Sunday, 24 June 2018

செவ்வாய் தோஷம் என்றால் பயப்படக்கூடிய தோஷமா ?

செவ்வாய் தோஷம் என்றால் பயப்படக்கூடிய தோஷமா ?-ஓரு விரிவான அலசல் ஆய்வு.


                              

செவ்வாய்பட்டி ஶ்ரீபத்ரகாளியம்மன் துணை!

கிரகங்கள் படுத்தும் பாடு-( 156 )

            திருமண பொருத்தம் பார்க்க வரும் பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் முதல் கேள்வி " சார் சாதகத்தில் மாப்பிள்ளைக்கும்,பெண்ணிற்கும் சாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா ? என பாருங்கள் ஐயா ? " என கேட்பவர்களே அதிகம்  என்பதால் அவர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில் இப்பதிவை கொண்டுசெல்கிறேன்.

             செவ்வாய் என்பது ஒரு பூமிக்காரகன்,சகோதரகாரகன்,
வீரக்கிரகம்,
உஷணகிரகம்
யுத்தகிரகம்,இரத்த ஓட்ட கிரகம் ஆகும்.

              இரத்தத்திற்கும் ,இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்,வெள்ளையணுக்கள் மற்றும் இரத்ததட்டுகள் போன்றவைகளுக்கும்,இரத்தபிரிவுகளுக்கும் (blood groups ) மற்றும் எலும்புமஞ்சைகளுக்கும் காரகர் கிரகங்களில் செவ்வாய்பகவானே ஆவார்.

                 சாதகத்தில் செவ்வாய்பகவானை பலமாக பெற்றவர்கள் எவ்வித மந்ததன்மையும் இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.அவர்கள் எப்பொழுதும் செயல்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.

           மேலும் செவ்வாய் கிரகம் காம எண்ணம் மற்றும் காமம்  சார்ந்த செயல்பாடுகளை தூண்டும் கோள் ஆகும்.செக்ஸ்ஹார்மோன்களான ஆண் இனப்பெருக்க ஹார்மோன்களான    ஆண்ட்ரோஷன்,பெண் இன ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஷன்,புரோஸஸ்டிரான் மற்றும் ரிலாக்ஸின் போன்ற ஹார்மோன்கள் சுரத்தலுக்கும் அதனால் மனிதனுக்கு உருவாகிய செயல்பாடுகளுக்கும் காரணகர்த்தா செவ்வாய்பகவானே ஆகும்.

                              


            செவ்வாய்பகவானை பலவீனமாக பெற்றவர்கள்  மந்த தன்மையுடன்   சுறுசுறுப்பு தன்மை அற்றவராகவும்,காம எண்ணம் குறைந்தவர்களாகவும் இருப்பர்.இரத்த சோகை உடையவராகவும் இருப்பர்.

               செவ்வாய்பகவான் இரத்த பிரிவுகளுக்கும் காரகர் ஆவார். இன்று  அறிவியல் அறிஞர்கள் திருமண தம்பதிகளுக்கு இரத்த பிரிவு ( blood group test ) ஆய்வு செய்து விவாகம் செய்து கொள்ளல் நல்லது என்பர். சாதக அடிப்படையில் இரத்த ஆய்வு செய்யாமலே இந்த செவ்வாய்பகவானின் நிலையை ஆய்வு செய்து தம்பதிகள் இருவர் செவ்வாய்பகவானின் வலிமை சமமாக உள்ளவரை திருமண பந்தத்தில் இணைத்தால் நல்லது.

            மேலும் செவ்வாய் காமகிரகம் என்பதால் சாதக கட்டத்தில் செவ்வாய் கிரகம் பலமான அமைப்பை பெற்றவர்கள் ஆணோ/பெண்ணோ இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்பும்,உணர்வுகள் மற்றும்  காமம் சார்ந்த கற்பனைகளும், செயல்பாடுகளும் மிகுதியாக இருக்கும்.மாறாக சாதககட்டத்தில் செவ்வாய் கிரகத்தினை பலமில்லாத அமைப்பை பெற்றவர்கள் மேற்குறிப்பிட்ட காமம் சார்ந்த செயல்பாடுகள் குறைவாக இருக்கும் என்பதால்தான் செவ்வாய்பகவான் நிலை அறிந்து பொருத்தம் போடவேண்டும்.

            இவ்வாறு செவ்வாய் நிலையறியாது திருமணம் செய்யும்பட்சத்தில் செவ்வாய் ஓத்த அமைப்பை பெறாதவர்கள் திருமணபந்தத்தில் இணையும்போது அவர்களிடம் தாம்பத்யம் திருப்தி இல்லாமல் அவர்களிடம் அன்யோன்யம் குறை்து "வேலி தாண்டிய வெள்ளாடு" ஆகிவிடுவார்கள்.இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கான்பதற்கு செவ்வாயின் தன்மையை அறிய வேன்டும்.

           செவ்வாய் தோஷம் இருப்பின் பால் உணர்வு விஷயத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் குண இயல்புகள் மாறுபடும்.
ஒரு ஆண் சாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின் காம உணர்வு அதிகம் இருத்கும்.அதேபோல பெண் சாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின் அவள் அவசரப்பட்டு உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்தி விடுவாள்.

                          


              செவ்வாய் தோஷம் உள்ள  ஆண் மகன் ஒரு காம உணர்வினால் ஒரு பெண்ணின் பிடியில் அடங்கிபோய்விட இயலும்.எனவேதான் திருமணத்தின்போது  செவ்வாய்தோஷம் உள்ள ஆணிற்கோ/பெண்ணிற்கோ அதே தோஷம் உள்ள நபரை பொருத்தம்போடும்போது அவர்களிடம் ஒத்த காம உணர்வுகள் உண்டாக வாய்ப்பு உருவாகி தாம்பத்ய உறவில் அன்யோன்யம் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதற்காகத்தான் செவ்வாய் தோஷம் உள்ள நபருக்கு அதேபோல செவ்வாய் தோஷம் உள்ள நபரையே ஜோடி சேர்க்கப்படுகிறது.மற்றபடி உயிரை கொல்லும் அளவிற்கு பயப்படக்கூடிய தோஷம் இல்லை.

            செவ்வாய் மனித உடலின் இரத்த ஒட்டத்திற்கும் காரகர் ஆவார் என்பதால்
உடலியல்கூற்றுப்படி அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.காரணம் பெண்ணிற்கு பூப்பெய்திய பிறகு மாதவிடாய் காரணமாக ரத்த இழப்பு ஏற்படுகிறது.பிறகு பிரசவ காலத்தில் இரத்த இழப்பு ஏற்படுகிறது.எனவே பெண்கள் சாதகத்தில் செவ்வாய் பலமிழந்து நின்றால் இரச்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.அத்துடன் மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி,உதிரபோக்கு ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது.

            இவை மட்டுமல்லாமல்  செவ்வாய்பகவானுடன் களஸ்திரகாரகனான சுக்கிரன் ஆனவர் 30  பாகைக்குள் இணையும்போதோ அல்லது ஒன்றுக்கொன்று 180 பாகைக்குள் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும் அமைப்பை பெற்றவர்கள் காம உணர்வு மிகுதியால் அதிக காம செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.

          சுப பார்வையின்றி     செவ்வாய் பகவான் உடன் சனி,ராகு,கேது சேர்க்கையை பெற்றவர்கள் அளவுக்கு அதிகமான காம உணர்வுகள் பெற்று பல மலரை நாடி தேன் எடுக்கும் வண்டு ஆவார்.

          செவ்வாய்தோஷம் என்பது  ஓருவருடைய சாதக கட்டத்தில் லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ அல்லது சுக்கிரனுக்கோ 2.4.7.8.12 ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பின் செவ்வாய்தோஷம் ஆகும்.

        செவ்வாய் தோஷத்தில் சில விதிவிலக்குகள் உள்ளது.

                 1)செவ்வாய் உச்சம்,ஆட்சி மற்றும் நீசமடைந்து இருப்பின் செவ்வாய் தோஷம் கிடையாது.

                  2) செவ்வாய் பகவானை  சனி, குரு, சூரியன் போன்ற கிரகங்கள் பார்த்தாலும்,சேர்ந்து இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

                3)சில நேரங்களில் செவ்வாய் குரு வீடு ஏறியிருந்தாலோ ,சிம்ம வீடு ஏறியிருந்தாலும் தோஷம் இல்லை.

           இவ்வாறு எல்லா விதிவிலக்குகளை கவனித்தாலே  செவ்வாய் தோஷம் இல்லாமல் விலகிவிடும்.

         எனவே செவ்வாய் தோஷம் பற்றி பயப்பட தேவையில்லை.பொதுவாக செவ்வாய் ஒரு பாவகிரகம் என்ற வகையிலும் அவை குடும்பம்,களத்திரம் மற்றும் மாங்கல்ய ஸ்தானத்தில் இருப்பின் திருமணதடை ,மனதிற்கு ஒத்த மனைவி அமைவதில் சிரமம் என்ற வகையில் பயப்படவேண்டுமோ ஓழிய உயிர் பயம் தேவையில்லை.

நன்றி நன்றி நன்றி!

( தங்களது சாதக பலன், திருமணபொருத்தம். மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம்,மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம்)

தொடர்புக்கு

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

செல்
97 151 89 647
   740 257 08 99

My email
masterastroravi @gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com

                                      

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
  M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்.
ஒம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனையாளர்
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்..
---------------------------------------------------------------------------

No comments: