சாதகத்தில் கிரக சஞ்சார நிலை
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜோதிடம் என்பது எதிர்காலம் அறிதல் எனலாம்.ஒரு சாதகர் தமது வாழ்வில் எதை நோக்கி பயணிக்க இருக்கிறார் என்பதை ஜெனன கால கிரக நிலை , கோச்சார கிரக நிலை மற்றும் தசா இருப்பு ஆகியவை வழியாக நின்று ஆராய்ச்சி செய்து கண்டறிய பயன்படும் வழிமுறை ஆகும்.
ஒருவரது ஜாதகத்தில் நவகோள்களில் கிரகங்கள் தாம் கொண்டுள்ள ஸ்தான நிலை, அந்த கிரகங்கள் ஜாதக கட்டத்தில் எங்கு அமர்ந்து உள்ளது.
எந்த நட்சத்திரம் சாரம் பெற்று உள்ளது ? என்பதனையும்,அந்த நட்சத்திர நாதனுக்கும் மற்றும் அந்த குறிப்பிட்ட கிரகத்திற்கும் ஆன நட்பு,பகை மற்றும் சமம் போன்ற உறவு நிலை பற்றியும்,
குறிப்பிட்ட அந்த கிரகத்துடன் எந்த கிரகம் இணைந்துள்ளது என்பது பற்றியும் மற்றும் பார்க்கும் கிரகங்கள் எவை என்பதையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட அந்த கிரகத்துடன் பார்வை பெறும் மற்றும் இணைந்து உள்ள கிரகங்களின் சாரநாதன் மற்றும் அதன் உறவுநிலை இணைவு மற்றும் பார்வை பெறும் கிரகங்களின் உறவு நிலை முதலியவை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் உள்ள கிரகங்களில் எந்த கிரகங்கள் பலம் அடைந்து உள்ளது.எந்த கிரகங்கள் பலவீனம் அடைந்து உள்ளது என கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் கோணங்கள் (1,5,9) , கேந்திர ஸ்தானங்கள்(1,4,7,10) மறைவிட ஸ்தானங்கள் (3,6,8,12) , உப ஜெய ஸ்தானங்கள்(3,6,10,11) மற்றும் பணபர ஸ்தானங்கள் (2,5,8,11) ஆகிய ஸ்தானங்களையும் மற்றும் அவற்றில் இடம்பெறும் கிரகங்களையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் பலமான அமைப்பை பெற்றிருப்பதில்லை.
லட்சத்தில் ஒருவரான ராஜயோக அமைப்பில் பிறந்தவர்களுக்கு மட்டுமே எல்லா கிரகங்களும் பலமடைந்த அமைப்பை பெற்றிருக்கும்.
ஒரு ஜாதகத்தில் சில நேரங்களில் லக்கனம் அடிப்படையிலான எண்ணிக்கையை தவிர்த்தும் சாதக பலன்களை அறியலாம்.
சில நேரங்களில் கிரகங்கள் மறைவிடங்களில் நின்றாலும் பூரண சந்திரன் பார்வை ,குரு , சுக்கிரன் தொடர்பை பெற்ற நிலையில் மறைவிட ஸ்தானங்களில் நின்றால் லக்கனம் அடிப்படையிலான எண்ணிக்கையை தவிர்த்து அக்கிரகம் பெற்றுள்ள சுபத்துவ நிலையினை பொறுத்தும் நல்ல பலனை சாதகருக்கு கொடுக்கும்.
ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினை,
தீவினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் பிறப்பாக வந்து பிறப்படுக்கிறார்.
ஒருவரது ஊழ்வினை பயனிற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள கிரகங்கள் உள்ள சூழ்நிலையில் பிறப்பாக இப்பிறவியில் வந்து பிறக்கிறார்.
ஒருவர் ஜெனிக்கும் போது தொடுவானில் அன்றைக்கு என்ன நட்சத்திரம் தெரிகிறதோ ? அதுவே ஜென்ம நட்சத்திரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஜென்ம நட்சத்திரத்திலிருந்து ராசி நிர்ணயிக்கப்படுகிறது.ஜென்ம நட்சத்திர இருப்பு நிலையிலிருந்து ஜென்ம திசை கணக்கிடப்படுகிறது. ஜென்ம நட்சத்திர நாதன் தசை நாதனாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
24 மணிநேரம் கொண்ட ஒரு நாளில் இரண்டு மணிக்கு ஒரு லக்கனம் வீதம் பன்னிரெண்டு லக்கினம் அமைக்கப்படுகிறது.
பஞ்சாங்கத்தில் சித்திரை மாதம் மேஷ லக்கின இருப்பு , வைகாசி மாதம் ரிஷப லக்கின இருப்பு ...என தரப்பட்டிருக்கும் . உதாரணமாக ஐப்பாசி மாதத்தில் ஒருவர் ஜெனித்து இருப்பாராயின் துலாம் லக்கனம் இருப்பு தரப்பட்டிருக்கும். ஐப்பசி 24 ந் தேதி எனில் 24 ந் தேதிக்கு இணையான லக்கன இருப்பிலிருந்து உதயாதி நாழிகை வரை லக்கனம் கண்டறியப்படுகிறது.
அந்த அந்த தேசத்திற்குரிய சூரிய உதயத்திலிருந்து பிறந்த நேரத்தினை கொண்டு உதயாதி நாழிகை கணக்கிடப்படுகிறது.
சாதக பலன் அறிய எளிய வழியில் ராசி,நவாம்சம் , பாதசாரம் மற்றும் தசா இருப்பு ஆகியவை கொண்ட எளிய அமைப்பு சாதக பலன் அறிய பயன்படுகிறது.
நவாம்சமானது ராசி சக்கரத்தில் இடம்பெற்ற கிரகங்கள் வலிமையினை அறிய பயன்படுகிறது.
ராசி சக்கரத்தில் பலம்பெற்ற கிரகமானது அம்ச அடிப்படையிலும் பலமாக இருப்பின் அதன் தசா புத்தி காலங்களில் மிகுந்த யோக பலனை தருகிறது.
ராசி சக்கரத்தில் ஒரு கிரகம் நீசம் மற்றும் மறைவிடங்களில் பலமிழந்து நின்றாலும் அம்ச அடிப்படையில் உச்ச, ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இருப்பின் அந்த கிரகம் பலம் பெற்ற கிரகமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக வக்கிரம் பெற்ற கிரகங்கள் பலவான்கள் ஆகும். ராசிச் சக்கரத்தில் நீசம் பெற்ற கிரகங்கள் வக்கிரம் பெற்றிருந்தால் உச்ச நிலைக்கு நிகரான பலன்களை தருகிறது.
உச்சம் பெற்ற கிரகங்கள் வக்கிரம் பெறின் அது நீச நிலைக்கு நிகரான பலன்கள் தரும்.
இதேபோல பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஆட்சி பெற்ற நிலையினை பெறுகிறது.
ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்தாலும் நீசம் பெற்ற வீட்டின் நாதன் உச்சம் பெற்று இருந்தாலும் அல்லது நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டில் ஒரு கிரகம் உச்சம் பெற்று
நின்றாலும் நீச பங்கம் என்று பெயர்.
நீச பங்க ராஜயோகத்தினை தரப்பட வேண்டுமாயின் நீசம் பெற்ற கிரகம் நிற்கும் வீட்டின் அதிபதி அல்லது நீசம் பெற்ற வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் நின்று சந்திரகேந்திரந்தம் அடைந்திருந்தால் மட்டுமே தரக்கூடிய வாய்ப்பு உண்டு.
இயற்கை பாவ கிரகங்கள் கேந்திரங்களிலும்,
சுபர்கள் மறைவிடங்களிலோ அல்லது கோணங்களிலோ இடம்பெற்று நிற்பின் நல்லது.
நன்றி.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
. 7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email; masterastroravi@gmail.com
...........
No comments:
Post a Comment