Sunday, 26 July 2020

திருமண வாழ்வில் சுக்கிரன் பகவானின் பங்கு

திருமண வாழ்வில் சுக்கிரன் பகவானின் பங்கு.

                         
             

                       செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

   உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள  மிக முக்கியமாக கருதப்படும் நவகோள்களில் சுக்கிர பகவானுக்கு முன்னுரிமை உண்டு .அதனால் தான் சுக்கிர பகவானை களத்திரகாரகன் என்று அழைக்கப்படுகிறார்.

  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் இடம்பெறும் ஸ்தானத்தையும் , ஸ்தான பலத்தையும் , பார்வை, சேர்க்கை மற்றும் நட்சத்திர சார பலம் ஆகியவற்றை பொறுத்து திருமண நிலையை அறிந்து கொள்ள உதவுகிறது.

     சுக்கிரன் பகவான் ஒருவரது இல்லற வாழ்வையும் அதனால் கிடைக்கும் இல்லற சுகத்தையும்  அறிந்து கொள்ள வைக்கிறது.

    ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று கேந்திர, கோணங்களில் பலம் பெற்று இயற்கை சுப கிரகங்களால் அல்லது வளர்பிறை சந்திரனால் பார்க்கப்படும் அமைப்பை பெற்றவர்கள் நல்ல வாழ்க்கை துணை இளம் வயதிலேயே அமையக் கூடிய யோகம் உண்டு.

                                                                 


  திருமண விஷயங்களில் ஏமாற்றங்களை சந்தித்து அல்லல்படும் நிலை.கீழ்கண்ட காரணங்களால் அமைகிறது.

  ‌ 1) ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் எந்த வீட்டில் நிற்கிறதோ அந்த வீட்டின் அதிபதி ஜெனன லக்னத்திற்கு மறைவு ஸ்தானமான ஆறு, எட்டு மற்றும் பன்னிரண்டில் நிற்பதும்  இதனுடன் ராகு மற்றும் கேது பகவான் சேர்ந்தல்.

   2) சுக்கிரன் நின்ற வீட்டதிபதி நீசம், அஸ்தமனம்  மற்றும் வக்கிரம் பெற்ற நிலை.

  3) சுக்கிரன் நின்ற ராசிக்கு மறைவிட ஸ்தானமான 6, 8 ,12 க்குரிய கிரகம் லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் அமையப் பெற்ற நிலை.

  இல்லற வாழ்வில் இன்ப சுகத்தை அனுபவிக்க கூடிய யோகம் சுக்கிரன் பகவானை பொறுத்து அமைகிறது.

    சுக்கிரன் பகவான்
நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் மறைவிடங்களுக்கு செல்லும் அமைப்பு பெற்றவர்கள் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க  தகுதியற்ற நிலை அல்லது தாம்பத்திய சுகத்தை தர மறுக்கும் மனைவி அமையக் கூடிய நிலை உருவாகும்.

   சுக்கிரன் பகவான் மனைக்கும், மனையாளுக்கும் காரகர் ஆவார்.

  சுக்கிரபகவான் வளர்பிறைச் சந்திரன் மற்றும் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படும் அமைப்பு பெற்றவர்கள் நல்ல குடும்பப் பாங்கான மனைவி அமையக் கூடிய சூழல் உருவாகும்.

     மாறாக சுக்கிர பகவான் உடன் சனி, செவ்வாய் ,ராகு மற்றும் கேது போன்ற கிரகங்கள் சேர்க்கை மற்றும் பார்வை பெறும் அமைப்பு பெற்றவர்கள் இல்லற வாழ்வில் இன்ப நிலை எய்தும் தகுதியான மனைவி அமைவதில் சிக்கல் உண்டாகும்.இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படும் அமைப்பு பெற்றவர்கள் நற்பலன்களை தரக்கூடிய நிலை உண்டாகும்.

  சுக்கிரன் பகவானுடன் ராகு பகவான் சேர்க்கை பெற்று சனி பகவானின் பார்வை பெறும் அமைப்பு பெற்றவர்கள் காதல் மற்றும் கலப்பு மணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு.

    சுபத்துவம் பெறாத சுக்கிரன் சாதகரை காம மிகுதியால் தடம்மாற வைக்கிறது அல்லது கேவலப்பட வைக்கிறது. சுக்கிர பகவான் சனி, செவ்வாய் ,ராகு  போன்ற  கிரகங்களுடன் சேர்க்கை, பார்வை மற்றும் நட்சத்திர சாரம் பெறுவது தரங்கெட்ட கேவலமான சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய காம செயலை சாதகருக்கு தருகிறது.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

   வாட்ஸ் அப்
     9715189647

      செல்
    9715189647
     7402570899



    அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

Email

No comments: