Sunday, 9 September 2018

திருமண பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய தோஷங்களும்,பரிகாரங்களும்.


                             
        

கிரகங்கள் படுத்தும் பாடு-( 169 )

செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

 ராகு தோஷமும்,சனி தோஷமும்

          திருமண பொருத்தம் பார்க்கும் சாதகத்திற்கு ராகு பகவான் அல்லது சனி பகவான் இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருந்தால் இவ்வித தோஷம் உருவாகுகிறது.

          இந்த தோஷத்திற்கு மற்ற சாதகத்தில் சம தோஷமிருத்தல் வேண்டும்.

          ராகு பகவான் பெண் சாதகத்தில் இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருந்தால் ஆண் சாதகத்தில் சனி பகவான் இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருக்கலாம்.

      சனி பகவான் பெண் சாதகத்தில் இரண்டு ஏழில் இருந்தால் ,ஆண் சாதகத்தில் ராகு பகவான் இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருக்கலாம்.

இத்தோஷத்திற்கான விதிவிலக்குகள்;-

   ஆண்,பெண் இருவரது சாதகத்திலும் லக்கனம்,குடும்பம்,களத்திரம் மற்றும் மாங்கல்ய ஸ்தானங்களும் (1,2,7,8)  அதன் அதிபதிகளும் பலம் உடையதாக இருக்கும் பட்சத்தில் இந்த தோஷம் பார்க்க வேண்டியது இல்லை.

ஆன்மீக பரிகாரங்கள்

  ராகு பகவான் ஸ்லோகம் சொல்லுதல்.ராகுபகவானின் புகழ் பெற்ற ஸ்தலங்களான Periyandavar - peraiyur பெரியாண்டவர் பேரையூர் ,திருநாகேஸ்வரம் ,
திருப்பாள்புரம் ,காளஹஸ்தி போன்ற ராகுஸ்தலங்கள் சென்றடைந்து ராகு கால நேரத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட நாக படத்தினை வைத்து  மனப்பூர்வமாக முழு நம்பிக்கை உடன் பூஜை மற்றும் பாலாபிஷேகம் செய்து வந்தால் தோஷம் விலகும்.

சுக்கிர தோஷம்

சுக்கிரன் களத்திரகாரகர் மனைவியை அல்லது கணவனை குறிக்கும்.  ஆணாக இருந்தால் ஏழாம் வீடு மனைவியை குறிக்கும் இடம் ஆகும். பெண்ணாக இருந்தால் ஏழாம் வீடு கணவனை குறிக்கும் இடம் ஆகும்.

 களத்திர காரகன் சுக்கிரன் பகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் இருந்தால் அவை சுக்கிர தோஷத்தை தருவதோடு "காரக பாவ நாஷ்தியை " உருவாக்கி விடுகிறது.ஏழாம் இடமானது சுக்கிரபகவானின் சொந்த வீடாக இருந்து  ஆட்சி பெற்று இருந்தாலும் தனது பலத்தினை இழந்து பலவீனமாகவும்,கெடுதி செய்யக்கூடியதாகவும் உருவாகி விடுகிறது.

 சுக்கிரன் பகவான் பெண் அல்லது ஆண் சாதகத்தில் ஏழாம் இடத்தில் இருந்தால் மற்றவரது சாதகத்தில் ஆறு,ஏழு மற்றும் எட்டாம் வீட்டில் இருக்க வேண்டும். மேலும் லக்கன அல்லது களத்திர ஸ்தானமான ஏழாம் இட அதிபதி சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்கவேண்டும் .இவ்வாறு இல்லையேல் சுக்கிர தோஷம் ஆகும்.

புத்திர தோஷம்

  திருமண பொருத்தம் பார்க்கும் தம்பதிகள் இருவரது சாதகத்திலும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திலும்,புத்திர ஸ்தானதிபதி எனப்படும் ஐந்தாமிட அதிபதி மற்றும் புத்திர காரகன் எனப்படும் குரு பகவான் ஆகியவற்றுடன் அரவுகளான ராகு,கேது ஏதோ ஒரு விதத்தில் (பார்வை,சேர்க்கை மற்றும் நட்சத்திர சாரம் ) தொடர்பு கொண்டிருந்தால் அவை " புத்திர தோஷத்தை "உருவாக்கும்.

 இந்த தோஷமானது புத்திர ஸ்தானாதிபதி அல்லது குருபகவான் பலப்பட புத்திர தோஷம் தவிர்க்கப்படலாம்.இவைகளும் பலம் இழந்து சுபர் பார்வையின்றி நின்றால் கடுமையான புத்திர தோஷம் ஆகும்.

 ஏனைய தோஷங்களுக்கு தோஷத்திற்கு தோஷம் விதிவிலக்குகள் என்றாலும் புத்திர தோஷம் உள்ளவர்களுக்கு புத்திர தோஷம் உள்ள ஜோடியினை பொருத்தம் போடக்கூடாது.

தம்பதிகள் இருவரில் யாரோ ஒருவருக்கு தோஷம் இருக்கும் பட்சத்தில் புத்திர தோஷம் இல்லாதவரது யோகத்தில் புத்திர பாக்கியம் உருவாகிவிடும்.

 பொதுவாக புத்திர தோஷம் என்பது கீழ்கண்ட மூன்று வகைகளில் அமையலாம்.
அவையாவன

1) புத்திரமே உருவாகாத நிலை

2) பெண் குழந்தைகள் மட்டும் 
          பிறக்கும் நிலை

3) புத்திரர்களால் பயன் அடைய        இயலாத நிலை

 சாதகத்தில் உள்ள கிரக வலிமைகளுக்கு ஏற்ற வகையில் மேற்கண்ட மூன்று வகைகளில் ஏதாவது ஒரு நிலையில் பாதிப்பினை உருவாக்குகிறது.

புத்திர தோஷம் நீங்க ஒரு சில பரிகார வழிபாடுகள்.

  நமது கிராம புறங்களில் ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு  
" சட்டியில் இருந்தால்தான் ஆப்பையில்  வரும் "என்பார்கள்.
ஆனால்  உண்மையான அர்த்தமுடைய பழமொழி  நாளடைவில் மறுவி விட்டது.

இதன் உண்மையான சொல்லோடை என்ன தெரியுமா ?

 " சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் குழந்தை வரும் "
என்பதே உண்மையான பழமொழியின் அர்த்தம் ஆகும்.

எனவே ஷஷ்டி திதியில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அருளாசியை பெற விரதம் மேற்கொள்ள குழந்தை பாக்கியம் உருவாகும்.

பஞ்சம ஸ்தானம் மற்றும் குருபகவான் உடன் அரவுகள் தொடர்பு கொண்ட அமைப்பினை பெற்றவர்கள் ராகு பகவான் ஸ்தலம் சென்று ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபட தோஷம் விலகும்.

மேலும் தம்பதிகள் இருவரும் காலையில் குளித்துவிட்டு அரசமரம் சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு பூ, பொட்டு,மஞ்சள் மற்றும் வஷ்திரம் போன்றவை தானம் செய்து அவர்களிடம் ஆசிர்வாதம் பெற தோஷம் விலகும்.

நன்றி நன்றி நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம், ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

                                      
                                 
   தொடர்புக்கு

 அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
 M.Sc ,MA ,BEd,
 சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My Email
masterastroravi@gmail. com

My website
AstroRavichandransevvai.blogspot.com

AstroRavichandran. blogspot. com

--------------------------------------------------------------------

No comments: