Sunday, 26 July 2020

திருமண வாழ்வில் இன்ப நிலை எய்திட--(3)

திருமண வாழ்வில் இன்ப நிலை எய்திட...(3)


                      

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

பொருத்தம் பார்க்கும்போது திருத்தம் செய்ய வேண்டியது

       தம்பதிகள் இருவருக்கும் பொருத்தம் பார்க்க வரும்போது தம்பதிகள் இருவருடைய பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடத்தை வாங்கி முதலில் சாதகம் சரியா ? என்று மென்பொருள் உதவி கொண்டு சரிபார்த்துக் கொள்வது ஆகும்.

  தம்பதிகள் இருவருக்கும் பொருத்தம் பார்க்க வரும்போது நட்சத்திர அடிப்படையான பொருத்தம் என்பது
( Star matching) பொருத்தம் பார்க்க கூடிய சோதிடர்களுக்கு ஒரு நுழைவு வாயிலை அன்றி அதுவே முடிவான நிலை அன்று.

  சாதக கட்ட அடிப்படையான பொருத்தங்களானது நட்சத்திரப் பொருத்தத்தை விடச் சிறந்தது என்பதை முதலில் புரிய வைக்க வேண்டும்.

  கட்ட பொருத்தம் சிறப்பாக அமைந்து, நட்சத்திர பொருத்தம் இல்லாவிட்டாலும் கூட விவாகம் செய்யலாம்.

  நட்சத்திரப் பொருத்தத்தை விட, ஒருவருக்கு கட்ட பொருத்தம், தசா சந்திப்பு மற்றும் கோசார அடிப்படையில் உகந்த நிலை  இவையே மிக முக்கியமான ஒன்றாகும்.

 நட்சத்திர அடிப்படையிலான பொருத்தத்தில் கிட்டத்தட்ட பதிமூன்றுக்கு மேற்பட்ட பொருத்தங்கள் இருப்பினும், கீழ்க்கண்ட ஆறு பொருத்தங்களே நட்சத்திர பொருத்தங்களில் இன்றியமையாத ஒன்றாகும்.

அவையாவன-
  1)தினப் பொருத்தம் ,

       இது நட்சத்திர பொருத்தம் ஆகும்.

  2)கணப் பொருத்தம்,

         தம்பதிகள் இரண்டு பேருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனித கணம் ஆனாலும் உத்தமம்.

     ஆன் ராட்சஷ கணமும், பெண் தேவ கணமும் ஆனால் மத்திபம்.

       ஸ்திரி ராட்சஷ கணமும் புருஷன் மனித கணமானால் பாவம் செய்யக்கூடாது.

    பெண் நட்சத்திரத்தில் இருந்து 14க்கு மேல் ஆண் நட்சத்திரம் இருந்தால் பெண் ராட்சஷ கண மானாலும் தோஷமில்லை. விவாகம் செய்யலாம் என்பது பலர் கருத்து.

   3 )ராசிப் பொருத்தம் அல்லது ராசி அதிபதி பொருத்தம் ,

      தம்பதிகள் இருவரும் ஒரே ராசியானாலும், ஒருவருக்கொருவர் சமசப்தமாயினும்  பெண் ராசிக்கு ,ஆண் ராசி ஆறுக்கு மேற்படின் உத்தமம் .3,4 மத்திபம். 2,5,6,8 பொருந்தாது.

 குறிப்பாக ஒரு ராசிக்கு மற்றொரு ராசிஆறு மற்றும் 8-க்குடையவர் ஆயின் ராசிப் பொருத்தம் இல்லை.

 இதேபோல ராசி அதிபதி பொருத்தத்தில் ஒரு கிரகத்துக்கு ,மற்றொரு கிரகம் பகை கிரகம் எனில் ராசி அதிபதி பொருத்தம் இல்லை.

  4)ரஜ்ஜூப் பொருத்தம்   ,

    இந்த பொருத்தமானது தம்பதிகளுக்கு இடையேயான ஆயுள் பொருத்தமாகும். இதனை கயிறு பொருத்தம் என்றும், சரடு பொருத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

  இதில் தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூவாக வந்தால் விவாகம் செய்யக் கூடாது என்பது பொது விதியாகும்.

  நட்சத்திரப் பொருத்தங்களில் ஏனைய பொருத்தங்கள் விட ரச்சுப் பொருத்தம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இது கணவன் மற்றும் மனைவியின் உயிர் பொருத்தமாகும்.

   தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜுவாக வந்தாடும் ஆரோகணம்(ஏறுமுகம்) மற்றும் அவரோகணம் ( இறங்குமுகம்) என மாறி வந்தால் விவாகம் செய்யலாம் .இவ்வாறு செய்யும்போது சாதாக கட்டத்தில் இருவரது ஆயுள் பலத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   இருவருக்கும் ஒரே ரஜ்ஜுவாகவும்  இருந்து அது  ஆரோகணம் எனில் புருஷ நாசம், அவரோகணம் எனில் ஸ்திரி நாசம் ஆகும்.

  அதே நேரத்தில் தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்து ஆரோகணம் , அவரோகணம் என இருவருக்கும் மாறி வந்தால் விவாகம் செய்யலாம் உத்தமமாகும்.

   இந்த விதி விலக்கிலும் மற்றொரு விதிவிலக்கு உண்டு . அதாவது இருவருக்கும் கண்ட ரஜ்ஜுவும், சிரசு ரஜ்ஜுவும் வந்தால் ஆரோகணம், அவரோகணம் என அவர்களுக்கு இடையே மாறி வந்தாலும் விவாகம் செய்யக் கூடாது.

        5)பால் பொருத்தம்,

       இங்கு பால் பொருத்தம் என்பது தம்பதிகள் இருவருக்கும் பாலுள்ள மரம் வந்தால் உத்தமம் ஆகும் .
இருவரில் ஒருவருக்கு பாலுள்ள மரம் வந்தால் மத்திமம் ஆகும் .இருவருக்கும் பாலுள்ள மரம் வரவில்லை என்றால் பால் பொருத்தம் இல்லை.

    நட்சத்திர அடிப்படையில் பால் பொருத்தம் இல்லாவிட்டாலும், இருவரது ஜாதகத்திலும் புத்திர தோஷம் இல்லை எனில் பொருத்தம் போடலாம்.

   6) யோனி பொருத்தம்.
   
        யோனிப் பொருத்தம் என்பது தம்பதிகள் இருவருக்கும் இடையேயான தாம்பத்திய சுகம் தரும் பொருத்தத்தை குறிப்பது ஆகும் (Sex matching).

   பூனைக்கு -எலி பகை சிங்கத்திற்கும்,புலிக்கும் - பசு பகை...இதேபோல ஒன்றுக்கொன்று பகையோனிகள் வந்தால் சோதிடர்களாகிய நாம்  ஜாதக கட்டத்தில் கிரகங்களான செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் சனி, ராகு இணைவு மற்றும் பார்வை உண்டாகி சுபத்துவம் அற்று காம ஸ்தானங்களில்  குடியேறி இருப்பின் நாம்
 யோனிப் பொருத்தம் இல்லை என கருத்தில் கொண்டு விவாகம் செய்வதை தவிர்க்கலாம்.

  இந்தக் கிரக அமைப்பு சாதக கட்டத்தில் இருந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் அல்லது மேற்கண்ட அமைப்பு சாதக கட்டத்தில் இல்லை என்றால் யோனி பொருத்தம் இல்லை எனினும் விவாகம் செய்யலாம்.

   மேற்கண்ட ஆறு பொருத்தங்கள் இன்றியமையாத ஒன்றாகும்.

                      


தோஷங்களும், பரிகாரங்களும்
 
  செவ்வாய் தோஷம்

      செவ்வாய் தோஷம் என்பது லக்கினத்திற்கு அல்லது ராசிக்கு அல்லது சுக்கிரனுக்கு 2, 4 ,7 ,8 ,12 ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பின் அது செவ்வாய் தோஷம் ஆகும் இதில் பல விதிவிலக்குகள் உள்ளது.

 இதில் பல விதிவிலக்குகள் உள்ளன.

   1) செவ்வாய்  உச்சம், உச்சம், நீசம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

   2) செவ்வாய் பகவான் குரு, சுக்கிரன் தொடர்பு மற்றும் வளர் பிறைச் சந்திரனை பார்வை பெறின் தோஷம் இல்லை.

  3) சூரியன், சனி, புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும் தோஷம் இல்லை.

 4) செவ்வாய் குரு மனை ஏறி இருந்தாலும் ,
சிம்மம் வீடு ஏறினாலும் தோஷம் இல்லை.

    பொதுவாக செவ்வாய் தோஷம் என்பது உயிரைக் கொல்லும் அளவுக்கு பயப்படவேண்டிய தோஷம் இல்லை.

    செவ்வாய் பகவான் 1,2,7 ,8 ஆம் இடங்களில் நிற்கும்போது உச்சம் மற்றும் ஆட்சி பெற்று இருந்தால் தோஷம் இல்லை என்றாலும்,பொதுவாக பாவ கிரகங்கள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் நேர்வலு பெறக்கூடாது. மேலும் திருமணத்திற்கு உகந்த ஸ்தானமான இலக்கனம், குடும்பம், களத்திரம் மற்றும் மாங்கல்யம் ஸ்தானத்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் இடம்பெறக்கூடாது. அவ்வாறு இடம் பெற்றிருப்பின் சாதகருக்கு காலதாமதம் திருமணத்தை தரும்.மீறி இளவயதில் திருமணம் நடந்து இருந்தாலும் செவ்வாய் திசை நடைபெறும் காலங்களில் தம்பதிகளுக்கு இடையே பிரச்சினை அல்லது பிரிவினைகளையோ சுபத்துவமற்ற செவ்வாய் தசை நிச்சயமாக தரும்.

செவ்வாய் தோஷம் அல்லது செவ்வாய் பகவானால் உண்டாகும் திருமணத் தடை அகல கீழ்க்கண்ட கோவிலுக்கு சென்று வழிபட உகந்ததாகும்.

1) வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள முத்துக்குமாரசுவாமி.

2) திருச்செந்தூர் முருகன் கோவில்

3)ஆலங்குடி தட்சிணாமூர்த்தி.

   ராகு, கேது தோஷம்

     லக்கனத்திற்கு அல்லது ராசிக்கு 1,2 ,7,8 ஆம் இடங்களில் ராகு மற்றும் கேது இடம் பெற்றிருப்பின் திருமணத் தடையை ஏற்படுத்துகிறது.

  இவ்வாறு நிழற்கிரகங்கள் இடம் பெற்று நிற்பின் இயற்கை சுப கிரகமான குரு, சுக்கிரன் தொடர்பு மற்றும் வளர்பிறை சந்திரனின் பார்வையானது  ராகு மற்றும் கேதுவினால் உண்டாகும் தோஷங்களை போக்குகிறது.

   நாக தோஷம் போக்க வழிபட வேண்டிய ஸ்தலங்கள்.

   ஸ்ரீ  ராகு பகவான் ஸ்தலங்கள்;-

1) தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள நாகநாத சுவாமி திருக்கோவில்.

2) திருவாரூர் மாவட்டம் திருபாம்புரம் என்ற இடத்தில் அமைந்துள்ள சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்.

3)புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்.

 ஸ்ரீ கேது பகவான் ஸ்தலங்கள்;-

1) நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் என்ற இடத்தில் அமைந்துள்ள நாகநாத சுவாமி திருக்கோவில்.

2) ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீகாளகஸ்தி என்னும் இடத்தில் அமைந்துள்ள காளத்தியப்பர் திருக்கோயில்.

                   


திருமணத் தடை அகல எளிய பரிகாரம்.

  திருமணத் தடை அகல பரிகாரம், பிராயசித்தம் என அதிக செலவில்லாமல் இதற்கான தீர்வை எளிதில் காணலாம்.

 வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை அருகில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம்.

   பூஜைக்கு முன்பு இடத்தைச் சுத்தமாக மஞ்சள் , சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு, முக்கூட்டு எண்ணெய் சேர்த்து கலந்து ஊற்றி அதை ஏற்றலாம்.

   தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல் ஓர்
ஊதுபத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.

    விளக்கின் முன்பு அருகம்புல் ,துளசி கலந்த தீர்த்தம் மற்றும் பழுத்த எலுமிச்சைப்பழம் வைக்க வேண்டும்.

 இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக வெட்டி சாறு எடுத்து அந்த சாற்றுடன் தேனும், சர்க்கரையும் கலந்து படைக்க வேண்டும்.

     அறுத்துப் பிழிந்த எலுமிச்சை பழத்தோல் வெளிப்புறத்தை உட்புறமாக மாற்றி மொத்தம் மூன்று அகல் விளக்குகள் போல் செய்து  ராகு காலத்தில் (குறிப்பாக சனிக்கிழமை எனில் 9.00 முதல்  10:30 க்குள்)  கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபட திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமைந்து மங்களகரமாக திருமணம் நடைபெறும்.

மந்திரம்

ஓம் ஸரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ!
ஓம் லட்சுமி நாராயணாயா நமஹ!
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமண்ய நமஹ!
ஓம் ஜய ஹ்ரீம் யோகினி!
சித்தி சுந்தரி கொளரி அம்பிகே! யோக பயங்கரி
சில ஸ்தாவர ஜங்கம முக ஹ்ருத!

   இவை தவிர உங்களுக்கு என்ன தசை நடக்கிறதோ, அந்த தசைக்கு உரிய நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று வழிபட திருமணத் தடை அகலும்.
 அவை பின்வருமாறு

1) சூரியன் பகவான்
       தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்ற இடத்தில் உள்ள சூரியனார் கோவில்.

2) சந்திரன் பகவான்
      தஞ்சாவூர் மாவட்டம், திங்களூர் என்ற இடத்தில் உள்ள சந்திரன் கோவில்.

3) செவ்வாய் பகவான்

     நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில்.

4) புதன் பகவான்
    நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காடு.

5) குரு பகவான்

      -  திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி என்ற இடத்தில் அமைந்துள்ள குரு ஸ்தலம் ,

    -  தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர்,

    - தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில்.

6) சனி பகவான் 

     -காரைக்கால் மாவட்டம்   திருநள்ளாறு என்ற இடத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்.

       - திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஸ்தலம்.

  7) ஸ்ரீ ராகு மற்றும் கேது பகவானுக்கு உரிய நவக்கிரக கோயில் ராகு கேது தோஷம் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

   திருமணத் தடை அகல கீழே குறிப்பிட்டுள்ள பொதுவான கோவிலுக்கு சென்று வழிபட திருமணத் தடை அகலும்.

1) நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரி என்ற இடத்தில் அமைந்துள்ள உத்வாகநாதர் கோயில்.

2) தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் என்ற இடத்தில் அமைந்துள்ள முல்லைவன நாதர் கோவில்.

3) தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடி என்ற இடத்தில் அமைந்துள்ள பிராணநாதேசுவரர் கோயில் .

 4) நாகப்பட்டினம் மாவட்டம் திருவிடைச்சுழி என்ற இடத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் .

 5) காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில்.

6)  காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்ற இடத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில்.

7) திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ் ரீபீலிஸ்வரர் கோவில்.

 8) நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு என்ற இடத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் .

  9)சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் என்ற இடத்தில் அமைந்துள்ள சௌமிய நாராயண பெருமாள் கோயில்.

  10) காஞ்சிபுரம் மாவட்டம் சித்திரகுப்தன் கோவில்,

   11) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆண்டாள் திருக்கோயில்.

 12) மதுரையில் அமைந்துள்ள அழகர் கோயில்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   9715189647
      செல்
 9715189647
  7402570899


                         


 அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email:
masterastroravi@gmail.com

My blog

www.AstroRavichandran.blogspot.com

www.AstroRavichandransevvai.blogspot.com

..............................................

No comments: