மணாளனே மனைவியின் பாக்கியம்"
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு பெண்ணுக்கு ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் கணவனே முதன்மையான உறவு ஆகும்.
என்னதான் சகோதரர்களால் உதவியும்,அன்பும் கிடைத்தாலும்,
பெற்றோர்களால் பெருமையும்,மகிழ்ச்சியும் பெற்றாலும் ஒரு கணவனால் கிடைக்கப்பெறும்
சமூக மரியாதைக்கு ஈடாகாது.
சபையில் பூ,பொட்டுடன் தலை நிமிர்ந்து செல்வதற்கும்,மங்கள
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்குரிய பெருமையையும்,
மாரியாதையையும் தரக்கூடிய ஒரே ஒரு உறவு வேறு யாராலும் தரமுடியாததுமான ,
ஈடுகட்ட முடியாதது "கணவன் " என்ற பந்தமே ஆகும்.
எனவேதான் பெரியோர்கள்
"கல்லானலும் கணவன், புல்லானாலும் புருஷன் "
என்றார்கள்.
சிலரது ஜாதகங்களில் இந்த புனிதமான உறவை இழக்கும் சூழல்
இளமையிலேயே ஏற்பட்டு விடுகிறது.
இக்கருத்தை விளக்கும் சாதக அலங்கார பாடல்
"எழிலொன்பான் மனைக்கதிபன் ரவியுடன் கூடில் பாக வியமொட்டாறைப்பற்றில் ஒன்பான்
மனையோன் பரிந்திருந்த வீட்டோனைப் படியிருக்கில் விதவை "
பாடல் விளக்கம் :
பாக்கியாதிபதி எனப்படும்
ஒன்பதாமிடத்திற்கு உடையவன் சூரியனுடன்அஸ்தமமாகி
6,8,12 ல் மறைந்து அவ்வீட்டோனுடன் கூடியிருப்பில் விதவையாக
வாய்ப்புகள் அதிகம்.
"இடுசெவ்வாய் கதிர் கூடி எங்கு இருந்தாலும் இவளும் வாலிபம் தன்னில் அமங்கலியாவாள்"
இதன் பொருள் ஒரு பெண்ணின் சாதகத்தில் சூரியனும்,செவ்வாயும் சேர்ந்து எங்கு இருந்தாலும் இவள் இளம் வயதில் விதவையாவாள் என்பதாகும்.
இந்த இரு பாடலின் கருத்தை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது.இந்த பாடல் மட்டுமல்ல எந்த சோதிட பாடலாக இருந்தாலும் அப்படியே பொருள் கொள்ளக்கூடாது.அதில் விதிவிலக்குகள் இருக்கும்.
இங்கே பொருத்தவரை லக்கனம், இரண்டு, ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் நிற்கின்ற கிரகங்கள் ,பார்க்கின்ற கிரகங்கள் மற்றும் அதன் அதிபதிகளின் வலு ஆகியவற்றை கவனிக்கப்படவேண்டும்.
இவை லக்கனம் மற்றும் ராசி என இருவேறு கோணத்தில் ஆராய வேண்டும்.மேலும் களஸ்திரகாரகன் சுக்கிரன் மற்றும் காமக்காரகன் செவ்வாய் இவர்கள் பாவிகளோடு சூழ்ந்து பலமிழக்ககூடாது.
இதுபோன்ற பலவகையில் ஆய்ந்தறிந்து அதனுடன் பாடலில் கூறியபடி கிரகநிலைகள் இருந்தால்தான் நாம் பாடலின் கருத்துப்படி நடக்கலாம் என முடிவுக்கு வரவேண்டும்.
இது ஆரம்பநிலை சோதிடர்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் லக்கனத்தில் இருக்கும் சனி ,செவ்வாய் ஆனது ஏழாம் இடத்தில் இருக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரனை பார்த்தாலும் இளம்வயதில் விதவையாக வாய்ப்புண்டு.இந்த அமைப்பு இரண்டு மற்றும் எட்டாம் இடத்தில் இருப்பினும் வாய்ப்பு உண்டு.
எனவே ஒரு பாடலைக்கொண்டோ அல்லது ஏதேனும் ஒரு கருத்தைக்கொண்டோ அந்த அமைப்பு சாதகத்தில் இருப்பதைக்கொண்டு விதவையாகிவிடுவாள் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதே எனது அறிவுரையாகும்.
இப்பொழுது முகநூலின் வழியாக இதுபோன்ற பதிவுகளை படித்துவிட்டு தானே ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.மருத்துவரின் ஆலோசனையின்றி."சுய வைத்தியம் எவ்வளவு ஆபத்தானதோ "அதுபோல முடிந்துவிடும். எனவே ஒரு நல்ல சோதிடரை தேடி பிடித்து அவரது ஆலோசனையோடு முடிவு எடுங்கள்..நன்றி
வாழ்க வளமுடன்
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd(ஆசிரியர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment