திருமணம் கால தாமதம் ஆக காரணம் என்ன?
திருமணம் கால தாமதம் ஆக காரணம் என்ன ?
செவ்வாய்பட்டி பநீ பத்ரகாளியம்மன் துணை !
கிரகங்கள் படுத்தும் பாடு !
என்னிடம் சாதகம் பார்க்க வரும் ஒரு சிலரது சாதகங்களை பார்க்கும்போது அவர் பெரும்பாலும் முப்பத்தைந்து வயதிற்கு மேம்பட்டவராக இருப்பார் இருப்பினும் அவரது கிரகநிலை அடிப்படையில் அச்சாதகருக்கு நிச்சயம் திருமணம் நடந்திருக்காது என உறுதியாக சொல்லும் அளவிற்கு சாதகத்தில் கிரக நிலைகள் அமைக்கப்பட்டிருப்பதை எண்ணி பார்க்கும்போதுதான் இந்த சோதிட துறையில் மேற்கொண்டு இன்னும் ஆராய்ந்து அறியப்பட வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது.
ஒருவருக்கு திருமணம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட எண்ணும் சோதிடர்கள் கவனிக்கப்பட வேண்டிய ஸ்தான நிலைகள் நான்கும் மற்றும் கிரகங்கள் இரண்டினையும் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
முதலில் ஸ்தான நிலையில் எந்த ஸ்தானங்களை ஆய்ந்து அறிய வேண்டும் என்பதனை ஆரம்ப நிலை சோதிட. அனுபவம் உள்ளவர்கள் கூட புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.
சாதக கட்டத்தில் லக்கனம் என்பது மிக முக்கிய ஸ்தானம் ஆகும். சாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய தலைவனாக இந்த லக்கனமும் அதன் அதிபதியும் செயல்படுகிறார்.எனவே லக்கனாதிபதி கட்டாயம் நேர்வலு பெற வேண்டியது அவசியம் ஆகும்.
மேலும் லக்கனத்திற்கு ஏழாம் இடம் என்பது சாதகருக்கான இல்வாழ்க்கை துணைக்கான இடம் ஆகும்.எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் இட பார்வை உண்டு என்ற வகையில் லக்கனத்தில் சனி,செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவகிரகங்கள் இடம் பெறக்கூடாது.
இவ்வாறு லக்கனத்தில் அமரும் பாவ கிரகம் ஏழாம் இடத்தினை பார்வை செய்யும் என்ற வகையில் இக்கிரக அமைப்புகளும் காலதாமத திருமணத்தினை உருவாக்கிவிடுகிறது.
இவை மட்டுமல்லாமல் லக்கன அதிபதியும் பலம் இழந்து நிறக கூடாது.ஒரு கிரகம் பலம் இழந்து நிற்பது என்றால் என்ன ? என கவனித்து பார்த்தால் ஒரு கிரகம் மறைவிடங்களில் நின்றாலோ அல்லது நீசம்,வக்கிரம்,மற்றும் பகை பெற்று நின்றிருந்தாலோ அக்கிரகம் பலம் இழந்து நிற்கின்றது எனலாம்.
லக்கனத்தில் ராகு இருக்க அதன் ஏழாம் இடத்தில் கேது பகவான் இருக்க அது களத்திர தோஷத்தினை தந்து திருமண தடையை தரும் என உறுதிபடுத்தி கொள்ள ஏதுவாக அமைகிறது.இதனை உறுதிபடுத்தி கொள்ள இரண்டு,ஏழு மற்றும் எட்டாம் இட மற்றும் அதன் அதிபதிகளையும் ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்யப்படவேண்டும்.
அடுத்தபடியாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தினை ஆராய்ந்து அறியப்பட வேண்டும்..இரண்டாம் இடம் என்பது குடும்ப ஸ்தானம் மட்டுமல்லாமல் தனம்,வாக்கு மற்றும் நேத்திரம் ஆகியவற்றினை குறிக்கும் ஸ்தானமும் ஆகும்.
ஆதலால் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சனி,செவ்வாய் ,,இராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் இடம்பெற்று அந்த இட அதிபதிகள் பலவீனப்பட கால தாமத திருமணத்தினை சாதகருக்கு கொடுக்கும் எனவும் முடிவு செய்யப்பட வேண்டும்.
இரண்டாம் இடத்தில் ராகு,கேது இடம் பெறுவது மாங்கல்ய தோஷத்தினை உண்டுபண்ணுகிறது.இவ்வித அமைப்பும் கால தாமத திருமணத்தினை உண்டு பண்ணுகிறது..
மேலும் இரண்டாம் இடம் என்பது தனது வாழ்க்கை துணைக்கான மாங்கல்ய ஸ்தானமாகவும் அமைவதால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தலும் நலம்.அவ்வாறு இருப்பின் அந்த திசை நடைபெறும் காலகட்டங்களில் கணவன்,மனைவிக்கு இடையே மனசஞ்சலங்கள் உருவாக வாய்ப்பு உண்டு.பொதுவாக இரண்டாம் இடத்தில் எவ்வித கிரகங்களும் இடம் பெறாமல் இருத்தலே உத்தமம் ஆகும்.
ஏழாம் இடம் என்பது கணவன்,மனைவிக்கு இடையேயான உறவுநிலையினையும்,தனது வாழ்க்கை துணைவரது தன்மையினையும் எடை போடும் இடம் ஆகும்.
எனவே ஏழாம் இடத்தில் மறைவிட ஸ்தானமான ஆறு,எட்டாம் இட அதிபதிகள் இடம்பெறுவதோ அல்லது ஏழாம் அதிபதி நீசம்,மறைவிட ஸ்தானம் ஏறல் ஆகியவை அடையாமல் இருத்தல் நல்லது.
ஒருவரது சாதகத்தில் ஏழாம் அதிபதி பலம் இழந்து , லாப அதிபதி பலமடைந்த அமைப்பினை உடையவர் மறுதார யோகத்தினை உண்டாக்கிவிடுகிறது.
"ஏழாம் இடம் சுத்தம் எனில் எல்லோருக்கும் நல்லவள் " எனும் சோதிட சொல்லோடைப்படி ஏழாம் இடத்தில் கிரகங்கள் இடம்பெறாமல் இருத்தல் நல்லது.
பொதுவாகவே ஏழாம் இடத்தில் சனி,செவ்வாய்,ராகு இணைந்து நிற்பின் சாதகருக்கு திருமண வாழ்வு நிலைக்காது.
ஏழாம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இடம் பெற்றிருப்பது "காரக பாவ நாஸ்தியை 'உருவாக்கிவிடுகிறது.
ஏழாம் இடத்தில் தனித்த சனி அல்லது சுக்கிரன் நிற்பது சாதகருக்கு தார தோஷத்தினை உருவாக்கிவிடுகிறது.
ஏழாம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் சேர்க்கையும்,சுக்கிரன், செவ்வாய் சேர்க்கைகளும் திருமண வாழ்விற்கு உகந்த அமைப்பு நிலை அல்ல. எட்டாம் இடம் என்பது கணவன் அல்லது மனைவிகான ஆயுள் ஸ்தானம் என்பதால் எட்டாம் இடத்திலும் பாவிகள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது.
எட்டாம் அதிபதி பலமிழந்த அமைப்பினை பெற்று தசாவித விவாக பொருத்த்தில் ரஜ்ஜூ பொருக்தம் இல்லை எனில் தம்பதிகள் இருவரையும் இணை சேர்க்க கூடாது.
இவ்வாறு ஸ்தான அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்த பிறகு களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் காமகாரகன் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களுடன் சனி,செவ்வாய், ராகு,சனி சேர்க்கையானது உள்ளதா என கவனிக்கப்பட வேண்டிம். இவ்வாறான அமைப்பினை உடையவர்களுக்கு கால தாமத திருமணத்தினை சாதகருக்கு வழங்குகிறது.
மேற்கண்ட ஆய்வுகளை விதி எனப்படும் லக்கனப்படியும்,மதி என்றழைக்கப்படும் ராசிப்படியும் இருவேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதில் ஏதாவது ஒரு கோணத்தில் கெடாத சூழலில் இளமை திருமணத்தினை தந்துவிடுவதுண்டு.இருவித கோணநிலைகளிலும் கெட்ட நிலையில் கட்டாயம் கால தாமத திருமணத்தினை தந்தவிடுகிறது.
விதி,மதி எனும் இருநிலைகளிலும் பலவீனப்பட்டவர் சுக்கிரன் பகவானை லக்கனமாக கொண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
நன்றி
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் எழுதி கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஜ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
வாட்ஜ் அப் 97 151 89 647
செல் 740 257 08 99 97 151 89 647
அன்புடன் சோதிடர்ரவிச்சந்திரன் M.Sc,MA,BEd, சோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My email masterastroravi@gmail.com
My blogspot AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai blogspot. com
.................................................
No comments:
Post a Comment