Sunday, 17 June 2018

கல்வி செல்வம் யாருக்கு ?-சோதிட விளக்கம்

கல்வி செல்வம் யாருக்கு?


கிரகங்கள் படுத்தும் பாடு- (74 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை;
**************************
              ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான செல்வம் கல்வி செல்வம் மட்டுமே.
ஒரு பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கட்டாயம் வழங்க
வேண்டிய செல்வம் ஏனைய செல்வங்களை விட கல்விச்செல்வமே ஆகும்.

             எனவேதான் வான்புகழ் கொண்ட
திருவள்ளுவர் கூட
"கேடில்விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றவை  யவை "
          என கல்வியின் சிறப்பை விளக்கியுள்ளார்.

நமது முன்னோர்கள் கூட
"கற்றோர்க்கு சென்ற இடமல்லாம் சிறப்பு " எனறனர்.

           இவ்வளவு சிறப்பு வாய்ந்த கல்வியில் சிறக்க அவனது ஜாதகத்தில் குரு,புதன் ,சனி,செவ்வாய்,சுக்கிரன் போன்ற கிரகங்கள் சிறப்பு நிலை பெற்று இருக்க வேண்டும்.

           அடுத்து அவனது ஜாதகத்தில்
வாக்காதிபதி எனப்படும் இரண்டாமிடம்,கல்விக்கு அதிபதி
எனப்படும் நான்காமிடம், புத்திஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடம் போன்ற மூன்று ஸ்தானங்களும்,அதன் அதிபதிகளும் பலம் பெற்று இருக்கவேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக லக்கனாதிபதி வலுப்பெற்றிருக்கவேண்டும்.

          ஒரு மனிதன் அடிப்படை கல்வியில் சிறக்க இரண்டாமிடமும்,
உயர்நிலைகல்வியில் சிறக்க நான்காமிடமும்,
இளங்களை,முதுநிலை கல்வியில்
சிறக்க ஒன்பதாமிடமும் சிறக்க வேண்டும்.

          மேற்கண்ட ஸ்தானங்களும் மற்றும் அதன் அதிபதிகளும் பலம்பெற்று சுபர்பார்வைப்பெறவேண்டும்.

          ஒருவன் தான்பெற்ற கல்வியால் பெயரும்,புகழும் பெற மூன்றாமிடம் பலம் பெறவேண்டும்,

        தான்பெற்ற கல்வியால் புகழடையவும்,படிப்புக்கேற்ற தொழில் புரிய பத்தாம் இடம் பலமடைந்திருக்கவேண்டும்.

           தான் கற்ற கல்வியால் பணம் ஈட்டி மற்றவர்களுக்கு தான தர்மம் செய்ய தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்றிருக்கவேண்டும்.

           கற்ற கல்வியால் வெளிநாடு சென்ற பொருளீட்ட அவரது சாதகத்தில் பதினொன்று மற்றும் பணிரெண்டாமாதிபதிகள் உச்சம்,ஆட்சி பெற்றிருக்கவேண்டும்.

   ஒருவரது சாதகத்தில் என்னதான் கல்வி கற்பதற்கான கிரகங்கள் பலமடைந்து இருந்தாலும் நடைபெறுகின்ற திசையும் ,கோசார பலன்களும் கல்வி கற்பதற்கு உகந்ததாக கல்வி கற்கின்ற காலத்தில்  இருக்குமானால்தான் ஒருவர் கற்றவராக திகழ இயலும்.
பொதுவாக வாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம்,பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தர்ம ஸ்தானம் ஆகிய இடங்களின் அதிபதிகள்(2,4,5,9) பலப்பட்டு பாவர் கலப்பின்றி இயற்கை சுபரின் சம்பந்தம் பெற்று நின்று இந்த ஸ்தான கிரகங்களின் ஏதாவது ஒரு திசையானது நடப்பில் இருப்பின் சாதகர் கல்வி ஞானம் பெற்று வித்தகனாக திகழ்வான்.

   ஒருவரது சாதகத்தில் சூரியனும்,புதனும் இணைந்து நின்று இருவரில் ஓருவர் பங்கப்படாமல் இருப்பின் "புத ஆதித்ய யோகம்" பெற்று பல பட்டங்களை பெறுவான்.

            ஒருவரது சாதகத்தில் சூரியன், புதன்,சுக்கிரன் ஆகிய மூவரும் இணைந்து தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுப குருவால் பார்க்கப்பட சாதகர் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவான்.

                                  

என்றும் அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
     M.SC,MA,BEd(ஆசிரியர்)
ஒம்சக்தி சோதிடநிலையம்
கரம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

போன்வழியாக
ஜோதிடம் பார்க்க விரும்புவோர்
தொடர்புகொள்ளவேண்டிய

அலைபேசி :9715189647
                       740 257 08 99

வாட்ஸ்அப் எண் : 97 151 89 647
(தங்களது சாதகபலனை போன் வழியாக பெற தங்களது பிறந்ததேதி, நேரம், பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு message செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம் )

No comments: