திருமண யோகம் தள்ளிக்கொண்டே போகிறதா ? என்ன பரிகாரம்.
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 192 )
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
ஒரு சிலருக்கு அழகு, அறிவு மற்றும் அந்தஸ்து எல்லாம் நிரம்ப பெற்றிருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே போகிறதே என வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மன வேதனையில் இருக்கும் பெற்றோர்களுக்கு பயன்படும் வகையினில் அடிப்படை சோதிட அறிவு இல்லாதவர்கள் கூட பயன்படும் வகையில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.
ஒரு சாதகருக்கு திருமணம் தொடர்பான ஆராய்ச்சிக்கு சோதிடர்கள் ஆராய்ந்து பார்க்கின்ற இடம் சாதகத்தில் லக்கனம் எனும் ஒன்றாம் இடம்,குடும்ப ஸ்தானம் என அழைக்கப்படும் இரண்டாமிடம் ,களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடம் ஆகிய இடங்களை ஆராய்ந்து அறியப்படவேண்டும்.
இவ்வாறு ஆராய்ந்து பார்க்கின்றபொழுது விதி எனப்படும் லக்கனம் இவற்றினை முதலாக கொண்டு ஆராய்ந்து பார்க்கப்படவேண்டும்.விதி கெட்டால் மதி என அழைக்கப்படும் சந்திரனை லக்கனமாக கொண்டு 1,2,7,8 போன்ற இடங்களை ஆராய்ந்து பார்க்கப்படவேண்டும். இவ்விரு வகையிலும் 1,2,7,8 ஆம் இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற பட்சத்தில் கதி என அழைக்கப்படும் சூரியனை லக்கனமாக கொண்டு ஆராய்ந்து பார்க்கப்படவேண்டும் என்பார்கள்.ஆனால் திருமண அடிப்படையிலான ஆராய்ச்சிக்கு ஒரு விதிவிலக்கு என்னவெனில் களத்திர காரகர் என அழைக்கப்படும் சுக்கிரன் இருக்கும் இடத்தினை லக்கனமாக கொண்டு 1,2,7,8 ஆம் இடங்களை ஆராய்ந்து அறியப்படவேண்டும்.
இம்மூவகையான ஆராய்சியிலும் ஒரு சாதகர் பாதிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு குறைவு.ஒரு சில விதிவிலக்காக குறைவான சதவீதத்தினர் இம்மூன்று வகையிலும் பாதிக்கப்பட்டு இருப்பர்.இதுபோன்ற அமைப்பு சாதகத்தில் இருப்பின் அது அவருக்கு திருமணயோகம் அற்றவராக திகழ்வர்
இம்மூவகையான ஆராய்ச்சியில் ஏதேனும் ஒரு கோண ஆராய்ச்சியில் பாதிக்கப்படாமல் இருப்பின் உரிய சோதிட பரிகாரம் செய்து திருமணம் செய்து கொள்ளலாம்.
திருமணயோகத்தினை பாதிக்கப்படக்கூடிய அம்சங்களும் அதற்குரிய பரிகாரமுறைகளும் :-
1) லக்கனம், ராசி மற்றும் களத்திரகாரகர் சுக்கிரன் இம்மூன்று ஸ்தானங்களுடன் அரவுகளான ராகு அல்லது சேர்க்கை கொள்ளும்போது களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் கேது அல்லது ராகு இடம்பெறும் என்பதால் அது களத்திரம் அமைவதில் தடையை தரக்கூடிய களத்திர தோஷத்தினை தருகிறது.
மேற்கண்ட வகையில் "களத்திர தோஷத்தினை " பெற்றவர்கள் லக்கனாதிபதியும்,களத்திர ஸ்தானாதிபதியும் பலம்பெற்ற நிலையிலோ அல்லது சுபகோளின் பார்வை களத்திர ஸ்தானத்தில் விழுவதன் மூலம் அதிக பாதிப்பினை தராது என்ற வகையில் பயப்பட தேவையில்லை.
மாறாக லக்கனம் மற்றும் களத்திரஸ்தானம் இவ்விரண்டும் பலமிழந்த சூழலில் ராகு,கேது சேர்க்கை கடுமையான களத்திர தோஷம் ஆகும். திருமணம் அமைவதில் தடையினை உண்டாக்கும்.இதுபோன்ற அமைப்பினை பெற்றவர்கள் கட்டாயம் உகந்த பரிகார வழிபாட்டினை செய்வதன் மூலம் திருமண தடையை தவிர்க்கலாம்.
2) இதேபோல லக்கனம், ராசி மற்றும் சுக்கிரன் இருக்கும் இடம் ஆகிய மூன்று வகையிலும் இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இடம்பெற்றவர்களுக்கு மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது அல்லது ராகு இடம்பெறுவதால் குடும்பத்தில் வீண் வம்பு ,வழக்குகள்,குடும்பதோஷம் மற்றும் மங்கல்ய தோஷத்தினை உண்டு பண்ணுகிறது .
இதற்கு குடும்பாதிபதி எனப்படும் இரண்டாம் இட அதிபதி,மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இட அதிபதி பலமிழக்காமல் இருந்தாலோ அல்லது இவ்விரு ஸ்தானங்களை சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலோ இவ்வித மாங்கல்ய தோஷம் கண்டு பயப்பட தேவையில்லை.
மாறாக 2,8 ஸ்தான அதிபதிகளும் பலம் இழந்த சூழலில் ஆன்மீக பரிகாரங்கள் மூலமாகதான் விடுபட இயலும்.இந்த ஜோதிட பரிகாரா பூஜைகள் முழு நம்பிக்கை உடன் செய்யும் பட்சத்தில்தான் முழுப்பலனை பெற முடியும்.
மேற்கண்ட வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போவதை காணலாம்.திருமண தடை விலக செய்யவேண்டிய பரிகாரங்களை தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.
1) திருக்கண்டியூர் கோவில் ;-
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு - Thiruvaiyaru வட்டத்தில் கண்டீயூர் உள்ளது. இது தஞ்சாவூரிலிருந்து 9 கி.மீ திருவையாறுலிருந்து 3 கி.மீ ஆகும். அங்கு சென்று அங்கு அமைந்து அருள்ளபாலிக்கும் பிரம்மாவினை வழிபடுவதன் மூலம் திருமண தடை விலகும்.
2) திருச்சி அருகே சுமார் 12 கி.மீ தொலைவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியில் திருப்பைஞ்ஞீலி சென்று அங்கு உள்ள ஸ்ரீ லிவனேஸ்வர்-விசாலாட்சி அம்பாளை தெய்வ வழிபாடு செய்ய திருமண தடை அகன்று திருமணம் நடைபெறும்.
3) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென் கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மீ தொலைவில் திருநாகேஸ்வரம் எனும்
ராகு ஸ்தலம் உள்ளது அங்கு இடம்பெற்றிருக்கும் நாகநாத சுவாமியை ராகு காலத்தில் வழிபட திருமண தடை விலகும்.
ராகு ஸ்தலம் உள்ளது அங்கு இடம்பெற்றிருக்கும் நாகநாத சுவாமியை ராகு காலத்தில் வழிபட திருமண தடை விலகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் வட்டத்தில் உள்ள பேரையூரில் இருந்து அருள்பாலிக்கும் நாகநாத சுவாமி மற்றும் Chennai சென்னை அருகில் உள்ள காளஹஸ்தி போன்ற ராகு ஸ்தலங்களுக்கு சனிக்கிழமை காலை 9--10.30 ராகு காலத்தில் வெள்ளியால் அடித்து செய்யப்பட்ட நாகபடம் செய்து வைத்து பூஜை செய்து பாலாபிஷேக அபிஷேகம் செய்யவும்.
ராகு காலத்தில் சனிக்கிழமை 9-10.30 மணியளவில் பதினொரு வாரம் துர்கை அம்மன் கோவில் சென்று வழிபட்டு பதினொறாவது வாரத்தில் மஞ்சள், பூ, தாலிகயிறு ,வெற்றிலைபாக்கு ,
பழவகைகள் ,முழுத்தேங்காய் போன்றவற்றைஸ்ரீ துர்கை அம்பாள் முன் வைத்து சர்க்கரை பொங்கல் இட்டு வழிபாடு செய்து இயன்ற அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்ய அம்மன் அருளால் திருமண தடை விலகும்.
பழவகைகள் ,முழுத்தேங்காய் போன்றவற்றைஸ்ரீ துர்கை அம்பாள் முன் வைத்து சர்க்கரை பொங்கல் இட்டு வழிபாடு செய்து இயன்ற அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்ய அம்மன் அருளால் திருமண தடை விலகும்.
இதேபோல பஞ்சமி திதி ராகு காலத்தில் புற்றுள்ள ஶ்ரீ அம்மன் ஆலயம் சென்று புற்றுக்கு பால் ஊற்றி வைத்து அம்மன் முன்பாக தமது நட்சத்திரம் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து விட்டு வெளியில் வரும்போது விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபட்டு உளுந்த வடை சாத்த திருமண தடை விலகும்.
பைரவர் வழிபாடு
ஞாயிறு கிழமை ராகு காலமான மாலை 4.30 -6.00 மணி அளவில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய சர்வதோஷ நிவாரணம் உண்டாகும்.மேலும் வெள்ளியால் செய்யப்பட்ட கம்பியில் உளுந்தவடை கோர்த்து பைரவருக்கு அணிவிக்கலாம்.
திருவாதிரை வழிபாடு
ஒவ்வொரு மாதமும வரக்கூடிய் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவன்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் கலந்துகொண்டு பூஜை செய்து வர தோஷம் அகலும்.இதேபோல திருவாதிரை நட்சத்திரம் அன்று சென்னையில் உள்ள ஸ்ரீ பெரும்புதூர் ராமானுஜர் கோவில் சென்ற வழிபடலாம்.திருச்சி சீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் வழிபாடு செய்யலாம்.
குரு வார விரதம்
வியாழக்கிழமை வரும் ராகு காலத்தில் பகல் மணி 1.30-3.00 மணி அளவில் துர்கை அம்மனுக்கு சந்தனகாப்பு செய்து மஞ்சள் நிற புடவை சாற்றி அர்ச்சனை செய்து சர்க்கரை பொங்கல் இட்டு வர கடுமையான தோஷம் விலகும்.திருமண தடை நீங்கும்,சகல சுபிட்ஷங்களும் உண்டாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக திருமண தடை அகல கரூர் அருகில் உள்ள தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ராம கோவில் சென்று வெள்ளிக்கிழமை தினத்தில் நெய் தீபம் இட்டு,துளசி மாலை சாத்தி இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்திலும் கலந்துகொள்ள திருமண தடை அகலும்.
நன்றி,நன்றி,நன்றி
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
வாட்ஸ்அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
97 151 89 647
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc ,MA ,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
M.Sc ,MA ,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot click here
AstroRavichandransevvai.blogspot.com
........................................................................
No comments:
Post a Comment