஈட்டுவதில் தடை
5)குரு+கேது
ஞான நிலையை அடைதல்
6)புதன்+ராகு அல்லது கேது
வித்தையில் பாதிப்பு,மாமன் வர்க்கம் பாதிப்பு
7)சனி+ராகு
ஆயுள் பங்கம்,சூழ்ச்சி தன்மை மிகுதல்
8)சனி+கேது
ஞானநிலை அடைதல்
9)செவ் + ராகு அல்லது கேது
சகோதரதோஷம்,காமம் எண்ணம் மிகுதல்
10) சுக்கிரன் +ராகு அல்லது கேது
திருமண தடை,வாகன தடை மற்றும் கீழான காம எண்ணம் உண்டாக்குதல்.
மேற்கண்ட வகையில் கூறப்படும் அதற்குரிய ஸ்தானம் பலப்பட்டு சுபர் பார்வை மேற்கண்ட அமைப்பிற்கு பெற பலனில் மாறுதல் உண்டாகலாம்.
அதேநேரத்தில் நிழற்கிரகங்கள் தக்க இடங்களில் அமர்ந்து அதன் திசை நடைபெறும் காலங்களில் குப்பையில் பிறந்தவனையும் கோபுர உச்சியில் ஜொலிக்க வைக்கும்.எனவேதான் "ராகுவினைப்போல கொடுப்பாரில்லை
கேதுவினைப்போல கொடுப்பாரில்லை" என்பார்கள்.ஶ்ரீராகு பகவான் கெடுத்து கொடுப்பார் என்பார்கள்.நிழற்கிரகங்கள் தரக்கூடிய நற்பலன்கள்,ராஜயோகங்கள் மற்றும் இதன் சூட்சும உண்மைகளை அடுத்தடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
நன்றி!
...............................................
(தங்களுடைய சாதகங்களை ஆய்வு செய்து சாதகபலன் ,திருமணபொருத்தம் மற்றும் பரிகாரவிவரங்கள் மற்றும் சாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் இதுபோன்ற சேவைகளை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் மாவட்டத்துடன் மெஸ்ஸேஸ் செய்து #போன்வழியாக பலன் பெறலாம்.கட்டணம் உண்டு)
தொடர்புக்கு
செல்
97 151 89 647
740 257 08 99
#வாட்ஸ்அப் எண்
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc ,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blogspot. Google search
AstroRavichandransevvai blogspot com
AstroRavichandran. blogspot. com
.......
No comments:
Post a Comment