Tuesday, 5 June 2018

மணமாலை சூடும் வேளை-கிரகங்கள் ஆற்றும் பங்கு-( 3 )

மணமாலை சூடும் வேளை-கிரகங்கள் ஆற்றும் பங்கு-(3)


                             
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

              ஒருவருக்கு திருமணம் செய்ய முயற்சி மேற்கொள்ள  வேண்டும் எனில் அவரது/அவளது சாதகத்தில் குரு நோக்கம் அவசியம் இருக்கவேண்டும்.

              ஒருவரது பிறந்த ராசிக்கு 2,5,7,9,11 போன்ற வீடுகளில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தினை (கோசார படி) குரு நோக்க காலம் என்போம்.

           இவை மட்டுமல்லாமல் ஜெனன தசை ,புத்திகள் படி உகந்த தசை மற்றும் புத்திகள் நடப்பில் உள்ளதா? எனவும் ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.

   ஒருவருக்கு திருமணத்திற்கு உகந்த திசை மற்றும் புத்திகளாக லக்கனம்,குடும்ப மற்றும் களத்திர ஸ்தான அதிபதிகளது திசை புத்திகள் நடப்பில் இருப்பின் மிகவும் நன்மை பயக்கும்.

  இவையல்லாது களத்திர காரகர் சுக்கிரன் திசை மற்றும் புத்திகளும் உகந்தவை ஆகும்.
குறிப்பாக மறைவிட அதிபதிகள்,அரவுகளான ராகு,கேது பகவான்களின் திசை மற்றும் புத்திகள் நடப்பில் இருக்கும் காலங்களில் திருமணம் செய்யாமல் இருத்தல் உத்தமம்.

      ஒரு சிலருக்கு தனம்,அழகு,அந்தஸ்து மற்றும் கல்வி அறிவு என எல்லா விதங்களிலும் நிறைவாக இருந்தாலும் முப்பத்தைந்து வயதிற்கு மேலாக திருமணம் நடைபெறாமல் காலதாமதம் ஆகி கொண்டு மனவருத்தத்தை அவரது பெற்றோர்களுக்கு  அளிப்பதை பார்க்கலாம்.

  இதுபோன்ற நபர்களது சாதகத்தினை ஆராய்ந்து நோக்கும்போது கீழ்கண்ட பல்வேறு காரணங்களால் திருமணம் கால தாமதம் ஆவது தெரிவதை காணலாம்.

    முதலில் அவர்களது சாதகத்தில் ஏழாம் அதிபதியானவர் நீசம்,மறைவு,பகை மற்றும் பாவர் தொடர்பு பெற்றிருப்பது ஒருவகையான காரணம் ஆகும்.

  இதுபோன்ற வகையில் பாதிக்கப்பட்டிருப்போர் ஏழாம் அதிபதிக்கு உகந்த கோவில்களுக்கு சென்று வழிபடல்.அவ்வித அதிபதிகளுக்கு உரிய மந்திர உச்சாடனம் செய்யவேண்டும்.
  சில நேரங்களில் லக்கன மற்றும் ஏழாமிடங்களில் அரவுகள் சம்பந்தப்பட்டு களத்திர தோஷத்தினை தந்து கால தாமத திருமணம் அல்லது திருமண உறவில் சிக்கல்கள் போன்ற வகையில் பாதிப்பினை உண்டாக்குகிறது.

       சிலநேரங்களில் இரண்டாம் இடமான குடும்ப மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் அரவுகளான ராகு, கேது தொடர்பு மாங்கல்ய தோஷத்தினை தருகிறது.

  இவ்வித தோஷத்திற்கு உள்ளானவர்கள் அம்பாளுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட திருமாங்கல்யம்,பூ,பொட்டு,மஞ்சள் மற்றும் பட்டு புடவையுடன் அம்பாளுக்கு தம்பதியர் இருவரும் சேர்ந்து சாத்திவிடவேண்டும்.

        லக்கன ,களத்திர ஸ்தானத்தில் ராகு, கேது தொடர்பினை பெற்றவர்களுக்கு இரண்டு மற்றும் எட்டாம் இடத்தில் அரவுகள் தொடர்பு கொண்டவர்களை திருமண பந்தத்தில் இணைக்கலாம்.
  திருமண பந்தத்தில் இணைந்து அவர்களது குடும்ப வாழ்வு சிறக்க இரண்டாம் இட அதிபதி பலமடைந்து இருக்கவேண்டும்.

  இரண்டாம் இட அதிபதியானவர் குடும்பாதிபதி மட்டுமல்லாமல் அவரது வாக்கினை நிர்ணயிக்கும் ஸ்தானமாகவும் உள்ளது.

  ஒருவர் எல்லாரையும் அரவனைத்து செல்லும் பேச்சுக்கு உடையவராக இருப்பதற்கும்,கபட,சூது ,சூழ்ச்சிகளுக்கு உட்படாத பேச்சாக அமைய சாதகரின் வாக்கு ஸ்தானம் இயற்கை சுபகிரகமாக அமைந்து வாக்கு ஸ்தானத்தில் பாவிகள் பார்வையற்றும் இருத்தல் வேண்டும்.

  லக்கனத்திற்கு எட்டாம் இடம் சாதகருக்கு ஆயுள் ஸ்தானம் ஆகும். இதேபோல சாதகரின் ஏழாம் இடத்திற்கு எட்டாம் இடமான அதாவது லக்கனத்திற்கு இரண்டாம் இடம் அவரது வாழ்க்கை துணையின் ஆயுள் ஸ்தானம் என்பதால் இவ்விரு இடங்களில் கிரகங்களே இல்லாமல் சுத்தமாக இருத்தல் நல்லது.

மேற்கண்ட இவ்விரு இடங்களில் உச்சம் பெற்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம் பயக்கும்.இதேபோல அரவுகளான ராகு, கேது தொடர்பற்று இருத்தல் நல்லது.

  களத்திர காரகர் சுக்கிரன் ,மங்களகாரகன் செவ்வாய் இருவரும் இணைவு பெறாமல் இருத்தல் நலம் பயக்கும். இதேபோல சுக்கிரன், செவ்வாய் உடன் சனி,ராகு சேர்க்கை அற்று இருத்தல் நல்லது.
மேற்கண்ட வகையில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் திருமண வைபவங்களை கோவில் ஸ்தலங்களில் நிகழ்த்துதல் நலம் பயக்கும்.

நன்றி

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

  வாட்ஸ் அப்
  97 151 89 647

      செல்
   740 257 08 98
      97 151 89 647


                            


     அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
   M.Sc,MA,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blogspot. Google search
   AstroRavichandran. blogspot. com
   AstroRavichandransevvai.blogspot. com
.........

No comments: