Wednesday, 2 December 2020

வாழ்க்கை துணையை தேர்வு செய்வது எப்படி?-ஜோதிட அடிப்படையில் ஒரு தீர்வு.

வாழ்க்கை துணையை தேர்வு செய்வது எப்படி?- சோதிட அடிப்படையிலான ஒரு தீர்வு

                                                


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   எல்லாவற்றிற்கும் கால நேரம் வர வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.


" நாள் செய்வதை போல நல்லோர்கள் செய்ய மாட்டார்கள்'.


கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து"


காலம் வரும் வரை கொக்கு எவ்வாறு அமைதியாக காத்திருக்கிறதோ அவ்வாறு காத்திருந்து அதற்குரிய இரையை கிடைத்ததும் விரைந்து சென்று கொத்தி செல்வதுபோல் வாய்ப்புகளை எட்டிப்பிடிக்க வேண்டும்.


இந்த  ஒத்த கருத்தினையே ஒளவையார் தனது  மூதுரை நூலில்


"ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை வாடி காத்திருக்குமாம் கொக்கு"


 கொக்கானது  சிறிய மீன்கள் ஓடும் வரை வாட்டத்துடன் காத்துக்கொண்டிருந்தது பெரிய மீன் வந்தவுடன் திடீரென்று பாய்ந்து சென்று கொத்தி செல்வது போல்"


  இல்லறத் துணையைத் தேடும் இன்றைய இளைஞர்களும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னத கொள்கையுடன்  உரிய கால நேரம் வரும் வரை, அதாவது தனக்குரிய வாழ்க்கைத்துணையை காணும் வரை அமைதியாகக் காத்திருந்து முறைப்படி பெற்றோருடைய ஆதரவோடு சமூக முறைப்படியான சடங்குகளுடன் கொத்திக் கொண்டு வரவேண்டும்.


  ஒரு ஜாதக கட்டத்தில் திருமணத்திற்குரிய தசை வருகிறதா? என்பதை நன்கு ஆராய்ந்து அதற்குரிய தசை காலம்  வரும் நேரத்தில் முறையான ஜோதிடரை அணுகி நீடித்த தாம்பத்தியம் சுகத்தை தரக்கூடிய சுக்கிர பகவானையும் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய  குருபகவானையும் ஆராய்ச்சி செய்து அதற்குரிய

அமைப்பு எந்த தசை காலங்களில் வருகிறது என்பதை தெரிந்துகொண்டு அதற்குரிய நேரத்தில் ஏற்பாடு செய்வது நல்லது.


  தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையை தேர்வு செய்ய வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு விவாகம் செய்ய முடிவு செய்யக்கூடாது.  நட்சத்திரப் பொருத்தம் என்பது  திருமணம் செய்வதற்கான நுழைவுவாயிலே அன்றி அதுவே முடிவான ஒன்றாக  ஆகாது (The star matching is the entry point of the marriage life).


  நட்சத்திர பொருத்தம் சரியாக இல்லாவிட்டாலும் கட்ட அடிப்படையிலான பொருத்தங்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் விவாகம் செய்யலாம்.


ஒரு சிலர் "சோதிடர்களிடம் சென்று பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்து வைத்தோம் ஆனால் திருமணமான ஒரு சில மாதங்களிலேயே அவர்களுக்கிடையே பிரச்சனை முற்றி விவாகரத்து வரை சென்று விட்டது" . "ஜோசியர் என்னதான் சாதகம் பார்த்தாரோ?"- என ஜோதிடத்தையும் ஜோதிடர்களையும் குறை சொல்வதற்கு காரணம் அந்த ஜோதிடர் வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு தம்பதிகள் இருவரது சாதக  கட்டங்களை ஆராய்ந்து பார்க்காமல் ஒருசில ஜோதிடர்கள்  பொருத்தம் உள்ளதாக சொல்லி அதன்படி திருமணம் நடப்பதே காரணமாகும்.


  திருமணப் பொருத்தம் பார்க்க வரும் தம்பதிகளுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை வாங்கி அவர்களது சாதகம் சரியான முறையில் எழுதப்பட்டுள்ளதா? என்பதை முதலில் கவனிக்கப்பட வேண்டும். அவர்கள் இருவரது ஜாதகமும் ஏதேனும் ஒரே கணித முறையில் உள்ளதா? எனவும் கவனிக்கப்பட  வேண்டும்.


   சாதகத்தில் வாக்கிய முறை மற்றும் கணித முறை ஆகிய இரு முறைகளில் கணக்கீடு செய்யலாம்.இருவரது ஜாதகமும் ஏதேனும் ஒரு கணித முறையில் கட்டாயம் இருக்கப்பட வேண்டும்.. பொதுவாக என்னைப்பொருத்தவரை வாக்கியம் முறையைவிட திருக்கணித முறையில் கணக்கீடு செய்து சரியான முறையில் ஆய்வு செய்து பொருத்தம் பார்க்கப்பட்ட  தம்பதிகளுக்கிடையே பிரிவினைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. இது எனது தனிப்பட்ட அனுபவம் ஆகும். திருக்கணித முறையில் கணக்கீடு செய்து பொருத்தம் செல்லும்பொழுது துல்லியமாக கணக்கிடாக இருப்பதால் பலனில் மாறுபாடு ஏற்பட வாய்ப்பில்லை.


  பிறகு தம்பதிகள் இருவருடைய ஜாதகத்திலும் தாம்பத்திய சுகத்தை அளிக்கக் கூடிய தசாபுத்திகள் உள்ளதா ? என்பதை கவனிக்க வேண்டும். அதாவது சுக்கிரன் அல்லது சுக்கிரன் தொடர்புடைய தசாபுத்திகள் நடப்பில் இருக்கும் பொழுது திருமணத்திற்கு உகந்த காலமாகும்.


அடுத்தபடியாக புத்திரபாக்கியம் அவர்கள் கைகளில் ஏந்தி நிற்கும் தசா அமைப்புகள் இருவரது ஜாதகத்திலும் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  இதற்கு புத்திரகாரகன் குரு ,புத்திர ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானாதிபதி ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 அடுத்தபடியாக அவர்களுக்கு திருமணத்தின் போது நடைபெறும் தசைகள் மற்றும் கோச்சார பலன்கள் திருமணத்திற்கு உகந்த தசை அமைப்பா ? எனவும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  தம்பதிகள் இருவருக்கும் சுக்கிரன் அல்லது சுக்கிரன் தொடர்புடைய தசாபுத்திகள் நடப்பில் இருப்பின் திருமணம் செய்யலாம்.


  திருமண காலத்தின் பொழுதும் மற்றும் திருமண காலத்திற்குப் பிறகும் நடைபெறும் தசைகளையும் நன்கு ஆய்வு செய்து பார்த்து உகந்த நல்ல தசை அமைப்பு உள்ளதா? என்பதையும் கவனிக்கப்பட வேண்டும். அவர்களுக்கிடையே மறுதார அமைப்பு உண்டா? என்பதையும் அதை செய்து பார்க்க வேண்டும்.


  ஒருவரது ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கெட்டு ,லாபாதிபதியான பதினொன்றாம் இட அதிபதி வலுத்து இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மறுதாரம் யோகம் உண்டா ? என்பதையும் கவனிக்கப்பட வேண்டும்.


  இதற்கு அடுத்தாற்போல்

திருமணத்திற்கு உகந்த ஸ்தானமான இலக்கனம் என்னும் ஜாதகர்,

 குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம்(1,2,7,8)

ஆகியவற்றையும் களத்திரகாரகன் சுக்கிரனையும் ஆய்வுசெய்து பார்க்கப்படவேண்டும்.


  மேற்கண்ட ஸ்தானங்களில் சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது தொடர்பு இருப்பின் கால தாமத திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


  இவ்வாறு 1,2,7,8 ஆகிய ஸ்தானங்களூடன்  

சனி, செவ்வாய் தொடர்பு இருக்கும்பொழுது அல்லது அல்லது களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டு அதிபதி கெட்டு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனி ,செவ்வாய், ராகு இடம்பெற்றிருக்கும் சூழலிலும், கோசார அடிப்படையில் ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனி நடைபெறும் காலங்களிலும் அதிலும் குறிப்பாக ஜென்ம சனியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி போகும் காலங்களிலும் இளவயதில் சரியாக பொருத்தம் பார்க்காமல் செய்யும் பட்சத்தில் தம்பதிகளுக்கிடையே ஒருவித அன்யோன்யம் இல்லாத தன்மை அல்லது புத்திர பாக்கியம் காலதாமதம் ஆகுதல் அல்லது உகந்ததாக அமைப்புகளும் இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு இடையே பிரச்சனைகள் உண்டாகி விவாகரத்து வரை சென்று விடுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஜாதகம் பார்க்கும்போது இவற்றை எல்லாம் நன்கு ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  திருமணப் பொருத்தம் பார்க்கும்போது பொருத்தம் பார்க்க வருபவர்கள் மேற்கண்ட வகையிலான தொடர்புடைய கேள்விகளை கேட்காமல் தனக்கு வரும் வாழ்க்கை துணையோடு உடன் பிறந்த நபர்களின்  எண்ணிக்கை மற்றும் தனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணையின் திசை எது? இது போன்ற கேள்விகளைக் கேட்டு முக்கியமாக கேட்க வேண்டிய கேள்விகளை தவிர்த்து வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு சில நேரங்களில் திருமணம் செய்து விடுவதும் உண்டு.


    பொதுவாக ஒருவருக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் திசையை கேட்கும்போது ஜோதிடர் அவரவர் ஜாதகத்தில் உள்ள ஏழாம் இடத்து அதிபதி உடைய திசையை கூறுவார்கள்.


ஏழாம் இடத்து அதிபதி

சூரியன் எனில் கிழக்கு திசை,


சனி -மேற்கு திசை,


குரு- வடகிழக்கு திசை,


 சந்திரன்-  வட மேற்கு திசை,


சுக்கிரன்-தென் கிழக்கு திசை,


செவ்வாய்-தெற்கு திசை,


புதன்-வடக்கு திசை,


ராகு/கேது -தென்மேற்கு அல்லது அவை இருக்கும் வீட்டின் அதிபதி தசை


 ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டில் இல்லாத பட்சத்தில் ஏழாம் வீட்டில் இருக்கக்கூடிய கிரகத்தின் திசை குறிப்பிடலாம்.ஏழாம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருப்பினும் அந்த கிரகத்தின் சுபத்துவ தன்மை அடிப்படையில் அதன் திசையை கணக்கிடலாம்.


   அதேபோல தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் எண்ணிக்கையை கண்டறிய ஜாதகரது ஏழாம் இடத்திற்கு மூன்றாம் இடம் அதாவது லக்கனத்திற்கு ஒன்பதாம் இடத்துடன் தொடர்பு கொள்ள கூடிய கிரகங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் உடன் பிறப்புகள் சொல்லப்படுகிறது.


   சாதகர் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின்  மாமியார் மற்றும் மாமனார் பற்றி அறிந்துகொள்ள ஜாதகரது ஏழாம் இடத்திற்கு நான்காம் இடமான லக்கனத்திற்கு 10-ஆம் இடத்தை கொண்டு மாமியார் நிலை பற்றியும் மற்றும் மாமனார் நிலை பற்றி அறிய ஏழாம் இடத்திற்கு ஒன்பதாம் இடமான, லக்னத்திற்கு 3ஆம் இடத்தைப் பற்றிய ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


   என்னை பொருத்தவரை தம்பதிகள் இருவருக்கும் சாதக அடிப்படையில் நல்ல பொருத்தம் இருக்கும் பட்சத்தில் பெண்ணானது  எந்ததிசையில் வந்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம். பெண்ணுடன் எத்தனை பிறப்புகள் இருந்தாலும் செய்துகொள்ளலாம்.

மாமனார் மற்றும் மாமியார்கள் இருந்தாலும் அல்லது இல்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.


   இதுபோன்ற கேள்விகளுக்கு சாதகர் மாப்பிள்ளை ஜாதகத்தில் உள்ள சில சங்கேத குறியீடுகளை கொண்டு அவருடைய உடன் பிறப்பு மாமன் மற்றும் மாமி வழி உறவுகள் பிறப்பு எண்ணிக்கையினை சரியாக சொல்லுவதை வைத்துக்கொண்டு அவர் பார்க்கக்கூடிய திருமண பொருத்தம் சரியாக இருக்கும் என்று நம்பி விவாகம் செய்து விடுவதும் பின்னர் திருமண வாழ்வு  தோல்விகளை சந்திப்பதற்கு காரணமாக அமைகிறது.


  நட்சத்திர பொருத்தத்தில் 13-க்கு மேற்பட்ட பொருத்தங்கள் இருப்பினும் முக்கிய பொருத்தமாக தினம், கணம், ராசி, ரஜ்ஜு,பால் மற்றும் யோனி ஆகிய பொருத்தங்கள் இருக்க வேண்டும். மேற்கண்ட இவற்றில் ஏதாவது ஒரு சில பொருத்தங்கள் இல்லை  என்றாலும், தம்பதிகள் இருவரது சாதக கட்டத்தினை  ஆய்வு செய்து பார்க்கும்போது கட்ட அடிப்படையில் சிறப்பாக பொருத்தம் இருக்கும் பட்சத்தில் விவாகம் செய்யலாம்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 நன்றி!


வாட்ஸ் அப் & டெலிகிராம்

   9715189647


      செல்

   9715189647

    7402570899


My website

 www.astroravichandransevvai.in


                                   


     அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.