Tuesday 26 March 2024

மறைவிட ஸ்தானங்கள் தரும் மகத்தான பலன்கள்

 மறைவிட ஸ்தானங்கள் தரும் மகத்தான பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஒருவர் ஜாதகத்தில் மூன்று ,ஆறு , எட்டு மற்றும். பன்னிரண்டாம். இடங்கள் மறைவிட ஸ்தானங்கள்  என்று அழைக்கப்படுகிறது .


     பொது பலனாக மறைவிட ஸ்தானங்கள் கெட்ட பலனை தரக்கூடிய ஸ்தானமாக  மூல நூல்களில் கூறப்பட்டாலும் அதை அப்படியே  எடுத்துக் கொண்டு பலன் அளிக்க முற்பட்டால் பலன்கள் தவறாக போய் விடும்.


 ஒரு கிரகம் மறைவிட ஸ்தானங்களில் இருந்தாலும் மற்றும் மறைவிட ஸ்தானதிபதி கேந்திர ,கோணங்களிலோ அல்லது அதன் அதிபதிகள் உடனோ இருந்தால் கெட்ட பலனை தான் கொடுக்கும் என்று முடிவு செய்து விடக்கூடாது.இந்த நிலையில் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு, வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும்போது மறைவிட ஸ்தான அதிபதிகளாக இருந்தாலும் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்க கூடிய நிலைக்கு மாறிவிடுகிறது.


இந்த மறைவிட ஸ்தானங்களில் மூன்றாம் இடம் மற்றும்  பன்னிரண்டாம் இடம் பெரிய அளவில் மறைவிட ஸ்தானமாக கருதப்படுவதில்லை இந்த ஸ்தானங்களில் உள்ள கிரகங்கள் சாதகருக்கு மிகுந்த நல்ல பலனை தரக்கூடிய அமைப்பிலே இருக்கிறது.


மூன்றாம் இடம் ஒருவருக்கு கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்து போன்றவற்றை தரக்கூடிய இடமாகும் .ஒருவருடைய வீரியத்தை அறிந்து கொள்ள இந்த ஸ்தானம் உதவுகிறது. காம விஷயங்களில் ஒருவன் திறம்பட செயல்படக்கூடிய தன்மை படைத்தவனாக உள்ளானா ? என்பதையும்   இந்த ஸ்தானம்  மூலம் அறிந்து கொள்ளலாம். எழுத்தாளராக கலைகளில் சிறந்து விளங்க புகழ் பெற இந்த ஸ்தானம் உதவுகிறது.


   " தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்பதற்கு இணங்க உடன்பிறந்த சகோதர சகோதரிகளை அறிந்து கொள்ள இந்த ஸ்தானமும் அதன் காரகரான செவ்வாய்  பகவான் உதவுகிறது.


இந்த மூன்றாம் இடம் உப ஜெய ஸ்தானம் வரிசையில் முதலாக அமைகிறது. எனவே மூன்றாம் இடத்தில் கிரகங்கள் நட்பு நிலையில் நின்றால் மிகுந்த யோக பலனை சாதகருக்கு கொடுக்கிறது.


 இதே போல பனிரெண்டாம் இடம் விரய ஸ்தானம் என்று அழைக்கப்பட கூடிய விரயத்தை  தரக்கூடிய மறைவிட  ஸ்தானமாக இருந்தாலும் ஜாதகருக்கு எந்த வகையான நல்ல பலனை தருகிறது என்பதை பார்ப்போம்.


    பன்னிரண்டாம் இடமானது ஒரு நாளின் இறுதி இரவு ஆகும்.அந்த இரவில் நடக்கக்கூடிய காம விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.பன்னிரென்டாம் இடத்தில் எவ்வித சுப தொடர்பு இன்றி சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவான் சேர்ந்த நிலையில் சனி பார்வை பெற்று இருந்தாலும் அல்லது சுக்கிரன்,சனி சேர்க்கை பெற்ற நிலையில் செவ்வாய் பார்வை செய்த நிலையில் அல்லது சுக்கிரன், சனி, ராகு மற்றும் செவ்வாய் சேர்ந்த நிலையில் இருந்தால் அந்த ஆணோ /பெண்ணோ மிகுந்த காம எண்ணம் கொண்டு தடம் மாறி நடக்க கூடிய பெண்ணாக திகழ்வார்.


 ஒரு நாளின் இறுதி நிலையை போல் ஒரு மாத இறுதி ‌மற்றும் ஆண்டின் இறுதி நிலை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.


ஒரு வாழ்வின் இறுதி நிலையை போல் முக்தி நிலையை அறிய பயன்படுகிறது.பன்னிரெண்டாம் இடத்தில் கேது பகவான் மறு பிறப்பு இல்லாத முக்தி நிலையை தருகிறது.


பன்னிரண்டாம் இடத்தில் சனி கேது இருந்து குரு பகவானால் பார்க்கப்பட்ட நிலை ஆன்மீக நிலை அதாவது தாமரை இலை தண்ணீர் போல பற்றற்ற நிலையை சாதனை தருகிறது..


பன்னிரண்டாம் இடம் சுபத்துவமாக இருக்கக்கூடிய நிலையில் ஒருவர் கடல் கடந்து வெளிநாடு செல்லக்கூடிய யோகத்தையும் ஜாதகருக்கு அளிக்கிறது.


பன்னிரண்டாம் இடத்தில் சனி ,செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்த்தாலும் அல்லது இருந்தாலும் அவர் கஞ்சத்தனம் மிக்கவராக கருமிதனம் உடையவராக இருப்பார் .அதே நேரத்தில் 12ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் காசை தண்ணீர் போல செலவழிக்க கூடிய மனநிலை படைத்தவராக இருப்பார்.


பன்னிரண்டாம் இடம் ஒருவர் வாழ்வில் இறுதி நிலையை பற்றிய அறிய உதவும் ஸ்தானமாகவும் அமைகிறது .12ஆம் இடம் ஒரு செய்யக்கூடிய செலவு நிலை எப்படிப்பட்டது என்பதை அறிய உதவுகிறது.


   அந்த வகையில் 3., 12 ஆம் இடங்களை தவிர்த்து ஆறு மற்றும் எட்டாமிமிடங்கள் மறைவிட ஸ்தானங்களில் மிக கடுமையான மறைவிட ஸ்தானமாகும். இந்த ஆறு மற்றும் எட்டுக்கூடிய தசைகள் ஒருவருக்கு வந்தால் சாதகருக்கு மிகுதியான கெடு பலனை தரக்கூடிய நிலையில் இருப்பார் .இவ்வாறு ஆறு மற்றும் எட்டு தசைகள் வரும் பொழுது லக்னாதிபதியும் பலமிழந்து நின்றால் சாதகர் மிகுந்த வேதனைக்கு உட்படுவதுடன்   எதிர்த்து நிற்க அல்லது வாழ்வில் எதிர்ச்சில் போடக்கூடிய திராணி அற்றவராக இருப்பார் .ஆனால் அதே நேரத்தில் லக்கனாதிபதி வலிமையாக இருந்தால் அவை அனைத்தையும் சமாளித்து எதிர்நீச்சல் போட்டு பிறகு நல்ல தசை  வரும்போது நிமிர்ந்து எழுந்து சமூகத்தில் நல்ல முறையில் வலம் வருவார்.


    ஆறாம் இடம் ஒருவருக்கு கடன் ,பிணி எதிர்ப்பு ,நோய் மான அவமானம் போன்ற பல்வேறு கஷ்டங்களை கொடுத்தாலும் அதே நேரத்தில் ஒருவர் அடிமை வேலை கிடைக்க, ஒருவர் வேலை பார்த்து சம்பாதிப்பாரா  ? என்பதை தெரிந்து கொள்ள இந்த ஆறாம் இடம் உதவுகிறது.


  எட்டாமிடம் வம்பு ,சண்டை, வழக்கு மரணத்துக்கு நிகரான தொல்லை ,சிறை செல்லல் ,ஆடு , மாடு விரயம் , விவசாயம் அல்லது வியாபாரத்தில் நட்டம் போன்ற கடுமையான பலனை தந்தாலும் ஒருவருடைய ஆயுளுக்கு காரணமான ஸ்தானமாகும் . ஆயுள் கூட ஒருவருக்கு தேவையில்லாத ஒன்றுதான். மேலும் மறைபொருள் உண்மைகளை தெரிந்து கொள்வதற்கும் உதவுகிறது எட்டாம் இடம் சுபத்துவமான நிலையில் கடல் கடந்து செல்லக்கூடிய நல்ல தன்மையை ஜாதகருக்கு கொடுக்கிறது.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: