Thursday, 18 June 2020

சினிமா என்னும் கனவு தொழிற்சாலை

சினிமா என்னும் கனவுத் தொழிற்சாலை


                           

 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

     ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது நீண்ட நெடிய கனவாக அமைகிறது.

   குறிப்பிட்ட அந்த இடத்தை அடைவதற்கு நீங்கள் வெற்று கனவு மட்டும் கண்டால் மட்டும் போதாது.

 கவிஞர் நா.விஜய் குறிப்பிடுவது போல 
"ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்"என்கிறார்.

  மறைந்த முன்னால் ஜனாதிபதி மேதகு அப்துல்கலாம் ஐயா அவர்கள் கூட
" தூங்கும் போது வருவது கனவல்ல எந்த கனவு உன்னை தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே கனவு" என்று குறிப்பிடுகிறார்.

  இன்றைய சூழலில் எளிதாக மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படக்கூடிய மற்றும் பேரும், புகழும் அள்ளித் தரக்கூடிய துறைகளில் மிகவும்  பிரசித்திபெற்றது சினிமா துறையே ஆகும்.

 சினிமா துறையில் கோலோச்சி கொண்டிருக்ககூடிய இன்றைய புகழ்பெற்ற நடிகர்களில் பலர் அந்நிலையை அடைய சந்தித்த பிரச்சினைகளும் மற்றும் அவமானங்களும் ஏரளாம் ஆகும்.

  யாரிடம் பொறுமையும்,
விடாமுயற்சியும் இருக்கின்றதோ அவர்களே அந்த துறையில் வெற்றி பெற இயலும்.

    அதேபோல "எங்கு திறமையும் மற்றும் அதிர்ஷ்டமும்  கைகோர்த்து கொண்டு நிற்கின்ற வேளையிலே மட்டுமே "அவர்களால் சினிமா உலகில் கொடிகட்டி பறக்க இயன்றது.

   சினிமா உலகில் கொடி கட்டி பறக்க மிக முக்கியமான உன்னதமான கிரகங்களின் ஒன்றான கலை காரகன் என்று  சிறப்பாக வர்ணிக்கப்படும் "சுக்கிர பகவானின்" ஆசியும் அருளும் முழுமுதற் காரணமாகும்.

  இதனை தொடர்ந்து வித்தைக்காரன் என அழைக்கப்படும் புதன் பகவானும், மனநிலை காரகன் மற்றும் அழகியல் உணர்வுக்கு காரகன் என்று அழைக்கப்படும் சந்திர பகவானும் அடுத்த நிலைக்கு வருவார்கள்.

  சினிமா தொழில்நுட்ப உலகில் கொடி கட்டி பறக்க ராகு பகவானும் இரும்புகாரன் சனி பகவான் முக்கிய காரணகர்த்தா ஆவார்.

  ஒருவர் சினிமாவில் நடிக்கும் யோகம் எனது சாதகத்தில் உள்ளதா ? என வினா எழுப்பினாலே அவரது ஆழ்மனதில் எழுந்த வினாவாகவே அது இருக்கும்.இப்படி வினா எழுப்பும் சாதகர்களது சாதகத்தில் சுக்கிரன் பகவானது சுபத்துவ நிலையே காரணமாக இருக்கும்.ஆனால் அவர் சினிமா துறையில் கால் எடுத்து வைப்பதும் மற்றும் வெற்றியின் உச்சத்தை நோக்கி நகர்த்துவதும் அவருக்கு நடைபெற இருக்கும் தசா புத்திகளை சார்ந்தது ஆகும்.

 தொழில் நிலை ஸ்தானமாகிய பத்தாம் இடத்துடன் சுக்கிரன் பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து நின்று வேறு எந்த வகையிலும் பங்கப்படாமல் சுக்கிரன் திசை நடப்பில் உள்ள காலங்களில் ஒருவர் சினிமா என்னும் கனவு தொழிற்சாலையில் கால்பதிக்க மெல்ல மெல்ல முயன்று உயரிய நிலையினை அடைய முடியும்.

 சுக்கிரன்  ஆனவர் நீசம்,வக்கிரம் மற்றும் பகை போன்ற நிலைகளில் கேந்திரத்தில் நின்று பலம் இழந்திருப்பினும் வளர்பிறைச் சந்திர கேந்திரத்தில் நின்றால் அல்லது இயற்கை சுப கிரகங்கள் பார்வை பெற்றாலும்  சுக்கிரன் தன் இழந்த வலிமையை விட மிகுந்த பலத்தை அடையும்.

  ஒருவர் சினிமா துறையில் கதை, திரைக்கதை ,வசனம்,
இசை மற்றும் பாடல்கள் போன்ற சினிமா துறையினை நோக்கி ஆர்வப்படவும் மற்றும் அந்த துறையில் சாதிக்கவும் புதன் பகவான் மிகவும் இன்றியாமையான கிரகம் ஆகும்.

 யார் ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் உச்சம் , மூலத்திரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று சுபத்துவ நிலையில் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும்போது மேற்கண்ட வகையில் சினிமாத்துறையை நோக்கி தனது பயணத்தை அடியெடுத்து வைக்கிறார்கள்.

 ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் பலமடைந்து தொழில் ஸ்தானத்துடன் ராகுபகவான் தொடர்பு பெற நவீன கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இசையமைக்கும் இசையமைப்பாளராக திகழ்வார்.

  சினிமாவில் சிறந்த நடன நாட்டிய மங்கையாக திகழ அவரது ஜாதகத்தில் கலைகாரகன்  சுக்கிர பகவானும் , அழகியல் மற்றும் முகபாவனை காரகனான சந்திரனும் பலம் பெற்றிருக்க வேண்டும்.

    சுக்கிர பகவான் சனி செவ்வாய் ராகு போன்ற பாவ கிரக தொடர்பு பெரும் நிலையில் கவர்ச்சி நடன நாட்டிய மங்கையாக சினிமாவில் வருவார்.மாறாக சுபத்துவ நிலையில் நல்ல நடன நாட்டிய மங்கை யாக திகழ்வார்.

  ஒருவர் இயக்குனர் துறையில் கொடிகட்டி பறக்க அவரது ஜாதகத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிர பகவான் பலம் பெற்று தொழில் ஸ்தானத்துடன்  தொடர்பு கொண்டு அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் அவரால் எடுக்கப்படும் படங்கள் வெள்ளிவிழா படங்களாக அமைந்து நல்ல வசூலையும் ,புகழையும் அவருக்கு ஈட்டித்தரும்.

 ஒருவரது ஜாதகத்தில் கலைகாரகன் சுக்கிரன் மற்றும் வித்தைக்காரர் புதன் பலம் பெற்று நல்ல சுபத்துவ நிலையில் இருந்தால் சிறந்த ஆர்ட் டைரக்டராக திகழ்வார்.

 புதன் பகவான் இயற்கை சுப கிரகங்கள் தொடர்பு பெற்று சுபத்துவ நிலையில் அமரும்பொழுது நல்ல கதை அமைப்போடு பின்னிப்பிணைந்த கருத்துள்ள பாடல்கள் எழுதும் கவிஞராக திகழ்வார். புதன் பகவான் சனி ,செவ்வாய் ,ராகு போன்ற பாவ கிரக தொடர்பு பெற்று நிற்பின் காமரசம் மிகுந்த பாடல்களைத் எழுதக்கூடிய கவிஞராக வலம் வருவார்.

ஒருவர் ஜாதகத்தில் கலைக்கு காரகன் சுக்கிரன் பகவான் நல்ல நிலையில் அமர்ந்து பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இருக்கின்ற அமைப்பு பெற்றவர்கள் சிறந்த ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வருவார்கள்.

ஒரு ஜாதகத்தில் புதன் பகவான் பலம்பெற்று ராகு சாரம் அல்லது வேறு ஏதாவது தொடர்பு பெற எடிட்டிங்  போன்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் திரைக்குப் பின் நின்று பேரும் புகழும் அடைவார்கள்.

 ஒருவரது ஜாதகத்தில் 
2, 9, 10, 11 போன்ற இடங்கள் பலம் பெற்று ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்ற நிலையில்  அவர் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் அமர்ந்திருக்கும் அமைப்பை பெற்றவர்கள் கோடிக்கணக்கான பணத்தினை முதலீடு செய்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களாக திகழ்வார்கள்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647

     செல்
   9715189647
    7402570899

                    ‌

  அன்புடன் 
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email; masterastroravi@gmail.com

My blog.click here

www.astroravichandran.blogspot.com

www.astroravichandransevvai.blogspot.com

.........

No comments: