சாதக அடிப்படையில் நல்ல உறவும்,நட்பும் அமைவது எப்படி ?
கிரகங்கள் படுத்தும் பாடு -(43)
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
நாம் அன்றாட வாழ்வில் வேலை பார்க்கும் இடத்திலும் ,படித்த நண்பர்களுடனும்,முதலாளிகளுடனும் ..இப்படியாக பல நபர்களுடன் பழக வேண்டியிருக்கும்.பழகும் அனைத்து நபர்களிடமும் ஒருவித ஈர்ப்பு நிலை வந்துவிடுவதில்லை.
சிலநேரங்களில் வேறுவழியில்லாமல் பணி நிமித்தம் காரணமாக அவர்களை பிடிக்காவிட்டாலும் அவர்களிடம் மனரீதியாக ஒட்டாமல் வேலை பார்க்கவேண்டியிருக்கும்.
ஒரு சிலரிடம் எவ்வளவுதான் அன்பாக பழகி நல்லது செய்தாலும் அவர்கள் நம்மிடம் உள்ள பொறாமை காரணமாக நம்மிடம் நேரடியாக சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் நமக்கு எதிராகவே செயல்படுவார்கள்.
பலரிடம் பல ஆண்டு பழகியும் மனதை கவராதவராகவே இருப்பர்.ஒரு சிலரை பார்த்த மற்றும் பழகிய சில மணி நேரங்களில் நம் உள்ளத்தை கவர்ந்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டு கடைசிவரை இணைபிரியாத நண்பர்களாக இருப்பதை பார்க்கிறோம்.
ஏன் இவ்வாறு ஏற்படுகிறது ?/ எனில் "கோள்கள் நடத்தும் கோளாட்டமே" காரணம் ஆகும்.ஒவ்வொறு கிரகத்திற்கும் ஒரு அதிர்வெண் உண்டு.
ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.அந்த அலைவரிசையை கண்டறிநது புரோகிராம் செய்து ஆக்டிவேட் செய்ய ரிமோட் வழியாக ஒரு எண்ணிற்கு ஒரு சேனல் என்ற வகையில் நாம் பலவித தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடிகிறது.
அதேபோல நமது லக்கனம் மற்றும் ராசியின் அதிபதிகளுக்கு ஏற்ப நாம் ஒருவித அதிர்வெண்களை பெற்றுவிடுகிறோம்.இவை இயல்பு அதிர்வுகள் ஆகும்.இந்த இரண்டு இயல்பு அதிர்வுகளை முடுக்கி ஆக்டிவேட் செய்யும் பணியை நமது மூளையானது ஒரு ரிமோட் போல செயல்பட்டு நட்பு கிரகங்களை அதிபதியாக பெற்ற இருவர் சந்திக்கும்போது ஒத்ததிர்வு ஏற்பட்டு அவர்களுக்குள் நட்பும்,காதலும் பலப்படுகிறது.ஒனறுக்கு ஒன்று ஜென்ம பகை பெற்ற கிரகங்களை பெற்றவர்கள் சந்திக்கும்போது என்னதான் ஒட்டியே இருந்தாலும் ஒத்ததிர்வு ஏற்பட வாய்ப்பில்லை.
சில நேரங்களில் முகத்திற்கு முகம் சந்திக்காமல் முகநூல் நட்பு தாம் கொண்ட கருத்தின் அடிப்படையில் நட்பு ஏற்படுவதற்கும் ,பகைமை ,பொறாமை,
வயதிலும் ,அனுபவத்திலும் சிறியவனாக இருந்தாலும் நல்ல கருத்துக்கள் பகிர்ந்தாலும் அதை வெளிபடையாக பாராட்டும் தன்மை ஏற்படாமை உண்டாகுவதற்கும் அவர்களது லக்கனம் மற்றும் ராசியோடு தொடர்பு உண்டாகியிருக்கும் அனைத்து கிரக கதிர்வீச்சே காரணம் ஆகும்."காரணமின்றி காரியமில்லை".இந்த காரணத்தையும்,காரியத்தையும் ஜெனனகால கிரகங்கள் வழியாக திருவிளையாடல் புரிபவன் இறைவன்.
வயதிலும் ,அனுபவத்திலும் சிறியவனாக இருந்தாலும் நல்ல கருத்துக்கள் பகிர்ந்தாலும் அதை வெளிபடையாக பாராட்டும் தன்மை ஏற்படாமை உண்டாகுவதற்கும் அவர்களது லக்கனம் மற்றும் ராசியோடு தொடர்பு உண்டாகியிருக்கும் அனைத்து கிரக கதிர்வீச்சே காரணம் ஆகும்."காரணமின்றி காரியமில்லை".இந்த காரணத்தையும்,காரியத்தையும் ஜெனனகால கிரகங்கள் வழியாக திருவிளையாடல் புரிபவன் இறைவன்.
பார்த்தால் பசு போல இருந்துகொண்டு படுபாதாள விஷயங்களை செய்வதற்கும்,
பார்க்க ரொளடிபோல இருந்தாலும் நன்மைகள் பல செய்ய வைப்பதும் கிரக கதிரின் தாக்கமே.
பார்க்க ரொளடிபோல இருந்தாலும் நன்மைகள் பல செய்ய வைப்பதும் கிரக கதிரின் தாக்கமே.
உதாரணமாக மீனம் மற்றும் மேஷ ராசி இருவரையும் எடுத்துக்கொண்டு இவர்கள் இருவரும் நண்பர்களாகவோ அல்லது முதலாளி,தொழிலாளியாகவோ அல்லது தம்பதிகளாகவோ இருந்தாலும் அவர்களிடம் ஒருவித ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
காரணம் மீனத்தின் அதிபதி குரு பகவான் தனது ராசிக்கு பெருந்தான்மை,எளிமை,
விட்டுகொடுக்கும் தன்மை,ஞானம்.......இதுபோன்றவற்றை சாதகருக்கு வழங்கியிருக்கும்.
விட்டுகொடுக்கும் தன்மை,ஞானம்.......இதுபோன்றவற்றை சாதகருக்கு வழங்கியிருக்கும்.
இதேபோல மேஷத்தின் அதிபதி செவ்வாய் பகவான் இதற்கு நேர்மாறாக ஆடம்பரம்,வீம்பு,விட்டுக்கொடுக்காத தன்மை மற்றும் போர்க்குணம்......இதுபோன்ற தன்மைகளை வழங்கியிருக்கும்.
எனவே இவர்களிடம் நட்போ அல்லது உறவோ ஏற்படவாய்ப்பில்லை.மீறி ஊழ்வினைப்பயனால் ஏற்பட்டாலும் உறவு இனிக்காது.
இதேபோல "சிம்மம் ராசி மற்றும் கும்ப ராசி இவர்கள் இடையே ஏற்படும் எவ்வித தொடர்பும் அன்பாக இருப்பதில்லை.
காரணம் சூரிய பகவானும் அவரது மைந்தனான சனிபகவானும் பகை பெற்றுவிடுவதால் ஆகும்.
சாதக கட்டத்தில் கூட சனியும்,சூரியனும் சமசப்தமாகவோ அல்லது சேர்க்கை போன்ற தொடர்பு ஏற்படும்போது தந்தை மற்றும் மகன் உறவு அன்போடும்,ஆதரவாகவும் அமைவதில்லை.
என்ன செய்வது விதிப்பயனை நாம் ஏற்று அனுபவித்துதான் ஆகவேண்டும்.
எனவே நல்ல உறவும்,நட்பும் அமைவதும் கிரகங்கள் படுத்தும் பாடு ஆகும்."பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் "எனும் கருத்துப்படி நல்ல சோதிடரை நாடி தனது கிரகங்களின் பாடறிந்து வாழ்க்கை துணையையோ அல்லது தொழில் பங்குதாரர்களையோ அமைத்துக்கொண்டு மகிழ்சியாக வாழுங்கள்.
நன்றி,நன்றி,நன்றி
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி சோதிட நிலையம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி சோதிட நிலையம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandransevvai.blogspot.com
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandransevvai.blogspot.com
No comments:
Post a Comment