பாவ கிரகங்கள் மற்றும் லக்கன அவ யோகி எப்போது நன்மை செய்யும்?-கோடீஸ்வர உதாரண ஜாதக விளக்கம்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
இயற்கைப் பாவக் கிரகங்கள் சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் பாவியுடன் சேர்ந்த புதன் மற்றும் தேய்பிறைச் சந்திரன் ஆகும்.
இங்கு சனி முழுப்பாவர்,
செவ்வாய்- முக்கால் பாவர்,
சூரியன் அரை பாலர் ஆகும்.
நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தான் சேரும் இடத்தை பொருத்து பாவ தன்மை அமைகிறது.
சந்திர பகவான் தேய்பிறை சந்திரனாக இருந்தால் முழு பாவர் ஆவார். வளர்பிறை சந்திரனாக இருந்தால் முழுச் சுபர் ஆவார்.எனவே சந்திரபகவான் ஒரு மாதத்தில் பாதி நாட்கள் சுபராகவும் மற்றும் மீத பாதி நாட்கள் பாவராகவும் செயல்படுவார்.
சனி ,செவ்வாய் ,ராகு மற்றும் கேது உடன் சேர்ந்த புதன் பாவியாக செயல்படுகிறார்.
பொதுவாக பாவர்கள் நல்லது தர வேண்டும் எனில் அவை வலிமை இழந்து விட வேண்டும்.அதாவது நேர் வலு பெறக்கூடாது.
உதாரணமாக துலாம் லக்னத்திற்கு சனி பகவான் லக்னத்தில் உச்சம் பெற்று நிற்பதை விட,. ஏழாம் இடமான மேஷத்தில் நீசம் பெற்று அதே நேரத்தில் ஸ்தான பலத்தை இழந்தாலும் திக்பலம் என்ற வகையில் மறைமுக வலுப்பெற்று நிற்கின்ற போது அதன் தசையில் யோகத்தைத் தரும்.துலா லக்கனத்திற்கு உச்சம் பெற்ற சனி ஜாதகரை அடிமை வேலை பார்க்க வைத்துவிடும்.
இலக்கண அவ யோகியானவர் நன்மைகளைத் தர உப ஸ்தானமான
3, 6, 10 ,11 ஆம் இடங்களில் நட்பு நிலை பெற்று அமர்ந்து இருந்தால் அதன் தசா புக்தி காலங்களில் நன்மையைத் தரும்.
ரிஷபம், துலாம் ,மிதுனம் ,கன்னி, மகரம் கும்பம் ஆகிய ராசிகளுக்கு குரு, சூரியன், சந்திரன் , செவ்வாய் மற்றும் கேது
தசைகள் அவ யோகத்தை தரும்.
தனுசு ,மீனம், மேஷம் ,விருச்சிகம், கடகம், மற்றும் சிம்மம் ஆகிய ராசிகளுக்கு சுக்கிரன், சனி, புதன் மற்றும் ராகு தசைகள் அவ யோகத்தைத் தரும்.
உதாரணமாக துலாம் லக்னத்திற்கு இலக்கண பாவிகளான குரு மூன்று மற்றும் ஆறாம் இடத்தில் ஆட்சி பெறுவதோ அல்லது பத்தாம் இடத்தில் உச்சம் பெற்று வலுப்பெற்ற நிலையில் இருப்பது நல்லதல்ல.மாறாக குரு பகவான் உபஜெய ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து நட்பு நிலையில் இருப்பது அதன் தசை காலங்களில் யோகத்தை தரும்.அதாவது பாவத்பாவ அமைப்பின் படியும் ஆய்ந்து நோக்கினால் துலா லக்கினத்திற்கு ஆறாம் இடத்திற்கு , ஆறாம் இடமான மறைவிட ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் நிற்பது குரு நல்லதைத் தரும்.துலா லக்கனத்திற்கு குருபகவான் வேறு எந்த இடத்தில் நின்றாலும் பாவியாவார்.
உதாரணமாக கோடீஸ்வரர் ஜாதகம்.
(பிறப்பு விவரம் குறிப்பிடவில்லை.
மதிப்பிற்குரிய ஆதித்ய குருஜி ஐயா நண்பர் ஜாதகம்)
துலாம் லக்கனம்
கன்னி ராசி
கீழே உதாரணமாக எடுத்துக் கொண்ட கோடீஸ்வரர் யோக ஜாதகம்
லக்கன அவ யோகி குரு பகவான் மற்றும் பாவ கிரகமான சனி பகவான் தனது தசையில் மேற்கண்ட அனைத்து விதி அமைப்புகளையும் பெற்றிருக்கும் தன்மையால் குரு தசையிலும் மற்றும் அதை தொடர்ந்து வரும் சனி தசையில் ஜாதகரை பெரிய கோடீஸ்வரராக மாற்றியது.
இவரது ஜாதகத்தில்
துலா லக்கினத்திற்கு மூன்று மற்றும் ஆறாம் இட அதிபதியும் லக்கன அவ யோகியான குருபகவான் பாவத் பாவ அமைப்பின் படி ஆறாம் வீட்டிற்கு ஆறாம் இடத்தில் மறைந்து இலக்கணத்திற்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் அதாவது உப ஜெய ஸ்தானத்தில் (3,6,10,11) நட்பு நிலையில் இருப்பதால் குரு பகவான் யோகம் அதன் தசையில் ஜாதகரை கோடீஸ்வரராக ஆகிவிட்டார்.
அடுத்து வரக்கூடிய சனி தசை துலா லக்கினத்திற்கு யோகர் ஆவார். பாவ கிரகம் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வழி பெறக்கூடாது என்ற வகையில்
துலா லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்து அதே நேரத்தில் ஸ்தான பலத்தை இழந்த கிரகம் திக்பலம் பெறும்பொழுது மறைமுக வலுப்பெறும் என்ற வகையில் சனி பகவான் ஏழாம் இடத்தில் திக் பலம் அடைந்து குரு பகவானின் ஒன்பதாம் பார்வையினை பெற்று சுபத்துவம் அடைந்த நிலையில் தனது தசையில் மிகுந்த கோடீஸ்வரர் யோகத்தை கொடுத்தது.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & செல்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
Email masterastroravi@gmail.com
No comments:
Post a Comment