வெற்றி பெறுவதற்கும், ஜோதிடத்திற்கும உள்ள தொடர்பை விளக்கும் பதிவு.
கிரகங்கள் படுத்தும் பாடு
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
"வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லையே!
புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி பெறுவதில்லையே!"
- என்ற சினிமா பாடலை கேட்டபோது எனக்குள்ளும் ஒரு ஆதங்கம் இருந்தது .
ஆம் .
நிறைய படித்திருந்தும்,
திறமையிருந்தும் ,
நேர்மையுள்ளவனாக இருந்தும் அடிப்படை செலவுக்கே சம்பாதிக்க முடியாமல் கஷ்டப்படும் பல நபர்களை பார்த்திருப்போம்.
ஆனால் மேற்குறிப்பிட்ட எவ்வித திறமையில்லாமல் பணம் நிறைய ஈட்டும் ஒரு சில மனிதர்களை (வெளிநாடு செல்வதன் மூலமோ,தொழில் செய்வதன மூலமோ) பார்த்த போது இறைவன் மீது கூட எனக்கு கோபம் இருந்தது உண்மைதான் சோதிட ஞானம் பெறுவதற்கு முன்புவரை.
கடந்த பதினெழு ஆண்டுகள் இத்துறைக்கு வந்து ஒரு ஆராய்ச்சி ரீதியாக அணுகியபோது பல உண்மைகள் கிடைத்தது
அழகே இல்லாதவனுக்கு அழகிய மனைவி கிடைப்பதும்,
அழகிய ஆடவருக்கு அழகில்லாத மனைவி கிடைப்பதும்,(நான் உள்ளம் அழகை குறிப்பிடவில்லை)
படித்த பெண்ணிற்கு படிக்காத கணவன் அமைவதும் இது போன்ற பல முரண்பாடுகளுக்கு விடை கிடைத்தது.
திருவள்ளுவர் அழகாக தனது ஒன்றே முக்கால் அடியால் விடை கண்டு இருப்பர்.
"பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்"
விளக்கம்:
ஒருவனது பெருமைக்கும், சிறுமைக்கும் அவன் செய்த கர்மமே உரைத்தல் ஆகும்.
இங்கு கர்மம் என்பது அவன் இப்பிறப்பிலும்,முற்பிறவியிலும் செய்த செயல்(Deed).
எனவே ஓருவன் இப்பிறப்பில் மாறுபட்ட பலனை அனுபவிப்பதற்கு முன்ஜென்ம தொடர்புதான் காரணமாக உள்ளது.
இதனைத்தான் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
"ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்"
அதாவது இப்பிறப்பிலே நல்லவனாக இருப்பினும் முன்ஜென்ம பந்தம் காரணமாக இருக்கலாம்.
இதற்கு அறிவியல் ரீதியாகவும் விளக்கம் இருக்கிறது.
அறிவியலில் மரபியல்(genetics) என்ற ஒரு பிரிவு உள்ளது.
பிள்ளைகளது குணநலம்,நிறம்,தோற்றம் மற்றும் அறிவுநிலைகள்
பெற்றோரையும்,
அவர்களது தந்தை மற்றும் தாய்வழி பட்டனார்களை பொறுத்தும் அமைகிறது.
இது எவ்வாறு ஒரு தலைமுறையிலிருந்து, அடுத்த தலைமுறைக்கும் மற்றும் அடுத்த தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது .
தாய் , தந்தையார் மேற்கண்ட கலவியின் மூலம் வெளிப்படும் விந்து செல்,அண்ட செல் இணைந்து கருவுறுதல் மேற்கொள்ளும் போது அதில் உள்ள ஜீன்களான டி.என்.ஏ மூலமாக கடத்தப்படுகிறது.
தாய் மற்றும் தந்தை இருவரும் குட்டையாக இருந்தாலும், நெட்டையான பையன் பிறப்பதற்கு அவரது தாத்தா நெட்டையாக இருந்தாதே காரணம்.இதுபோல் முதல் தலைமுறையில் வெளிப்படாத பண்பு அடுத்த தலைமுறைக்கு வெளிப்படும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிருபிக்கபட்ட ஒன்று.
எனவே விஞ்ஞானமும்,மெய் ஞானமும் பூர்வ ஜென்ம தொடர்பால்தான் இந்த முரண்பட்ட நிலை ஏற்படுகிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்.
இதனால்தான் ஜாதகத்தின் பணிரெண்டு கட்டத்தில் ஐந்தவாது கட்டத்தை பூர்வ புண்ணிய ஸ்தானமாக வைத்துள்ளார்கள்.
இப்பிறப்பில் செய்யும் நல்வினை தீவினை யாவும் அடுத்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவு செய்யப்படும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.
ஓருவனது வெற்றிக்கும் மற்றும் தோல்விக்கும் ஜோதிடத்திற்கு நிறைய தொடர்பு இருக்கிறது.
"எப்படி சிறு விதைக்குள் அவை எப்படி வளர வேண்டும்(உயரமாகவா,குட்டையாகவா),எது மாதிரியான இலை,காய்,கனி இது போன்ற பல தகவல்கள் விதைக்குள் ரெக்கார்ட் இறைவன் செய்திருப்பதுபோல் (உதாரணமாக மா மர விதை ஆப்பிள் பழத்தை தருவதில்லை)
அதேபோல் மனிதன் தாயின் கருப்பையிலே உருவாகும் போதே இவன் இந்த நிறத்தில் பிறக்க வேண்டும்.உயரம்,அங்க அவயங்கள்,உடல் ஆரோக்கியம் மற்றும் புத்திசாலிதனம் அனைத்தும் மறைந்திருக்கிறது.
அந்த கரு தோன்றுவதற்கான கூடலும்,கர்ப்பமும் நிகழும் காலத்தில் வீண்மீன்களின் அமைப்பு குறிப்பிட்ட நிலையில் இருந்திருக்கும் அந்த அமைப்புதான் குறிப்பிட்ட வகை குழந்தை பிறக்கிறது.
குழந்தை பிறந்த நேரத்தில் ,ஒரு நட்சத்திரம் பூமியின் தொடுவானத்தில் தோன்றும்.அவைதான் அவன்/அவளது ஜென்ம நட்சத்திரமாக கொள்ளப்படுகிறது.அதை வைத்தே அவனது ராசி கணக்கிடப்படுகிறது.
அதிலிருந்து அவனது தசை கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக ரேவதி நட்சத்திரம் எனில் மீனம் ராசி எனவும்.அவனது தொடக்க தசை புதன் தசை எனவும்,
மீன ராசியாக இருப்பவர்கள் பெண் ராசியாக இருப்பதால் அமைதியான குணம் படைத்து மென்மையாக இருப்பார்கள்.ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாகவும் கற்றறிந்த பண்டிதர்களாகவும் இருப்பார்கள் என அந்த கருவில் பதிய வைக்கப்படுகிறது.
நான் முதலில் கூறிய முரண்பட்ட நிலைக்கான ஜாதக விளக்கத்தை இப்போது கூறினால் இன்றைய இளைஞர்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.
அழகற்றவனுக்கு அழகிய மனைவி கிடைக்க காரணம்
அவனது ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சந்திரன் இருந்தாலும், லக்கனத்தில் சந்திரன்,சுக்கிரன் நின்றாலும்
ஏழாம் அதிபதி சுப கிரகமாக இருந்தாலும் கிடைக்கிறது.
அதேபோல் கற்ற பெண்ணிற்கு படிக்காத கணவன் அமைவது அந்த பெண்ணின் லக்கன ராசியோடு ராகு,கேது தொடர்பு
ஏழாமிடத்திபதி பாவ கிரகமாக இருந்தும் பாவிகள் தொடர்பு (சனி மற்றும் செவ்வாய்) பார்வை பெறினும்,ஏழாமிடத்திற்கு இரண்டு,நான்காமிட பாவிகள் தொடர்பு இருப்பின் அந்த பெண் டாக்டராகவே இருப்பினும் படிக்காத கணவனே கிடைப்பான் இது அனுபவ உண்மை விதிப்பயனை என்ன செய்ய.
அதேபோல் திறமையில்லாதவனும்,படிக்காதவனும் வெற்றி பெற காரணம்
அவனது ஜாதகத்தில் வெற்றி ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடம் வலுப்பெற்றிருப்பதோடு 9,10,11 இடங்கள் வலுப்பெற்றிருக்கும்
எனவே வாழ்வியலோடு பிண்ணிபிணைந்தது ஜோதிடம்.
மீண்டும் ஒன்றை கூறி நிறைவு செய்யலாம் என உள்ளேன்.
எல்லாம் முன் கூட்டியே செய்யப்பட்டதென்றால் பிறகு எதற்கு இந்த தெய்வ வழிபாடு,பூஜை புணர்ஸ்காரங்கள் மற்றும் முயற்சிகள் என தோன்றலாம்.
தெய்வத்தால் முற்பிறப்பின் கர்ம வினைகளை குறைக்கும் ஆற்றல் உண்டு. ஒருவித ஒலியை அதாவது ஓம் ரீங்காரத்தை தொடர்ந்து எழுப்பும் உடல் நோய்,மன நோய்களை குணப்படுத்துவதோடு மரபியல் பண்பையே மாற்றலாம் என விஞ்ஞான பூர்வமா ஆய்ந்திருக்கிறார்கள்.ஒலிக்கு வலிமை உண்டு .இதுபற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
.நன்றி.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
முதுநிலை வேதியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை நிலையம்,
கரம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment