Saturday, 30 June 2018

உங்களது சாதகத்தில் பூர்வீகயோகம் பற்றிய ஓர் ஆய்வு

உங்களது சாதகத்தில்   பூர்வீகயோகம் பற்றிய  ஓர் ஆய்வு.

                      

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 28 )

ஸ்ரீ பத்ரகாளியம்மன் தொடர் ஆசியோடு....
           ஒரு மனிதனுக்கு பூர்வீக சொத்து என்பது தந்தையால் சேர்க்கப்பட்ட சொத்து அல்ல.பாட்டனால் தேடப்பட்ட (தந்தையின் அப்பா) சொத்தும் அவர்களால் தேடப்பட்ட புகழும் ,புண்ணியமும் சொத்தாக பேரன்களுக்கு கிடைக்கும்.

          இந்த பூர்வீக யோகம் உண்டா ? என தெரிந்துகொள்ள திரிகோண ஸ்தானமாக கருதப்படும் ஐந்தாமிடமும்  அதில் உள்ள கிரகங்கள்  ,ஐந்தாமிடத்தை பார்க்கும் கிரகங்கள்  மற்றும்  அதன் அதிபதிகளின் பலம் மற்றும் தன்மை முதலியவற்றை கவனிக்கப்பட வேண்டும்.

.             மேலும் ஐந்தாமாதிபதி ஏறிய வீடுகளின் நிலை மற்றும்  அதனுடன் சேர்ந்துள்ள கிரகங்கள் ஆகிய விதிமுறைகளை கவனிக்கப்பட வேண்டும்.

           ஐந்தாமாதிபதி பெற்றுள்ள நட்சத்திர சாரம் மற்றும் அம்ச அடிப்படையில் ஐந்தாமாதிபதி பலம் முதலியவற்றை கவனிக்கப்பட வேண்டும்.
.
               லக்கனத்திற்கு ஐந்தாமிடத்தை கவனிப்பதுபோல ராசிக்கு ஐந்தாமிடத்தையும் கவனிக்கப்படவேண்டும்.

               மேற்கண்ட அடிப்படையில் ஆராய்சி செய்து அதற்கு பிறகு ஒரு மனிதனுக்கு பூர்வீக சொத்து பற்றி பலனுரைக்க ஒரு சோதிடர் தயாராக வேண்டும்.

              ஒரு சிலர் பூர்வீக சொத்துக்கள்  இல்லாமல் போவதற்கு காரணம்  அவரது சாதகத்தில் ஐந்தாமாவதி நீசம் பெற்று (வேறு எவ்வித சூடாசும பலன் பெறாமல் ) இருந்தாலோ அல்லது மறைவு ஸ்தானங்களில்  இருந்தாலோ இல்லாமல் செய்துவிடுகிறது.

              ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் அது அவர்களுக்கு எதிர்ப்பாக இருந்து அப்பா உறவுகளுக்கு இடையே வம்பு மற்றும் வழக்குகளில் இருப்பதற்கு காரணம் அவர்களது சாதகங்களில் ஐந்தாமாதிபதியானது எதிரி ஸ்தானமான ஆறாமிடம் ,கோர்ட்,வழக்கு மற்றும் சிறை செல்லும் ஸ்தானமான எட்டாமிடம் இவர்களின் அதிபதிகள் சோர்க்கை,பார்வை மற்றும் ஐந்தாமாதிபதி இவர்களின் நட்சத்திர சாரத்தில் நிற்பதே காரணம்  ஆகும்.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்களுக்கு சுபர் பார்வை  இருப்பின் வழக்கில் வெற்றி பெறும் யோகம் உண்டு.

                 ஒரு சிலர் ஐந்தாமாதிபதி பலம் பெற்றிருப்பதால் பூர்வீக மனை இருந்தாலும் பூர்வீக ஸ்தானமான ஐந்தாமிடத்தில் அரவுகளான ராகு ,கேது குடியேறி இருப்பின் அவர்கள் பூர்வீக மனையில் வசித்தால் சுபிட்சம் பெற முடியாது.இது போன்ற அமைப்பை பெற்றவர்கள் பூர்வீக  மனையில் வசிக்காமல் தானே அல்லது அப்பாவால் தேடப்பட்ட சொத்தில் வீடு கட்டி வசித்தல் நலம்.

                ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் அதிகம் இருந்திருந்தாலும் அவர்கள் பிறந்தபின் பூர்வீக சொத்து முழுவதும் ஒவ்வொன்றாக காலியாகி கடைசியில் இல்லாமல் செய்துவிடுவதற்கு காரணம் அவர்களது பூர்வீக ஸ்தானத்தோடு விராயாதிபதியான பணிரெண்டாமாதிபதி பார்வை மற்றும் விராயாதிபதி மற்றும் ஐந்தாமாதிபதி பரிவர்தனை.அல்லது  ஐந்தாமாதிபதி விரய ஸ்தானம் ஏறினாலோ அல்லது விராயாதிபதி ஐந்தாமிடம் ஏறினாலோ மேற்கூறிய பலன்தான் நடக்கும்.

       பரிகாரம் :
           மேற்கண்ட அமைப்பை  பெற்றவர்கள் பூர்வீக சொத்துக்களை வைத்திருக்காமல் விற்று புதிய சொத்துக்களை வாங்கிக்கொள்வது.
பூர்வீக மனையில் வசிக்காமல் இருத்தல் நலம்.

           ராகு ,கேது தொடர்பு ஐந்தாமிடத்திற்கு இருப்பின் ராகு ,கேது ஸ்தலங்களுக்கு சென்று வழிபடல்.
அல்லது கால பைரவருக்கு மிளகு தீபம்  ஏற்றல்
அல்லது துர்கையை அல்லது அனுமானை சனி கிழமை ராகு காலத்தில் வழிபடல் நலம்.


                                                     
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்,
M.SC,MA,BEd
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

  வாட்ஸ்அப்
     97 151 89 647
செல் ; 97 151 89 647
              740 257 08 99

(தங்களுக்கு போன் மூலமாக சாதக பலன் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு)

My Email:
masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandransevvai. blogspot. com

No comments: