Tuesday, 5 July 2022

சம்பாதிக்கும் கணவன் -மனைவியா நீங்கள்?

 சம்பாதிக்கும் கணவன் /மனைவியா நீங்கள்?


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
   ஆரம்ப காலங்களில்   "சம்பாதிப்பது என்பது புருஷ லட்சணம்"ஆக இருந்து வந்தது .ஆனால் பொருள் ஈட்டி குடும்பத்தை காப்பாற்றும் தன்மை கணவன் -மனைவி ஆகிய இருவருக்கும்
சமமான நிலை என்ற அளவில் வந்து விட்ட இக்கால கட்டத்தில் ஜாதகத்தில் இருவரது கிரக நிலைகளையும் , தசை புக்தி அமைப்புகள் மற்றும் கோச்சார பலன்கள் ஆகியவற்றை  ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
 தற்போது திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இதுபோன்ற சம்பாதிக்கும் அமைப்புகளையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
 இன்றைய காலகட்டங்களில் தம்பதிகளாக கூடிய இருவரும் படித்து திருமணத்திற்கு முன்பே  வேலை பார்க்கக் கூடிய நிலையில் உள்ளார்கள் . அல்லது ஒரே இடத்தில் வேலை பார்க்கக் கூடிய நபர்களாக இருந்து காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
  சிலர் வெளிநாடுகளில் வேலை பார்த்து அயல் தேச பெண்ணை  அல்லது இந்தியாவிலிருந்து வந்திருக்கக்கூடிய பெண்ணையோ திருமணம் செய்து கொள்ளக் கூடிய அமைப்பில் வந்து விடுகிறார்கள்.
  இவ்வாறு சம்பாதிக்கும் நிலையில் உள்ள இருவரும் திருமண பந்தத்தில் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனையின் சூழலை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் அவர்களது ஜாதக அமைப்பில் அதற்கு ஏற்றார்போல் கிரகநிலைகள் உள்ளதா? என ஆராய்ந்து பார்த்து திருமண பொருத்தம் போட வேண்டும்.
  இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று சிலர் living together என்ற அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளாமல் எவ்வித உடன்பாடு இல்லாமல் இணைந்து வாழும் சூழல் வந்து விட்டது.எவ்வளவு நாட்கள் அவர்களுக்குள் புரிந்துணர்வு இருக்கும் வரையில் தொடரலாம்.கருத்து வேறுபாடு ஏற்படும் பட்சத்தில்  அவர்களுக்கு ஏற்ற வகையில் பிரிந்து சென்று விடலாம் என இதுபோன்ற நிலைகளும் பரவலாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது நகர்புறங்களில் வசிக்கும் இளைஞர்களது மனநிலையாக அமைகிறது.
 பொதுவாக சினிமா மற்றும் மீடியாக்களில் ஈடுபடும் தம்பதிகள் இருவரிடம் அதிகமான மணவிலக்கு ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 பொருளாதார தற்சார்புநிலை எளிதாக வந்து விட்ட நிலையில்  ஆண்களும் ,பெண்களும் குடும்ப அமைப்புகளுக்கு உரிய வரம்புகளிலிருந்து எல்லை மீறும்போது இதுபோன்ற மண விலக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 தமிழகத்தின் மிகப்பெரிய பலமே குடும்ப அமைப்புகள் தான்..இவை காலப்போக்கில் நவநாகரீகம் என்ற நிலையில் சீரழிவது துர்பாக்கிய நிலை ஆகும்.
 இன்றைய இனையத்தில் அபரீதமான வளர்ச்சியால் அதிகமாக  சமூக ஊடகங்களை நள்ளிரவு வரை பயன்படுத்துவது ( IT field ) , சரியான தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு ஒருவிதமான தாம்பத்திய உறவில் செயலின்மை உருவாகி தங்களது வாழ்க்கை துணையினை திருப்தி படுத்த இயலாத நிலை மற்றும் தன்னை இளமையாக வைத்து கொள்ளும் பொருட்டு குழந்தை உடனடியாக பெற விரும்பாமல் காலம் தாழ்த்தி பிறகு விருப்பப்படும் நேரத்தில் குழந்தை பாக்கியம் பெற இயலாத நிலை மாற்றம் ஒரே குழந்தை போதும் என்ற மனநிலையில் ஒரு பெண்குழந்தை உடன் குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டு பிறகு காலம் தவறிய பிறகு ஒரு ஆண் குழந்தைக்கும் விருப்பப்படும் நிலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் இது போன்ற பல்வேறு சூழல்களை ஆய்வு செய்து பொருத்தம் பார்க்க வேண்டும்.
x

No comments: