Tuesday, 18 September 2018

சோதிடன் என்பவன் யார் ? மற்றும் பஞ்சமஹாயோகங்கள் பற்றிய ஓர் ஆய்வு நிலை ?

   சோதிடன் என்பவன் யார் ? 

        மற்றும்

    பஞ்சமஹாயோகங்கள் பற்றிய ஆய்வு நிலை -( 2 ) 


                                             

             கிரகங்கள்படுத்தும்பாடு -( 113 )

               ஸ்ரீபத்ரகாளியம்மன்துனை!

        அன்பார்ந்த சோதிடம் பார்க்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்

        .கிரகங்கள் அனைத்தும் பணிரெணடு ராசிக்கட்டத்தில் எவ்விடத்தில் அமர்ந்தால் என்னவிதமான பலனை தரும் என்பதை #கிரகங்கள்படுத்தும்பாடு  எனும் தலைப்பில் தொடர்ந்து  விளகக்கி வருகிறேன்.

      சிலர் என்னிடம் போன் வழியாக தொடர்பு கொள்ளும்போது உதாரணமாக எனது சாதகத்தில் குரு உச்சம் மற்றும் புதன் ஆட்சி .ஆதலால் புதன் திசை  வந்து அள்ளி கொடுக்கும் என்றார்கள்.ஆனால் அதுமாதிரி எனக்கு நடைபெறவில்லை.அந்த திசை காலத்தில்தான் கஷ்டம் அதிகமாக நடக்கிறது ? என கூறியவரது சாதகத்தை வாங்கி பார்த்தபோது அவனது சாதகத்தில் பின்வருமாறு நான் விளக்கும் விதிவிலக்குகள் இருப்பதால்தான் அத்திசை சரியாக நடைபெறவில்லை.

                    இதை சரியாக விளக்கி கூறுபவர்தான் சோதிடர் ஆவார். .ஒருவர் சிறந்த சோதிடர் ஆவது என்பது சாதரன விஷயமல்ல. அதற்கு அவரது சாதகத்தில் பிராப்தம் வேண்டும்.அதற்கு நிறைய விஷயங்களை மனப்பாடம் செய்யும் மனன திறன் இருக்கவேண்டும்.கணித அறிவு வேண்டும்,கோள்களை ஆராய்ச்சி செய்யும் அறிவியல் ஞானம் வேண்டும்,சாதகரின் மனநிலைக்கு தகுந்தமாறி பலனுரைக்கும் உளவியல் அறிவுவேண்டும்,வேதவிசாரனையறிவு வேண்டும்..

           கடவுளின் ஆசியும் மற்றும் அருளும் பெறும் அணுக்கிரகம் வேண்டும்எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குருவின் கீழ்படிந்து அவர் சூட்சும விஷயங்களை அவராக கற்று தரும் வரை காத்திருக்கும்  பொறுமையுணர்வு வேண்டும்.மேலும் சோதிடம் கற்ற்றுக்கொள்ளும்போது பலவிதமான இன்னலகளை தந்து இறைவன் பரிசோதித்து பார்ப்பார் அதனை தாங்கி கொண்டு விடாமல் அடியெடுத்து வைக்கும் மன உறுதிவேண்டும்.

"கற்றது கை மண்ணளவு.கல்லாதது உலகளவு "என்ற வகையில் சமுத்திரம் போன்ற சோதிட நூல்களை படிக்கவேண்டும்.பலமணிநேரம் செலவழித்து முகநூல் பதிவுகள் மற்றும் சோதிடநூல்களில் எழுதி மக்களின் ஆதரவை பெறவேண்டும்.லொளகீக எண்ணங்களிலிருந்து விலகி ஆன்மீக வழிபாடு செய்யவேண்டும்.அவ்வாறு செய்து பரம்பொருளின் அருளால் சூட்சும உண்மைகளை அறிந்தாகவேண்டும்.

           இவ்வளவு படிகளை தாண்டிதான் ஒரு சோதிடர் சாதகபலன் கூறி பலன் ஈட்ட முடியும்.எனவே"  ஒரு சோதிடர் என்பவர் கிரகங்களை வித்தை காட்டியோ அல்லது பயமுறுத்தி பரிகாரம் கூறி பணம் ஈட்டுபவர் அல்ல. ஒருவர் சோதிடர் ஆவதும் மற்றும் அவரால் பலன் கூறி பணம் ஈட்டுவதும்  விதிப்பலனே ஆகும் .

சோதிடரின் பணி


           வருமுன் காக்கும் மற்றும் அறிவுறுத்தும் வழிகாட்டியாகவும் ,மன ரீதியாக பக்குவப்படுத்தும் (counsiling) உளவியல் நிபுணராகவும் ,நோய்களை  மருத்துவர் கண்டறிந்து  கூறுவதற்கு முன்பே உடலையே தொட்டு பார்க்காமல் கண்டறியும் மருத்துவராகவும் செயல்படக்கூடியவர்.

         எனவே சோதிடர் கிரகங்களை கொண்டு வித்தை காட்டி பிழைப்பவர் அல்ல. இது ஒரு விஞ்ஞானம்.இக்கலை சங்க காலம் முதற்கொண்டு பயிலப்படுகிறது.இன்னும் சொல்லப்போனால் கணிதத்தின் பிறப்பிடமே சோதிடவியல் ஆகும்.

           குருகுலகல்வியல் சோதிடம் ,மருத்துவம் மற்றும் யுத்தமுறை முதலிய பாடங்கள் கற்பிக்கப்பட்டது.மன்னர் அவையிலும் ராஜசோதிடர்கள் இடம்பெற்றார்கள்.அவர்கள் மன்னர் யுத்தம் செய்ய உகந்த காலங்களை கணித்து கொடுத்தனர்.தற்பொழுதும் பல்கலைகழகங்களில் சோதிடவியல் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

        ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கே உரித்தான சோதிடம் இணைய வளர்ச்சியால் எல்லா தட்டு மக்களிடமும் சோதிட ஞானம் சென்றுவிட்டது.

 சென்ற வார பஞ்சமஹாயோகம் பதிவின் தொடர்ச்சியை பார்ப்போம்.


              குரு,புதன்,சுக்கிரன்,செவ்வாய் மற்றும் சனி ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சம் மற்றும் ஆட்சி பெறும்போது இவ்வித யோகங்களை தரும் என்பது அடிப்படையான விதி ஆகும்.இந்த பஞ்சமஹாயோகங்களானது வேறு சில காரணங்களால் எனது அனுபவத்திலும் மற்றும் எனது குருமார்களின்படியும் யோகங்களில் சில குறைவு ஏற்படுகிறது என்பதை மட்டுமே பகிர்கிறேன்.மற்றபடி அடிப்படை விதிகளை மாற்றும உரிமை எனககு கிடையாது.

   ரிஷபலக்கனம்


           இந்த லக்கனத்திற்கு #பத்ரயோகம் தரும் #புதன்பகவான் ஆனவர் இரண்டு மற்றும் ஐந்தாமிட அதிபதியாகவும் ,லக்கனயோகரகவும் மற்றும் லக்கனாதிபதி சுக்கிரனுக்கு நட்பாகவும் இருப்பதால் இவ்விரு இடங்களில் ஆட்சி மற்றும் உச்சம் பெறும் புதன் பகவான் அதன் திசைகாலங்களில் பத்ரயோகத்தை குறைவின்றி வழங்குவார்.

              இதன் பலனாக அதன் காரகபலனான எழுத்து,இசை,கணிதம் ,சோதிடம் போன்ற பலன்களை சிறப்பாகவும் மற்றும் அதன் ஸ்தான பலனான தனம் ,கல்வி,வாக்கு,நேத்திரம்,பூர்வபுண்ணிய மற்றும் புத்திரயோகங்களையும் இதுபோன்ற பலன்களை சிறப்பாக வழங்குவார்.
மேலும் இவ்வித பலன்களை சிறப்பாக தர புதன்பகவான் பாவியின் தொடர்பின்றி இருக்கவேண்டும்.பாவியோடு சேர்ந்த புதன் பாவியாகிவிடுவார் .

              மாளவீகயோகம்


                ரிஷப லக்கனத்திற்கு #சுக்கிரபகவான் லக்கனாதிபதியாக மட்டுமில்லாமல் ருணரோக அதிபதியான ஆறாமிட அதிபதியாகவும் வருவதால் சுக்கிரன்  ஆட்சியாகவோ அல்லது உச்சமடைந்தாலோ மாளவீகயோகத்தை தந்தாலும் அதன் ஆறாமிட ஆதிபத்தியம் இறுதியில் யோகபலனை ரிஷபலக்கனத்திற்கு பங்கபடுத்திவிடும்.

                 ருசகயோகம்


             ரிஷப லக்கனத்திற்கு ஏழு மற்றும் பணிரெண்டுக்குடைய #செவ்வாய் பகவான் உச்சம் மற்றும் ஆட்சி பெற்று ருசக யோகத்தை தந்தாலும் சாதகரை ஆணவகாரனாக மாற்றிவிடுகிறது.அதிலும் ஏழாமிடத்தில் ஆட்சி பெறுதல் திருமணவாழ்வில் சில கஷ்டங்களை உண்டாக்கும்.சனிபகவான் வீட்டில் செவ்வாய் உச்சம் பெறுதல் சாதகரை கோபக்காரணாகவும் ,விட்டுக்கொடுக்கும் தன்மையற்றவனாகவும் மற்றும் கர்வமிக்கவனாகவும் மாற்றுகிறது.அதேநேரத்தில் சாதகரை பூமியோகம் மற்றும் விவசாயயோகமுடையவனாகவும் மாற்றுகிறது.

            ஹம்சகயோகம்


             ரிஷபலக்கனத்திற்கு #குருபகவான்  ஒரு ஸ்தானம் லாபஸ்தானமாக இருந்தாலும் மற்றுமொரு ஸ்தானமானது அஷ்டமஸ்தானமாக வருவதால் இங்கு குருபகவான் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலு பெறாமல் இருத்தல் நலம்.

             சசகயோகம்


          #சனிபகவான் முழுபாவராக இருப்பதால் பாவிகள் நேர்வலுபெறக்கூடாது எனும் அடிப்படையில் சனிபகவான் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலுபெறாமல் இருத்தல் நலம்.துலா லக்கனத்திற்கு முழுயோகத்தை தரும் சனிபகவானும் ஆட்சி பெறாமலே இருத்தல் நலம்.

குறிப்பு;

           பாவ கிரகங்களோ அல்லது ஆறு மற்றும் எட்டு போன்ற மறைவுஸ்தான அதிபதிகளோ    உச்சம் ,ஆட்சி போன்ற நேர்வலுகூடாது எனும்போது அவை மறைமுக வலுபெறலாம் .உதாரணமாக மிதுன லக்கனத்திற்கு ஆறாமிடத்தில் செவ்வாய் ஆட்சிபெறுவதைவிட ஆறுக்கு ஆறாமிடமான மறைவுஸ்தானத்தில் ஆட்சி பெறுவது மறைமுக வலுப்பெறுதல் ஆகும்.எனவே பதினொன்றாமிடத்தில் ஆட்சி பெறுவது நல்லது.

       மிதுனம்


            இவை #உபயலக்கனமாக இருப்பதால் #ஹம்சயோகத்தை தரும் #குருபகவானும் மற்றும் #பத்ரயோகத்தை தரும் #புதன்பகவானும் கேந்திரஸ்தானங்களில் உச்சம் மற்றும் ஆட்சி பெறும்போது #கேந்திராதிபத்தியதோஷத்தை தரும் என்பதால் புதன்பகவான் உச்சம் மற்றும் ஆட்சி பெறுவதும் மற்றும் குருபகவான் ஆட்சி பெறுவதும் நல்லதல்ல.மேலும் மிதுனலக்கனத்திற்கு ஏழாம் அதிபதியானது #பாதகாதிபதி மற்றும் #மாரகாதிபதியாவதால் குருபகவானும் உச்சம் மற்றும் ஆட்சி பெறுவது நல்லதல்ல.

              ருசகயோகம்


               மிதுன லக்கனத்திற்கு ருசகயோகம் தரக்கூடிய #செவ்வாய்பகவான் ரூனரோக ஸ்தானமான  ஆறாமிடத்தில் ஆட்சி பெறுவதைவிட பதினொன்றாமிடத்தில் ஆட்சி பெறுவது நல்லதல்ல.மற்றுபடி சனிபகவான் வீடான மகரத்தில் உச்சம் பெறுவதும்கூட சிறப்பல்ல.

             மாளவீகயோகம்


            மிதுனலக்கனத்திற்கு ஐந்து மற்றும் பணிரெண்டு இட அதிபதியான #சுக்கிரபகவான் உச்சம் மற்றும் ஆட்சி பெறுவதால் மாளவுகயோகம் சிறப்பாக வேலை செய்யும்.

            சசகயோகம்


            முதலில் கூறியதுபோல #பாவ கிரகமான #சனிபகவான் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலுபெறாமல் இருத்தல் நலம்.மறைவாக வலு பெறுதல் நல்லது ஆகும்.

-----------------------------
(தங்களது சாதகங்களை ஆய்வு செய்து நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் #போன்வழியாகவே தங்கள் குடும்ப உறுப்பினந்களுக்கு #சாதகபலன் ,#திருமணப்பொருத்தம் மற்றும் #சாதகம் கணித்து எழுதுதல் போன்ற சேவைகளை பெறலாம்.கட்டணம் உண்டு.

#பிறந்தேதி ,#நேரம் மற்றும் #இடம் போன்ற தகவல்களை எனது #வாட்ஸ்அப்பிற்கு மெஸ்ஸேஸ் செய்யவும்)

#தொடர்புக்கு

 செல்

97 151 89 647
740 257 08 99

#வாட்ஸ்அப்
97 151 89 647
                         

அன்புடன்
AstroRavichandran
M.SC,MA,BEd,
Om sakthi Astro online consulting centre,
Astro Researcher & PG Teacher in Chemistry,
Karambakkudi,Pudukkottai District.

Email
 Masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandran. blogspot.. com
AstroRavichandransevvai.blogspot. com

No comments: