முன்னேற்ற பாதையிலே அடியெடுத்து வைக்க....
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
எல்லா சராசரி நிலையிலுள்ள மனிதர்களுக்கும் மனதில் எழும் கேள்வி
" எப்பொழுது வாழ்வில் நான் முன்னேற்றம் அடைவேன்?" இதற்கு விடை தேடும் முயற்சியில் சாதக அடிப்படையில் ஆராய்ந்து நோக்கி பார்த்தால் கிடைக்கும் முடிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
"ஒருவர் வாழ்வில் பலமுறை அறிவுடன் போராடி முயற்சி செய்தாலும் வெற்றியடையாமல் தோல்வியை தழுவுவதையும் ஆனால் அதே நேரத்தில் ஒருசிலர் எவ்வித முயற்சியும் தகுந்த வழியில் சரியான முயற்சி மேற்கொள்ளாமல் எளிதில் வெற்றி அடைவதையும் தினந்தோறும் காணும்போது அதற்கான காரணத்தை ஆராய்ந்து நோக்கும்பொழுதும் நமக்கு விடையாக கிடைப்பது பெரியவர்கள் அடிக்கடி கூறும் வசனமான "எல்லாவற்றிற்கும் காலநேரம் வேண்டுமென்பதே" சரியான பதிலாக அமைகிறது.
எப்பொழுது எல்லோருக்கும் காலம் நேரம் சரியாக அமையும் என்பதை தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஆசையா தான் இருக்கும்.
ஒருவர் வாழ்வில் தொட்டதெல்லாம் துலங்குவதற்கும் 'எதிர்பாராமல் முன்னேறுவதற்கும் அவரது சாதகத்தில் நடைபெறும் உகந்த தசா புத்திகளே காரணமாக அமைகிறது.ஒருவர் சாதக கட்டத்தில் யோகமான அமைப்புக்கள் இருந்தாலும் அந்த தசா நடப்பில் வரும் காலங்களில் மட்டுமேதான் யோக பலன்களை அனுபவிக்க இயலும்.
ஒருவருக்கு நல்ல நேரம் வந்தால்
"நரி ஆடு'வோடு மேயும்" மாறாக கெட்ட நேரம் வந்தால்
" புடலங்காயும் பாம்பாக தெரியும்" என்பார்கள்.
ஒருவர் முன்னேற்றப்பாதையில் செல்ல "அவரது ஜாதகத்தில் வழிநடத்திச் செல்லக்கூடிய கேப்டனாகிய லக்கினாதிபதியும், முயற்சி ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தானம் என்றெல்லாம் புகழப்படும் மூன்றாம் அதிபதியும் பலம் பெற்று ஒன்றுக்கொன்று பார்வை சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை மூலம் பலம் பெற்றிருக்க வேண்டும்.இயற்கை சுப கிரகங்களது பார்வையை பெற வேண்டும். அதன் தசா புத்தியும் உரிய வயதில் வந்து யோகத்தை தர வேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் பெரும் கேந்திர ஸ்தானமான பத்தாமிட அதிபதியும் , பெரும் திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இட அதிபதியும் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நின்றாலோ அல்லது சேர்க்கை அல்லது பார்வை பெற்று நின்றாலும் "தர்ம-கர்மாதிபதி "யோகம் எனப்படும்.
தர்ம-கர்மாதிபதி பெற்ற இரு கிரகங்களும் வேறு எந்த வகையிலும் பங்கப் படாமல் இருக்க வேண்டும்.இவ்விரு கிரகங்களில் ஏதாவது ஒன்று பலவீனப்பட்டாலும் யோக பங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தர்ம-கர்மாதி யோகம் பெற்ற நபரது ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி திசையோ அல்லது பத்தாம் அதிபதி திசையோ நடப்பில் உள்ள காலங்களில் சாதகர் முன்னேற்ற பாதையினை நோக்கி அடியெடுத்து வைக்ககூடிய அதிர்ஷ்டம் அமைகிறது.
அடுத்தபடியாக சந்திராதி யோகம் பெற்றவர்கள் அதன் திசை காலங்களில் யோக பலனை அளிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.
சந்திராதி யோகம் என்பது"
சந்திரனுக்கு 6,7,8 -ல் இயற்கை சுப கிரகங்கள் இடம் பெறுவதாகும்.
சந்திராதி யோகம் என்பது ஒளி அளவை அடிப்படையாகக் கொண்ட யோக பலனாகும். இந்த யோகம் முழுமையாக வேலை செய்ய சந்திரன் பங்கப் படாமல் இருக்க வேண்டும் .சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்து , சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் இயற்கை சுப கிரகங்கள் இருந்து மேற்கண்ட ஸ்தானங்களில் உள்ள ஏதாவது ஒரு கிரக திசை நடைபெறும் காலங்களில் சாதகர் முன்னேற்றப்பாதையில் அடி எடுத்து வைக்கும் யோக தசையாக அமையும்.
சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும்பட்சத்தில் சந்திரனுக்கு 6, 7 , 8 ஆம் இடங்களில் பாவக்கிரகங்கள் இருந்தாலும் அதை திசை நடைபெறும் காலங்களில் யோக பலனை தரக்கூடிய வாய்ப்பு உண்டு.
சாதகர் எந்த வகையிலும் பலமிழக்காத திரிகோண ஸ்தான அதிபதிகள்(1,5,9) திசையானது நடப்பில் உள்ள காலங்களில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்க கூடிய வாய்ப்பு உண்டு.
ஒருவரது ஜாதகத்தில் எவ்வித பாவர் கலப்பின்றி கேந்திர மற்றும் திரிகோண அதிபதிகள் தங்களுக்குள் அல்லது இருவர்களுக்கு இடையே பரிவர்த்தனை நடந்து அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் சாதகர் வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க யோக பலன் உண்டு.
சில நேரங்களில் மறைவிட ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறி நின்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு அதன் தசை நடக்கும் காலங்களிலும் யோக பலனை அனுபவிக்கும் பாக்கியம் உண்டு.
ஒரு சில சந்தர்ப்பங்களில் பாவ கிரகங்கள் நின்ற வீட்டின் அதிபதி உச்சம் பெற்று நிற்கும் பொழுது அந்த பாவக்கிரகங்கள் தசா நடக்கும் காலங்களிலும் சாதகர் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கக் கூடிய பாக்கியம் உண்டு.
வளர்பிறைச் சந்திரன், குரு மற்றும் சுக்கிரன் தொடர்பு பெற்ற கிரகங்கள் அதன் தசா காலங்களில் சாதாகரை முன்னேற்ற பாதையில் அடி எடுத்து செல்ல வைப்பார்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com.
My blog
www.AstroRavichandran.blogspot.com
www.AstroRavichandransevvai.blogspot.com
............
No comments:
Post a Comment