கிரகங்கள் படுத்தும் பாடு -(44)
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
மனித நலனில் கிரகங்களின் பங்கு என்ன என்பதை எல்லோருக்கும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் பரம்பொருள் எனக்கருளிய ஞானத்தின் துணைகொண்டு தொடர்ந்து எழுதிவருகிறேன்.
ஒரு மனிதனுக்கு கேது பகவான் லக்கனம் ,இரண்டாமிடம் மற்றும் ஐந்தாமிடங்களில் கேது பகவான் இருந்து குருவின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தாலோ அல்லது சந்திரனுடன் கேது பகவான் சேர்ந்திருந்தாலோ அல்லது சனிபகவான் மீது குருவின் பார்வை விழுந்தாலோ அவர்கள் ஆன்மீகவாதிகளாக இருப்பர்.இவர்களுக்கு முன்னுணர்வு இருக்கும்.ஆனால் அதேநேரத்தில் லொளகீக வாழ்வில் சிறக்க மாட்டார்கள்.
வாக்கினில் குரு பகவான் பெற்றவர்கள் வாக்கு வன்மை மிக்கவர்களாக இருப்பர்.அதேநேரத்தில் தனகாரகன் குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்வது "காரக பாவ நாஸ்தியை "உண்டுபண்ணி தனம் மற்றும் குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.அதிலும் குரு பகவான் எந்த ஸ்தானத்திலும் தனித்து இல்லாமல் இருத்தல் நலம்."அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசமாகும"என்ற வகையில் குருபகவான் இயற்கை சுபராக இருந்தாலும் இருக்கும் இடத்திற்கு நல்லது செய்யாது.பார்க்கும் இடத்திற்குதான் நல்லது செய்யும்.
"குரு பார்த்தால் கோடி நன்மை ".சாதக கட்டத்தில் உள்ள சகல தோஷங்களையும் நீக்கும் வல்லமை குரு பகவானுக்கு உண்டு."பானு கண்ட பனிபோல -குரு பகவான் பார்வை பட்டவர்கள் எல்லா தோஷங்களும் விலகி ஒரு மனிதனுக்கு பணம்,பட்டம்,பதவி,வேலைவாய்ப்பு,புத்திரபாக்கியம் மற்றும் கல்வி போன்ற அனைத்தையும் வாரி வழங்குவார்.
இதேபோல குரு பகவான் ஐந்தில் இருப்பின் உயர்கல்வி,ஞானம் மற்றும் ஆன்மீக நாட்டம் இவற்றை வழங்கினாலும் குரு பகவான் புத்திரகாரகன் ஆதலால் ஐந்தில் உள்ள குரு பகவான் காரக பாவ நாஸ்தியை வழங்கி குழந்தை பாக்கியத்தை தடை செய்வார்.
சனி பகவான் இயற்கை பாவி எனினும் அவர் இருக்கும் இடத்திற்கு அதிகம் கெடுதல் செய்ய மாட்டார்.பார்க்கும் இடத்தை ஆட்டி படைப்பார்.ஒருவருக்கு மெய்ஞானத்தை வழங்குவதில் சனி பகவானின் பங்கு அலாதியானது.
ஒரு மனிதனுக்கு கோசாரா ரீதியாக சனி பகவான் சந்திரனுக்கு பணிரெண்டு,ராசி மற்றும் இரண்டாம் இடத்திற்கு வரும்போது ஒரு ராசிக்கு இரண்டரை வருடம் மொத்தம் ஏழரை வருடமும் விரய சனி,ஜென்ம சனி மற்றும் பாத சனி என்ற அடிப்படையிலும்,நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனி,ஏழாமிடத்தில் கண்ட சனி மற்றும் எட்டாமிடத்தில் அஷ்டம சனி எனும் அடிப்படையில் வந்து சாதகருக்கு பலவிதமான இன்னல்களை தந்து உறவுகள் என்றால் என்ன ? யார் உண்மையான நண்பர்கள் மற்றும் பல்வேறு மனிதர்களின் குணதிசயங்கள் போன்றவற்றை அறிய வைப்பதோடு வாழ்வு பற்றிய தெளிவான அனுபவத்தை வழங்கி அவனை தெளிவான ஞானமுள்ளவனாக சோதனைகள் மூலமாக அறிய வைக்கிறது.
.எனவே ஞானத்தை அனுபவ அடிப்படையில் மனித குலத்திற்கு அறிய வைப்பதில் சனி பகவான் நவகிரகங்களில் முக்கியமானவர் ஆவார்.எனவேதான் சனியை நாம் சனீஸ்வர பகவான் என அழைக்கிறோம்.
ஆதலால் குரு பகவான் ஆனது நமக்கு கல்வியையும்,அறிவையும் தந்து அதன் மூலம் வாழ்வின் அம்சங்களை அறியவைக்கிறார்.ஆனால் சனி பகவான் வாழ்வில் சொல்ல முடியாத வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல கஷ்டங்களை தந்து அறியவைத்து வாழ்வில் ஞானத்தை புகட்டுவதில் நன்று.
குருபகவான் ஆனவர் யோக மற்றும் ஞான நிலையை வழங்குவதில் வல்லவர்.இவர் தான் பெற்ற மற்றும் கற்ற ஞானத்தால் தம்மை வழிநடத்தி செல்கிறார்.இது ஒருவிதமான மேம்பட்ட நிலை ஆகும்.இவை எல்லோறுக்கும் வாய்ப்பதில்லை.அவ்வாறு குருவருள் பெற்றவர்கள் பாக்கியசாலிகளே.
குருவருள் பெற்றவர்கள் நீதியின் வழியில் வழிநடத்தி செல்வார்கள்.இவர்கள் வேத,தததுவ மற்றும் சாஸ்த்திர உண்மைகளை குருவழியாக கற்று அதன்மூலம் ஞானம் பெற்று சிறந்த தத்துவவாதிகளாக ,ஆன்மீகவாதிகளாக மற்றும் போதகராக திகழ்வர்.இவர்கள் லொளகீக வாழ்வில் தாமரை இலையில் தண்ணீர்போல பற்றற்ற வாழ்வினை அதாவது ஞான வாழ்வினை மேற்கொள்வார்கள்.
ஆனால் சனிபகவான் ஆனவர் "கர்மக்காரகன் " மற்றும் கர்மயோகி ஆவார்.இவர் தனது அன்றாட லொளகீக வாழ்வில் அடிபட்டு அதன்மூலம் வாழ்வின் தத்துவார்த்தமான உண்மைகளை அறிந்துகொள்ள செய்வார்..இவர் சாதரண மனிதனையும் இவர் தரும் பலவிதமான இன்னல்கள்கள் மூலமாக ஒருவரை வாழ்வின் உண்மைநிலையை அறிய வைப்பர்.
இவர் லொளகீக வாழ்வில் அதிக ஆசைபெற்று அதன் வழியாக செல்வம் ஈட்டி உறவுகளோடு வாழ்ந்துகொண்டே வாழ்வின் அர்த்தத்தை உணர்வார்கள்.இவர்கள் தான் பெற்ற அனுபவத்தாலே ஞானமடைந்தவர்கள்.உயர்ந்த கல்வியறிவோ அல்லது கேள்வியறிவோ பெற்றிருக்க மாட்டார்கள்.சாதரனமாக வாழ்ந்துகொண்டு வாழ்வின் உண்மைநிலையை அனுபவத்தின் மூலம் பெறுவர்.
நன்றி.தொடர்ந்து அடுத்த பதிவில் சந்திப்போம்.
(தங்களது குடும்ப உறுப்பினர்களின் சாதக பலன் ,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் எழுதி கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே பெறலாம்.கட்டணம் உண்டு.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆராயாசியாளர்.
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி.
செல் ; 97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப் : 97 151 89 647
My Email
masterastroravi@gmail.com
My Website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
*@@@@@@@@@@@@@@@@@@@@*
,
No comments:
Post a Comment