Friday, 9 February 2018

உங்களது சாதகத்தில் புதன் செய்யும் அதிகாரம் என்ன ?

உங்களது சாதகத்தில் புதன் செய்யும் அதிகாரம் என்ன ?

                           

       கிரகங்கள் படுத்தும் பாடு - (38 )


ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளாசியுடன்

        கிரகங்கள் மனித வாழ்வில் மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் அதற்கான காரணங்களையும் அறிவியல் வழியில் நின்று ஆராய்து அதற்கு விடைகாணும் தொடர்பதிவு.
இப்பதிவில் கணிதவல்லோன் என அழைக்கப்படும் புதன் பகவானை பற்றி யான் அறிந்த தகவல்களை இப்பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

            "கற்றது கை மண்ணளவு
                  கல்லாதது உலகளவு "
         ஒரு மனிதன் சாதகத்தில் புதன் பகவான் பலப்பட்டிருந்தாலே போதும் அவன் எப்படியாவது தான் கற்ற கல்வியாலும் அல்லது பெற்ற வித்தையாலும் பிழைத்துக்கொள்வான்.
கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில் கூறியிருப்பார்.

              "ஒருவன் கணிதத்தில் சிறந்த விளங்கினாலே போதும் அவன் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவான்." -என்பார்.

                              
                 எனவே "ஒருவரது சாதகத்தில் புதன் பலம் பெற்றிருந்தால் அவன் கணிதத்தில் சிறந்து விளங்குவான்.சிக்கலான கணிதங்களையும்,பிரச்சினைகளையும் தீர்வு காண்பதில் வல்லவனாக்கிவிடும்.
சில மறைபொருளான சூட்சுமங்களை அறியும் திறன் பெற்றிருப்பதால் ஒருவனை சிறந்த ஞானமுள்ள சோதிடராக மாற்றுவதில் புதன் பகவானுக்கு பெரும் பங்கு உண்டு.

              புதன் பகவான பலம் பெற்று வாக்கு ஸ்தான தொடர்பு பெற்று உச்சம் ,ஆட்சி ,திரிகோணம் போன்ற பலம்பெறும் போது புகழ்பெற்ற சோதிடராக்கிவிடும்.

            ஒரு உயிரியின் அடிப்படை அலகு செல் ஆகும்.இந்த செல்லின் உட்கருவில் உள்ள "ஜீன்கள்"தான் மரபு பண்புகளுக்கு காரணம்.இந்த ஜீன்கள் தாயின் அண்ட செல்லும்,தந்தையின் விந்து செல் இரண்டாம் அவர்கள் மேற்கொள்ளும் கலவியின் மூலம் இணைந்து கருவுறுதல் நடைபெறுகிறது.இந்த கருவுற்ற முட்டைக்கு "சைகோட்"என்று பெயர்.

           இந்த சைகோட்டில் ஜீன்களின் மூலம் ஒருவரின் உடல்வாகு, புத்திசாலித்தனம் ,படைப்பாற்றல் மற்றும் நுண்ணறிவு போன்றவை பொதிக்கப்பட்டுள்ளது.இந்த ஜீன்கள் எனப்படும் மரபு பொருளை ஆளுமை செய்வதில் புதன் பகவானுக்கு பெரும் பங்கு உண்டு.

                          


           தலைசிறந்த ஆடிட்டர்,புள்ளியல் வல்லுணர்கள்,வங்கி ஊழியர்கள்,கணிதப்போராசிரியர்கள்,அறிவியல் விஞ்ஞானிகள்,சோதிடர்கள் போன்றவர்களை தொழில் ஸ்தானத்தில் பலம்பெற்ற புதன் பகவான் உருவாக்குகிறார்.

          ஒருவர் எழுத்து துறையில் சிறந்து விளங்கவும்,புகழ்பெற்ற எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அளிப்பதில் புதன் பகவானின் பங்கு அளப்பறியது.இப்புதன் பகவானை சந்திரன் பார்க்க ஒருவரை வேடிக்கையாகவும்,சாதுர்யமாகவும் பேசவும்,எழுதவும் செய்கிறது.

        புதன் பகவான் ஒருவரை புகழ் பெற்ற பாடல் ஆசிரியராக மாற்றுகிறது.புதன் பகவான் செவ்வாய்,ராகு சாரம் வாங்க காமம் ததும்பும் பாடல்களை எழுத செய்துவிடுகிறது.குரு ,கேது சாரம் வாங்க பக்தி பாடல்களை எழுதவைக்கிறது.

         ஒருவர் நுண்ணிய விஷயங்களை படிக்காமலே ஒருவர் செய்வதை ஒரு முறை பார்த்தவுடனே எளிதில் கற்றுக்கொள்ளும் படிக்காத மேதையாக்குவதிலும் புதன் பகவானின் பங்கு பாராட்டக்கூடியது.

           ஆம் ஒருவர் படிக்காமலே தொலைக்காட்சி,வானொலி,ரெப்ரிஜிரேட்டர்,அலைபேசி  எலக்ட்ரீசியன்...போன்றவற்றை கற்றுக்கொண்டு அத்தொழில் புகழடைய புதன் பகவானே காரணமாதலால் இதனை வித்தைக்கு அதிபதி எனவும் அழைக்கப்படுகிறது.

                           


           புதன் பகவான் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களில் ஒன்று.இக்கோள் சூரியன் இருக்கும் ராசிக்கு ஒரு ராசி முன்பின் இருக்கும்.இவை சூரியனுடன் சேர்ந்து அஸ்தம் பெறாத நிலையில் "புத ஆதித்ய யோகம்"எனும் சரஸ்வதியோகத்தை தருகிறது.இவை  இரண்டும் சேர்ந்து எட்டு,நான்கு மற்றும் ஒன்றில் இணைத அரசாளும் யோகத்தை அளிக்கிறது.

            ஒருவருடைய மாமன் வர்க்கத்தினரை பற்றி அறிய  புதன் பகவான் அவசியமாகும்.

           ஒருவருடைய நரம்பு சம்பந்தமாக அறிந்து கொள்ளவும் புதன் பகவான் அவசியம்.

            புதன் பகவானை நீசம்,அஸ்தமனம் ,மறைவு மற்றும் பகையாக பெற்றவர்கள் புத்திசாலித்தனம்,நுண்ணறிவு மற்றும் படைப்பாற்றல் தன்மை குறைந்து சோம்பேறிதனமிக்கவராக்கி
விடுகிறது.

இதுபோன்ற புதன் பகவானை பலவீனமாக பெற்றவர்கள் தினம்தோறும் புதன் சுலோக் சொல்லுதல்,விஷ்ணு வழிபாடு மற்றும் சரஸ்வதி வழிபாடு செய்தல் நலம்.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                        


அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.sc,MA,BEd.
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆராய்சியாளர்,
ஓம் சக்தி சோதிட நிலையம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

         வாட்ஸ்அப்
  97 151 89 647

செல் : 97 151 89 647
செல் : 740 257 08 99.

email; masterastroravi@gmail.com

My blogspot
 AstroRavichandransevvai.blogspot.com

No comments: