Tuesday, 20 February 2018

சாதகத்தில் நடக்கும் திசையானது நல்லது செய்யுமா ? கெடுதல் செய்யுமா ?

சாதகத்தில் நடக்கும் 

திசையானது நல்லது 

செய்யுமா ? கெடுதல் செய்யுமா ?


                         

கிரகங்கள்  படுத்தும் பாடு -(42 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

        மனிதனுக்கு ஒரு திசையானது நல்லது செய்யுமா ? அல்லது கெடுததல் செய்யுமா ? என்பதை லக்கனம் மற்றும் ராசி இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

         லக்கனம் மற்றும் ராசியை வெவ்வேறாக கொண்டவர்களுக்கு லக்கனத்திற்கு கெட்ட ஸ்தானம் வாங்கிய ஒரு கிரகம் ராசிக்கு சுபராக வந்தால் லக்கனத்தின் அடிப்படையில் வரும் கெடுதல் பலனை ,ராசிப்படி வரும் சுபர் ஸ்தானம் குறைக்க வாய்ப்பு ஏற்படும்.

         உதாரணமாக துலாம் லக்கம்,விருட்சக ராசியை ஒருவர் பெற்றிருப்பாராயின் லக்கனப்படி மூன்று மற்றும் ஆறாம் ஸ்தானம் வாங்கிய குரு பகவான் திசை நடக்கிறது எனில் அவர் ருண ரோகம்  மற்றும் கடன் தொல்லைகளை தர வேண்டிய ஸ்தானதிபதியாக குரு இருந்தாலும் ராசிக்கு குரு பகவான் தனம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதோடு ராசிக்கு யோகராகவும் இருப்பதால் லக்கனப்படி தரவேண்டிய தொல்லைகள் குறைந்துபோகும் வாய்ப்பு உண்டாகும்.

         அதேநேரத்தில் லக்கனமும்,ராசியும் ஒன்றாக இருந்தால் இரண்டிற்கும் ஒரே ஸ்தானமாக ஆகிவிடுவதால் நல்லது என்றால் மிகுதியான நன்மை கிடைக்கும் அதே நேரத்தில் தீயது என்றாலும்  மிகுதியாகவே தீங்கு நடக்கும்.

            உதாரணமாக மீன லக்கனம் மற்றும் மீன ராசியை எடுத்துக்கொண்டால் இரண்டிற்கும் சூரிய திசை ஆறாம் அதிபதி திசையாக வருவதால் அதன் திசை காலத்தில்  தொல்லைகள் அதிகம் நடக்க வைப்பு உண்டு.

                            

          ஆதலால் பொதுவாக லக்கனமும் மற்றும் ராசியும் வெவ்வேறாக இருப்பது நல்லது.

        இதேபோல உபய ராசியைவிட சர மற்றும் ஸ்திர ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஒரு ஸ்தானம் கேந்திரமாக இருந்தாலும் மற்றொரு ஸ்தானமும் கேந்திரமாக இருக்க வாய்ப்பில்லை.அதாவது அவை மறைவு ஸ்தனமாகவோ அல்லது திரிகோணமாக இருக்க வாய்ப்புண்டு.எனவே  கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட வாய்ப்பில்லை.

        அதே பாதகாதிபதியாக வந்தாலும் அவை இரண்டு ஸ்தான ஆதிபத்தியம் பெறுவதால் ஒரு ஸ்தானம் பாதகாதி ஆதிபத்தியம் பெற்றாலும் மற்றொரு ஸ்தான பலனால் நன்மை நடக்க வாய்ப்புண்டு.

        உதாரணமாக மேஷ ராசிக்கு இவை சர ராசியாக இருப்பதால் பதினொன்றாம் அதிபதி பாதகாதிபதி சனி பகவான் ஆவார்.அதேநேரத்தில் சனிபகவான் பத்தாம் அதிபதியாகவும் வருவதால் இவை பாதகம் செய்தாலும் பத்தாம் ஆதிபத்திய நன்மையையும் செய்யும்.

                                

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc, MA, BEd.
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்.
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆராய்ச்சி மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

                   செல் 

             97 151 89 647
              740 257 08 99

வாட்ஸ்அப் எண்

  97 151 89 647

(தங்களது சாதகங்களை ஆய்வுநோக்கில் பார்த்து பலன்பெற தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு .தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை தெரிந்து கொள்ளவும்.நன்றி )

No comments: