திருமணம் ஆகாத நிலை (நோ marriage)
திருமணம் ஆகாத நிலை
(No marriage)
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவரது ஜாதகத்தில் திருமணம் தொடர்பான விவரங்களை ஆராய்ந்து பெற இலக்கணம் என்ற சாதகர் ,
குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம், களத்திர ஸ்தானம் என்ற ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்ற எட்டாம் இடம்
ஆகிய நான்கு ஸ்தாணங்களை லக்கனம் மற்றும் ராசி என இரண்டு வகைகளிலும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
இவை தவிர கிரகங்களில் களத்திர காரகன் என்று அழைக்கப்படக்கூடிய நீடித்த தாம்பத்திய சுகத்தை அள்ளித் தரக்கூடிய சுக்கிரன் பகவான் பற்றியும் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய குரு பகவான் ஆகியவற்றின் நிலை மற்றும் வலிமையை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
கால தாமதம திருமணமா அல்லது திருமணமே ஆகாத நிலையா ?
பின்வரும் வகையில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்
.
1) எவர் ஒருவரது ஜாதகத்தில் மேற்கண்ட திருமண ஸ்தானங்களான 1,2,7,8 ஆம் இடங்களில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய் மற்றும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது இடம் பெறுவது.
2) மேற்கண்ட திருமண ஸ்தானங்களான 1,2,7,8 ஆம் இடங்களை இயற்கை சுப கிரக பார்வை இல்லாமல் சுபத்துவம பெறாத சனி மற்றும் செவ்வாய் தனித்தனியாக அல்லது சேர்ந்தோ பார்க்கின்ற அமைப்பு
3) மேற்கண்ட திருமண ஸ்தானங்களான 1,2,7,8 ஆம் அதிபதிகள் பகை, நீசம் , அஸ்தமனம் , மறைவிடம் ஏறி நிற்றல் அல்லது சனி , செவ்வாய் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் தொடர்பை பெறல் போன்ற விதிகள் திருமணம் காலதாமதம் ஆக காரணமாகிறது.
4) இதேபோல நீடித்த தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய களத்திரகாரகன் சுக்கிரனும் மற்றும் குழந்தை பாக்கியத்தைத் தரக்கூடிய புத்திரகாரகன் குரு பகவானும் ஜாதக கட்டத்தில் எவ்வித நிலையில் அமைந்து உள்ளார்கள் என்பதை ஆராய்ச்சி செய்து பார்க்கப்பட வேண்டும். பொதுவாக இவ்விரு கிரகங்கள் நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் பாவிகளான சனி, செவ்வாய், ராகு கேதுவுடன் தொடர்பு கொள்ளல் மற்றும் மறைவிடம் செல்லல் போன்ற வகைகளில் பலம் இழக்க கூடாது.
5) இதற்கு மேலாக தசா புக்தி அடிப்படையில் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய யோகமும் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய நேரமும் ஜாதகருக்கு வந்து விட்டதா? என்பதை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
.
6) திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் குறைந்த பட்சம் ஒரு முப்பது ஆண்டுகளாக நல்ல முறையாக வாழக்கூடிய தசா அமைப்புகள் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
7) மேற்கண்ட வகையில் ஒருவருடைய ஜாதகத்தில் திருமண பாவங்களும்(1,2,7,8) திருமணத்திற்கு உரிய காரக கிரகமான சுக்கிரன் மற்றும் புத்திரகாரகன் குரு ஆகியவை எவ்விதத்தில் பலம் இழந்துள்ளது என்ற நிலையை வைத்து திருமணம் கால தாமதம் ஆகுமா ?அல்லது திருமணம் நடக்க வாய்ப்பில்லையா ? என்பதை கண்டறியலாம்.
திருமணம் ஆக இயலாத ஜாதகம்
பிறந்த தேதி :26.02.1984
பிறந்த நேரம்: 1.25
பிறந்த நாடு : ஜெர்மனி
ஜாதக கட்டம் கீழே தரப்பட்டுள்ளது.

லக்கன அடிப்படையில் ஆய்வு
லக்னத்தில் கேது பகவான் அமர்ந்து, லக்னாதிபதியான செவ்வாய் பகவான் மறைவிட ஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் மறைந்து உச்சம் பெற்ற சனியுடன் சேர்ந்து பாவத்துவம் அடைந்த நிலை.
குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று நிலையில் இருந்தாலும் அவருடன் பாவரான தேய்பிறை சந்திரன் நெருக்கமாக அமர்ந்து,
விரய ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள உச்சம் பெற்ற சனி பகவான் ஆனவர், செவ்வாயுடன் நெருக்கமான பாவத்துமான நிலையில் மூன்றாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் அதில் உள்ள குரு மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களையும் பார்த்து குடும்ப ஸ்தானத்தை கெடுத்து விட்டார்.
ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து, விரய ஸ்தானத்தில் சனியுடன் இணைந்து பாவத்துவமான செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் உள்ள ராகுவையும் பார்த்து 7-ஆம் இடத்தையும் பலவீனம் அடைய செய்து உள்ளார். மேலும் தனது நான்காம் பார்வையால் அந்த வீட்டு அதிபதியும் ,
களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகனான சுக்கிரனை பார்த்து ஏழாம் இடத்தை மிகுந்த பாவத்துவம் ஆக்கிவிட்டார்.
மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இட அதிபதியான புதன் பகவான் ராசிக்கு மறைவிட ஸ்தானமான மூன்றாம் இடத்தில் மறைந்து சூரியனுடன் நெருக்கமாக இணைந்து அஸ்தமனம் அடைந்து விட்டார் .
ராசி அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்தால்,
சந்திரன் தேய்பிறைச் சந்திரன் ஆகிய நிலையில் ராசியை செவ்வாய் பகவான் உடன் நெருக்கமாக இணைந்து பாவத்துவமான உச்சம் பெற்ற சனி பகவான் பார்த்து, மேலும்
, ராசிக்கு இரண்டாமிடத்தை சனியுடன் நெருக்கமாக இணைந்து பாவத்துவமான செவ்வாய் பார்த்து , ராசிக்கு ஏழாம் இடத்தின் அதிபதி புதன் பகவான் ராசிக்கு மறைவிட ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சூரியன் உடன் அஸ்தங்கம் அடைந்து விட்டார்.
எட்டாம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய் உடன் நெருக்கமாக இணைந்து பவத்துவமான உச்சம் பெற்ற சனி பகவான் பத்தாம் பார்வையாக பார்த்துவிட்டார்.
புத்திரபாக்கியம் ஒரு ஆய்வு
லக்னத்திற்கு 5ஆம் அதிபதியும் மற்றும் புத்திர காரகனான குரு பகவான் லக்னத்திற்கு இரண்டில் ஆட்சி பெற்று இருந்தாலும் தேய்பிறைச் சந்திரன் உடன் இணைந்து பவத்துவமான செவ்வாயுடன் இணைந்து உச்சம் பெற்ற சனி பகவான் பார்த்து மிகுந்த பாவத்துவம் அடைந்து விட்டது.
ராசிக்கு ஐந்தாம் இடத்தை குரு பகவான் பார்த்தாலும் அந்த பார்வையானது செவ்வாயுடன் நெருக்கமாக இணைந்து உச்சம்பெற்ற சனியால் முன்றாம் கெட்ட பார்வையினை பெற்ற குருவின் பார்வை என்பதாலும் , மேலும் ஐந்தாம் அதிபதி செவ்வாய் பகவான் சனியுடன் நெருக்கமாக இணைந்து 5ஆம் இடத்தையே சனி மற்றும் செவ்வாய் சம சப்தமாக பார்த்து அதிக பாவத்துவம் அளித்துவிட்டார்.
நீடித்த தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் மறைந்து உச்சம் பெற்ற சனியுடன் இணைந்த செவ்வாயின் பார்வையை பெற்றதும் இதுவரை திருமணம் நடக்காததற்கான காரணமாக உள்ளது.
ஜாதகத்தில் லகன அதிபதி மறைந்து உச்சம் பெற்ற சனியுடன் விரயத்தில் சேர்ந்து லக்கினத்தில் கேது அமர்ந்த நிலையில் லக்னமும் மற்றும் லக்னாதிபதியும் கெட்டுவிட்டது.
ராசி அதிபதி குரு ஆட்சி பெற்றிருந்தாலும் செவ்வாயுடன் இணைந்த சனியும் மூன்றாம் பார்வையும் மற்றும் தேய்பிறை சந்திரன் இணைவும் வலிமை இழக்கச் செய்துவிட்டது.
தசா அமைப்புகளே வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்கிறது என்ற வகையில் இருபத்தி ஆறு வயதில் ஆரம்பித்த சந்திரதசை தேய்பிறை சந்திரனாகி செவ்வாய் உடன் இணைந்து பாவத்துவமான சனி முன்றாம் பார்வையை பெற்ற பாவத்துவ தசை என்பதாலும்,அதனை தொடர்ந்து முப்பத்து ஆறு வயதில் வந்த செவ்வாய் தசை விரயத்தில் மறைந்து உச்சம் பெற்ற சனியால் இணைந்த தசை செவ்வாய் தசை முடியும் வரை திருமணம் நடக்க வாய்ப்பில்லை. அடுத்து வரக்கூடிய ராகு பகவான் தசையும் சனி மற்றும் செவ்வாய் தொடர்பு பெற்ற அமைப்பு இருப்பதால் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இல்லை.
பாதசாரம்
லக்கனம்-அனுஷம் நான்காம் பாதம்,
சூரியன் சதயம் இரண்டாம் பாதம்,
சந்திரன் மூலம் 4ஆம் பாதம்,
செவ்வாய் விசாகம் 3ஆம் பாதம்,
புதன்-அவிட்டம் நான்காம் பாதம்
குரு பூராடம் 1ஆம் பாதம்
சுக்கிரன் திருவோணம் 2ஆம் பாதம்
சனி விசாகம் 1ஆம் பாதம்
ராகு ரோகிணி 1ஆம் பாதம்
கேது பகவான் கேட்டை 1ம் பாதம்
சாதகக கட்டத்தில் உள்ள பெரும்பாலான கிரகங்கள் தனது எதிர் தன்மையான கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் பெற்றுள்ளது.
விருச்சிக லக்கின அதிபதியான செவ்வாய்க்கு சனி பகை ஆகும்.லக்கினாதிபதி அனுஷ நட்சத்திர சாரத்தில் இருக்கிறார் .
ஒளிக் கிரகங்களான சூரியனுக்கும் சந்திரனுக்கும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகை கிரகங்கள் ஆகும்.
சூரியன் சதய நட்சத்திரத்தில் இருக்கிறார்..
சந்திரனுக்கு எந்த கிரகமும் பகை கிரகம் இல்லை ராகு கேதுவை தவிர சந்திர பகவானும் கேது சாரத்தில் அமர்ந்துள்ளார் .
புதன் பகவான் தனது பகை கிரகமான செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்தில் நிற்கிறான். குருபகவான் தனது எதிரியான சுக்கிரனுடைய பூராட நட்சத்திரத்தில் நிற்கிறார். சுக்கிரன் தனக்கு எதிரான சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் இருக்கிறார். ராகு பகவான் தன்னை எதிர்க்கும் சந்திரனுடைய நட்சத்திரமான ரோகிணியில் நிற்கிறார்.
நன்றி.
(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & செல்
9715189647
செல்
9715189647
7402570898
Email masterastroravi@gmail.com

அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
Om sakthi online Astro consulting centre,
Karambakkud, Pudukkottai District
No comments:
Post a Comment