Saturday, 2 June 2018

மணமாலை சூடும் வேளை-கிரகங்கள் ஆற்றும் பங்கு.--(2 )

மணமாலை சூடும் வேளை-கிரகங்கள் ஆற்றும் பங்கு -( 2 )


                                  
பெண் ஜாதகம்

               1. "ஆரப்பா யின்னமொரு புதுமைகேளு
அம்புலியும்,அசுரகுரு யேழில்நிற்க
கூரப்பா கிழவனுக்கு மாலையிட்டு
குமரியவள் மதனத்தால் பலரைக்கூடி
சீரப்பா செல்வனையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாளம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவள் ஸ்தானங்குலுங்க வருவாள்பாரே "

.............புலிப்பாணிசோதிடம்

பாடல் விளக்கம் : 

              ஒரு பெண் ஜாதகத்தில்
7-ம் இடத்தில் சந்திரனும்,சுக்கிரனும் கூடி நிற்க அவள்
கிழவனுக்கு மாலையிட்டு
அவனால் மனநிறைவு பெறாமல்
காமவயப்பட்டு பலரையும் கூடி
சிறப்பான புதல்வனையும்
பெற்றெடுத்து அவனை ஊரார் வியக்க தொட்டிலிட்டு ஆட்டுவதோடு ,தனது ஸ்தானம்
குலுங்க வருவாள்பாரே.

  மற்றொரு பாடல்

"சொல்லுமேழாமிடத்து
இந்து சுக்கிரன்
மெல்ல மேவினும்
மிக்க சனி குஜன்
அல்லல் தீரவே இல்லை
மனையாளும் வந்தேல் இல்லை புதல்வரே"

பாடல் விளக்கம்: 

களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனி,செவ்வாய், சந்திரன், செவ்வாய் சேர மனையாள் அமையாது.

         2:  ) . 7-ல் சனி,செவ்வாய் இருப்பின் விதவை

           3 :)ஆண்ஜாதகத்தில் 7-ல் சுக்கிரன்,செவ்வாய் கூடியிருக்க விதவை ஸ்திரியை மணப்பான்.

         4,    ).   7-ல் சுக்கிரன்,சந்திரன் கூடியிருந்து

சனி,செவ்வாய் பார்த்தால்(ஆண் ஜாதகத்தில்) விவாகமில்லை.

         5).    லக்கனம் அல்லது ராசிக்கு ஏழில் சனி,சுக்கிரன்,செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை நல்லதல்லஂசுபர் பாராவிடில் எத்தனை தாரம் வந்தாலும் சுபமாக அமையாது.

           6)  ஒரு பெண்ணின் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் பலம் பெற்று நிற்க வேண்டும். தன,சுக மற்றும் களத்திர ஸ்தானமான 2,4,7 ஆகிய இடங்கள் ஆட்சி பெற்று நின்று களத்திர ஸ்தான அதிபதியை சுப கிரகங்கள் பார்க்க அந்த பெண்ணிற்கு கோடீஸ்வர மாப்பிள்ளை அமையும்.

          7)  ஒரு பெண்ணின் சாதகத்தில் ஏழாம் இடம் சுத்தமாக இருக்கவேண்டும். "ஏழாம் இடம் சுத்தமாயின் எல்லோறுக்கும் நல்லவள் " ஆவாள்.

         8) ஒரு பெண்ணிற்கு நல்ல கணவன் அமைய அவளது சாதகத்தில் லக்கனம், இரண்டாம் இடம், நான்கு,ஏழு மற்றும் எட்டாம் இடந்கள் பலமடைந்து நின்று மங்களகாரகன் செவ்வாய் பகவான், களத்திர காரகனான சுக்கிரன் பகவான் பாவிகள் தொடர்பு அற்று பலமடைந்து நிற்க வேண்டும்.




        9)  ஒரு சிலருக்கு அவர்களது சாதகத்தில் களத்திர ஸ்தான அதிபதி அஷ்டமத்தில் சஞ்சரிக்கவும்,களத்திர காரகர் சுக்கிரன்  தனது பகை வீட்டில் நிற்கும்படி அமைந்த சாதகர் பெண்ணாக /ஆணாக இருந்தாலும் திருமணத்தை வெறுக்கும் மனநிலை உடையவராக இருப்பர்.

         10)  ஏழாம் வீட்டு அதிபதியையோ அல்லது களத்திர காரகர் சுக்கிரன் உடன் இயற்கை பாவ கிரகமான சனி,ராகு,செவ்வாய் போன்ற கிரகங்கள் ஏதோ ஒருவித தொடர்பு கொண்டு இருப்பின் அந்த பெண்ணிற்கு அந்நிய உறவில் திருமணம் செய்து வைத்தல் நன்மை பயக்கும்.

  அதேநேரத்தில் இயற்கை சுப கிரகங்களான குரு,சுக்கிரன்,புதன் மற்றும் சந்திரன் ஏதோ ஒருவிதத்தில் ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் உடனான தொடர்பு உறவில் திருமணம் செய்து வைக்க உகந்த அமைப்பாகும்.

.................தொடரும்

சோதிட பணியில்

                                       


                                           
என்றும் அன்புடன்
ப.ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd(ஆசிரியர்)
ஓம்சக்தி சோதிடநிலையம்
கரம்பக்குடி
புதுக்கோட்டை  மாவட்டம்.

அலைபேசி :9715189647
                     740 257 08 99

Whatsup no

97 151 89 647

(போன் வழியாக தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை பெறலாம்.பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்)

No comments: