திருமணத்திற்கும் மற்றும் புத்திர பாக்கியத்திற்கும் காரகனான சுக்கிரன் மற்றும் குரு பகவான் .
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதக கட்டத்தில் குருபகவான் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று எதிர் தன்மை படைத்த கிரகங்கள் மட்டுமே ஆகும்.பகை தன்மை படைத்த கிரகங்கள் அல்ல.
குருபகவான் இப்படித்தான் வாழவேண்டும் என்று போதிப்பவர் ஆவார்.. மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கும் தன்மை இருக்காது நேரிய வழியில் நடக்கக்கூடிய தன்மை படைத்தவர் ஆவார் .
வாழ்வின் அத்தனை சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக ஆக்குவதில் சுக்கிர பகவான் பங்கு அலாதியானது. சுக்கிர பகவான் எப்படியும் வாழலாம் எனும் வாழும் எண்ணம் கொண்டவர் ஆவார்.
குரு பகவான் ஒரு வரையறைக்குட்பட்ட வேலைகளை மட்டும் அதாவது ஒயிட் காலர் ஜாப் என்று அழைக்கக்கூடிய மேதாவித்தனமாக வேலைகளை மட்டும் செய்ய விரும்பும் எண்ணம் படைத்தவராக இருப்பார்.
சுக்கிர பகவான் பணம் ஈட்டும் எந்த தொழிலையும் செய்வதில் தயக்கம் காட்டாதவர் ஆக இருப்பார். மற்றவர் பையிலிருக்கும் பணத்தை தன் கைக்கு மாற்றும் வியாபார தந்திரம் மிக்கவராக திகழ்வார்.
குரு பகவான் அருள் அணியை சேர்ந்தவர் ஆவார். தேவர்களின் தலைவன் ஆவான். சந்திரன், செவ்வாய் சூரியன் மற்றும் கேது ஆகிய கிரகங்கள் குரு அணியை சேர்ந்த கிரகங்களாக கருதப்படுகிறது.
சுக்கிர பகவான் பொருள் அணியைச் சேர்ந்தவர் ஆவார் .அசுரர்களின் தலைவன் ஆவான். சனி, புதன மற்றும் ராகு இப்பிரிவினை சேர்ந்தது ஆகும்.
குருபகவான் அணியைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ளதைக் கொண்டு நிறைவுபெற்ற வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால் சுக்கிரன் அணியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவுதான் பொருள் ஈட்டி இருந்தாலும் , இன்னும் வேண்டும் வேண்டும் என்ற மனநிலையோடு மனதளவில் அமைதி அற்றவராக மன அழுத்தத்துடன் திகழ்வார்கள்.
சுக்கிர பகவான் களத்திர காரகன் என்றும் மற்றும் குரு பகவானை புத்திர காரகன் என்றும் அழைக்கிறோம். திருமணத்தின் விளைவால் கிடைப்பது புத்திர பாக்கியம் ஆகும்
அந்த வகையில் சுக்கிரனுக்கும் குருபகவானுக்கும் நெருங்கிய ஒரு உறவு உண்டு.
சுக்கிர பகவான் மனைக்கும் மற்றும் மனையாளுக்கும் காரகர் ஆவார். இல்லற வாழ்வில் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய யோகத்தை தரக்கூடிய வரும் சுக்கிர பகவானை ஆவார்.. அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் யோகம் கொண்டவராக திகழ்வார். ஆனால் அதே நேரத்தில் மன நிறைவு பெறாதவராக இருப்பார்.
குருபகவான் அறிவுக்கும் மற்றும் ஞானத்திற்கும் காரகர் ஆவார் .இவர் உள்ளதைக் கொண்டு நிறைவுபெறும் மனப்போக்கு கொண்டவர் எல்லாவற்றிலும் பெருந்தன்மையும் மற்றும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் கொண்டவர். சில நேரங்களில் வாழ்வில் பிழைக்கத் தெரியாத ஏமாளி என்று பெயர் வாங்க கூடியவராகவும் இருப்பார்.
இவ்வாறு இரண்டு எதிரெதிர் தன்மையுள்ள கிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்ளும் பொழுதோ அல்லது சேர்ந்து இருக்கும் போதோ அந்த ஸ்தானத்தை பாதிக்குமா? அல்லது உயர்த்துமா ? என வினா எழுப்பினால் நிச்சயம் அவை பாதிக்காது என்றே சொல்ல வேண்டும்.
ஒரே ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இணைந்திருக்கும் போதோ அல்லது ஒன்றுக்கொன்று சம சப்தமாக பார்த்து கொள்ளும் பொழுதோ இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று
எதிர் தன்மை உள்ள கிரகம் என்பதால் இவ்விரு கிரகங்களின் ஸ்தான வலிமையை முதலில் கவனிக்க வேண்டும்.
இணைய கூடிய இரண்டு கிரகங்கள் உடைய ஸ்தான வலிமை அடிப்படையிலே எவை முதலில் பாதிக்கப்படும் என்பதை கவனிக்க வேண்டும். குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டில் சுக்கிரன் பகவான் வலிமையாக இருக்கும் பட்சத்தில் தாம்பத்திய சுகம் கொடுத்தும் புத்திரத்தால் பலன் இல்லாத நிலை உண்டாகும். குருபகவான் வலுவாக இருந்து சுக்கிர பகவான் பலமிழந்து இருப்பின் புத்திர பாக்கியத்தை பெற்றிருந்தாலும் தாம்பத்திய சுகத்தால் பயனில்லை..
மேஷ லக்கினம் ஏழாம் இடத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து இருந்தால் இங்கு சுக்கிரன் தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கும் மற்றும் குரு பகவான் பகை வீடு ஏறி இருப்பார் என்ற வகையில் தாம்பத்திய சுகத்தை கொடுத்து புத்திர தடை உருவாகும்.
லக்கனத்தில் குரு பகவான் திக்பலம் பெறுவார் சுக்கிரன் பகவான் நான்காம் இடத்தில் திக் பலம் பெறுவார்.
சுக்கிரன் மற்றும் சுக்கிரன் பகவான் தொடர்புடைய வீடுகளில் உள்ள கிரகங்களின் தசா புத்தி காலங்களில் ஒருவருக்கு திருமண பாக்கியத்தை கொடுப்பார்.குரு பகவான் மற்றும் குரு பகவான் தொடர்பு கொண்ட வீடுகளில் உள்ள கிரகங்கள் ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தை கொடுப்பார்.
சுக்கிர பகவானுக்கு ஏழாம் பார்வை மட்டுமே ஆகும். மேலும் மறைவிடங்களில் சுக்கிரனுக்கு 6, 12ஆம் இடம் மறைவிடம் கருதமுடியாது. 3 மற்றும் எட்டாம் இடங்களே சுக்கிரனுக்கு அதிக மறைவிட ஸ்தானமாகும்.
குரு பகவான் தனது ஏழாவது பார்வை மட்டுமல்லாமல் 5 மற்றும் 9 சிறப்பு பார்வையாக கொண்டுள்ளது. குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை அதிக வலுப்படுத்தும். குரு பார்த்த தசாபுத்திகள் வாழ்வில் உயர்நிலையை அடைய வைக்கிறது.
குரு பகவான் லக்கனம் , ராசி மற்றும் அதன் அதிபதிகள் பார்த்த ஜாதக அமைப்பு யோகமான ஜாதக அமைப்பாகும்.
ஒரு சிலர் சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய காம உறவுகளை கொண்டவராகவும் தரம் தாழ்ந்த காம மிகுதியான வக்கிர எண்ணங்களை கொண்டவராகவும் திகழ்வதற்கு சுக்கிர பகவான் உடனாக சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவர்களின் சேர்க்கையால் உண்டாகிறது.
குரு பகவானுடன் சனி ,செவ்வாய் ,ராகு போன்ற பாவிகள் சேர்க்கை புத்திரதோஷம் உடையவராகவும் ஆன்மிக தன்மைக்கு எதிர் தன்மை கொண்டவராக திகழ்வார்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் சுபத்துவம் அடைந்து ராசி லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஆசிரியராக போதிக்கும் தொழில் கொண்டவராக திகழ்வார். அதேநேரத்தில் ஒருசிலர் வங்கி துறைகளிலும் வேலை பார்ப்பவராகவும் திகழ்கிறார்..இதில் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க கூடிய விதி என்னவென்றால வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடம் அதிக சுபத்துவமாக இருப்பின் நிச்சயமாக போதிக்கும் ஆசிரியராகவே தொழில் செய்வார்.
குருபகவான் வலுவாக பெற்றவர்கள் ஆசிரியர் மற்றும் பேராசிரியராகவும், பட்டிமன்ற பேச்சாளர்களாகவும் மற்றும் ஆன்மீக வேத விசாரணைகளை அளிப்பவராகவும் நகைக்கடை முதலாளி ஆகவும் தொழில் செய்வார்கள்.
சுக்கிர பகவான் சுபத்துவ மனநிலையை வலுப்பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் தொடர்புகொள்ள சினிமா, நடனம் ,போக்குவரத்து, ஹோட்டல் ,பேன்சி ஸ்டோர் ,பைனான்ஸ், கொடுக்கல் வாங்கல் ,கம்ப்யூட்டர் சினிமா தொடர்புடைய வீடியோக்கள்,பாவத்துவ நிலையில் பாலியல் தொழில்,நுண்கலை , சிற்பம்,சிலை அமைத்தல், ஆடைகள்,ஆபரண தொழில் ,நகை கடை போன்ற தொழில்களை உகந்த தசா அமைப்புக்கள் நடைபெறும்போது செய்ய வைக்கிறது.
சுக்கிரன் மற்றும் குருபகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் தன்னோடு சேர்ந்து உள்ள கிரக அமைப்புகளையும் மற்றும் தன்னால் பார்க்கக்கூடிய கிரக அமைப்புகளையும் சுபத்துவ படுத்தக்கூடிய ஆளுமைத் தன்மை உண்டு.
குரு பகவான் தன்னுடைய இணைந்து உள்ள பாவக் கிரகங்களான சனி, ராகு ,கேது, செவ்வாய் போன்ற பாவ கிரகங்களை சுபத்துவ படுத்தி தான் பாவத்துவ நிலையை அடைவார்கள். இவ்வாறு இயற்கை சுபக் கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் உடன் இணைந்த பாவர்கள் அதன் தசையில் யோக பலனை தரும். மாறாக தனது தசையில் இணைந்த கிரகத்தின் பாவத்துவத்தின் விளைவாக கெடு பலனைத் தருகிறது.
ஒருவர் ஜாதகத்தில் கேந்திரங்களில் சுக்கிர பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று இருக்கும்பொழுது பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான
"மாளவிகா யோகத்தை" தருகிறது இதன் பலன் வாழ்வில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கக் கூடிய யோகம் உண்டாகும்.
ஜாதகத்தில் கேந்திர மற்றும் கோணங்களில் குருபகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்றிருக்கும் போது பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான
"ஹம்ச யோகம் "உருவாகிறது. விதிவிலக்காக லக்னத்தை தவிர்த்து ஏனைய கேந்திர ஸ்தானங்களில் குருவானது சொந்த வீடாக அமையும் பொழுது அவை கேந்திராதிபத்திய தோஷத்தை தந்துவிடுகிறது.
தனுசு லக்னத்திற்கு குரு பகவான் நான்காமிடத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும் மற்றும் மிதுனம் இலக்கணங்களுக்கு ஏழு மற்றும் பத்தாம் இடத்தில் குருபகவான் ஆட்சி பெற்று இருந்தாலும் மற்றும் கன்னி இலக்கணங்களுக்கு நான்கு , ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தாலும் கேந்திராதிபத்திய தோஷத்தை தருகிறது. இந்த கேந்திராதிபத்திய தோஷம் நீங்க இந்த குரு பகவானை சனி, செவ்வாய் போன்ற பாவகிரகங்கள் பார்த்தாலோ அல்லது வக்கிரமாய் இருந்தாலும் அந்த கேந்திரா திபெத்திய தோஷம் நீக்கப்படுகிறது.
புத்திரகாரகன் குரு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திலும் மற்றும் தனஸ்தானமான 2-ம் இடத்திலும் நின்றால் காரகோ பாவ நாஸ்தி தருகிறது.
குருபகவானை போல சுக்கிர பகவான் கேந்திராதிபத்திய தோஷத்தை அதிக அளவு தரமாட்டார்..
களத்திர ஸ்தானமான 7-ம் இடத்தில் களத்திர காரகனான சுக்கிரன் நின்றால் காரகோ பாவ நாஸ்தி தருகிறது. இதை சில நேரங்களில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பின் அந்த தோஷம் நீக்கப்படுகிறது. அல்லது பாவ கிரகங்கள் பார்க்கக் கூடிய சூழலும் அந்த தோஷம் நீங்க கூடிய வாய்ப்பு உண்டு.
நன்றி ஐயா.
வாட்ஸ் அப் & செல்
9715189647
செல்
9715189647
7402570899
(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment