உங்களுடைய சாதகத்தில் செல்வமும்,புகழும் பெறும் யோகங்கள் உண்டா ?
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 73 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்.
ஒருவருடைய சாதகத்தில் முதலில் விதியை (லக்கனத்தை) அடிப்படையாக யோகங்களை பார்க்கவேண்டும்.விதி சரியில்லையெனில் மதியை (ராசியை லக்கனமாக கொண்டு) பார்க்கவேண்டும்.
இந்த விதியும்,மதியும் சரியில்லையென்றாலும் இறுதியில் கதியை அடிப்படையாக (சூரியன் இருக்கும் இடத்தை லக்கனமாக கொண்டு) கொண்டு யோகங்களை ஆய்வு செய்யவேண்டும்.
பொதுவாக ஒருவருடைய சாதகத்தில் விதி,மதி மற்றும் கதி என மூன்று கோணங்களில் ஆய்வு செய்து யோகங்களை பார்த்து அதில் செல்வமும்,புகழும் அடையும் யோகங்கள் உண்டா ? என பார்க்கவேண்டும்.இப்பதிவில் அந்த யோகங்களை எவ்வாறு பார்ப்பது என ஆராய்வோம்.
ஒருவரது சாதகம் யோக சாதகமாக அமைய அவரது சாதகத்தில் குரு பகவான் லக்கனத்தினையோ ,ராசியையோ அல்லது இவ்விரு அதிபதிகள் ஆகிய ஏதேனும் ஒன்றின் மீது பார்வை பெற்று இருக்கவேண்டும்.
திரிகோண அதிபதிகளும்(1,5,9),கேந்திர அதிபதிகளும் (1,4,7,10) பலம்பெற்று தங்களுக்குள் பரிவர்தனை பெற்றிருக்கவேண்டும். உபஜெய ஸ்தானமான 3,6,9,11 போன்ற இடங்களில் பாவிகள் இடம்பெற்று பலம்பெற்று சுபர் பார்வை பெறவேண்டும்.
கேந்திர அதிபதிகள் சுபராக வரும் பட்சத்தில் அவை கேந்திரங்களில் இல்லாமல் திரிகோணங்களிலோ அல்லது மறைவிடங்களிலோ இருந்து சூட்சும வலு பெற்றிருககவேண்டும்.பாவிகளாக இருப்பின் கேந்திரங்களில் இருக்கலாம்.
பாதகாதிபதிகள் நேர் வலுபெறமால் சூட்சும வலுபெறப்படவேண்டும்.சர ராசிக்கு 11-ம் அதிபதி,ஸ்திரத்திற்கு9-ம் அதிபதி,உபயத்திற்கு 7-ம் அதிபதி பாதகாதிபதியாகும்.
லக்கனம் ,ராசி மற்றும் சூரியனுக்கு பத்தாம் அதிபதி அல்லது பத்தாம் பாவத்திற்கு அதாவது விதி,மதி மற்றும் கதி இதனுடைய பத்தாம் பாவத்திற்கு குருவின் பார்வையானது விழவேண்டும்.
இதனுடைய அதிபதிகள் அதாவது லக்கனம் மற்றும் ராசி மற்றும் சூரியன் இருக்கும் இடத்தின் அதிபதிகள் உச்சம்,ஆட்சி ,திரிகோணம் போன்ற பலம்பெற்றிருக்கவேண்டும்.
ஒருவனுடைய சாதகத்தில் ஆணிவேரான லக்கனாதிபதி பலம்பெற்று இதனுடன் தனத்தை தரும் இரண்டாமிடமும் ,பாக்கியத்தை அல்லது வருமானத்தை தரக்கூடிய ஒன்பதாமிடம்,ஜீவனத்தை தரக்கூடிய பத்தாமிடம் மற்றும் லாபத்தை தரக்கூடிய பதினொறாமிடம் ( 1,2,9,10,11) ஆகிய இவற்றின் அதிபதிகள் பலம்பெற்று சுபர் சேர்க்கை,சாரம் மற்றும் பார்வை பெற்று தங்களுக்குள் பரிவர்தனை பெற்றிருக்கவேண்டும்.
மேற்கண்ட அதிபதிகளில் யாராவது ஒருவர் லக்கனம் அல்லது ராசிக்கு பத்தில் இருந்தாலும் அல்லது பத்தாம் பாவத்தை பார்த்தாலும் ஏதாவது ஒரு துறையில் புகழ் அடைவார்கள்.
சுக்கிரனும்,குருவும் ஆட்சி பெற அதற்கு ஏழாமிடத்தில் பலமான கிரகம் இருப்பது.
லக்கனாதிபதி இருக்கும் இடத்திலிருந்து 1-5-9 ஆம் ராசிகளில் எவை ஸ்திர ராசியாக வருகிறதோ அதுவே புகழ்தரும் லக்கனம் என குமார சுவாமியம் கூறுகிறது.
ராகுவுடன் வேறு ஒரு கிரகம் ஆட்சி பெறாமல் அமைய இருபுறமும் சுபர் இருப்பது.
குருபகவானுக்கு ஏழில் புதன் இருக்க இருவரும் பலம்பெற இருபுறமும் சுபர் இருப்பது.
நான்கு சுபர்கள் பதினொன்றாம் பாவத்தில் இருப்பது.
லக்கனம் அல்லது ராசியானது வர்க்கோத்தமம் பெற்று இருந்தாலும்,சூரியனுக்கு இரண்டில் சுப கிரகம் இருந்தாலும் அவை உச்சம் ஆட்சி போன்ற பலமாக இருந்தாலும் இதற்கு" காரகயோகம்"ஆகும்.இந்த யோகம் பெற்றவர்களுக்கு புகழும்,செல்வமும் தேடி வரும்.
ஓன்பது மற்றும் பத்துக்குடையவன் சேர்க்கை பரிவர்தனை மற்றும் சமசப்தம பார்வை பெற்று "தர்ம-கர்மாதி யோகம்"பெற்று அந்த திசையே நடப்பதும் யோகங்களை தரும்.
பஞ்ச மகா யோகங்களை பெற்று இருப்பது(குரு ,புதன்,சனி,செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆட்சி,உச்சம் பெறுவது)சனி-சசகயோகம்
செவ்வாய்-ருசகயோகம்
புதன்-பத்ரயோகம்
சுக்கிரன்-மாளவீகாயோகம்
குரு-ஹம்சக யோகம்.
இதுபோன்ற பலவிதயோகங்கள் உள்ளது.
சோதிடம் என்பது சமுத்திரம் ஆகும்.அதில் அள்ள,அள்ள குறையாத பல முத்துக்கள் மறைந்திருக்கிறது.முழுவதையும் யாராலும் விளக்கமுடியாது.இதற்கு பரம்பொருள் அருள் தேவை.எனவே மேற்கண்ட பதிவில் ஒருவருடைய சாதகத்தில் உள்ள யோகங்களை காண்பதற்கான அடிப்படை விதிகளை மட்டுமே கூறியுள்ளேன்.அடுத்தடுத்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.தொடரும்....
(தங்களது சாதகங்களிலும் செல்வமும்,புகழும் அடையும் யோகங்கள் உண்டா? என்பதை போன் வழியாகவே வீட்டிலிருந்தபடியே எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.விவாக பொருத்தங்கள் பார்க்கப்படும்.கட்டணங்கள் மற்றும் இதர விவரஙகளை பெற எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647
க்கு மெஸ்ஸேஸ் மூலம் விவரங்களை பெறலாம் அல்லது கால் செய்து விபரங்களை பெறவும்)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன் M.SC,MA,BEd.
ஓம் சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Mail;masterastroravi@gmail.com
செல் : 97 151 89 647
740 257 08 99
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com.
AstroRavichandransevvai. blogspot. com
No comments:
Post a Comment