நீ என்னவாக ஆக விரும்புகிறாய் ?
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
நான் ஐந்தாம் வகுப்பு வரை என்னுடைய சொந்த ஊரான செவ்வாய்பட்டியில் படித்துவிட்டு ஆறாம் வகுப்பு கறம்பக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன்.இன்று ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் போல் அல்லாமல் விவரம் அற்றவனாக ,அதேநேரத்தில் ஆசிரியர்களை மதிக்க தெரிந்தவனாக இருந்தேன்.
எனது வகுப்பில் முதன்முதலாக நுழைந்த நாகர்கோவில் ஆசிரியை எங்களிடம் கேட்ட முதல் கேள்வி "நீ என்னவாக ஆக விரும்புகிறாய் ? " இதற்கு என்னுடன் பயின்ற பீர் முகமது என்ற மாணவன் "டாக்டராக ஆக விரும்புகிறேன் " என்றான்.பின்னாளில் அவன் கசாப்பு கடையில் கறி வெட்டி விற்பவனாக ஆனான்.
"கம்யூட்டர் என்ஜினியர் ஆவேன் " என சொன்ன மாதவன் கல்லூரியில் படிக்கும் போது அப்பா இறந்துவிட்டதால் தான் சொந்தமாக செல் சரிபார்க்கும் கடை வைத்து நடத்தி முதலாளி ஆகிவிட்டான்.இவ்வாறு ஒவ்வொறுவரும் தான் சொன்ன துறைக்கு சம்பந்தமல்லாமல் வேறு வேலை பார்க்க ,"ஆசிரியர் ஆவேன் ? "என்று சொன்ன நான் மட்டுமே ஆசிரியர் ஆனேன்.
ஆசிரியர் ஆன நான் எமது மாணவர்களிடம் " நீ என்னவாக ஆக விரும்புகிறாய்? " -என கேள்வி கேட்பதில்லை.ஏனெனில்" ஒரு மனிதனை என்னவாக ஆக போகிறாய் "என்பதனை ஜெனன காலத்தில் அவரது சாதக கட்டத்தில் அமர்ந்த கிரகங்கள்தான் முடிவு செய்கின்றது.இது நூறு சதவீத உண்மை ஆகும்.இதை நான் உறுதியாகவே சொல்கிறேன்.
எவ்வாறு எனில் எனக்கு அண்ணன் முறை உள்ள ஒருவர் 2016-17 ஆம் கல்வியாண்டில் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளின் சாதகத்தினை என்னிடம் ஆய்வுக்கு எடுத்து வந்து " எனது மகள் மருத்துவம் படிக்கும் யோகம் உண்டா ?" என ஆய்வு செய்து பார்க்கும்படி கூறினார்.நான் அந்த பெண்ணின் சாதகத்தினை ஆய்வு செய்து பார்க்கும்போது மருத்துவம் பயில்வதற்கான காரகர் ஆன சூரியன்,சந்திரன்,செவ்வாய மற்றும் ராகு பகவான் ஆகியோர் பலம் இழந்து காணப்பட்டார்.மருத்துவம் பயில்வதற்கான உகந்த கிரகநிலைகளும்,திசையமைப்பும் இல்லை "என கூறியதை நம்பாமல் சென்றார்.
ஏனெனில் அவரது மகள் ஆனவள் இறுதி திருப்புதல் தேர்வில் கூட ஆயிரத்து நூறை தாண்டி மதிப்பெண் பெற்றிருப்பதால் நான் கூறிய பலனை நம்பவில்லை.அதேபோல அரசுபொதுதேர்விலும் 1125 மதிப்பெண் பெற்று விட்டாள்.அவளது இந்த மதிப்பெண்ணிற்கு மருத்துவம் கிடைக்கும் என நம்பிக்கை வந்த நேரத்தில் அரசு அறிவித்த நீட் தேர்வால் மருத்துவர் ஆகும் கனவு நிறைவேறாமல் போனது ? " என அவர்கள் வ்ருத்தத்தில் இருந்தாலும் "விதி வலியது " என்ற வகையில் மருத்துவர் ஆகும் கனவு கானல் நீர் ஆனது.ஆதலால் வேறுவழியின்றி B.sc Agri படித்து கொண்டு உள்ளாள்.
நான் சோதிடராக இருந்துகொண்டு ஆசிரியராக இருப்பதால் நான் இப்பொழுது எனது மாணவர்களிடம் "என்னவாக ஆக விரும்புகிறாய்? எனும் கேள்வியை கேட்பதில்லை.
போதிய திறமையும் ,அறிவும் இருந்தும் தொழில் செய்யலாம் என முயன்ற கண்ணன் தனது அறிவும்,திறமையும் தான் மேற்கொண்ட தொழிலிற்கு உதவாமல் கடன் மேல் கடனாக வாங்கி கடன்காரர் ஆகிவிட்டார்.பணத்தினை எண்ணி பார்க்கின்ற அளவிற்கு போதுமான திறமையும், அறிவும் இல்லாது முருகன் புதிய ஜவுளிக்கடை ஆரம்பித்து இன்று பல கோடிக்கு முதலாளி ஆகிவிட்டான்.
இங்கு அறிவு மற்றும் திறமை என்பதனை காட்டிலும் அவர்கள் இருவரது சாதகத்திலும் உள்ள தொழில் ஸ்தான அமைப்பும் மற்றும் நடைபெற்று கொண்டிருக்ககூடிய தசை அமைப்புமே இவர்களது தொழில் முன்னேற்றத்தை முடிவு செய்கிறது.
சுகந்தி நல்ல அழகு, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவள்,பிறரை அனுசரித்து செல்லும் மென்மையான தன்மை கொண்டவள் மற்றும் போதுமான வசதி வாய்ப்பை பெற்றவள் .இவ்வளவு தகுதி உடையவளாக இருந்தும் கல்யாணம் ஆகி ஒரு சில மாதத்தில் " அவனோடு எனக்கு வாழ பிடிக்கவில்லை ?" என பெட்டி,படுக்கையோடு வீடு வந்து சேர்ந்தாள்.
அவளை அழைக்க பெண் வீட்டாரும் வரவில்லை .இவளிடம் அவளது பெற்றோர்கள் "ஏம்மா எவ்வளவு கஷ்டமான சூழலாக இருந்தாலும் விட்டுகொடுத்து போக வேண்டும் என தத்துவ வார்த்தை பேசியபோது ,நீங்கள் சொல்வது சரிதான் விட்டுக்கொடுத்து போக வேண்டும்தான் ஆனால் அவன் தாம்பத்ய உறவிற்கு அருகதை அற்றவனாக உள்ளானே " என கூறியவுடன் அவர்களது தலையில் இடி விழுந்தது போல இருந்தது.
குறைவான வசதி,மாநிறம் ,பள்ளி படிப்பைக்கூட முடிக்க வசதி இல்லாத வனிதாவிற்கு அமைந்த வரன் சிறப்பாக அமைந்தது."அவளது கணவன் அவளை தரையில் நடக்கவிடாமல் தாங்குகிறானாம் ,மாமன்,மாமியாரை தனது அப்பா,அம்மா மாதிரி கவனித்து கொள்கிறான் "என ஊர் வனிதாவின் கணவனை புகழ்ந்தது.
இதுபோன்ற அமைப்பிற்கு காரணம் என்ன அவரவர் சாதக கட்டத்தில் அமைந்துள்ள லக்கன,குடும்ப ,களத்திர மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய இடங்களும் அதன் அதிபதிகளின் நிலைகளும் ஆகும்.இவை மட்டுமல்லாமல் காமகிரகம் செவ்வாய், களத்திர காரகர் சுக்கிரன் மற்றும் அலிக்கிரகமான புதன் போன்றவைகளும் காரண கர்த்தா ஆகிறார்.
இவ்வாறு வாழ்வில் நம்மை சுற்றி நடந்த பல சம்பவங்களையும்,அனுபவங்களையும் பார்க்கின்றபோது ஒரு சிலர் தாம் எண்ணியதுபோல ,முயன்றதை போல ஆக இயலாமல் , உருவாக இயலாமல் ஆனதற்கான காரணங்களை ஆய்வு செய்து பார்ப்பின் அவர்களது சாதக கட்டத்தில் கிரகங்கள் நடத்தும் கோளாட்டமே " காரணம் ஆகிறது எனும் உண்மை நிலை அறிந்து கொண்டால் தனது கர்மா படி தனது வாழ்வினை வருத்தப்படாமல் வாழ்ந்துவிட்டு செல்லலாம்.
நன்றி
வாட்ஸ் அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot. Google search
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai. blogspot. com
....................
..................................................................
No comments:
Post a Comment