சாதக பலன் சொல்லும் முறை -(2)
கிரகங்கள் படுத்தும் பாடு--( 133 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
ஒருவருக்கு சாதகபலன் பார்க்கும்போது கவனிக்கவேண்டிய வழிமுறைகளை பரம்பொருளின் அருளால் எனக்களித்த அனுபவ அடிப்படையில் அனைவரும் அறிந்து பயன்படும் வகையில் வெளிப்படையாக உங்களிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன்.
சென்ற பதிவில் ஒரு லக்கன ஸ்தானத்தை பலன் சொல்லும்போது கவனிக்கப்பட வேண்டியவற்றை விளக்கினேன்.இந்த பதிவில் அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஸ்தானங்களை பற்றி பார்ப்போம்.
ஒரு மனிதனது தனம் ,குடும்பம் ,நேத்திரம் மற்றும் வாக்குஸ்தானங்களை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இரண்டாமிடமானது பயன்படுகிறது.பொதுவாக இரண்டாம் வீடான குடும்பஸ்தானம் என்பது மனைவிஸ்தானமானம் மற்றும் களஸ்திரஸ்தானமான ஏழாம் இடத்திற்கு , சாதகரின் இரண்டாமிடம் ஆயுள்ஸ்தானமாக வருவதால் இந்த இரண்டாமிடத்தில் உச்சம் மற்றும் ஆட்சி பெற்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நல்லது.
அவ்வாறு இருந்து அதன் திசை நடப்பில இருந்தால் அது சாதகரின் மனைவியின் ஆயுளுக்கு ஏதாவது பாதிப்பை உருவாக்க வாய்ப்பு இருப்பதால் ஆகும்.(விதிவிலக்கு:அவரது மனைவி சாதகத்தில் ஆயுள் வலுத்திருந்தாலோ அல்லது சாதகரின் இரண்டாமிடத்தினை சுபர் பார்வை பெற்றாலோ ஆயுளுக்கு பாதிப்பில்லை )
இந்த இரண்டாமிடத்தில் ராகு பகவான் இருப்பின் வஞ்சக பேச்சில் கெட்டிகாரராக இருப்பார்.கேதுபகவான் இருந்தால் வாக்கு பலிக்கும்.சனிபகவான் இருப்பின் கோபகாரராக இருப்பர்.செவ்வாய் இருப்பின் முரட்டுதனம் உடையவராக இருப்பர்.பொதுவாக அசயர்களான ராகு,கேது ,சனி மற்றும் செவ்வாய் இருப்பது திருமண வாழ்வினை தடைபடுத்தும்.
இரண்டாமிடத்தில புதன் இருந்தால் ஜோதிடஞானம்,பேச்சுவன்மை போன்றவை உண்டாகும்.கேதுபகவான் இருப்பின் வாக்கு பலிக்கும்.
இரண்டாமாதிபதி அம்ச அடிப்படையில் எவ்வாறு உள்ளார் எனவும் கவனிக்கப்படவேண்டும்.
ஒருவரது சாதகத்தில் இரண்டாம் அதிபதி பலம்பெற்று நின்றால் காசுபணத்திற்க்கு குறைவின்றி திகழ்வார்.ஆரம்ப கல்வியில் சிறந்து விளங்குவார்.
இரண்டாமிடத்தில் தனகாரகன் குருபகவான் நிற்பது "காரகபாவ நாஸ்தியை உருவாக்கும்.குருபகவான் என்பவர் தனித்து நின்றால் "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் பாழ் " என்பது விதியாக இருந்தாலும் அவை இரண்டாமிடத்தில் இருந்தால் இரண்டாமிடத்தின் நிதி என்ற ஸ்தானத்தை மட்டுமே பாழ்படுத்தும்.ஏனெனில் குருபகவான் தனகாரகன் என்பதால் இரண்டாமிடத்தில் உட்காரகமான வாக்கு,கல்வி ,குடும்பம் மற்றும் நேத்திரங்களை பாதிப்பதில்லை.
இரண்டாமிடத்தில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷத்தை தந்து விடுவதோடு மட்டுமல்லாமல் களத்திரஸ்தான ஏழாமிடத்தை பார்ப்பதால் திருமண தடையை உருவாக்கிவிடும்.
தனஸ்தானமான இரண்டாமிடத்தை பார்க்க கூடிய கிரகங்கள் சுபரா ? அசுபரா ? எனவும்,பார்வை பெறும் கிரகங்களின் ஸ்தானத்தின் தன்மையையும் கவனிக்கப்படவேண்டும்.இரண்டாமாதிபதியானது பெற்றுள்ள நட்சத்திர சாரத்தையும் கவனிக்கப்படவேண்டும்.
இரண்டாமிடத்தை கவனிக்கப்படும்போது
லக்கனம் மற்றும் ராசிக்கு ஆகிய இரண்டிற்கும் இரண்டாமிடத்தை கவனித்து பலன் கூறவேண்டும்.
லக்கனம் மற்றும் ராசிக்கு ஆகிய இரண்டிற்கும் இரண்டாமிடத்தை கவனித்து பலன் கூறவேண்டும்.
இரண்டாமிடம் பலம்பெறும்போது ஒருவரது வாக்கு சுத்தம் ,கல்விநிலை,குடும்பநிலை ,தனநிலை மற்றும் கண்பார்வை போன்றவை சிறப்பாக அமையும்.
ஒருவரது சாதகத்தில் இரண்டாம் அதிபதி பலம் இழந்து நின்றால் தனம் தன் கையில் தங்காமல் இருக்கும்.குடும்பத்தில தங்கி் இருக்கும் நிலை இல்லாது கல்வி அல்லது சம்பாரிக்கும் நிமித்தமாக எட்டி செல்ல வேண்டிய சூழல்,தாமத திருமணம் மற்றும் கல்வியில் பாதிப்பு உருவாகலாம்.விதிவிலக்காக சுபர் பார்வை பெற்றாலோ அல்லது ராசியில் பலமிழந்த இரண்டாம் அதிபதி அம்ச பீடத்தில் பலம்பெற்றாலோ பலனில் மாறுபடலாம்.
நன்றி
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
வாட்ஸ்அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 646
97 151 89 646
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன்ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
M.Sc ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன்ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My blogspot
AstroRavichandransevvai .blogspot .com
Astrosmartnotes.blogspot .com
My email
masterastroravi@gmail .com
.........
.......
No comments:
Post a Comment