நட்சத்திர தாரைகள்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
சம்பத்து தாரை
ஒருவர் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமாகும்.
உதாரணமாக அசுபதி சம்பத்து தாரை பரணி, பூரம், பூராடம் ஆகும்
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வரும் 6, 15, 24 -வது நட்சத்திரம் சாதக தாரை எனப்படும்.
சேம தாரை
உங்கள் நட்சத்திரத்திலிருந்து 4 வது நட்சத்திரம் சேம தாரை எனப்படும்.
தாரைகளின் பெயர்கள்
1) ஜென்ம தாரை ,
2) சம்பத்து தாரை
3) விபத்து தாரை
4) சேம தாரை
5) பிரத்தயக்கு தாரை
6)சாதக தாரை
7)வதைத்தாரை
8) மித்திர தாரை
9) பர மித்திர தாரை
மேற்கண்டவற்றில் 3,5, 7 தாரைகள் அசுப தாரைகள் ஆகும்.இது போன்ற நட்சத்திர தாரைகளில் சுப காரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
சம்பத்து தாரை
வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என ஏங்குவது மனித இயல்புகளில் ஒன்றாகும்.
"வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்"
முயற்சி செய்பவர்கள் அனைவரும் வெற்றி பெற்று விடுவதில்லை.
முயற்சியுடன் அதிர்ஷ்டமும் கூடி வந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கிறது.
அதிர்ஷ்டம் எல்லா நேரங்களிலும் கிடைத்து விடுவது கிடையாது.
அதற்கு உகந்த காலம் தேவைப்படுகிறது.
இதற்குதான் நமது பெரியோர்கள்"எல்லாம் காலநேரம் கூடி வர வேண்டும்" என்பார்கள்.
ஆதலால் ஒரு மனிதன் வாழ்வில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டுமாயின் இது போன்ற அவனது சம்பத்து தாரை போன்ற நட்சத்திங்களில் புதிய முயற்சிகள் செய்ய ஏதுவாக அமைத்து கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறாக அக்காரியத்தினை எளிதாக முயன்றால் வாழ்வில் வெற்றி பெற்று பேரும் புகழும் அடையலாம்.
புதிதாக தொழில் தொடங்குவதாக இருந்தாலும்,
வெளிநாடு சென்று பொருளீட்டுவதாக இருந்தாலும்,
தமது பிள்ளைகளை புதிய படிப்பிற்காக அனுப்புவதாக இருந்தாலும்,
புதிதாக வீடு கட்டுவதாக இருந்தாலும்,
புதிதாக நிலபுலன்களை வீடு வாசலை வாங்குவதாக இருந்தாலும்,
மேலே குறிப்பிடப்பட்ட புதிய முயற்சிகளை செய்யும்போது தங்களுடைய சம்பத்து தாரை நட்சத்திரத்தன்று செய்ய வாழ்வில் வெற்றியடையலாம்.
மேலும் இவை மட்டுமல்லாமல் தனது சம்பத்து தாரை நட்சத்திரத்திற்குரிய ஆலயங்களுக்கு சென்று வந்தாலும் வெற்றிகளை எளிதாக பெறலாம்.
நீங்கள் அசுபதி நட்சத்திரமாக இருந்தால் உங்களது சம்பத்து தாரை பரணி, பூரம், பூராடம் ஆகும். ஆகும்.
பரணி நட்சத்திரம் என்றால் சம்பத்து தாரை
கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகும்.
கார்த்திகை நட்சத்திரம் எனில் சம்பத்து தாரை ரோகிணி, அஸ்தம்-மற்றும் திருவோணம்
ரோகிணி நட்சத்திரம் எனில் சம்பத்து தாரை மிருகசீரிடம், சித்திரை மற்றும் அவிட்டம் ஆகும்.
மிருகசீரிடம் நட்சத்திரம் எனில் சம்பத்து தாரை திருவாதிரை,
சுவாதி மற்றும் சதயம் ஆகும்.
திருவாதிரை நட்சத்திரம் எனில் சம்பத்து தாரை புனர்பூசம், பூசம் மற்றும் ஆயில்யம் ஆகும்.
புணர்பூசம் நட்சத்திரம் எனில் சம்பத்து தாரை பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி ஆகும்.
பூசம் நட்சத்திரம் எனில்
சம்பத்து தாரை ஆயில்யம் கேட்டை மற்றும் ரேவதி ஆகும்.
ஆயில்யம் எனில் சம்பத்து தாரை மகம், மூலம் மற்றும் அசுபதி
மகம் எனில் சம்பத்து தாரை பூரம் , பூராடம் மற்றும் பரணி ஆகும்.
பூரம் எனில் சம்பத்து தாரை உத்திரம், கார்த்திகை மற்றும் உத்திராடம் ஆகும்.
உத்திரம்-எனில் சம்பத்து தாரை அஸ்தம், ரோகிணி மற்றும் திருவோணம் ஆகும்.
அஸ்தம் எனில் சம்பத்து தாரை சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிடம் ஆகும்.
சித்திரை எனில் சம்பத்து தாரை சுவாதி, சதயம் மற்றும் திருவாதிரை ஆகும்.
சுவாதி எனில் சம்பத்து தாரை விசாகம், பூரட்டாதி மற்றும் புனர்பூசம் ஆகும்.
விசாகம் எனில் சம்பத்து தாரை அனுசம், உத்திரட்டாதி மற்றும் பூசம் ஆகும்.
அனுஷம் எனில் சம்பத்து தாரை கேட்டை, ரேவதி மற்றும் ஆயில்யம் ஆகும்.
கேட்டை எனில் சம்பத்து தாரை மூலம்,அசுபதி மற்றும் மகம் ஆகும்.
மூலம் எனில் சம்பத்து தாரை பூராடம்,பரணி மற்றும் பூரம் ஆகும்.
பூராடம் எனில் சம்பத்து தாரை உத்திராடம், உத்திரம்-மற்றும் கார்த்திகை ஆகும்.
உத்திராடம் எனில் சம்பத்து தாரை திருவோணம், ரோகிணி மற்றும் அஸ்தம் ஆகும்.
திருவோணம் எனில் சம்பத்து தாரை அவிட்டம், மிருகசீரிடம் மற்றும் சித்திரை ஆகும்.
அவிட்டம் எனில் சம்பத்து தாரை சதயம், திருவாதிரை மற்றும் சுவாதி ஆகும்.
சதயம் எனில் சம்பத்து தாரை பூரட்டாதி ,புணர்பூசம் மற்றும் விசாகம் ஆகும்.
பூரட்டாதி எனில் சம்பத்து தாரை உத்திரட்டாதி-, அனுஷம் மற்றும் பூசம் ஆகும்.
உத்திரட்டாதி எனில் சம்பத்து தாரை ரேவதி, ஆயில்யம் மற்றும் கேட்டை ஆகும்.
ரேவதி எனில் சம்பத்து தாரை அசுபதி,மகம் மற்றும் மூலம் ஆகும்.
ஒருவரது ஜென்ம நடசத்திரத்திரத்திற்கு இணை நட்சத்திரங்கள்
அசுபதி- ஜென்ம நட்சத்திரம்
மகம்-அனுஜென்ம நட்சத்திரம்
மூலம்-திரிஜென்ம நட்சத்திரம் ஆகும்.
நட்சத்திர தாரை பலன்
சந்திரன் ஒரு ராசியில் இரண்டு கால் நாள் வீதம் வாசம் செய்வார்.ஒரு நாளைக்கு இருந்து நான்கு மணி நேரம் வீதம் மொத்தமாக மணி அடிப்படையில் மொத்தமாக 54 மணி நேரம் வாசம் செய்கிறார்.
ஒரு ராசிக்கு 9 பாதம் ஆகும்.ஒரு பாதத்திற்க்கு ஆறு மணி நேரம் சந்திரன் பகவான் வாசம் செய்கிறார்.
உதாரணமாக ஒருவருக்கு ரேவதி நட்சத்திரம் மீன ராசி என வைத்துக்கொண்டால்
தற்போது கோச்சார அடிப்படையில் சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் வாசம் செய்கிறார் எனில்
ரேவதிக்கு 12 வது நட்சத்திரம் ஆகும்
12÷ 9 =ஈவு =1 ,மீதி =3
இங்கு மூன்று என்பது விபத்து தாரை ஆகும்.
சிம்ம ராசி
மகம் -4×6=24
பூரம் -4×6=24
உத்திரம்-1×6=06
----------
54 மணி
-----------
ரேவதிக்கு மூன்றாவது நட்சத்திரம் பரணி ஆகும்.
பரணிக்கு இணை நட்சத்திரமான பூரம் நட்சத்திரம் விபத்து தாரை ஆக வருவதால் சந்திரபகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் வாசம் செய்யும் 24 மணி நேரமும் அசுப பலன் நடைபெற வாய்ப்பு உண்டு என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது போல் நட்சத்திர தாரை பலன்களை கணக்கிடப்பட வேண்டும்.
அதே நேரத்தில் உத்திரம் நட்சத்திரத்தில் வாசம் செய்கிறார் எனில்
13÷9=மீதி-1 ,ஈவு -4
இங்கு 4 வது நட்சத்திரம் சேமித்து தாரை ஆகும்.
ரேவதிக்கு 4 வந்து கார்த்திகை நட்சத்திரம் ஆகும்.
கார்த்திகை இணை சம்பத்து தாரை நட்சத்திரம் உத்திரம் ஆகும்.
ஆதலால் சிம்மம் ராசி உத்திரம்நட்சத்திரத்தில் வாசம் செய்யும் 6 மணிநேரமும் சுப பலன்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
நன்றி
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blog.click here
www.AstroRavichandran.blogspot.com
www.AstroRavichandransevvai.blogspot.com
........
No comments:
Post a Comment