சூரியன் திசை பலன்கள்....
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!
ஒரு ஜாதகத்தில் யோகங்கள் பல இருந்தாலும் அந்த யோகங்கள் நடக்கக்கூடிய தசை நடப்பில் வரும் காலங்களில் மட்டுமே தான் அந்த யோக
பலாபலன்களை அனுபவிக்க இயலும்.
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் ஒளி நிறைந்த கிரகமான சூரிய பகவானை "ஆத்மகாரகன்" என்றும், "பிதுர் காரகன்" என்றும் அழைக்கப்படுகிறது.
சாதகத்தில் சூரியனை மையமாகக் கொண்டே எல்லா கோள்களும் சுற்றி வருகின்றன.
ஜாதகத்தில் சூரியன் பகவானை பலமாக பெற்றவர்கள் தலைமையேற்று வழி நடத்தி செல்லும் ஆற்றல் இயல்பாக அவர்களிடம் நிறைந்திருப்பதை காணலாம்.
இயல்பாகவே சூரியனை பலமாக பெற்றவர்கள் ஓர் இடத்திற்கு செல்லும்பொழுது அவர்கள்,
மற்றவர்களிடம் அவர்களை அறியாமலேயே வேலை வாங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பார்கள்.
சூரிய பகவானை பலமாக பெற்றவர்கள் தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவினை நிரம்ப பெற்றவர்கள் ஆவர்.
சாதகத்தில் சிம்ம லக்கனம் மற்றும் சிம்ம லக்கின அதிபதியான சூரியனும் பலம் பெற்ற அமைப்பு பெற்றவர்கள் சூரிய திசை நடைபெறும் காலங்களில் அல்லது சுபத்துவமான திசை நடக்கக்கூடிய காலங்களில் அரசாங்க வேலை பார்க்க கூடிய யோகம் கட்டாயம் அமையும்.
பொதுவாக சூரியன் திசை நடைபெறும் காலங்களில் நல்ல பலன் நடக்க வேண்டுமாயின் சூரிய நட்பு கிரகங்களான குரு, சந்திரன், செவ்வாய் மற்றும் கேது போன்ற கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு அக்கிரகங்களின் வீடுகளான தனுசு, மீனம் மேஷம் , விருச்சிகம் மற்றும் கடகம் ஆகிய வீடுகளில் இடம் பெற்று நிற்பின் யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.
மாறாக சூரியன் பகவான் சுக்கிரன்,சனி,புதன் போன்ற வீடுகளில் இடம்பெறும் போது கெட்ட பலன்களை அதன் திசை நடைபெறும் காலங்களில் தருகிறது. அதே நேரத்தில் நற்பலன்களை மேற்கண்ட வீடுகளில் தர வேண்டுமாயின் சூரியன் நட்பு நிலையில் உபஜெய ஸ்தானமான 3,6,10 மற்றும் 11 ஆம் வீடுகளில் நின்று இருக்க வேண்டும்.
சூரியன் உச்சம் ,ஆட்சி மற்றும் நட்பு போன்ற நிலைகளில் கோணங்களில் இடம்பெற்று இயற்கைச் சுபக்கிரகங்களால் பார்க்கப்பட்ட நிலையில் அதன் திசை காலங்களில் மிகுந்த யோகத்தை தருகிறது.
சூரியன் பகவான் ஆனவர் சனி , சுக்கிரன் ,புதன் மற்றும் ராகு பகவானுடன் சேரும் பொழுது நற்பலன்களை தர வேண்டுமாயின் வளர்பிறைச் சந்திரன், குரு மற்றும் சுக்கிரன் தொடர்பு பெறும்பொழுது மட்டுமே தருகிறது.
சூரிய திசை காலங்களில் மிகுந்த இன்னல்களை அனுபவிப்பவர்கள் கீழ்க்கண்ட அமைப்பை பெற்றவர்களாக இருப்பார்கள்.
1) சூரியன் பகவான் துலாத்தில் நீசம் பெற்று இருப்பதால்,
2) சூரியன் பகவான் மகரம் மற்றும் கும்பம் வீடுகளில் பகை பெற்று நின்று இருந்தால்,
3) சூரிய பகவான் 6, 8, 12 ஆம் வீடுகளில் நின்று இருந்தால்
மேற்கண்ட காரணங்களால் சூரிய திசை நடைபெறும் காலங்களில் மிகுந்த இன்னல்களை சாதகர் அனுபவிக்க நேரிடும்.
விதிவிலக்காக மேற்கண்ட அமைப்பினை வளர்பிறை சந்திரனின் பார்வை பெற்றோ அல்லது குரு மற்றும் சுக்கிரன் தொடர்பை எவ்விதத்திலும் பெற்றிருப்பின் கெட்ட பலன் நீங்கி நல்ல பலனை சூரிய திசை காலங்களில் தருகிறது.
பொதுவாக ஒளி கிரகமான சூரியனுடன் இருள் கிரகமான சனி மற்றும் ராகு போன்ற கிரகங்கள் தொடர்பு பெறாமல் இருந்தால் நல்லது ஆகும்.
சூரிய பகவானுடன் நிழல் கிரகமான சனிபகவான் இனைவு மற்றும் பார்வை தந்தை மற்றும் மகன் உறவு நிலையில் அதன் தசை காலங்களில் மிகுந்த பாதிப்பை கீழ்க்கண்ட வகையில் உண்டாக்குகிறது.
1) ஒரு சிலருக்கு தந்தை இருந்தும் பயனற்ற நிலை அல்லது பிரிந்து வாழும் சூழல் ஏற்படும்.
2) தந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்க நேரிடும்.
3) தந்தை பொருள் தேடும் பொருட்டு மகனை விட்டு பிரிந்து நீண்ட காலம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலும் வசிக்கும் நிலைமை உருவாகலாம் அல்லது மகன் தந்தையை விட்டு படிக்கும் நிமித்தம் காரணமாக பிரிந்திருக்க கூடிய சூழ்நிலை உருவாகும்.
4) ஒரு சிலருக்கு தந்தையே இளவயதில் கர்மம் செய்யும் நிலை உருவாகலாம்.
சூரிய பகவானுடன் இருள் கிரகமான ராகு பகவான் இணையும் பொழுது ஒளி கிரகமான சூரியனையே கிரகண தோஷத்தால் மறைக்கின்ற நிலைமை காரணமாக ராகு பகவானை சூரியன் அஸ்தங்க தோஷம் அடைய வைப்பது இல்லை.சூரியன் பலவீனம் அடைவதால் அதன் காரக பலன்களை தருவதில்லை.
சூரிய பகவானுடன் சுக்கிர பகவான் இணையும் பொழுது அதன் தசை காலங்களில் தாம்பத்திய சுகத்தை அடையக்கூடிய தன்மை உடையவராக திகழ்வார்.
சூரிய பகவானுடன் செம்பாம்பு என்றழைக்கப்படும் கேது பகவான் இணையும்போது ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய வைக்கிறது.
புதன் பகவானுக்கு சூரிய பகவான் அதி நட்புக் கிரகம் என்பதால்
சூரியன்+ புதன் இணைவு "புத ஆதித்ய யோகம்" என்ற யோகத்தை தந்து ஜாதகரை பல பட்டங்கள் பெரும் கல்விமானாக உயர்த்துகிறது.
சூரிய பகவானுடன் நட்புக் கிரகமான குருபகவான் தொடர்பு "சிவராஜ யோகத்தை" தருகிறது.
சூரிய பகவான் தரக்கூடிய ஒளியை குருபகவான் இருமடங்கு பிரதிபலிக்க செய்வதால் சிவராஜயோகம் மிகுந்த நற்பலன் அளிக்கிறது.
சூரியன் பகவானுடன் நட்பு கிரகமான செவ்வாய் இணைய ஜாதகர் மிகுந்த தன்னம்பிக்கை உடையவராக, சாதிக்கக்கூடிய ஆற்றல் மிக்கவராக துணிச்சலும் அடாவடித்தனம் நிறைந்தவராக காணப்படுவார்.
சூரிய பகவானுடன் சந்திரன் இணைவு அமாவாசை யோகத்தையும் மற்றும்
சூரியன் , சந்திரன் சமசப்தமமாக பார்த்துக் கொள்ளக் கூடிய அமைப்பு பௌர்ணமி யோகத்தையும் சாதகர்களுக்கு தருகிறது.
யோகங்களில் தலை சிறந்த யோகமாக "பொளர்ணமி யோகம்" கருதப்படுகிறது. பௌர்ணமி யோகம் பெற்றவர்கள் சூரிய திசை காலங்களில் மிகுந்த யோக பலனை அனுபவிக்கிறார்கள். ஆன்மீக சாதனைகளில் சிறந்த அமைப்பு உடையவர்களாக திகழ்வார்கள்.
சூரிய தசை கால அளவு 6 ஆண்டுகள் ஆகும்.
சூரிய தசை சூரிய புக்தி
( 3 மாதங்கள் மற்றும் 18 நாட்கள்)
எந்த ஒரு திசையும் முழு நன்மையைப் பெற வேண்டுமாயின் அதன் சுய புத்தி நல்ல பலனைத் தருவதில்லை.
சூரியதசை சந்திரன் புத்தி
(6 மாதங்கள் 0 நாட்கள் )
ஒளி கிரகமான சூரியனிடமிருந்து ஒளி வாங்கிப் பிரதிபலிக்கும் நட்பு கிரகமான சந்திர புத்தி மிகுந்த யோக பலனை தருகிறது.
சூரிய தசை செவ்வாய் புத்தி
(4 மாதங்கள் மற்றும் 6 நாள்கள்)
சூரியனுக்கு நட்புக் கிரகமாக செவ்வாய் விளங்குவதால் அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலனை தரும்.
சூரிய திசை ராகு புத்தி
(10 மாதங்கள் மற்றும் 24 நாள்கள்)
சூரிய தசையில் ராகு புத்தி தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். பொருளாதாரத்தில் தாழ்வு நிலை உண்டாகும், அரசு வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
சூரிய தசை குரு புத்தி
(9 மாதங்கள் மற்றும் 18 நாட்கள்)
சூரியன் நட்பு கிரகமான குரு பகவான் புத்தி காலங்களில் மிகுந்த யோக பலனை சாதகருக்கு வழங்குகிறது.
சூரிய தசையில் சனி புக்தி
(11 மாதங்கள் மற்றும் 12 நாட்கள்)
சூரிய தசையில் சனி புத்தியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு நிலையில் பிளவு ஏற்படலாம். தந்தைக்கு உடல்நிலை குறைவால் பொருளாதார சிக்கல்களை உண்டாக்கும்.
சூரிய தசை புதன் புத்தி
( 10 மாதங்கள் மற்றும் 6 நாள்கள்)
சூரியனின் அதி நட்பு கிரகமான புதன் பகவான் புத்தி காலங்களில் கல்வி நிலையில் உயர்வு ஏற்படலாம்.
சூரிய திசை கேது புத்தி
(4 மாதங்கள் மற்றும் 6 நாட்கள்)
குரு திசை கேது புத்தி காலங்களில் ஆன்மிகம் சார்ந்த சிந்தனையில் ஜாதகரை வழிநடத்தி செல்லும்.
சூரிய தசையில் சுக்கிர புத்தி
(1 வருடம் 0 மாதங்கள் 0 நாட்கள்)
சூரியன் பகை கிரகமான சுக்கிரன் புத்தியில் இல்லற வாழ்வில் சிக்கல்கள், தடைகள் உண்டாகும்.
சூரிய திசை காலங்களில் நிகழும் இன்னல்களைப் போக்க தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார் கோவில் திங்கள் அன்று வழிபட வேண்டும்.
மாணிக்கம் கல் பதித்த மோதிரத்தை கையில் அணிந்து கொள்ளலாம்.
காலையில் தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்து வரலாம்.
நன்றி.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
புதுக்கோட்டை மாவட்டம்
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
Email,
masterastroravi@gmail.com
My blog.click here
www.AstroRavichandran.
blogspot.com
www.AstroRavichandransevvai.blogspot.com
...... ..... ....... ....... ...... .......
No comments:
Post a Comment