யோகம் என்பது உண்மையில் என்ன ?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
யோகம் என்றால் என்ன ? என வினா எழுப்பினால் கிடைக்கப்பெறும் விடையானது
" கிரகங்களின் இணைவு அல்லது கிரக சேர்க்கை " என்று பெயர்.
அவ்வாறு ஓர் ராசி கட்டத்தில் இணையும் கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு கிரகங்களாக இருந்து அந்த கிரகங்கள் இடம்பெற்றிருக்கும் வீடானது சுப வீடாக அமையும் பட்சத்தில் அந்த கிரக இணைவானது அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலனை தரக்கூடிய அமைப்புகளை பெறுகிறது.இதனையே யோகம் என அழைக்கிறோம்.
ஒரு ராசி கட்டத்தில் இணையும் கிரகங்களின் நட்பு மற்றும் பகை உறவு நிலைகளை பொறுத்து அது தரும் கெடு பலன்கள் அல்லது நல்ல பலன்கள் அமைகிறது.
ஒரு ஜாதகத்தில் ஒரு ராசி கட்டத்தில் ராகு பகவான் இடம் பெற்றிருக்கும் போது அவை அந்த வீட்டின் அதிபதி ஆகவே செயல்படும்.
ராகுபகவான் தரும் பலன்கள் ராகு பகவான் உடன் இணையும் கிரகங்கள்,அந்த ஸ்தான அதிபதிகள் , பார்க்கின்ற கிரகங்கள் மற்றும் அக்கிரமம் பெறும் நட்சத்திர சாரம் ஆகிய அனைத்து பலன்களையும் இணைத்தே அதன் திசை நடப்பில் இருக்கும் போது தரும்.அதனால் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தரும் பலன்களை கண்டறிவது மிகவும் துல்லியமான ஜோதிட அறிவு தேவைப்படுகிறது.
உதாரணமாக மீன லக்கனத்துக்கு 5-ஆம் இடமான கடகத்தில் ராகுவுடன் குரு பகவான் இணையும் போது உச்சம் பெற்ற நிலையில் உள்ள குருபகவான் ராகு பகவானை சுபத்துவபடுத்தும் மற்றும் ராகு பகவான் ஆனவர் குரு பகவானை பாவத்துவப்படுத்துவார்.
இத்துடன் சனி பகவான் இணைய மேலும் பாபத்துவ படுத்தப்படும்.சனி இணைவுக்கு பதிலாக சந்திரன் மற்றும் செவ்வாய் இணைவானது அந்த பாவக அமைப்பினை வலுப்படுத்தும்.இன்னும் மகர வீட்டில் இருந்து வளர்பிறை சந்திரன் சம சப்தமாக பார்க்க இந்த பாவகம் மேலும் சுபத்துவம் பெற்று அந்த கிரகங்கள் திசையில் மிகுந்த யோக பலனை சாதகர்களுக்கு வழங்குகிறது இதுவே யோக பலனாகும்.
குருவின் அணியில் உள்ள வளர்பிறை சந்திரன், செவ்வாய் , சூரியன் மற்றும் கேது பகவான் போன்ற கிரகங்கள் நட்பு ஸ்தானங்களான தனுசு,மீனம், மேஷம், விருச்சிகம் , கடகம் மற்றும் சிம்மம் போன்ற இடங்களில் சேர்க்கை பெற்று நிற்கும் பொழுது மிகுந்த யோக பலன்களை அதன் திசைகளில் தருகிறது.
இதேபோல சுக்கிரன் அணியில் சனி,பாவியோடு சேராத புதன் பகவான் , சுக்கிரன் மற்றும் ராகு பகவான் தனது நட்பு வீடுகளான ரிஷபம், துலாம், மிதுனம்,கன்னி , மகரம் மற்றும் கும்பம் போன்ற வீடுகளில் கேது பகவான் ,சனி, சுக்கிரன் போன்ற கிரகங்கள் சேர்க்கை பெற யோக பலன்களை தருகிறது.
குரு அணியில் உள்ள கிரகங்கள் சுக்கிரன் அணி வீடுகளில் அமர உபஜெய ஸ்தானத்தில் (3,6,10,11)நட்பு நிலையில் சேர்க்கை பெற்று அமர யோக பலன்களை தருகிறது.
இதேபோல சுக்கிரன் அணியில் உள்ள கிரகங்கள் குரு அணி வீடுகளில் அமரும் போது நட்பு நிலையில் உபஜெய ஸ்தானமாகிய 3,6,10,11 வீடுகளில் நட்பு நிலையில் சேர்க்கை பெற்று அமர யோக பலன்களை தருகிறது.
பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் பகவானுடன் ராகு பகவான் இணைந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படும் போது அல்லது வளர்பிறை சந்திரனால் பார்க்கப்படும் போது அந்த சேர்க்கை பலனானது அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலனை தருகிறது.மாறாக சுப கிரக பார்வை மற்றும் வளர்பிறை சந்திரனின் பார்வை அற்ற நிலையில் கெடு பலன்களை தருகிறது.
இயற்கை பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் பகவான் உடன் கேது பகவான் இணைவானது மறைமுக முறையில் வலுப்பெறுகிறது. கேது பகவானுடன் இணையும் கிரகங்கள் ராகுபகவானை போல கெடுப்பதில்லை .
இவற்றை இயற்கை சுப கிரகங்களாலோ அல்லது வளர்பிறை சந்திரானாலோ பார்க்கப்படும் அமைப்பு மிகவும் யோக பலனை தருகிறது.
நன்றி.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் 9715189647
செல் 9715189647 7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment