Monday, 5 February 2018

சாதக அடிப்படையில் அடிக்கடி தன்னை குழப்பிக்கொண்டு கஷ்டப்படுபவர் யார் ?

சாதக அடிப்படையில் அடிக்கடி தன்னை குழப்பி கொண்டு கஷ்டப்படுபவர் யார் ?


                                        

       கிரகங்கள் படுத்தும் பாடு--( 191 )

செவ்வாய்பட்டிஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !

           "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் " என்பார்கள்.மனமே மனிதனை வழி நடத்தும் மந்திரக்கோல் ஆவார்.ஆகவேதான் "மனசே நம்மை திறக்கும் மந்திர சாவி எனலாம்.

          ஒரு மனிதனுக்குள் புதைந்திருக்கும் அற்புத புதையலை வெளிக்கொண்டு வரும் அற்புத சக்தி மனமே ஆகும்.எனவேதான் பெரியோர்கள்                   " மனமிருந்தால் மார்க்கம் உண்டு" என்றார்கள்.மார்க்கம் என்பது வழி ஆகும்.

          மனதிதில் இருந்து உதிக்கும் எண்ணங்கள் ஒருவரது வாழ்வினை  வழிநடத்தி செல்கிறது.மனதின் குழந்தையே எண்ணங்கள் ஆகும்.ஒருவர் தனியாக இருந்தாலும் பலவித எண்ணங்கள் அவனது மனதில் தோன்றி அலக்கழிக்கிறது.மனமானது சில நேரங்களில் துள்ளி குதிக்கிறது.சில நேரங்களில் எவ்வித காரணம் இன்றி கவலை கொள்கிறது.

         மனமானது தன்னிடம் உள்ள நிறைகளைவிட குறைகளை எண்ணியே கவலை கொள்கிறது.

      மனமானது எப்பொழுதும் இறந்த காலத்தில் நடந்த கஷட,நஷடங்களையும்,அவமானம்,
தோல்விகளை எண்ணி வருத்தம் கொள்கிறது அல்லது எதிர்கால திட்டங்களை எண்ணி கவலை கொள்கிறது.மனமானது நிகழ்காலத்தில் நிற்பதற்க்கு மாறாக அது ஊசலாடிக்கொண்டிருக்கிறது.


                         

      ஒரு நேரத்தில் மனமானது தன்னை ஒரு வெற்றி வீரனாக எண்ணி மகிழ்கிறது.பல நேரங்களில் தனது குறைகளை தோல்வி அடைபவனாக எண்ணி கவலை கொள்கிறது.

     மனதில் தோன்றும் எண்ணங்கள் ஒன்றுக்கு ஒன்று  தொடர்பு இன்றி சிலந்தி வலை போல பிண்ணிக்கொள்கிறது.இந்த எண்ணங்களில் (thought ) இரு வகை உண்டு.

அவையாவன
1) நேர்மறை எண்ணங்கள்
  ( Positive Thoughts.)

2) எதிர்மறை எண்ணங்கள்
      (Negative thoughts )

          நேர்மறை எண்ணங்கள் நேர்மறையான வாழ்வினை தரும்.(positive thoughts give us positive life ).

      ஒருவரது சாதகத்தில் ஒருவரது மனநிலையினை அறிந்துகொள்ள அவரது சாதகத்தில் மனநிலைக்காரகன் சந்திர பகவானை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.சந்திரபகவான் இயற்கை சுபரா ? இயற்கை பாவரா ? என எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதனை முதலில் விளக்குகிறேன்.

                          

        வளர்பிறை சந்திரன் இயற்கை சுபராக செயல்படுகிறார்.ஆத்மாகாரகன் சூரிய பகவானும் ,மனநிலைக்காரகன் சந்திரபகவானும் ( 0 to 30 degree) ஒரே ராசியில் இருக்கின்ற காலத்தினை அமாவாசை காலமாகும்.இந்த அமாவாசை காலத்திலிருந்து அதாவது சூரியனுக்கு ஏழாம் இடத்தில் சந்திரன் 180 பாகை வித்தியாசத்தில் வரும்போது பொளர்ணமி ஆகும்.இந்த அமாவாசையிலிருந்து பொளர்ணமி காலத்தில் பிறப்பவர்கள் வளர்பிறை சந்திரனை பெற்றிருப்பார்கள்.

       வளர்பிறை சந்திரனில் பிறந்தவர்கள் இயற்கை சுபராக இருப்பதால் சாதகரது சாதக கட்டத்தில் சந்திரபகவான் பலம்பெற்று நிற்கும்போது  நல்ல மனநிலை மிக்கவர்களாக திகழ்வார்கள்.திடமான முடிவு எடுப்பவர்களாகவும் ,அடிக்கடி ஏதாவது ஒன்றை எண்ணி தன்னை குழப்பிக்கொள்ளாமாலும் திகழ்வர்.

        இதேபோல பொளர்ணமிலிருந்து அமாவாசை வரை பிறப்பவர்கள் தேய்பிறை சந்திரன் ஆவார்.இவை இயற்கை பாவராக செயல்படுகிறது.

            தேய்பிறை சந்திரனை பெற்றவர்கள் அவரது மனநிலையில் ஒருவித பாதிப்பு மிக்கவர்களாக திகழ்வர்.திடமான முடிவு எடுக்க தயங்குபவர்களாக இருப்பர்.

        ஒருவரது மனநிலையினை கணிக்க அவரது கட்டத்தில் உள்ள சந்திரபகவான் வளர்பிறை சந்தினா ? தேய்பிறை சந்திரனா ? என கண்டறிந்து அவரது மனநிலையினை கணிக்கலாம் 
என்றாலும் சாதக கட்டத்தில் அதன் ஸ்தான வலு மற்றும் சந்திரனை பார்க்கின்ற அல்லது இணைகின்ற மற்றும் சந்திரபகவான் வாங்கிய நட்சத்திர சாரம் இவைகளை கொண்டே துல்லியமாக ஒருவரது மனநிலையினை கணிக்க இயலும்.

                          

        பொதுவாக ஒருவரது சாதக கட்டத்தில் சந்திரபகவான் உச்சம்,ஆட்சி,மூலதிரிகோணம் மற்றும் நட்பு நிலையில் இருந்து பாவரான சனி,ராகு சேர்க்கையோ,பார்வையோ அல்லது அதன் நட்சத்திர சாரமோ அற்று வளர்பிறை சந்திரனை தனது சாதக கட்டத்தில் பெற்றிருப்பவர்கள் உறுதியான மனநிலையை பெற்று புத்திகூர்மையாக முடிவினை எடுத்து தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற்று சாதனையாளர்கள் ஆக திகழ்வார்கள்.இதுபோன்ற அமைப்பினை பெற்றவர்கள் எதிலும் நேர்மறை எண்ணங்கள் உடையவராக திகழ்வர்.

     மாறாக சந்திரபகவான் நீசம்,பகை பெற்றோ அல்லது ஆறு,எட்டு போன்ற மறைவிடங்களில் நின்றிருந்தாலோ அல்லது சந்திரன் உடன் பாவிகளான சனி,ராகு சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலோ அல்லது சந்திரன் பாவிகளான சனி,ராகு சாரம் பெற்றிருந்தாலோ சாதகர் ஆனவர் திடமான முடிவு எடுக்க முடியாமல் அடிக்கடி தன்னை குழப்பிக்கொண்டு தன்னம்பிக்கை அற்றவராக திகழ்வர்.மேற்கண்ட ஏதாவது ஒரு அமைப்பினை பெற்று தேய்பிறை சந்திரனை பெற்றவர்கள் எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்களை கொண்டவராக திகழ்வார்.

         சந்திரபகவான் பலமிழந்த அமைப்பை பெற்றவர்கள் திங்களூர் சென்று சந்திரபகவானை வழிபட்டு வரவும்.பொளர்ணமி காலங்களில் சிவ ஆலயங்களில் கிரிவலம் வநது உமையவளை ஒரு பாகமாக கொண்டவனை வழிபாடு செய்யவும்.
மனநிலையினை ஒருமுகப்படுத்தக்கூடிய தியானம்,யோக பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

நன்றி நன்றி நன்றி

(தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் பொன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

  வாட்ஸ்அப்
  97 151 89 647

   செல்
  740 257 08 99
     97 151 89 647
    
                       

  அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
தறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: