நட்சத்திர சார பலன்
நட்சத்திர சார பலன்
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!
ஒருவரது சாதகத்தில் ஒரு வீட்டு அதிபதி பலமடைந்து இருப்பினும் அதன் நட்சத்திர சாரத்தினை பொறுத்தும் அதன் பலன் அமைகிறது.
ஒரு வீட்டு அதிபதியின் சார நாதன் அந்த வீட்டு அதிபதியினை வழிநடத்துகிறது.சாரநாதன் என்பது ஒரு கிரகம் எந்த நட்சத்திர காலில் நிற்கிறதோ அதன் அதிபதி ஆவார்.
நட்சத்திர அதிபதி ஆனவர் அந்த வீட்டு அதிபதிக்கு நட்பாக இருப்பின் அந்த திசையானது நல்ல பலன்களை சாதகருக்கு வாரி வழங்குகிறது.
ஒரு வீட்டு அதிபதியின் திசை நற்பலனை தர அந்ந கிரகம் பெற்ற சாரநாதன் பகை,நீசம்,அஸ்தங்கம் மற்றும் மறைவிடம் சென்று மறைதல் போன்ற அம்சங்களை பெறாமல் இருப்பதே நல்லது ஆகும்.
ஒரு கிரகம் அதற்குரிய காரக பலன்களை தர விடாமல் அல்லது தாமதப்படுத்தும் செயலை இந்த சாரநாதன் செய்வதுண்டு.
உதாரணமாக புத்திரகாரகன் குரு பகவான் ராகு சாரத்தில் நிற்க புத்திரசந்தானம் கால தாமதம் ஆகிறது.
இதுபோல ஒவ்வொரு கிரகத்திற்கும் சொல்லலாம்.இவை பொதுபலனேயொழிய முடிவான பலன் அல்ல.சில நேரங்களில் காரகர் இதுபோன்ற வகையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் காரகத்திற்குரிய ஸ்தான அதிபதி பாதிக்காத சூழலில் (புத்திர ஸ்தானாதிபதி) புத்திரபாக்கியத்தினை தந்துவிடுவதும் உண்டு என்பதனையும் உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்.
ஏனெனில் நான் பதிவிடும் ஒரு கோணத்தினை மட்டும் எடுத்துக்கொண்டு எதிர்வாதம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதற்காக விரிவாகவும்,அதேநேரத்தில் எளிமையாக புரிந்துகொள்ளும்படியாகவும் எனது பதினைந்து ஆண்டு சோதிட அனுபவத்தினைகொண்டு மற்றவர் பயன் தரும் வகையில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.
எனவே ஒரு கிரகம் நற்பலன்களை தர இயற்கை பாவ கிரகங்கள் சாரம் பெறாமல் இயற்கை சுப கிரகங்களின் சாரம் பெறுதல் நலம் பயக்கும்.
வேறு ஒரு கோணத்தில் பார்க்கும்போது ஒரு கிரகம் இயற்கை பாவ கிரக சாரமே பெற்றிருந்தாலும் அச்சாரநாதன் பெற்ற ஸ்தான அடிப்படையில் அவை கேந்திர, கோணதிபதியாக இருப்பின் கெடுபலன்களை தந்துவிடும் என்ற கருத்தினை திருத்தம் செய்ய வேண்டியதாகவும் உள்ளது.
ஆதலால் தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து பார்க்கும் சோதிடரின் திறமையை பொறுத்தே உங்களுக்கு கிடைக்கும் சாதக பலன் அமைகிறது. இதுபோன்ற பல வகையில் ஆய்வு செய்து குல தெய்வ ஆசியோடு சொல்லப்படும் பலன்தான் பலனளிக்கிறது.
ஆரம்ப நிலை சோதிட ஆர்வலர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய சாரநாதனை பதிவிடுகிறேன்.
அசுவதி,மகம்,மூலம்-கேது
பரணி,பூரம்,பூராடம்-சுக்கிரன்
கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்-சூரியன்
ரோகினி,அஸ்தம்,திருவோணம்-சந்திரன்
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்-செவ்வாய்
திருவாதிரை,சுவாதி,சதயம்-ராகு
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி-குரு
பூசம்,அனுஷம்,உத்ரட்டாதி-சனி
ஆயில்யம்,கேட்டை,ரேவதி-புதன்
ஒரு நட்சத்திரத்திரத்திற்கு நான்கு பாதம் வீதம் ஒரு ராசிக்கு ஒன்பது பாதம் ஆக அமைகிறது. எனவே மொத்த இருபத்தேழு நட்சத்திரத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதம் வீதம
27 × 4= 108 பாதம் ஆக அமைகிறது.
ராசி அடிப்படையில் பாரத்தால்
12 ×9=108
நன்றி
வாட்ஸ் அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email
masterastroravi@gmail.com
Google search. My website
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
.....................
No comments:
Post a Comment