ஜாதக பலன் கணிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதக பலன் பார்க்கும் போது இரண்டு முக்கிய விஷயங்களை ஆய்வுகள் செய்து பார்க்கப்பட வேண்டும்.அவையாவன
1) பாவக சுபத்துவம்
2) கிரக சுபத்துவம்
ஆகிய இரண்டையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
1) பாவக சுபத்துவம்
ஜாதக கட்டத்தில் 12 பாவங்களையும் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.
1)கேந்திர ஸ்தானம் -1,4,7,10
2) திரிகோணம் 1,5,9
3)மறைவிட ஸ்தானம் -3,6,8,12
4) உபஜெய ஸ்தானம்-3,6,10,11
5) பணபர ஸ்தானம்-2,5,8,11
6) அபோக்லியம்-3,6,9,12
ஜாதக கட்டத்தில் திரிகோண ஸ்தானமே முதன்மையான ஸ்தானம் ஆகும்.வலிமை அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் திரிகோண ஸ்தானத்தில் உள்ள கிரகமாக இருந்தாலும் அல்லது திரிகோணதிபதியாக இருந்தாலும் பாவிகளுடன் சேர்த்து பாவத்துவம் அடையாமல் இருந்தால் அதன் தசை காலங்களில் மிகுந்த யோக பலனை தருகிறது.
திரிகோண ஸ்தானமான 1,5,9 ஆம் இடத்தில் பாவக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது இடம்பெறாமல் இந்த ஸ்தாணங்களை பாவிகளான சனி ,செவ்வாய் பார்க்கப்படாமல் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் பார்க்கப்படும் அமைப்பில் இருந்தாலும் அந்த பாவகம் சுபத்துவம் அடைந்துள்ளது என கூறலாம்.
பொதுவாக திரிகோணத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் சுபகிரகங்கள் இடம்பெறுதல் நல்லது ஆகும். எனவே கோண அதிபதிகள் இயற்கை சுப கிரகங்களாக இருப்பின் தங்களது வீடுகளில் ஆட்சி பெற்று நிற்பது அதன் தசையில் யோக பலனை தருகிறது.
திரிகோண ஸ்தானமான 1,5,9 ஆகிய மூன்று ஸ்தானங்கள் பெறக்கூடிய நட்சத்திரம் சாரத்தை ஆய்வு செய்து பார்த்தால் மூன்று திரிகோண ஸ்தானங்களும் ஒரே விதமான நட்சத்திர நாதனை கொண்டு இருப்பார்கள்.
உதாரணமாக
மேஷ ராசியை எடுத்துக் கொண்டால் லக்கண ஸ்தானமான ஒன்றாம் இடம் அசுபதி முழுவதும் (கேது ) ,
பரணி முழுவதும் ( சுக்கிரன் ) மற்றும் கார்த்திகை முதல் பாதம் (சூரியன்) ஆகும்.
மேஷ ராசிக்கு இரண்டாம் திரிகோணம் ஆன ஐந்தாம் வீடு சிம்மம் ஆகும்.இதில்
மகம் முழுவதும் (கேது)
பூரம் முழுவதும்( சுக்கிரன் )
உத்திரம் முதல் பாதம்( சூரியன்) மட்டுமே.
மேஷ ராசிக்கு மூன்றாம் திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடம் தனுசு ஆகும். இதில் மூலம் முழுவதும் (கேது ), பூராடம் முழுவதும் (சுக்கிரன் )
உத்திராடம் முதல் பாதம் மட்டுமே(சூரியன்)
மூன்று திரிகோண ஸ்தானங்கள் உடைய நட்சத்திர நாதன் கேது ,சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகும்.
கேந்திர ஸ்தானம்
ஜாதக கட்டத்தில் நான்கு தூண்களாக விளங்குவது கேந்திர ஸ்தானங்கள் ஆகும். அதாவது 1, 4 ,7, 10 ஆகிய நான்கு இடங்கள் கேந்திர ஸ்தானங்கள் என செல்லப்படுகிறது இங்கு ஒன்றாம் இடமான லக்கணம் கேந்திரம் ஸ்தானத்திற்கும் மற்றும் திரிகோண ஸ்தானத்திற்கும் பொதுவான ஸ்தானமான வருகிறது. எனவே தான் மனித வாழ்வை வழி நடத்திச் செல்வதில் லக்கனாதிபதியின் பங்கு மிக முக்கியமானது என்று கருதப்படுகிறது ஒரு ஜாதகத்தில் லக்ன பாவம் சுபத்துவம் பெற்று இருப்பின் அவை ஜாதகருக்கு நல்ல பலனைத் தருகிறது.
கேந்திர ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் இடம் பெறுவது நல்லது.அதேநேரத்தில் சுப கிரகங்கள் இடம்பெறுவது கேந்திராதிபத்திய தோஷத்தை தருவதற்குரிய சூழல் உடண்டாகிறது.
கேந்திரத்தில் உள்ள நட்சத்திரங்கள் அதன் நட்சத்திர தொடர்ச்சியைப் பெற்றிருக்கும். உதாரணமாக மேஷ ராசிக்கு அசுவதி, பரணி, கார்த்திகை முதல் பாதம். பத்தாம் இடமான மகரத்தில் உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் மற்றும் அவிட்டம் முதல் இரண்டு பாதங்கள்
ஏழாம் இடமான துலாமில் சித்திரை 3,4 பாதங்கள்,சுவாதி மற்றும் விசாகம் 1,2,3 பாதங்கள்.
நான்காம் பாவகமான கடகத்தில் புனர்பூசம் நான்காம் பாதம், பூசம் மற்றும் ஆயில்யம்
கேந்திர ஸ்தானத்தில் நட்சத்திர தொடர்ச்சியை தொடர்ந்து காணலாம்.
3) மறைவிட ஸ்தானங்கள்
பொதுவாக மறைவிட ஸ்தானங்களில் கிரகங்கள் இடம் பெறுவதோ அல்லது மறைவு ஸ்தான அதிபதிகள் கேந்திர கோணங்களில் இடம்பெறுவது நல்லது அல்ல பொதுவாக பாவக்கிரகங்கள் நேர் வலு பெறக்கூடாது என்ற வகையில் மறைவிடங்களில் பாவக்கிரகங்கள் இடம் பெறுவது நல்லது ஆகும்.
4) உப ஜெய ஸ்தானம்
லக்கன அவ யோகி மற்றும் பாவ கிரகங்கள் உபஜெய ஸ்தானமான 3,6,10,11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் அமரும் போது அதன் தசை காலங்களில் யோக பலனை ஜாதகருக்கு தருகிறது.
5. தன யோகம் தரும் ஸ்தானம்
தன ஸ்தானமான 2-ஆம் இடம் ,பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடம், ஜீவன ஸ்தானமான 10-ஆம் இடம் மற்றும் லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தில் அமரும் கிரகங்கள் அதன் தசைகளில் மிகுந்த யோகத்தை தருகிறது.
பொதுவாக தன ,பாக்கியம் மற்றும் லாப அதிபதிகள் (2,9,11) தங்களுக்குள் சேர்ந்து அல்லது பார்க்கும் அல்லது பரிமாறி நின்று அதன் தசா புக்தி நடக்கும் போது மிகுந்த யோகத்தை தருகிறது.
பொதுவாக ஒரு பாவகத்தில் எந்த பாவ கிரகங்களும் இடம் பெறாமல் மற்றும் பாவர்களால் பார்க்கப்படாமல் இயற்கைச் சுபக்கிரகமான குருவும், வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை பார்க்கின்ற பொழுது அந்தப் பாவகம் சுபத்துவம் நிலையை அடைகிறது.
கிரக சுபத்துவம்
பொதுவாக கிரகங்கள் இயற்கைப் பாபக் கிரகமான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது ஆகியோரின் தொடர்பைப் பெறாமல் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெரும்பொழுது கிரக சுபத்துவம் தன்மை அடைகிறது இவ்வாறு சுபத்துவம் அடைந்த கிரகங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவை நல்ல பலனைத் தந்து விடுகிறது.
இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் சில நேரங்களில் சந்திரனுடன் சேரும் பொழுது சசிமங்கள யோகத்தையும், குருவுடன் சேரும் பொழுது குரு மங்கள யோகத்தையும் மற்றும் சுக்கிரனுடன் சேரும்பொழுது பிருகு மங்கள யோகத்தையும் தந்துவிடுகிறது.
பொதுவாக இயற்கைச் சுபக்கிரகங்கள் நிழல் கிரகங்களான ராகுவுடன், இருள் கிரகமான சனி மற்றும் பாவ கிரகமான செவ்வாய் உடன் சேரும் போது பாவத்துவம் அடைகிறது. இவ்வாறு பாவத்துவம அடைந்த கிரகத்தை இயற்கைச் சுபக்கிரகங்கள் பார்த்தால் அவை மீண்டும் சுபத் தன்மை அடைகிறது.
வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் இயற்கை சுப கிரகங்களான குரு, புதன் மற்றும் சுக்கிரன் அமர்ந்து இருப்பதும் சந்திராதி யோகத்தை தருகிறது.
நன்றி.
(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & செல்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email: masterastroravi@gmail.com
No comments:
Post a Comment